...ஆலிப் அலி... (இஸ்லாஹியா வளாகம்)
உயிர்க் கொல்லி கோலா உலகில் மிக மாசுபட்ட பானமாகும்
1998ம் ஆண்டு அமெரிக்க சிறுவர்களை சோடா மற்றும் இனிப்பு கலந்த மென் பானங்களுக்குப் பழக்கப்படுத்தியதன் காரணத்தாலும், சிறுவர்களிடையே கொகா கோலாவை பிரபல்யப்படுத்துவதற்காக கார்டூன் நிகழ்ச்சிகளை பயண்படுத்தியதன் காரணதத்தாலும் தொழிற்சாலை வளவினுள் கருப்பின தொழிலாளர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் புறக்கனித்ததன் காரணத்தினாலும் 2001ம் ஆண்டு உலகில் மிக அபகீர்த்திமிக்க பல்தேசிய நிறுவனமாக கொகா கோலா நிறுவனம் அடையாளமிடப்பட்டது.
அமெரிக்க கெலிபோனிய மானிலத்திலிருந்து அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்தல் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் எதிர்ப்புகளை புறக்கனித்து பர்மிய ஏகாதிபத்திய இராணுவ ஆட்சியாளர்களுடன் கொடுக்கள் வாங்கள் செய்தல் என்பவற்றின் காரணத்தால் 1994 ம் ஆண்டு பெப்சி கோலா நிறுவனம் உலகின் மற்றுமொறு அபகீர்த்திமிக்க நிறுவணமாக அடையாளமிடப்பட்டது.
கொகா கோலாவில் விவசாய இரசாயணப் பொருள்கள்
இந்திய விஞ்ஞான மற்றும் சுற்றாடல் நிலையம் 2005 ம் ஆண்டு மேற்கொண்ட ஒரு ஆய்வின் ழூலம் இந்தியாவில் விற்பனையாகும் கொகா கோலா, பெப்சி கோலா உற்பட இன்னும் சில வியாபாரப் பொருள்களில் விற்பனை செய்யப்படும் மென்பான வகைகளில் உடம்புக்கு கேடுவிளைவிக்கும் அளவு கிருமி நாசினி அடங்கியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 12 வகையான மென்பான வகைகளை பயண்படுத்தி மேற்கொண்ட இந்த ஆய்வின்போது அந்த எல்லா மென்பான வகைகளிலும் அதிக விஷமுள்ள லிண்டேன் (Lindane) DDT மெலதியன் மற்றும் க்ளோபிரிபோஸ் (Chlorphrifos) என்பவை அடங்கியிருப்பது உறுதியாகியுள்ளது.
மேற்கூறபபட்ட கண்டுபிடிப்பை அடிப்படையாகக்கொண்டு 2004 டிசம்பர் மாதம் இந்திய நீதிமன்றம் இந்தியாவில் விற்பனையாகும் கொகா கோலா, பெப்சி கோலா என்பவற்றில் உடம்புக்புகு கேடு விளைக்கும் கிருமி நாஷினி அடங்கியிருக்கலாமென போத்தல் லேபல்களில் குறிப்பிட்டு ஒட்டப்பட வேண்டுமென அந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. எவ்வாறாயினும் இதையறிந்த இந்திய விவசாயிகள் விலைகூடிய கிருமி நாஷினிக்குப்பதிலாக தமது பயிர்ச்செய்கைக்கு கொகாகோலா, பெப்சி கோலா என்பவற்றைப் பயண்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டுள்ளதாக ஒரு இந்தியப் பத்திரிகை கூறுகிறது.
ஐரேர்பிய பொருளாதார ஆனைக்குழு (Europe Economic Commission- EEC) சிபாரிசு செய்துள்ளதன் பிரகாரம் உணவு மற்றும் மென்பானங்களுக்காகப் பயண்படுத்தும் நீரில் அடங்கியிருக்கக் கூடிய ஆகக்கூடிய கிருமி நாஷினி அளவு ஒரு லீட்டருக்கு 0.0005 மில்லி கிறாமாகும் . எனினும் மேற்கூறப்பட்டுள்ள மென்பான வகைகளில் அதன் அளவு இதையும் விட மிக அதிகமென ஊளுநு நிறுவனம் கூறுகிறது.
இந்த மென்பான வகைகளில் கிலோபிரிபோஸ் அளவு ஐரோப்பிய ஆனைக்குழு சிபாரிசு செய்துள்ள அளவிலும் பார்க்க 42 மடங்காகும். மெலதியன் அளவு 87 மடங்காகும். ஐக்கிய அமெரிக்கா சிபாரிசு செய்துள்ள லிண்டேன் அளவு 21 மடங்கைவிடவும் அதிகமாக அடங்கியுள்ளது. இந்த நச்சு வகை நீண்டகாலப் புற்றுநோய், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை உற்பட இயற்கைத்தன்மைக்கு புறம்பான மகப்பேற்றுக்கும் காரணமாக அமையலாம்.
கோகா கோலாவின் சுகாதாரப் பிரச்சினைகள்
கொகா கோலா, பெப்சிகோலா போன்ற மென்பான வகைகளில் பொஸ்பரிக் அமிலம் (Phosphoric acid) அடங்கியுள்ளதோடு அவற்றின்சாதாரன PH அளவு 3.4 ஆகும். இந்த அமில நிலை என்பு மற்றும் பற்கள் இத்துப்போகப் போதுமான அளவாவதோடு, கொகா கோலாவில் அல்லது பெப்சி கோலாவில் என்பு அல்லது பற்களை போட்டு மூடிவைத்தால் 10 நாட்களில் அவை முழுமையாகவே கரைந்து சென்றுவிடும்.
சாதாரணமாக 30 வயதாகும் போது மனித உடம்பின் என்பு வளர்ச்சி முற்றுப்பெறுகின்றது. அதன் பின்னர் நாங்கள் உற்கொள்ளும் உணவின் அமில அளவுக்கமைய என்புகள் 5ம் தொடக்கம் 18ம் வரை ஒவ்வொரு வருடமும் கரைந்து செல்கின்றது. இவ்வாரு கரைந்து செல்லும் கல்சியம் அவயவங்களில் ஒன்று சேர்கின்றது. இது சிறுநீரக செயற்பாடுகளில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. (உதாரணம்-சிறுநீறகக் கல்) அத்தோடு இந்த நிலையில் கொகா கோலா, பெப்சி கோலா அருந்தல் ஒஸ்டியோபொரோஸிஸ் போன்ற என்பு கரையும் நோயை மேலும் முன்னேற்ற அதிக அளவில் உதவி செய்யும்.
கொகா கோலாவில் எதிலின்க்லய்கோல் (Ethylene glycol) சொற்ப அளவு அடங்கி யுள்ளதோடு அவை மென்பான வகைகளை அதிகம் குளிரூட்டடுவதற்காகப் பயண்படுத்தப் படுகின்றன. இந்த இரசாயணப் பொருட்களிலிருந்து ஒருசில சொட்டுக்களை சேர்ப்பதன் மூலம் ஒரு பொருள் செல்சியஸ் அளவு 0லும் கூட கட்டியாகாமல் வைத்துக்கொள்ள முடிகின்றது. எதிலின்க்லய்கோல் ஆசனிக் படிப்படியாக நச்சாகும் ஒரு இரசாயணப் பொருள் எனக் கூறப்படுகிறது. ஆதலால் நீங்கள் ஒரு மணி நேரத்தில் 4 லீட்டர் கொகாகோலாவை அருந்தினால் நிச்சயமாக மரணமடையக் கூடும்.
அதிக அளவில் கொகா கோலா பருகும் நபரை தேர்ந்தெடுப்பதற்கான ஒரு போட்டி டில்லி பல்கலைக்கலகத்தில் நடைபெற்றது. வெற்றி பெற்றவர் எட்டு போத்தல் கொகா கோலாவை அருந்தி முடிந்தவுடன் மயக்கமுற்று கீழே வீழ்ந்து விட்டார். இதற்குக்காரணம் அவரது உதிரத்தில் காபன்டயொக்ஸைட் அளவு அதிகரித்தமையே. அன்று தொடக்கம் அங்குள்ள சிற்றுண்டிச்சாலையில் கொகா கோலா விற்பனை தடை செய்யப்பட்டது.
பூமியை காயவிடல்
கேரள பலக்காடி மாவட்டத்தில் வாழும் கிராமிய மக்கள் அதிக குடிநீர் தட்டுப்பாட்டால் கஷ்டப்படக்காரணம் கொகா கோலா மற்றும் பெப்சி கோலா போன்ற நிறுவனங்கள் அப்பிரதேசத்திலுள்ள நீரை பலாத்காரமாகப் பறித்தெடுப்பதாலும் மாசுபடுத்துவதனாலுமாகும். கேரள பெருமட்டி கிராம சபை (பஞ்சாய) அதிகாரப் பிரதேசத்துக்குச் சொந்தமான “பாலாச்சிமடா” தாலுக் கிராமத்தில் ஹிந்துஸ்தான் கொகா கோலா நிறுவனத்துக்குச் சொந்தமான போத்தல் நிரப்பும் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதற்கு அண்மையாக உள்ள “புதுச்சேரி” கிராம சபை அதிகாரப் பிரதேசத்துக்குச் சொந்தமான “கஞ்சிக்குடி” கிராமத்தில் பெப்சிகோலா இந்திய நிறுவனத்துக்குச் சொந்தமான போத்தல் நிரப்பும் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இத் தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக அதிக அளவில் பிரதேசத்தின் பூமி அடியில் உள்ள நீர் வளங்களைப் பயண்படுத்துவதனால் சுற்றவுள்ள கிராமங்களில் வாழும் மக்களும் ஆதி வாசிகளும் பயங்கரமான நீர் தட்டுப்பாட்டுக்கு முகம் கொடுப்பதோடு, இப்பகுதியில் எஞ்சியுள்ள சொற்ப நீரோடு கழிவுப்பொருள்கள். சேர்வதால் பெரும் பிரச்சினைகளுக்கும் அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.
வட அமெரிக்காவில் கொகாகோலா குற்றச் செயல்கள்
கொகாகோலா நிறுவன முகாமைத்துவ உதவியுடன் ஆயுதக் கும்பல்களால் கொலம்பிய தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்கள் 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் பின்னர் கொலம்பிய செயற்பாட்டாளர் வலைப் பின்னல் (Colombia Action Network) –CAN ஒவ்வொரு வருடமும் 22ம் திகதியை சர்வதேச கொகாகோலா எதிர்ப்பு தினமாக பிரகடணப்படுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது.
இதற்கு மாணவர் அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், யுத்த எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் தொழிற் சங்கங்கள் ஆதரவு வழங்குகின்றன. எட்லண்டா பிரதேசத்திலும், சிகாகோ மற்றும் மில்லாவுகே பகுதிகளிலும் உள்ள பிரதேச கொகா கோலா வினியோக நிலையங்களுக்கு முன்னால் மாணவர் அமைப்புக்கள் “கொகா கோலா! படுகொலைகளை உடனே நிறுத்து”எனும் சுலோகங்களை ஏந்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.
சர்வதேச எதிர்ப்புக்கள்
விஸ்கொன்சீஸ் பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர்கள் கொகா கோலா நிறுவனம் கொலம்பியாவில் மேற்கொள்ளும் மனித உரிமை மீரல்களுக்கும் இந்தியாவில் வட பகுதிகளில் நீர் தட்டுப்பாட்டால் கஷ்டப்படும் மக்களின் நீர் வளங்களைக் கொல்லையடிப்பதற்கு எதிராகவும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். சிகாகோ கொகா கோலா வினியோக நிலையத்துக்கு முன்னால் ஒன்று திரண்ட எதிர்ப்பாளர்கள் 2006 மே 13ம் திகதி கொலம்பிய மனிதப்படுகொலைக்கு எதிராக சர்வதேச ஆதரவை வேண்டி நின்றனர். அத்தோடு மெக்சிகோவிலும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்படியாக மாணவர் அமைப்புக்கள் ஒரு கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தன.
2001 ஜுலை 20ம் திகதி, ஐக்கிய அமெரிக்க இரும்பு மற்றும் உருக்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான சர்வதேச நிதியம் கொலம்பிய கொகா கோலா போத்தல் நிரப்பும் தொழிற்சாலைக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கொலம்பிய கொகா கோலா நிறுவன தொழிலாளர்களைப் பயமுறுத்துதல் மற்றும் கொலை செய்தல் போன்றவற்றுக்காக ஆயுதக்கும்பலை பயண்படுத்தல் பிரதான குற்றச்சாட்டாகும்.
கோதமாலா தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை அச்சுருத்தல் மற்றும் தாக்குதலை கண்டித்து அமெரிக்க சர்வதேச தொழிலாளர் ஒத்துழைப்பு பாரிய ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த எதிர்ப்பு போராட்டத்தை அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் முன்னெடுக்க அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலுள்ள 12 பல்கலைக்கலகங்களில் கொகா கோலா விற்பனையை இடைநிறுத்த மாணவர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
தொழிற்சங்க செயற்பாட்டாளர்களை கொலை செய்தல், இந்திய மக்களின் நீர் வளங்களை கொல்லையடித்தல் மற்றும் மக்களை நச்சு மென்பானங்களுக்கு பழக்கப்படுத்தல் என்பவற்றுக்கு எதிரான சர்வதேச போராட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
கொகா கோலாவில் அடங்கியுள்ள மிக உன்னத தன்மைகளுல் சில
1) கழிவரைகளை சுத்தம் செய்ய – ஒரு கெலன் கொகா கோலாவை கழிவரைக் குழியினுள் கொட்டி ஒரு மணி நேரம் கழிந்த பின்னர் நீரைக்கொண்டு கழுவி விடுங்கள். கொகா கோலாவில் அடங்கியுள்ள சிட்ரிக் அமிலம் அழுக்கு நிற வடுக்களை முழுமையாகவே அகற்றிவிடம்.2) துரப்பிடித்தலை அகற்ற – குரோமியம் கார் பம்பர்களின் துருப்பிடித்தலை அகற்ற கொகா கோலாவில் நனைத்தெடுத்த அலுமேனியம் பேப்பரின் மூலம் பம்பரை துடைக்கவும்.
3) இறுக்கமான போல்ட் ஆணிகளை இலகுவாக்க – கொகா கோலோவில் நனைத்தெடுத்த ஒரு துணியை இறுக்கமான போல்ட் ஆணியில் சுற்றி சில நிமிடங்கள் வைக்கவும். பின்னபு அதனை இலகுவாகக் கலட்ட முடியும்.
4) கார் பற்றியின் இரு புறங்களையும் சுத்தம் செய்ய – ஓரளவு கொகாகோலாவை பற்றறியில் ஊற்றுவதன் மூலம் பற்றறியின் இரு புறங்களையும் சுத்தம் செய்துகொள்ள முடியும்.
5) துணியிலுள்ள கிரீஸ் வடுக்களை அகற்ற – ஒரு கெலன் கொகா கோலாவை கிரிஸ் வடுக்கள் படிந்துள்ள துணிகளில் கொட்டி சுத்திகரிப்புப் பொருள்களையும் சேர்த்துப் பழக்கப்பட்டவாறு துவைக்கவும். கொகா கோலா கிரீஸ் வடுக்களை இலகுவாக்கி அகற்ற சுத்திகரிப்புப் பொருட்கள் உதவிசெய்யும்.
6) இரத்த வடுக்களை அகற்ற – அமெரிக்க வாகனப் போக்குவரத்துத் துறை பொலீஸார் இரண்டு கொகா கோலா கலன்களை நித்தமும் தமது வாகனங்களில்; பத்திரமாக வைத்திருக்கக் காரணம் அதி வேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துக்களின் போது பாதைகயில் படியும் இரத்த வடுக்களை அகற்றுவதற்காகவே.
7) கோகா கோலா சாறு இடத்திற்கிடம் எடுத்துச் செல்லும்போது, எரிபொருள் வினியோகத்தின்போது வழங்கப்படும் “ஆபத்தான பொருள்” எனும் அடையாள உத்தரவுப் பத்திரம் வாகனத்தின் முன்பகுதியில் ஒட்டப்படல் வேண்டும்.
இருந்தாலும் கொகா கோலா, பெப்சி கோலா விளம்பரங்களுக்கு போஸ் கொடுக்கும் நடிகர் நடிகையர்களின், பாடகர்களின், விளையாட்டு வீரர்களின் கவர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு மயங்கி நாம் இன்னும் இவற்றை மென் பானமாக அருந்தி வருகின்றோம்.
மேலதிக தகவல்களுக்கு
www.boycottcoke.org / www.killercoke.org / www.cokewatch.org / www.indiaresource.org / www.corporatecampaong.org / www.laborrights.org / www.colombiasolidarity.org / www.boycottbush.org / www.cseindia.org







