மாறிவரும்
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் உலகில் என்னென்வெல்லாம் நடக்கின்றது என்று பாருங்கள்.
பட்டன்களுக்குப் பதிலாக தொடுதிரை வந்து அதுக்குமேல் தற்போது கண்களாலே கணினியையும் தொதைபேசிகளையும்
இயக்கும் தருனம் வந்துள்ளது. மனதாலும் கணினிகளைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமும்
அறிமுகமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் அறிமுகமாகியுள்ள ஒரு புதுமையான
தொழில்நுட்பம்தான் லொகிட்ரோன் (Lockitron) என அழைக்கப்படும் கதவுகளை தாழிடும் புதுவகை
ஸ்மார்ட் போன் (Smart Phone).
லொகிட்ரோன்
ஸ்மார்ட் போனிலிருந்து ஒரு குறுந்தகவலை (sms / Command) அனுப்புவதன் மூலம் உலகின் எந்த
மூலையிலிருந்தும் தமது வீட்டினது கதவினைத் தாழிடவும் திறந்து கொள்ளவும் முடியும். இதனை
அமெரிக்காவின் எபிகி இன்க் (Apigy.inc) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.
அண்மையில் லொஸ்வெகாஸ்
நகரில் நடைபெற்ற உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியில் CES – Consumer Electronics
Show கண்காட்சியகத்தில் வெளியிடப்பட்டது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)






1 comments:
superb news......
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...