"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

22 January 2020

வீரத்தின் அடையாளம் புலி



சிங்கம் காடிட்டின் அரசனாக மதிக்கப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் வீரத்திற்கு புலிதான் உவமிக்கப்படுகின்றது. சிங்கத்திற்கு இணையாக காட்டுக்குள் திமிரோடு திரியும் அடுத்த விலங்கு புலிதான். சிங்கத்தைவிடவும் உடலமைப்பில் புலி பெரியது. சிங்கத்திற்கும் புலிக்கும் இடையில் நடைபெற்றுள்ள சண்டைகளிலெல்லாம் புலிதான் வெற்றி பெற்றுள்ளது. உணவுச்சங்கிலியின் முக்கிய இனம். இத்தொடரில் புலிகளின் வீர தீரமான வாழ்க்கை பற்றிப் பார்ப்போம்.

பெயர் அறிமுகம்.
புலிகள் (பாந்தெரா தீகிரிஸ்), என்னும் பூனையினத்தைச் சேர்ந்தவையாகும். பாந்தெரா வகை பூனையினங்களில் இதுவே மிகப் பெரியதுமாகும். புலி, வேங்கை என்று தமிழிலும் Tiger என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் "டைகர்" என்ற சொல் "தீகிரிஸ் " என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்கச் சொல்லானது  பாரசீக மொழியில் அந்த விலங்கின் வேகத்தைக் குறிப்பிடும் வகையில் "அம்பு" என்ற பொருளிலோ அல்லது டைகிரிஸ் என்ற நதியின் பெயரிலிருந்தும் பிறந்திருக்கலாம். பிரபலமான குன்பு பெண்டா கார்டூனில் வரும் புலியின் பெயரும் டைக்கரஸ்தான்.  புலி இனங்களில் 9 இனங்கள் இருந்து வந்தன. அவை பெங்கால், சைபீரியன், சுமத்ரன், இந்தோ/சைனீஸ், மலையன், தெற்கு சீன புலிகள், காஸ்பியன், ஜாவன் மற்றும் பாலி. இதில் கடைசி நான்கு இனங்களும் தற்போது இல்லை.

புலியின் தோற்ற அமைப்பு.
யோசிக்கவே தேவையில்லை பூனையின் தோற்றமேதான் புலியும். ஆனால் பூனையை விட பன்பமடங்கு பெரியது. 4 மீட்டர்கள் (13 feet) வரை நீளமும் 300 கிலோகிராம் (660 பவுண்டுகள்) வரை எடையும் கொண்டுள்ளன. இரண்டு கால்களால் எழுந்து நின்றால் எட்டு அடிகள் வரை அதன் உயரம் இருக்கும். கட்டுமஸ்தான உடல், பலமான கால்கள், கவர்ச்சியான தோற்றம். உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானது புலிதான். உடல் பழுப்பு கலந்த வெளிர் சிவப்பு நிற தோலை உடையது. உடல் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு நிற வரிகள் விரவி கிடக்கும். எண்ணிப் பார்த்தால் பெரும்பாலும் 100 வரிகள் இருக்கும்.  இது புலிக்குப் புலி வித்தியாசமாக இருக்கும்.  இந்த வரிகள் மனிதர்களின் கைரேகைகளை போன்றது. கைரேகைகள் ஒருவருக்கொருவர் எப்படி வேறுபடுமோ அதேபோன்று புலிகளின் உடலில் உள்ள கருப்பு, வெள்ளை வரிகளும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. இந்த வரிகளானது வெறுமனே புலியின் உரோமங்களின் நிறமல்ல. மாறாக தோலே அப்படித்தான் இருக்கிறது. அதன் உரோமங்களை மழித்தெடுத்தாலும் இந்த வரிகள் நீக்கப்படுவதில்லை.


இவற்றின் உடலின் நடுப் பகுதியும், அடிப்பகுதியும் வெண்ணிறத்தில் உள்ளன. முகத்தைச் சுற்றி ஒரு வெண்ணிற "வளையம்" காணப்படுகிறது. காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது. உடலைப் போன்றே கால்களிலும் நீண்ட வாலிலும் முகத்திலும் இந்த கருப்பு வெள்ளை வரிகளைக் காணலாம். இவை புலிக்கு தனி கவர்ச்சியைக் கொடுக்கும். சிலபோது அரிதாக வெள்ளை நிறத்திலும் புலிகள் பிறப்பதுண்டு. இது சடுதியான மரபணு மாற்றத்தினால் ஏற்படுவதாகும். அதுபோன்று தங்க நிறத்திலான வரிவரிப் புலிகளும் பிறப்பதுண்டு. புலியின் நெற்றியில் என்பதனை ஒத்த ஒரு அடையாளம் இருக்கின்றது. இது சீன எழுத்தில் அரசன் என்பதை குறிக்கும். பொதுவாக சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்லப்படுகிறது.

புலிகளின் பூர்வீகம்.
புலிகள் பணிப் பகுதி, பாலை நிலப் பகுதி என அனைத்துவித பருவ காலநிலைகளிலும் வாழும் தன்மை கொண்டன. செடி கொடிகள் அடர்ந்த காடுகள், மரங்கள் சதுப்பு நிலக் காடுகள், புல்வெளிகள் என எங்கும் வாழும் தன்மை கொண்டன. இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளாகும்.  உலகிலேயே அதிகளவில் புலிகள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்குதான் முதலிடம். கடந்த 2014 ம் ஆண்டு இந்தியாவில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்று புலிகள் அதிகமாக வாழும் தீவாக சுமத்ராத் தீவு கருதப்படுகின்றது.

புலிகளின் வசிப்பிட அமைப்பு.
சிங்கங்கள் வேட்டைக்கு சிங்கிலாக வந்தாலும் வாழும் போது கூட்டமாகவே வாழும். ஆனால் புலிகள் அதிலும் ஆண் புலிகள் அவ்வாறல்ல. அவை எப்போதும் தனித்தே வாழும். தனித்தே சுற்றித் திரியும். அவை தனிமை விரும்பிகள். எனவே புலி காட்டில் தனக்கென்று ஒரு எல்லையைத் தீர்மானித்துக் கொண்டு 'உன் ஏரியாவுக்கு நான் வரமாட்டேன் என் ஏரியாவுக்கு நீ வராதே' என்று வாழும். சிறுநீர், மலம் கழிப்பதன் மூலமும் மரங்களில் தமது அதி கூர்மையான நகங்களால் கீறல்களை உண்டாக்குவதன் மூலமும் மற்றப் புலிகளுக்கு தன்னுடைய எல்லைக் கோட்டை தெரியப்படுத்துகிறது. எனவே ஒரு புலி இன்னொரு புலியின் எல்லைக்குள் நுழையாது. புலிகள் தமது வாழிடத்தை அடையாளப்படுத்துவதற்கு முன்பு அது பொருத்தமான இடம்தானா என்பதில் கவனம் செழுத்துகின்றன. அவ்விடம் அடர்ந்த வனப் பகுதியாகவும், நீர்த் தேவைகளை நிறைவேற்ற பொருத்தமான இடமாகவும் மனித இடையூறுகள் அற்ற பகுதியாகவும் இலகுவாக உணவைப் பெற்றுக்கொள்ள முடியுமான பகுதியாகவும் இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்ளும்.


புலிகளின் உணவு
சிறிய விலங்குகள் முதல் பெரிய விலங்குகள் வரை அனைத்தையும் புலிகள் உணவாகக்கொள்கின்றன. புலிகளின் விருப்பமான இரை மான்கள்தான். அதுவல்லாமல் முயல், எருமை, நீர் எருமை, காட்டெருமை, ஆடு, காட்டுப்பன்றி, ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, மயில் என்பவற்றையும் உண்ணும். இதோடு கரடி, நாய், சிறுத்தை, முதலை, மலைபாம்பு என்பவற்றையும் இரையாக்கும். யானை, காண்டா மிருகங்கள் போன்ற பெரிய விலங்குகளைக்கூட வேட்டையாடி சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. உணவொன்று கிடைத்தால் உடனே அதனைப் பாதுகாப்பானதொரு இடத்திற்கு எடுத்துச் சென்றுதான் உணும். இவற்றால் ஒரே நேரத்தில் 20 கிலோகிராம் வரையான உணவை உட்கொள்ள முடியும். புலியின் பல்லமைப்பு. பெரிய கோரைப்பற்கள் இரையைக் கடித்து, கிழித்து கொன்று உண்ணப் பயன்படுகின்றன.

வேட்டையாடும் திறன்
புலி வேட்டை உண்மையிலேயே மிரளவைக்கக் கூடியது. புலியின் உடலில் உள்ள கருப்பு, வெள்ளை, இளஞ் சிவப்பு நிறங்கள் தன் உடலை புல்வெளிகளிலும் புதர்களிலும் மறைத்துக் கொண்டு விலங்குகளை வேட்டையாட உதவுகிறது. உயரத் தாவிப் பாயவும் இவற்றால் முடியும். தமது கூர்மையான நகங்களைப் பயன்படுத்தி புலிகள் மரத்தின் உச்சி வரை ஏறி மரவாழ் விலங்குகள், பறவைகளையும் வேட்டையாடும். மான்கள்தான் மிகவும் பிடித்த உணவு. மானைவிட வேகமாக ஓடி அதனையும் வேட்டையாடும். சிங்கங்களைப் போலவே புலியும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. பிரமாதமாக நீச்சல் அடிக்கும் திறமையும் இவற்றுக்கு உண்டு. நீரில் நீந்தும் வாத்து, அண்ணப் பறவைகளையும் நீருக்கடியில் ஓடும் மீண்களையும்கூட நீரில் நீந்தி, மூழ்கிச் சென்று வேட்டையாடிவிடும். அவை 4 மைல்கள் வரை நீந்தக்கூடியவை. ஏன் நீரில் ராஜாவான முதலைகளைக்கூட பயமே இல்லாமல் நீந்திச் சென்று கடித்துக் கொன்று இழுத்துக்கொண்டு கரைக்கு வரும். மனிதர்கள் ஒரு காலத்தில் விலங்குகளை பார்த்து அஞ்சுவதில் புலிக்கு முதலிடம் உண்டு. ஏனெனில் இவை கிராமங்களுக்குள் நுழைந்து மனிதர்களையும் வேட்டையாடியுள்ளது.


பெரும்பாலான பூனை இனங்களைப் போலவே மெல்லப்பதுங்கி தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி, உடல் அளவையும் வலிமையையும் பயன்படுத்தி எந்தக் கோணத்திலிருந்தும் பாய்ந்து தாக்கி இரையை நிலைகுலையச் செய்யும். புலிகள் அதிகமான எடையைக் கொண்டிருந்தாலும்  மணிக்கு 49-65 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. ஆனாலும் தொடர்ந்து ஓட முடியாது. எனவே புலிகள் இரையைத் தாக்கத் தொடங்கும் முன்பு இரைக்கு மிகநெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். புலிகள் சிறப்பாகத் தாவும் திறனையும் பெற்றுள்ளன. பெரிய இரையை வேட்டையாடும்போது புலிகள் பெரும்பாலும் முதலில் அவற்றின் தொண்டையைக் கடிக்கின்றன. முன்னங்கால்களைப் பயன்படுத்தி இரையைப் பிடித்துத் தரையில் இழுத்துத் தள்ளுகின்றன. இரையின் மீது நகங்களைச் செழுத்தி கொக்கிபோன்று போட்டு சாகும்வரை இரையின் கழுத்தை நெருக்குகிறது. சிறிய இரைகளை அவற்றின் பிடரியைக் கடித்து, தண்டுவடத்தை உடைத்துக் கொன்று உண்கின்றன.


குடும்ப வாழ்க்கை
சிங்கங்கள்போன்று ஆண், பெண் புலிகள் குடும்பமாக, கூட்டமாக வாழ்வதில்லை. தனித்து வாழ்வதையே விரும்புகின்றன. நவம்பரிலிருந்து ஏப்ரல் வரையான காலப்பகுதிகளில்தான் புலிகள்  இனச் சேர்க்கையில் ஈடுபடும். இக்காலப் பகுதியில்தான் காட்டுக்குள் ஆண் புலிகள் பெண் புலிகளைத் தேடித் திரிந்துகொண்டிருக்கும். ஆண் பெண் புலிகள் இனைசேர்ந்தபின் ஆண் புலி பிரிந்து சென்று விடும். தொடர்ந்து 16 வாரங்கள் குட்டிகளை வயிற்றில் சுமக்கும் பெண் புலி அதன் பின் பாதுகாப்பானதொரு இடத்தில் குட்டிகளை ஈன்றெடுக்கும். ஒரு தடவையில் 3 - 4 குட்டிகள் பிறக்கும். ஒரு கிலோகிராம் நிறையில் உடல் முழுதும் மயிர்கள் நிறைந்து, கண்கள் மூடிய நிலையில் பார்க்க மிகவும் அழகான, அப்பாவியான தோற்றத்தில் குட்டிகள் இருக்கும். ஆரம்பங்களில் பாலூட்டி வளர்க்கும் தாய் இரண்டு மாதங்களில் மாமிசத்தையும் உண்ணக்கொடுக்கும். குட்டிகள் பெரிதாகும்வரை ஆண் புலியை குட்டிகள் பக்கம் அண்டவிடாது. இவ்வாறு இரண்டரை வருடங்கள் தாயுடனேயே இருந்துவிட்டு அதன்பின்பு பிரியாவிடை பெற்று தாயைவிட்டு குட்டிகள் தனித்து வாழ பிரிந்து சென்று விடும்.

உலகின் மிகப் பிடித்தமான விலங்கு
Animal Planet நிகழ்த்திய வாக்கெடுப்பில், புலி சிறிய வித்தியாசத்தில் நாயை வென்று உலகின் மிகப் பிடித்த விலங்காகத் தேர்ந்தெடுக்கபட்டது. இந்த வாக்கெடுப்பில் 73 நாடுகளிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வாக்களித்திருந்தனர். மொத்த வாக்குகளில் புலிகளுக்கு 21% வாக்கும் நாய்களுக்கு 20% வாக்கும் கிடைக்கப்பெற்றது. நாய்களைப் போன்றே புலிகளையும் வீட்டு விலங்காக, செல்லப் பிராணியாக வளர்க்கும் பழக்கம் மேற்கு நாடுகளில் இருந்து வருகின்றது. விலங்கியல் பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியகங்களின் கூட்டமைப்பு செய்த ஒரு கணிப்பீட்டின்படி அமெரிக்காவில் மட்டும் 12,000 பேர் புலிகளைச் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக இது உலகில் காடுகளில் உள்ளவற்றின் எண்ணிக்கையை விட அதிகம். அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டுமே 4,000 புலிகள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அரபு நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல.
Animal Planet இல் பணி புரிந்த விலங்குகள் நடத்தை ஆய்வாளரான கேண்டி டிசா என்பவர் கூறியதாவது "வெளித்தோற்றத்தில் மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் அகத்தில் அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்டவைதான் புலிகள். அவை நம்மைப் போன்றவையேஎன்கிறார். உலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின், "மக்கள் புலியைத் தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், மக்கள் புலிகளின் முக்கியத்துவத்தையும் அவை காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதே பொருள்" எனக் கூறினார்.


வரலாற்றுப் பதிவுகளில் புலி.
புலிகள் பழம் புராணங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. தொன்றுதொட்டு சோழ அரசர்களின் அடையாளச் சின்னமாக புலி விளங்கியுள்ளது. சீனா நாட்டின் புராணம் மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் புலிக்கு வழங்கப்படுகின்றது. தற்காலதிலும் திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களிலும் புலி தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றது. புலிகளின் உருவமானது பல கொடிகளிலும் சின்னங்களிலும்  பதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அணிகளுக்குப் பெர்களாகவும் சின்னங்களாகவும் பல ஆசிய நாடுகளின் தேசிய விலங்காகவும் புலி உள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கும் புலிதான். இலங்கையில் 30 வருடமாக யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இயக்கத்தின் பெயரும் (தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கம்) அவர்களின் கொடியில் இருந்த சின்னமும் புலிதான்.

புலிகளை வேட்டையாடும் மனிதன்.
பல்வேறு தேவைகளுக்காக புலிகள் வேட்டையாடப்படுகின்றன. அதிலும் அவற்றின் தோலுக்காக கூடுதலாக அவை கொல்லப்படுகின்றன. அவற்றின் வாழிடங்களை அழிப்பதும் அவை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும். பல கிழக்கு ஆசிய நாடுகள் புலிகளின் உடல் உருப்புகளிலிருந்து மருந்துகள் தயாரிப்பதற்காக அவற்றைக் கொல்கின்றன. அத்தோடு வியாபார நோக்கத்திற்காகவும் காடுகளிலிருந்து இவை பிடிக்கப்படுகின்றன. மனிதர்கள் வாழும் கிராமங்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் அவை கிராம மக்களாலும் சிலநேரம் கொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக புலிகள் பாதுகாப்பு மையத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling, Al-Quran & Science Researcher.


சிங்கம் காடிட்டின் அரசனாக மதிக்கப்பட்டாலும் பல சந்தர்ப்பங்களில் வீரத்திற்கு புலிதான் உவமிக்கப்படுகின்றது. சிங்கத்திற்கு இணையாக காட்டுக்குள் திமிரோடு திரியும் அடுத்த விலங்கு புலிதான். சிங்கத்தைவிடவும் உடலமைப்பில் புலி பெரியது. சிங்கத்திற்கும் புலிக்கும் இடையில் நடைபெற்றுள்ள சண்டைகளிலெல்லாம் புலிதான் வெற்றி பெற்றுள்ளது. உணவுச்சங்கிலியின் முக்கிய இனம். இத்தொடரில் புலிகளின் வீர தீரமான வாழ்க்கை பற்றிப் பார்ப்போம்.

பெயர் அறிமுகம்.
புலிகள் (பாந்தெரா தீகிரிஸ்), என்னும் பூனையினத்தைச் சேர்ந்தவையாகும். பாந்தெரா வகை பூனையினங்களில் இதுவே மிகப் பெரியதுமாகும். புலி, வேங்கை என்று தமிழிலும் Tiger என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் "டைகர்" என்ற சொல் "தீகிரிஸ் " என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தக் கிரேக்கச் சொல்லானது  பாரசீக மொழியில் அந்த விலங்கின் வேகத்தைக் குறிப்பிடும் வகையில் "அம்பு" என்ற பொருளிலோ அல்லது டைகிரிஸ் என்ற நதியின் பெயரிலிருந்தும் பிறந்திருக்கலாம். பிரபலமான குன்பு பெண்டா கார்டூனில் வரும் புலியின் பெயரும் டைக்கரஸ்தான்.  புலி இனங்களில் 9 இனங்கள் இருந்து வந்தன. அவை பெங்கால், சைபீரியன், சுமத்ரன், இந்தோ/சைனீஸ், மலையன், தெற்கு சீன புலிகள், காஸ்பியன், ஜாவன் மற்றும் பாலி. இதில் கடைசி நான்கு இனங்களும் தற்போது இல்லை.

புலியின் தோற்ற அமைப்பு.
யோசிக்கவே தேவையில்லை பூனையின் தோற்றமேதான் புலியும். ஆனால் பூனையை விட பன்பமடங்கு பெரியது. 4 மீட்டர்கள் (13 feet) வரை நீளமும் 300 கிலோகிராம் (660 பவுண்டுகள்) வரை எடையும் கொண்டுள்ளன. இரண்டு கால்களால் எழுந்து நின்றால் எட்டு அடிகள் வரை அதன் உயரம் இருக்கும். கட்டுமஸ்தான உடல், பலமான கால்கள், கவர்ச்சியான தோற்றம். உலகின் கண்ணைக் கவரும் பெரிய விலங்குகளில் மிகப் பிரபலமானது புலிதான். உடல் பழுப்பு கலந்த வெளிர் சிவப்பு நிற தோலை உடையது. உடல் முழுவதும் வெள்ளை மற்றும் கருப்பு நிற வரிகள் விரவி கிடக்கும். எண்ணிப் பார்த்தால் பெரும்பாலும் 100 வரிகள் இருக்கும்.  இது புலிக்குப் புலி வித்தியாசமாக இருக்கும்.  இந்த வரிகள் மனிதர்களின் கைரேகைகளை போன்றது. கைரேகைகள் ஒருவருக்கொருவர் எப்படி வேறுபடுமோ அதேபோன்று புலிகளின் உடலில் உள்ள கருப்பு, வெள்ளை வரிகளும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. இந்த வரிகளானது வெறுமனே புலியின் உரோமங்களின் நிறமல்ல. மாறாக தோலே அப்படித்தான் இருக்கிறது. அதன் உரோமங்களை மழித்தெடுத்தாலும் இந்த வரிகள் நீக்கப்படுவதில்லை.


இவற்றின் உடலின் நடுப் பகுதியும், அடிப்பகுதியும் வெண்ணிறத்தில் உள்ளன. முகத்தைச் சுற்றி ஒரு வெண்ணிற "வளையம்" காணப்படுகிறது. காதுகளின் பின் பகுதியிலும் ஒரு வெண்ணிறப் புள்ளி உள்ளது. உடலைப் போன்றே கால்களிலும் நீண்ட வாலிலும் முகத்திலும் இந்த கருப்பு வெள்ளை வரிகளைக் காணலாம். இவை புலிக்கு தனி கவர்ச்சியைக் கொடுக்கும். சிலபோது அரிதாக வெள்ளை நிறத்திலும் புலிகள் பிறப்பதுண்டு. இது சடுதியான மரபணு மாற்றத்தினால் ஏற்படுவதாகும். அதுபோன்று தங்க நிறத்திலான வரிவரிப் புலிகளும் பிறப்பதுண்டு. புலியின் நெற்றியில் என்பதனை ஒத்த ஒரு அடையாளம் இருக்கின்றது. இது சீன எழுத்தில் அரசன் என்பதை குறிக்கும். பொதுவாக சிங்கத்தைக் காட்டுக்கு அரசன் எனக் கூறினாலும் கிழக்காசிய நாடுகளில் புலியே காட்டின் அரசன் என்று சொல்லப்படுகிறது.

புலிகளின் பூர்வீகம்.
புலிகள் பணிப் பகுதி, பாலை நிலப் பகுதி என அனைத்துவித பருவ காலநிலைகளிலும் வாழும் தன்மை கொண்டன. செடி கொடிகள் அடர்ந்த காடுகள், மரங்கள் சதுப்பு நிலக் காடுகள், புல்வெளிகள் என எங்கும் வாழும் தன்மை கொண்டன. இதன் பூர்வீகம் பெரும்பாலும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளாகும்.  உலகிலேயே அதிகளவில் புலிகள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவுக்குதான் முதலிடம். கடந்த 2014 ம் ஆண்டு இந்தியாவில் 2,226 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இன்று புலிகள் அதிகமாக வாழும் தீவாக சுமத்ராத் தீவு கருதப்படுகின்றது.

புலிகளின் வசிப்பிட அமைப்பு.
சிங்கங்கள் வேட்டைக்கு சிங்கிலாக வந்தாலும் வாழும் போது கூட்டமாகவே வாழும். ஆனால் புலிகள் அதிலும் ஆண் புலிகள் அவ்வாறல்ல. அவை எப்போதும் தனித்தே வாழும். தனித்தே சுற்றித் திரியும். அவை தனிமை விரும்பிகள். எனவே புலி காட்டில் தனக்கென்று ஒரு எல்லையைத் தீர்மானித்துக் கொண்டு 'உன் ஏரியாவுக்கு நான் வரமாட்டேன் என் ஏரியாவுக்கு நீ வராதே' என்று வாழும். சிறுநீர், மலம் கழிப்பதன் மூலமும் மரங்களில் தமது அதி கூர்மையான நகங்களால் கீறல்களை உண்டாக்குவதன் மூலமும் மற்றப் புலிகளுக்கு தன்னுடைய எல்லைக் கோட்டை தெரியப்படுத்துகிறது. எனவே ஒரு புலி இன்னொரு புலியின் எல்லைக்குள் நுழையாது. புலிகள் தமது வாழிடத்தை அடையாளப்படுத்துவதற்கு முன்பு அது பொருத்தமான இடம்தானா என்பதில் கவனம் செழுத்துகின்றன. அவ்விடம் அடர்ந்த வனப் பகுதியாகவும், நீர்த் தேவைகளை நிறைவேற்ற பொருத்தமான இடமாகவும் மனித இடையூறுகள் அற்ற பகுதியாகவும் இலகுவாக உணவைப் பெற்றுக்கொள்ள முடியுமான பகுதியாகவும் இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்ளும்.


புலிகளின் உணவு
சிறிய விலங்குகள் முதல் பெரிய விலங்குகள் வரை அனைத்தையும் புலிகள் உணவாகக்கொள்கின்றன. புலிகளின் விருப்பமான இரை மான்கள்தான். அதுவல்லாமல் முயல், எருமை, நீர் எருமை, காட்டெருமை, ஆடு, காட்டுப்பன்றி, ஒட்டகச் சிவிங்கி, குரங்கு, மயில் என்பவற்றையும் உண்ணும். இதோடு கரடி, நாய், சிறுத்தை, முதலை, மலைபாம்பு என்பவற்றையும் இரையாக்கும். யானை, காண்டா மிருகங்கள் போன்ற பெரிய விலங்குகளைக்கூட வேட்டையாடி சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன. உணவொன்று கிடைத்தால் உடனே அதனைப் பாதுகாப்பானதொரு இடத்திற்கு எடுத்துச் சென்றுதான் உணும். இவற்றால் ஒரே நேரத்தில் 20 கிலோகிராம் வரையான உணவை உட்கொள்ள முடியும். புலியின் பல்லமைப்பு. பெரிய கோரைப்பற்கள் இரையைக் கடித்து, கிழித்து கொன்று உண்ணப் பயன்படுகின்றன.

வேட்டையாடும் திறன்
புலி வேட்டை உண்மையிலேயே மிரளவைக்கக் கூடியது. புலியின் உடலில் உள்ள கருப்பு, வெள்ளை, இளஞ் சிவப்பு நிறங்கள் தன் உடலை புல்வெளிகளிலும் புதர்களிலும் மறைத்துக் கொண்டு விலங்குகளை வேட்டையாட உதவுகிறது. உயரத் தாவிப் பாயவும் இவற்றால் முடியும். தமது கூர்மையான நகங்களைப் பயன்படுத்தி புலிகள் மரத்தின் உச்சி வரை ஏறி மரவாழ் விலங்குகள், பறவைகளையும் வேட்டையாடும். மான்கள்தான் மிகவும் பிடித்த உணவு. மானைவிட வேகமாக ஓடி அதனையும் வேட்டையாடும். சிங்கங்களைப் போலவே புலியும் தன்னை விட எடையில் அதிகமான விலங்குகளையும் இழுத்து வேட்டையாடக்கூடிய திறனைப் பெற்றுள்ளன. பிரமாதமாக நீச்சல் அடிக்கும் திறமையும் இவற்றுக்கு உண்டு. நீரில் நீந்தும் வாத்து, அண்ணப் பறவைகளையும் நீருக்கடியில் ஓடும் மீண்களையும்கூட நீரில் நீந்தி, மூழ்கிச் சென்று வேட்டையாடிவிடும். அவை 4 மைல்கள் வரை நீந்தக்கூடியவை. ஏன் நீரில் ராஜாவான முதலைகளைக்கூட பயமே இல்லாமல் நீந்திச் சென்று கடித்துக் கொன்று இழுத்துக்கொண்டு கரைக்கு வரும். மனிதர்கள் ஒரு காலத்தில் விலங்குகளை பார்த்து அஞ்சுவதில் புலிக்கு முதலிடம் உண்டு. ஏனெனில் இவை கிராமங்களுக்குள் நுழைந்து மனிதர்களையும் வேட்டையாடியுள்ளது.


பெரும்பாலான பூனை இனங்களைப் போலவே மெல்லப்பதுங்கி தனது உடலின் அதிகமான திறனைச் செலுத்தி, உடல் அளவையும் வலிமையையும் பயன்படுத்தி எந்தக் கோணத்திலிருந்தும் பாய்ந்து தாக்கி இரையை நிலைகுலையச் செய்யும். புலிகள் அதிகமான எடையைக் கொண்டிருந்தாலும்  மணிக்கு 49-65 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியவை. ஆனாலும் தொடர்ந்து ஓட முடியாது. எனவே புலிகள் இரையைத் தாக்கத் தொடங்கும் முன்பு இரைக்கு மிகநெருக்கமாக இருக்க வேண்டியது அவசியம். புலிகள் சிறப்பாகத் தாவும் திறனையும் பெற்றுள்ளன. பெரிய இரையை வேட்டையாடும்போது புலிகள் பெரும்பாலும் முதலில் அவற்றின் தொண்டையைக் கடிக்கின்றன. முன்னங்கால்களைப் பயன்படுத்தி இரையைப் பிடித்துத் தரையில் இழுத்துத் தள்ளுகின்றன. இரையின் மீது நகங்களைச் செழுத்தி கொக்கிபோன்று போட்டு சாகும்வரை இரையின் கழுத்தை நெருக்குகிறது. சிறிய இரைகளை அவற்றின் பிடரியைக் கடித்து, தண்டுவடத்தை உடைத்துக் கொன்று உண்கின்றன.


குடும்ப வாழ்க்கை
சிங்கங்கள்போன்று ஆண், பெண் புலிகள் குடும்பமாக, கூட்டமாக வாழ்வதில்லை. தனித்து வாழ்வதையே விரும்புகின்றன. நவம்பரிலிருந்து ஏப்ரல் வரையான காலப்பகுதிகளில்தான் புலிகள்  இனச் சேர்க்கையில் ஈடுபடும். இக்காலப் பகுதியில்தான் காட்டுக்குள் ஆண் புலிகள் பெண் புலிகளைத் தேடித் திரிந்துகொண்டிருக்கும். ஆண் பெண் புலிகள் இனைசேர்ந்தபின் ஆண் புலி பிரிந்து சென்று விடும். தொடர்ந்து 16 வாரங்கள் குட்டிகளை வயிற்றில் சுமக்கும் பெண் புலி அதன் பின் பாதுகாப்பானதொரு இடத்தில் குட்டிகளை ஈன்றெடுக்கும். ஒரு தடவையில் 3 - 4 குட்டிகள் பிறக்கும். ஒரு கிலோகிராம் நிறையில் உடல் முழுதும் மயிர்கள் நிறைந்து, கண்கள் மூடிய நிலையில் பார்க்க மிகவும் அழகான, அப்பாவியான தோற்றத்தில் குட்டிகள் இருக்கும். ஆரம்பங்களில் பாலூட்டி வளர்க்கும் தாய் இரண்டு மாதங்களில் மாமிசத்தையும் உண்ணக்கொடுக்கும். குட்டிகள் பெரிதாகும்வரை ஆண் புலியை குட்டிகள் பக்கம் அண்டவிடாது. இவ்வாறு இரண்டரை வருடங்கள் தாயுடனேயே இருந்துவிட்டு அதன்பின்பு பிரியாவிடை பெற்று தாயைவிட்டு குட்டிகள் தனித்து வாழ பிரிந்து சென்று விடும்.

உலகின் மிகப் பிடித்தமான விலங்கு
Animal Planet நிகழ்த்திய வாக்கெடுப்பில், புலி சிறிய வித்தியாசத்தில் நாயை வென்று உலகின் மிகப் பிடித்த விலங்காகத் தேர்ந்தெடுக்கபட்டது. இந்த வாக்கெடுப்பில் 73 நாடுகளிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வாக்களித்திருந்தனர். மொத்த வாக்குகளில் புலிகளுக்கு 21% வாக்கும் நாய்களுக்கு 20% வாக்கும் கிடைக்கப்பெற்றது. நாய்களைப் போன்றே புலிகளையும் வீட்டு விலங்காக, செல்லப் பிராணியாக வளர்க்கும் பழக்கம் மேற்கு நாடுகளில் இருந்து வருகின்றது. விலங்கியல் பூங்காக்கள் மற்றும் மீன் காட்சியகங்களின் கூட்டமைப்பு செய்த ஒரு கணிப்பீட்டின்படி அமெரிக்காவில் மட்டும் 12,000 பேர் புலிகளைச் செல்லப் பிராணிகளாக வைத்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. குறிப்பாக இது உலகில் காடுகளில் உள்ளவற்றின் எண்ணிக்கையை விட அதிகம். அதில் டெக்ஸாஸ் மாகாணத்தில் மட்டுமே 4,000 புலிகள் காப்பகப்படுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அரபு நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல.
Animal Planet இல் பணி புரிந்த விலங்குகள் நடத்தை ஆய்வாளரான கேண்டி டிசா என்பவர் கூறியதாவது "வெளித்தோற்றத்தில் மிரட்டும் விதமாகவும், அச்சுறுத்தும் ஆற்றலுடையதாகவும் தோன்றினாலும் அகத்தில் அமைதியாகவும் கூரிய சிந்தனை மற்றும் முடிவெடுக்கும் திறனும் கொண்டவைதான் புலிகள். அவை நம்மைப் போன்றவையேஎன்கிறார். உலகளாவிய வனவிலங்குக் கூட்டிணையப் பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச விலங்கினங்களின் அதிகாரியான கால்லம் ரேங்கின், "மக்கள் புலியைத் தமது விருப்பமான விலங்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால், மக்கள் புலிகளின் முக்கியத்துவத்தையும் அவை காக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வெகுவாக உணர்ந்திருக்கிறார்கள் என்பதே பொருள்" எனக் கூறினார்.


வரலாற்றுப் பதிவுகளில் புலி.
புலிகள் பழம் புராணங்களிலும் நாட்டுப்புற இலக்கியங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. தொன்றுதொட்டு சோழ அரசர்களின் அடையாளச் சின்னமாக புலி விளங்கியுள்ளது. சீனா நாட்டின் புராணம் மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியத்துவம் புலிக்கு வழங்கப்படுகின்றது. தற்காலதிலும் திரைப்படங்கள் மற்றும் இலக்கியங்களிலும் புலி தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றது. புலிகளின் உருவமானது பல கொடிகளிலும் சின்னங்களிலும்  பதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு அணிகளுக்குப் பெர்களாகவும் சின்னங்களாகவும் பல ஆசிய நாடுகளின் தேசிய விலங்காகவும் புலி உள்ளது. இந்தியாவின் தேசிய விலங்கும் புலிதான். இலங்கையில் 30 வருடமாக யுத்தத்திற்குக் காரணமாக இருந்த இயக்கத்தின் பெயரும் (தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் இயக்கம்) அவர்களின் கொடியில் இருந்த சின்னமும் புலிதான்.

புலிகளை வேட்டையாடும் மனிதன்.
பல்வேறு தேவைகளுக்காக புலிகள் வேட்டையாடப்படுகின்றன. அதிலும் அவற்றின் தோலுக்காக கூடுதலாக அவை கொல்லப்படுகின்றன. அவற்றின் வாழிடங்களை அழிப்பதும் அவை எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும். பல கிழக்கு ஆசிய நாடுகள் புலிகளின் உடல் உருப்புகளிலிருந்து மருந்துகள் தயாரிப்பதற்காக அவற்றைக் கொல்கின்றன. அத்தோடு வியாபார நோக்கத்திற்காகவும் காடுகளிலிருந்து இவை பிடிக்கப்படுகின்றன. மனிதர்கள் வாழும் கிராமங்களுக்குள் நுழைந்து அவர்களின் வளர்ப்பு விலங்குகளைக் கொல்வதால் அவை கிராம மக்களாலும் சிலநேரம் கொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களால் புலிகளின் எண்ணிக்கை குறைவடைந்து வருவதாக புலிகள் பாதுகாப்பு மையத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.

அஷ்.எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A
Dip. In psychological Counseling, Al-Quran & Science Researcher.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...