"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 July 2011

மரணத்தின் பின் வாழ்வு சாத்தியமானதா?

ஆலிப் அலி (இஸ்லாஹி)



உயிர்வாழும் அனைத்து ஜீவராசிகளும் அவை விரும்பியோ வெறுத்தோ மரணத்தைச் சுவைத்தே தீரும். “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்.”(ஆலு இம்றான்:185) என்ற இந்த அல்குர்ஆன் வசனம் உலக வாழ் ஜீவராசிகளின் யதார்த்த நிலையைத் தெளிவுபடுத்துகின்றது. அத்தோடு இது இறை நியதியும்கூட. அவை எங்கு எவ்வளவு பாதுகாப்பான இடங்களில் இருந்தாலும் சரியே. “நீங்கள் எங்கிருந்தபோதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே!”(அன்னிஸா:78) 

பொதுவாக மனிதர்கள் யாவரும் மரணம் என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உறுதியாக நம்புகின்றனர். அது ஒரு இந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ அல்லது ஒரு பௌத்தனாகவோ அல்லது ஒரு கிறிஸ்தவனாகவோ ஏன் ஒரு நாஸ்திகனாகவோ இருக்கலாம். அதில் இருவேறு கருத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும் இவர்கள் கருத்துவேறுபாடுகொள்வதெல்லாம் மரணத்தின் பின்பு மீள் உயிர்ப்பித்தல் பற்றியே!

இந்துக்களினதும் பௌத்தர்களினதும் நம்பிக்கை அவர்கள் இவ்வுலகிலே ஏழு ஜென்மங்கள் பிறப்பார்கள். தற்போதைய பிறப்பை எவ்விதம் கழிப்பார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் மறுபிறவி எடுப்பார்கள். இவர்களது கருதல் உடலை விட்டுப்பிரியும் உயிர் ஒன்று கடவுளைச்சென்றடைய வேண்டும் அவ்வாறில்லாவிடின் அவ்வுயிர் எங்கு நிலைகொள்கிறது என்ற கேள்விக்கு விளக்கமாகவே மறுபிறப்புச் சிந்தனை (Transmiggration of soul) தோற்றுவிக்கப்பட்டது. நாஸ்திகர்களோ மரணத்தின் பின்பான மீள் உயிர்ப்பித்தலை முற்றாக மறுக்கின்றனர். மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போவதுதான் அவனது இறுதி முடிவு என்ற சடவாத சிந்தனையை முன்வைக்கின்றனர்.

எனினும் இஸ்லாத்தின் மீள் உயிர்ப்பித்தல் பற்றிய விளக்கம் மிகவும் வித்தியாசமானது. சாத்தியமானது! இறையிருப்பை வலுப்படுத்தக்கூடியது. எனவே அல்குர்ஆன், அல்ஹதீஸின் நிழலில் அல்லாஹ் எவ்வாறு மரித்து மக்கி மண்ணோடு மண்ணாகிப்போனவனை மீள உயிர்ப்பிக்கின்றான் என்பதை சற்று ஆராய்வோம். மீள் உயிர்ப்பித்தல் தொடர்பான பூரண அறிவும் ஞானமும் அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என்பதை ஞாபகமூட்டிக்கொண்டு எமது சிந்தனையின் ஆணி வேரை ஆழப்பதித்துக்கொண்டு ஆய்வுக்குள் நுழைவோம்.
ஆரம்ப காலம்தொட்டு இன்றுவரை மறுமையை மறுத்தரைப்போர் மனிதன் மீள் உயிர்ப்பிக்கப்படுவதையும் நிராகரித்தே வருகின்றனர். அன்று அறியாமையில் வாழ்ந்த சமூகம்தான் அப்படியென்றால் Digital world என வர்ணிக்கப்படும் இன்றைய நவீனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சில விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அறிவுபூர்வமான இந்த உண்மையை புறமொதுக்கி வருகின்றனர். இவ்வாறு அன்றைய மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் குதர்க்கம் புரிந்தபோது தக்க பதிலை அல்லாஹ் நபியவர்களுக்கு இறக்கிவைத்தான். அவை இன்றும் தக்க பதிலடியாகக் காணப்படுகின்றன.

நபியவர்களுடன் அன்று சிலர் இவ்வாறு மீள் உயிர்ப்பித்தலை மறுத்துரைத்ததை சில அல்குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கலாம்.

'இது நம்முடைய இவ்வுலக வாழ்வைத்தவிர (இறந்தபின் வேறு வாழ்க்கை) இல்லை. (இறந்த பின்) நாம் (உயிர்ப்பிக்கப்ட்டு) எழுப்பப்படுபவர்களுமல்லர்" என்று கூறினார்கள். (அல்அன்ஆம்:29) மற்றுமோர் வசனத்தில்

'நாம் இறந்து (உக்கி) மண்ணாகிவிட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? (அது இயற்கைக்கு மாற்றமானதே! எனவே) அது தூரமான மீட்சியாகும் என நிராகரிப்போர் கூறுகின்றனர்.” அதற்கு அல்லாஹ் “(இறந்தபின்) அவர்களிலிருந்து (அவர்களின் உடலை எந்தளவு) பூமி (தின்று) குறைத்திருக்கிறது என்பதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கிறோம்.”(காஃப்:3,4)

அவ்வாறே ஒருவன் நபியவர்களிடம் உக்கிப்போன எலும்புக் கூடொன்றை எடுத்து வந்து இவ்வாறு கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது.

'எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில் உயிரூட்டுபவன் யார்? என்று அவன் கேட்கிறான்" இதற்கு அல்லாஹ் அளிக்கும் தர்க்கரீதியான பதிலைப் பாருங்கள். '(நபியே! அதற்கு) நீர் கூறுவீராக: 'மனிதன் முதலில் அதனைப் படைத்தானே அவனே அதனை (மீள) உயிர்ப்பிப்பான்" (யாஸீன்:78,79)

இவ்வாறு மீள் உயிர்ப்பித்தலை மறுப்போருக்கு அல்லாஹ் பௌதீகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் நிறைய சான்றுகளைக் கூறுகின்றான். எவ்வாறு அல்லாஹ் மீள் உயிர்ப்பித்தல் தொடர்பாக மிக இலகுவான உதாரணங்களைக் கூறுகின்றான் என்று பாருங்கள்.

பௌதீக ரீதியான சான்றுகள்

'(நபியே!) காய்ந்து விட்டதாக பூமியை நிச்சயமாக நீர் காண்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அதன் மீது நாம் நீரை இறக்கிவைத்தால், அது செழிப்படைந்து வளர்கின்றது. அதை நிச்சயமாக உயிர்ப்பித்தானே அவன்தான் மரணித்தோரையும் உயிர்ப்பிக்கக்கூடியவன்."(ஹாமீம் ஸஜ்தா:39)

'இன்னும் (அம்மழை நீரை) அதைக்கொண்டு இறந்து கிடந்த ஊரை (வறண்ட பூமியை) நாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே (மரணித்தோர் உயிர்பெற்று) வெளியேறுதலும் (நடந்தேறும்)" (அத்தாரியாத்:11)

பூமி எவ்வளவு காய்ந்து வறண்டு கிடந்தாலும் அதன்மீது மழைபொழிந்தால் அப்பூமி எவ்வளவு துரிதமாக செழிப்படைகின்றது என்பதைவைத்து அல்லாஹ் மீள் உயிர்ப்பித்தலை உவமிக்கின்றான். அதேபோன்று இதற்குக் காய்ந்துபோன வித்தை உதாரணப்படுத்துகின்றான். உதாரணத்துக்கு எவ்வாறு மென்மையானதொரு கொழுந்து அவ்வோட்டைப் பிளந்துகொண்டு மண்ணில் முட்டி மோதி வெளியேறுகின்றது என்று பார்த்தால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீள் உயிர்ப்பித்தலின் வல்லமையைப் புரிய முடியும். அல்லாஹ் கூறுகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ்தான் வித்துக்களையும், விதைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கின்றான். இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகின்றான். உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் அவனே வெளிப்படுத்துகின்றான்”(அல்அன்ஆம்:95)


இவ்வாறான இயற்கை நிகழ்வுகளை;ப் பார்த்து மீள் உயிர்ப்பித்தலை விளங்குவதைவிட தன்னிலே இருக்கும் அதற்கான சான்றை மனிதன் சிந்தித்துப் பார்த்தால் வியப்பிலாழ்வான். மனிதனின் உறக்கமே ஒரு மரணம்தான். சுவாசத்தைத் தவிர உலகத்துடனான சகல தொடர்புகளும் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வெறும் சுவாசிக்கும் ஜடமாகி விடுகின்றான். இந்நிலையில் தன்னைச் சூழ என்ன நிகழ்கின்றதென்றே அவனால் அறிய முடியாது. எவ்வாறெனில் தூங்கும்போது அல்லாஹ் மனிதனுக்கென்றே பிரத்தியோகமாக வழங்கியுள்ள ரூஹை அவனைவிட்டும் உயர்த்தி விடுகின்றான். இதன்போது அவன் உணர்வற்றுச் செல்கின்றான். விழிக்கும்போது ரூஹை அவனோடு சேர்த்து விடுகின்றான். இவ்வாறு அந்த ரூஹை அவ்வுடம்பிற்கு மீளவைக்காவிடின் மனிதன் உணர்வுகளற்ற நிலைக்குச் சென்றுவிடுவான். இதனால்தான் உறக்கம் என்பது சிறு மரணமெனப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்.

அவன் எத்தகையோனென்றால் (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும்போது) அவன்தான் உங்க(ளின் உயிர்க)ளைக் கைப்பற்றுகின்றான். மேலும், நீங்கள் பகலில் சம்பாதிக்கின்றவற்றையும் அவன் அறிகின்றான். பின்னர் (உங்களுக்குக்) குறிப்பிடப்பட்ட தவணையைப் பூர்த்திசெய்வதற்காக (ப்பகலான)தில் அவன் (உணர்ச்சியை உண்டுபன்னி) உங்களை எழுப்புகின்றான்.”(அல்அன்ஆம்:60) மற்றுமோர் இடத்தில்

உயிர்களை-அவற்றின் மரணத்தின்போது அல்லாஹ்வே கைப்பற்றுகின்றான். இன்னும் மரணிக்காமல் உள்ளவற்றையும் அவற்றின் தூக்கத்தில் (அவற்றின் ரூஹைக் கைப்பற்றுகின்றான்) பிறகு எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் (தன்னிடமே) தடுத்து (நிறுத்தி)க் கொள்கின்றான். மற்றவற்றைக் குறிப்பிடப்பட்ட தவணைவரை (வாழ்வதற்கு மீள) அனுப்பி விடுகின்றான்.”(அல்ஜுமர்:42)

இவை அல்லாஹ் எவ்வாறு மீள உயிர்ப்பிக்கின்றான் என்பது தொடர்பாக நாம் அன்றாடம் எமது கண்களால் கண்டு உணரும் பௌதீகரீதியான அத்தாட்சிகளாகும். இவைதவிர முன்சென்ற சில சமூகங்களை அல்லாஹ் இவ்வுலகில் மெய்யாகவே மரணிக்கச்செய்து மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பியுள்ளான். இவ்வாறான சில அற்புத நிகழ்வுகளை வரலாற்றுரீதியாக அல்குர்ஆன் நிரூபிக்கின்றது.

வரலாற்று ரீதியான சான்றுகள்

பனூ இஸ்ரவேல் சமூகம் மூஸா (அலை) அவர்களுடன் மிகவும் தர்க்கிப்பவர்களாக இருந்தனர். ஒரு முறை அவர்கள் மூஸா நபியைப் பார்த்துஉம் இறைவனை நாம் எம் கண்களால் காணும்வரை உம்மை விசுவாசிக்க மாட்டோம்என்றனர். அப்போது அல்லாஹ் அவர்கள் மீது கடுங்கோபங்கொண்டு அவர்களை மரணிக்கச்செய்து பாடம் புகட்டுவதற்காக மீண்டும் அவர்களை உயிர்ப்பித்து எழுப்பினான். இந்நிகழ்வை அல்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது.

மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாகக் காணும்வரை உம்மை நாம் விசுவாசிக்க மாட்டோம்என்று நீங்கள் கூறியதையும் அப்பால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே உங்களை இடிமுழக்கம் பிடித்துக்கொண்டதையும் (நினைவு கூருங்கள்) பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக, நீங்கள் இறந்து விட்டதற்குப் பின்னர் உங்களை நாம் (உயிர்ப்பித்து) எழுப்பினோம்.”(அல்பகறா:55, 56)

இந்நிகழ்வும் பனூ இஸ்ரவேலர்கள் சம்பந்தப்ட்டதாகும். கொலைசெய்யப்பட்ட ஒருவரை பசு மாடொன்றை அறுத்து அதன் ஒரு பகுதியைக்கொண்டு அடிக்குமாறு அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்கு இட்ட கட்டளைக்கிணங்க இந்நிகழ்வு நடைபெறுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்.
நீங்கள் ஒரு ஆத்மாவைக் கொலை செய்ததையும் பின்னர் அதில் (ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி) நீங்கள் தர்கித்துக் கொண்டிருந்தீர்கள் (என்பதையும் நினைவு கூருங்கள்) அல்லாஹ்வோ நீங்கள் மறைத்துக்கொண்டிருந்ததை வெளியாக்குகிறான். ஆகவேஅறுக்கப்பட்ட பசுவாகிய அதன் சில (பாகத்)தைக் கொண்டு (கொல்லப்பட்ட) அவனை அடியுங்கள்என நாம் கூறினோம். (பின்னர் அவன் உயிர்பெற்ற) அவ்வாறே மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்.”(அல்பகறா:72, 73)

மரணத்திற்கு அஞ்சி ஒரு சமூகம் தமது இல்லங்களை விட்டும் வெளியேறிச் சென்றனர். அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவர்களையும் அல்லாஹ் மரணிக்கச்செய்துவிட்டு மீண்டும் உயிர்ப்பித்தான்.

(நபியே!) மரணத்திற்கு அஞ்சி தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்களோ ஆயிரக்கணக்கில் இருந்தனர். அப்போது அல்லாஹ் அவர்களிடம்நீங்கள் இறந்து விடுங்கள்என்று கூறினான். (அவ்வாறே அவர்கள் இறந்துவிட்டனர்) பின்னர் அவர்களை (அல்லாஹ்) உயிர்;ப்பித்தான்.” (அல்பகறா:243)

இங்கு அழிந்துகிடந்த ஒரு கிராமத்தைக் கடந்துசென்ற ஒரு வழிப்போக்கரின் கதை குறிப்பிடப்படுகிறது. “அழிந்து சின்னாபின்னமான இந்தக் கிராமத்தை அல்லாஹ் எங்கே உயிர்ப்பிக்கப்போகின்றான்என்று ஏளனமாகக் கூறியதனால் அல்லாஹ் அவரை ஒரு நூற்றாண்டு காலம் மரணிக்கச் செய்துவிட்டு மீண்டும் எழுப்பினான். இவ்வாறு அந்நிகழ்வை அல்குர்ஆன் விளக்குகின்றது.

அல்லது ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப்போல் (நபியே! நீர் பார்க்கவில்லையா? அவர்) அதிலுள்ள முகடுகளின் மீது அவை வீழ்ந்து கிடக்க (க் கண்டு) “இதனை எவ்வாறு இது இறந்துகிடக்கின்ற நிலையில் அல்லாஹ் உயிர்ப்பிப்பான்?” என்று கூறினார். ஆகவே அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணிக்கச்செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரிடம்) “நீர் எவ்வளவு காலம் இருந்தீர்?” எனக் கேட்டான். (தற்க)வர்ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பாகம் இருந்தேன்என்று கூறினார். (அதற்கு அல்லாஹ்) அவ்வாறல்ல நீர் நூறு வருடங்கள் (இந்நிலையில்) இருந்தீர்என்று கூறினான்

ஆகவே உமது உணவையும் பானத்தையும் நீர் நோக்குவீராக அவை எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகவில்லை. இன்னும் உமது கழுதையின்பால் நோக்குவீராக. மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்குவதற்காகவும் (மரணிக்கச்செய்து உம்மை உயிர்கொடுத்தெழுப்பினோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளின்பால் எவ்வாறு அவற்றைச்சேர்த்து பின்னர் அதன் மீது மாமிசத்தை அணிவிக்கின்றோம் என்று நீர் நோக்குவீராக. பின்னர் அவருக்கு (அது) தெளிவானபோது அவர்நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்று நான் அறிகிறேன்என்று கூறினார்.”(அல்பகறா:259)

முற்றுமொரு சம்பவம்தான் இப்றாஹீம் (அலை) அவர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு முறை அவர்கள் மரணித்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதைத் தனக்குக் காண்பிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டியபோது அல்லாஹ் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றைத் துண்டுகளாக்கி அதன்பின்பு மலைகளில் அவற்றைக் கொண்டுபோய் வைத்துவிட்டு அழைக்குமாறு கூறினான். அதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

இன்னும் இப்றாஹீம்என் இரட்சகனே! மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய் என்பதை எனக்குக் காண்பிஎனக் கூறியபோது அவன் “(ஏன்) நீர் நம்பவில்லையா?” என்று கேட்டான். (தற்க)வர்ஏன் இல்லை! எனது இதயம் அமைதியடைவதற்காகஎன்று கூறினார். (அதற்கு அல்லாஹ்) “பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து பின்னர் நீர் அவைகளைத் துண்டாக்கி அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிடுவீராக! பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக. அவை உம்மிடம் வேகமாய் வந்துசேரும்.”(அல்பகறா:260)

மீள் உயிர்ப்பித்தல் விஞ்ஞான நோக்கு

ஆகவே மேற்கூறிய சரித்திரச்சான்றுகள் மறுமை நாளையும் அங்கு மனிதன் மீள உயிர்ப்பிக்கப்படுவதன் யதார்த்தத்தையும் நிதர்சனப்படுத்துகின்றன. இனி எமது சிந்தனைகளைச் சற்று சிறகடிக்கவிட்டு அல்லாஹ் எவ்வாறு மனிதனை மீள எழுப்புகின்றான் என்பதன் படிமுறைகளை விஞ்ஞானரீதியாக நோக்குவோம்.

மீள் உயிர்ப்பித்தலுக்கு மலைகளின் பங்கு அளப்பரியது. கடலில் மலைகளின் உருவாக்கம் பற்றிய மேலோட்டமான அறிவிருந்தால் இதனை எம்மால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கின்றேன். வெள்ளம், மழை மற்றும் மனித செயற்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் மண்ணரிப்புக்குள்ளாகி இறுதியில் அவை கடலை வந்தடைகின்றன. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குத் தொடர்ந்து மண் கடலில் படிவதால் மலைகள் தோற்றம் பெறுகின்றன. மண்ணரிப்புக்குள்ளாகி அதனோடு சேர்ந்து இறந்துகிடக்கும் உயிரினங்களின் மூலக்கூறுகளும் படிமங்களும் கடலில் படிகின்றன. இவ்வாறு தோற்றம்பெறும் ஒரு மலையை ஆய்வுசெய்யும்போது அம்மலையில் படிந்த உயிரினங்களின் னுNயு மூலக்கூறுகளை சிதையாமல் பெறமுடியுமாயின் அவ்வுயிரினம் எக்காலப்பகுதியில் வாழ்ந்தது, அதன் பிரதி போன்ற பல தகவல்களைப் பெறமுடியுமென தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறுதான் பூமி முற்றாகச் சிதைவடைந்து அதில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டு மண்ணோடு மண்ணாகிய பின்பும் மீள் உயிர்ப்பித்தலுக்கு மலைகள் சான்றாக, களஞ்சியமாக விளங்குவதாகக் கூர்ப்பியலாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார். (அல்ஹஸனாத்ஃ2005ஃமார்ச்) மேற்கூறப்பட்ட இப்றாஹீம் (அலை) அவர்களின் சம்பவத்தில்;கூட அல்லாஹ் அப்பறவைகளைத் துண்டாக்கி மலைகளில்தான் வைக்குமாறு கட்டளையிடுகின்றான். இந்த விடயத்தைச் சற்று நினைவுடுத்திப்பாருங்கள். மீள் உயிர்ப்பித்தலில் மலைகளின் வகிபாகம் குறித்த பூரண அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அவன் யாவற்றையும் அறிந்தவன்.

மனிதன் இறந்து உக்கி மண்ணோடு மண்ணாகிச் சென்றதன் பின் எந்த ஒரு சான்றுமே இல்லாத நிலையில் அவன் எவ்வாறு மீண்டும் எழுப்பப்படுகின்றான்?” என்ற ஒரு கேள்வி அன்றைய ஆரம்ப சமூகம் தொடக்கம் இன்றுவரை இருந்து வருகின்றது. இதற்கான விடை மிக்க ஆச்சரியமாகவும் மறுமையையும் மீள் உயிர்ப்பித்தலையும் ஏன் இஸ்லாத்தையும்கூட நிதர்சனப்படுத்துவதாக உள்ளது. விஞ்ஞானத்தின் சாயல்கூட இல்லாத அந்த சமூகத்தில் எவ்வாறு ஒரு தனிமனிதர் இது போன்ற விஞ்ஞானக் கருத்தைக் கூறியிருக்க முடியும். அதுவும் எழுத வாசிக்க தெரியாத ஒரு சாமானியரால் எவ்வாறு அது சாத்தியமாகும் என்று சிந்திக்க வைக்கிறது. அதுவே அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதைச் சான்றுபகர்கின்றது.

மனித உடலில் சிறியதோர் எலும்புத் துண்டு அமைந்துள்ளது. இதனை அரபு மொழியில்அஜ்புஸ்ஸனப்எனப்படும். இது வெறும் கண்களுக்குப் புலப்படாத அணுவளவு சிறியதொரு பொருள். எனினும் இதனைகுத எலும்புஎன்று (Coccyx) விஞ்ஞானம் பெயர்குறிக்கின்றது. முதுகெலும்புத் தொடரின் இறுதியில் காணப்படும் சிறு துண்டு எலும்பே இது என நுnஉலஉடழிநனயைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதன் இறந்து உக்கிச் சிதைந்து மண்ணோடு மண்ணாகினாலும் எத்தனை கோடி வருடங்கள் கடந்தாலும் இந்த அஜ்புஸ்ஸனப் என்ற என்பு அழியாது. தீயிட்டுக் கொழுத்தினாலும் இது கருகாது. அவ்வளவு நுண்ணியதாகவும் பாதுகாப்பானதாகவும் படைக்கப்பட்டுள்ளது. இவ்வென்புதான் மனிதனின் மீள் உயிர்ப்பித்தலுக்குச் சான்றாக உள்ளது. இதனைத்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

ஆதமின் மகனின் (உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும். மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) குத எலும்பின் நுணியைத்தவிர. அதனைக்கொண்டே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாகப்) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்என்று கூறினார்கள். (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 4, ஹதீஸ் எண்-5660,5661)

ஆக இவ்வாறு ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதி மனிதன் வரை அனைவரினதும் அஜ்புஸ்ஸனப் எனப்படும் குத எலும்பு பல கோடி வருடங்களாக இப்பூமியின் ஆழத்தில் படியப்பட்டே இருக்கும். மறுமை நாளில் இரண்டாம் ஸுர் (குழல்) ஊதப்பட்டு பூமி பலமாக அசைக்கப்படும்போது இந்தப் படிமங்கள் யாவும் பூமியின் மேற்பகுதிக்குக் கொண்டுவந்து வெளித்தள்ளப்படும். இதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அது அசைக்கப்பட்டு விடும்போது, இன்னும் பூமி தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது…”(அல்தில்தால்:1,2)

இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டதன் பின்பு அல்லாஹ் ஒரு மழையைப் பொழிவிப்பான். அப்போது புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று மனிதர்கள் உயிர்பெற்று எழுந்து வருவார்கள். இதனை நபியவர்கள் நீண்டதொரு ஹதீஸின் தொடரிலே மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

பின்பு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு நீரைப் பொழியவைப்பான். உடனே (றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஒரே ஒரு எலும்பைத்தவிர! அது குத எலும்பின் (அணுவளவு) நுணியாகும். அதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமையில்) படைக்க்படும்.” என்றார்கள் (முஸ்லிம்)

இவ்வாறு உயிர்ப்பித்து எழுப்பப்படும் அனைவரும், எவ்வாறு ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றிலிருந்து நிர்வாணமாகவும் விருத்தசேதனம் செய்யப்படாமலும் பிறக்குமோ அதேபோன்றுதான் மனிதன் மறுமையில் மஹ்~ர் வெளியில் எழுப்பப்படுவான். இதனை நபியவர்கள் இவ்வாறு மொழிந்தார்கள்.

நீங்கள் (மறுமை நாளில்) வெறுங்காலுடனும் நிர்வாணமாகவும் (கத்னா) விருத்தசேதனம் செய்யப்படாத நிலையிலும் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” (புகாரி,முஸ்லிம்) அல்லாஹ் கூறுகின்றான்

முதல் படைப்பை நாம் ஆரம்பித்ததுபோன்றே அதை நாம் (திரும்பவும்) மீளவைப்போம்.”(அல் அன்பியா:104)

ஆகவே இறுதியில் அல்லாஹ் உயிரினங்கள் அனைத்தையும் மீள உயிர்ப்பித்து எழுப்பியதன் பின்பு அவற்றுக்கிடையே மிக நுணுக்கமான முறையில் தீர்ப்பளித்து விட்டு விலங்குகள் அனைத்தையும் மண்ணோடு மண்ணாக்கிவிடுவான். அவற்றின் கதை அத்தோடு முடிந்துவிடும். பின்பு மரணம் ஓர் ஆட்டின் வடிவில் கொண்டுவரப்பட்டு அறுக்கப்படும். அத்தோடு மறுமையில் இன்னுமொரு மரணம் இருக்காது. அதன்பின் சகலருக்கும் நீண்ட நீடுழி வாழ்க்கைதான். சுவன வாசிகள் சுவனத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் வாழ்வார்கள். மரணத்துக்கே அல்லாஹ் முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்.

மனிதனின் மரணத்தின் பின்னர் மீண்டும் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுகின்றான் என்பதை விளங்கிக்கொள்ள அல்லாஹ் எமக்குப் பல்வேறு அத்தாட்சிகளைக் காண்பிக்கின்றான். அவற்றைப் பற்றிச் சிந்திக்காது மரணத்தின் பின்பு உயிர்ப்பிக்கப்படுவது அசாத்தியமானது என்பதை வெறும் வார்த்தைகளால் கூறிவிடுவது எவ்வளவு மடமை? எனவே மறுமையின் மீள் உயிர்ப்பித்தலைப் பற்றி சிந்தித்து மரணத்தை அஞ்சி அல்லாஹ்வின் வல்லமைகளை உணர்ந்து நன்றியுடன் வாழ்வோம்.

உசாத்துணைகள்:-

அகீததுல் இஸ்லாம் / தப்ஸீர் இப்னு கஸீர் / ஸஹீஹுல் முஸ்லிம் / அல்ஹஸனாத் / 2005 / மார்ச்

ஆலிப் அலி (இஸ்லாஹி)


ஆலிப் அலி (இஸ்லாஹி)



உயிர்வாழும் அனைத்து ஜீவராசிகளும் அவை விரும்பியோ வெறுத்தோ மரணத்தைச் சுவைத்தே தீரும். “ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும்.”(ஆலு இம்றான்:185) என்ற இந்த அல்குர்ஆன் வசனம் உலக வாழ் ஜீவராசிகளின் யதார்த்த நிலையைத் தெளிவுபடுத்துகின்றது. அத்தோடு இது இறை நியதியும்கூட. அவை எங்கு எவ்வளவு பாதுகாப்பான இடங்களில் இருந்தாலும் சரியே. “நீங்கள் எங்கிருந்தபோதும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப் பலமாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே!”(அன்னிஸா:78) 

பொதுவாக மனிதர்கள் யாவரும் மரணம் என்ற ஒன்று இருக்கின்றது என்பதை உறுதியாக நம்புகின்றனர். அது ஒரு இந்துவாகவோ அல்லது முஸ்லிமாகவோ அல்லது ஒரு பௌத்தனாகவோ அல்லது ஒரு கிறிஸ்தவனாகவோ ஏன் ஒரு நாஸ்திகனாகவோ இருக்கலாம். அதில் இருவேறு கருத்துக்கொள்ள மாட்டார்கள். எனினும் இவர்கள் கருத்துவேறுபாடுகொள்வதெல்லாம் மரணத்தின் பின்பு மீள் உயிர்ப்பித்தல் பற்றியே!

இந்துக்களினதும் பௌத்தர்களினதும் நம்பிக்கை அவர்கள் இவ்வுலகிலே ஏழு ஜென்மங்கள் பிறப்பார்கள். தற்போதைய பிறப்பை எவ்விதம் கழிப்பார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் மறுபிறவி எடுப்பார்கள். இவர்களது கருதல் உடலை விட்டுப்பிரியும் உயிர் ஒன்று கடவுளைச்சென்றடைய வேண்டும் அவ்வாறில்லாவிடின் அவ்வுயிர் எங்கு நிலைகொள்கிறது என்ற கேள்விக்கு விளக்கமாகவே மறுபிறப்புச் சிந்தனை (Transmiggration of soul) தோற்றுவிக்கப்பட்டது. நாஸ்திகர்களோ மரணத்தின் பின்பான மீள் உயிர்ப்பித்தலை முற்றாக மறுக்கின்றனர். மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போவதுதான் அவனது இறுதி முடிவு என்ற சடவாத சிந்தனையை முன்வைக்கின்றனர்.

எனினும் இஸ்லாத்தின் மீள் உயிர்ப்பித்தல் பற்றிய விளக்கம் மிகவும் வித்தியாசமானது. சாத்தியமானது! இறையிருப்பை வலுப்படுத்தக்கூடியது. எனவே அல்குர்ஆன், அல்ஹதீஸின் நிழலில் அல்லாஹ் எவ்வாறு மரித்து மக்கி மண்ணோடு மண்ணாகிப்போனவனை மீள உயிர்ப்பிக்கின்றான் என்பதை சற்று ஆராய்வோம். மீள் உயிர்ப்பித்தல் தொடர்பான பூரண அறிவும் ஞானமும் அல்லாஹ் ஒருவனுக்கே உண்டு என்பதை ஞாபகமூட்டிக்கொண்டு எமது சிந்தனையின் ஆணி வேரை ஆழப்பதித்துக்கொண்டு ஆய்வுக்குள் நுழைவோம்.
ஆரம்ப காலம்தொட்டு இன்றுவரை மறுமையை மறுத்தரைப்போர் மனிதன் மீள் உயிர்ப்பிக்கப்படுவதையும் நிராகரித்தே வருகின்றனர். அன்று அறியாமையில் வாழ்ந்த சமூகம்தான் அப்படியென்றால் Digital world என வர்ணிக்கப்படும் இன்றைய நவீனத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் சில விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அறிவுபூர்வமான இந்த உண்மையை புறமொதுக்கி வருகின்றனர். இவ்வாறு அன்றைய மக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடன் குதர்க்கம் புரிந்தபோது தக்க பதிலை அல்லாஹ் நபியவர்களுக்கு இறக்கிவைத்தான். அவை இன்றும் தக்க பதிலடியாகக் காணப்படுகின்றன.

நபியவர்களுடன் அன்று சிலர் இவ்வாறு மீள் உயிர்ப்பித்தலை மறுத்துரைத்ததை சில அல்குர்ஆன் வசனங்கள் மூலம் விளங்கலாம்.

'இது நம்முடைய இவ்வுலக வாழ்வைத்தவிர (இறந்தபின் வேறு வாழ்க்கை) இல்லை. (இறந்த பின்) நாம் (உயிர்ப்பிக்கப்ட்டு) எழுப்பப்படுபவர்களுமல்லர்" என்று கூறினார்கள். (அல்அன்ஆம்:29) மற்றுமோர் வசனத்தில்

'நாம் இறந்து (உக்கி) மண்ணாகிவிட்டாலு(ம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோ)மா? (அது இயற்கைக்கு மாற்றமானதே! எனவே) அது தூரமான மீட்சியாகும் என நிராகரிப்போர் கூறுகின்றனர்.” அதற்கு அல்லாஹ் “(இறந்தபின்) அவர்களிலிருந்து (அவர்களின் உடலை எந்தளவு) பூமி (தின்று) குறைத்திருக்கிறது என்பதைத் திட்டமாக நாம் அறிந்திருக்கிறோம்.”(காஃப்:3,4)

அவ்வாறே ஒருவன் நபியவர்களிடம் உக்கிப்போன எலும்புக் கூடொன்றை எடுத்து வந்து இவ்வாறு கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது.

'எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில் உயிரூட்டுபவன் யார்? என்று அவன் கேட்கிறான்" இதற்கு அல்லாஹ் அளிக்கும் தர்க்கரீதியான பதிலைப் பாருங்கள். '(நபியே! அதற்கு) நீர் கூறுவீராக: 'மனிதன் முதலில் அதனைப் படைத்தானே அவனே அதனை (மீள) உயிர்ப்பிப்பான்" (யாஸீன்:78,79)

இவ்வாறு மீள் உயிர்ப்பித்தலை மறுப்போருக்கு அல்லாஹ் பௌதீகரீதியாகவும் வரலாற்றுரீதியாகவும் நிறைய சான்றுகளைக் கூறுகின்றான். எவ்வாறு அல்லாஹ் மீள் உயிர்ப்பித்தல் தொடர்பாக மிக இலகுவான உதாரணங்களைக் கூறுகின்றான் என்று பாருங்கள்.

பௌதீக ரீதியான சான்றுகள்

'(நபியே!) காய்ந்து விட்டதாக பூமியை நிச்சயமாக நீர் காண்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அதன் மீது நாம் நீரை இறக்கிவைத்தால், அது செழிப்படைந்து வளர்கின்றது. அதை நிச்சயமாக உயிர்ப்பித்தானே அவன்தான் மரணித்தோரையும் உயிர்ப்பிக்கக்கூடியவன்."(ஹாமீம் ஸஜ்தா:39)

'இன்னும் (அம்மழை நீரை) அதைக்கொண்டு இறந்து கிடந்த ஊரை (வறண்ட பூமியை) நாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே (மரணித்தோர் உயிர்பெற்று) வெளியேறுதலும் (நடந்தேறும்)" (அத்தாரியாத்:11)

பூமி எவ்வளவு காய்ந்து வறண்டு கிடந்தாலும் அதன்மீது மழைபொழிந்தால் அப்பூமி எவ்வளவு துரிதமாக செழிப்படைகின்றது என்பதைவைத்து அல்லாஹ் மீள் உயிர்ப்பித்தலை உவமிக்கின்றான். அதேபோன்று இதற்குக் காய்ந்துபோன வித்தை உதாரணப்படுத்துகின்றான். உதாரணத்துக்கு எவ்வாறு மென்மையானதொரு கொழுந்து அவ்வோட்டைப் பிளந்துகொண்டு மண்ணில் முட்டி மோதி வெளியேறுகின்றது என்று பார்த்தால் நிச்சயமாக அல்லாஹ்வின் மீள் உயிர்ப்பித்தலின் வல்லமையைப் புரிய முடியும். அல்லாஹ் கூறுகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ்தான் வித்துக்களையும், விதைகளையும் வெடி(த்து முளை)க்கச் செய்கின்றான். இறந்ததிலிருந்து உயிருள்ளதை அவன் வெளிப்படுத்துகின்றான். உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் அவனே வெளிப்படுத்துகின்றான்”(அல்அன்ஆம்:95)


இவ்வாறான இயற்கை நிகழ்வுகளை;ப் பார்த்து மீள் உயிர்ப்பித்தலை விளங்குவதைவிட தன்னிலே இருக்கும் அதற்கான சான்றை மனிதன் சிந்தித்துப் பார்த்தால் வியப்பிலாழ்வான். மனிதனின் உறக்கமே ஒரு மரணம்தான். சுவாசத்தைத் தவிர உலகத்துடனான சகல தொடர்புகளும் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வெறும் சுவாசிக்கும் ஜடமாகி விடுகின்றான். இந்நிலையில் தன்னைச் சூழ என்ன நிகழ்கின்றதென்றே அவனால் அறிய முடியாது. எவ்வாறெனில் தூங்கும்போது அல்லாஹ் மனிதனுக்கென்றே பிரத்தியோகமாக வழங்கியுள்ள ரூஹை அவனைவிட்டும் உயர்த்தி விடுகின்றான். இதன்போது அவன் உணர்வற்றுச் செல்கின்றான். விழிக்கும்போது ரூஹை அவனோடு சேர்த்து விடுகின்றான். இவ்வாறு அந்த ரூஹை அவ்வுடம்பிற்கு மீளவைக்காவிடின் மனிதன் உணர்வுகளற்ற நிலைக்குச் சென்றுவிடுவான். இதனால்தான் உறக்கம் என்பது சிறு மரணமெனப்படுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்.

அவன் எத்தகையோனென்றால் (மனிதர்களே!) இரவில் (நீங்கள் நித்திரை செய்யும்போது) அவன்தான் உங்க(ளின் உயிர்க)ளைக் கைப்பற்றுகின்றான். மேலும், நீங்கள் பகலில் சம்பாதிக்கின்றவற்றையும் அவன் அறிகின்றான். பின்னர் (உங்களுக்குக்) குறிப்பிடப்பட்ட தவணையைப் பூர்த்திசெய்வதற்காக (ப்பகலான)தில் அவன் (உணர்ச்சியை உண்டுபன்னி) உங்களை எழுப்புகின்றான்.”(அல்அன்ஆம்:60) மற்றுமோர் இடத்தில்

உயிர்களை-அவற்றின் மரணத்தின்போது அல்லாஹ்வே கைப்பற்றுகின்றான். இன்னும் மரணிக்காமல் உள்ளவற்றையும் அவற்றின் தூக்கத்தில் (அவற்றின் ரூஹைக் கைப்பற்றுகின்றான்) பிறகு எவற்றின் மீது மரணத்தை விதியாக்கினானோ அவற்றைத் (தன்னிடமே) தடுத்து (நிறுத்தி)க் கொள்கின்றான். மற்றவற்றைக் குறிப்பிடப்பட்ட தவணைவரை (வாழ்வதற்கு மீள) அனுப்பி விடுகின்றான்.”(அல்ஜுமர்:42)

இவை அல்லாஹ் எவ்வாறு மீள உயிர்ப்பிக்கின்றான் என்பது தொடர்பாக நாம் அன்றாடம் எமது கண்களால் கண்டு உணரும் பௌதீகரீதியான அத்தாட்சிகளாகும். இவைதவிர முன்சென்ற சில சமூகங்களை அல்லாஹ் இவ்வுலகில் மெய்யாகவே மரணிக்கச்செய்து மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பியுள்ளான். இவ்வாறான சில அற்புத நிகழ்வுகளை வரலாற்றுரீதியாக அல்குர்ஆன் நிரூபிக்கின்றது.

வரலாற்று ரீதியான சான்றுகள்

பனூ இஸ்ரவேல் சமூகம் மூஸா (அலை) அவர்களுடன் மிகவும் தர்க்கிப்பவர்களாக இருந்தனர். ஒரு முறை அவர்கள் மூஸா நபியைப் பார்த்துஉம் இறைவனை நாம் எம் கண்களால் காணும்வரை உம்மை விசுவாசிக்க மாட்டோம்என்றனர். அப்போது அல்லாஹ் அவர்கள் மீது கடுங்கோபங்கொண்டு அவர்களை மரணிக்கச்செய்து பாடம் புகட்டுவதற்காக மீண்டும் அவர்களை உயிர்ப்பித்து எழுப்பினான். இந்நிகழ்வை அல்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது.

மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாகக் காணும்வரை உம்மை நாம் விசுவாசிக்க மாட்டோம்என்று நீங்கள் கூறியதையும் அப்பால் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே உங்களை இடிமுழக்கம் பிடித்துக்கொண்டதையும் (நினைவு கூருங்கள்) பின்னர் நீங்கள் நன்றி செலுத்துவதற்காக, நீங்கள் இறந்து விட்டதற்குப் பின்னர் உங்களை நாம் (உயிர்ப்பித்து) எழுப்பினோம்.”(அல்பகறா:55, 56)

இந்நிகழ்வும் பனூ இஸ்ரவேலர்கள் சம்பந்தப்ட்டதாகும். கொலைசெய்யப்பட்ட ஒருவரை பசு மாடொன்றை அறுத்து அதன் ஒரு பகுதியைக்கொண்டு அடிக்குமாறு அல்லாஹ் மூஸா (அலை) அவர்களுக்கு இட்ட கட்டளைக்கிணங்க இந்நிகழ்வு நடைபெறுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்.
நீங்கள் ஒரு ஆத்மாவைக் கொலை செய்ததையும் பின்னர் அதில் (ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி) நீங்கள் தர்கித்துக் கொண்டிருந்தீர்கள் (என்பதையும் நினைவு கூருங்கள்) அல்லாஹ்வோ நீங்கள் மறைத்துக்கொண்டிருந்ததை வெளியாக்குகிறான். ஆகவேஅறுக்கப்பட்ட பசுவாகிய அதன் சில (பாகத்)தைக் கொண்டு (கொல்லப்பட்ட) அவனை அடியுங்கள்என நாம் கூறினோம். (பின்னர் அவன் உயிர்பெற்ற) அவ்வாறே மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்.”(அல்பகறா:72, 73)

மரணத்திற்கு அஞ்சி ஒரு சமூகம் தமது இல்லங்களை விட்டும் வெளியேறிச் சென்றனர். அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்ததாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவர்களையும் அல்லாஹ் மரணிக்கச்செய்துவிட்டு மீண்டும் உயிர்ப்பித்தான்.

(நபியே!) மரணத்திற்கு அஞ்சி தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்களோ ஆயிரக்கணக்கில் இருந்தனர். அப்போது அல்லாஹ் அவர்களிடம்நீங்கள் இறந்து விடுங்கள்என்று கூறினான். (அவ்வாறே அவர்கள் இறந்துவிட்டனர்) பின்னர் அவர்களை (அல்லாஹ்) உயிர்;ப்பித்தான்.” (அல்பகறா:243)

இங்கு அழிந்துகிடந்த ஒரு கிராமத்தைக் கடந்துசென்ற ஒரு வழிப்போக்கரின் கதை குறிப்பிடப்படுகிறது. “அழிந்து சின்னாபின்னமான இந்தக் கிராமத்தை அல்லாஹ் எங்கே உயிர்ப்பிக்கப்போகின்றான்என்று ஏளனமாகக் கூறியதனால் அல்லாஹ் அவரை ஒரு நூற்றாண்டு காலம் மரணிக்கச் செய்துவிட்டு மீண்டும் எழுப்பினான். இவ்வாறு அந்நிகழ்வை அல்குர்ஆன் விளக்குகின்றது.

அல்லது ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப்போல் (நபியே! நீர் பார்க்கவில்லையா? அவர்) அதிலுள்ள முகடுகளின் மீது அவை வீழ்ந்து கிடக்க (க் கண்டு) “இதனை எவ்வாறு இது இறந்துகிடக்கின்ற நிலையில் அல்லாஹ் உயிர்ப்பிப்பான்?” என்று கூறினார். ஆகவே அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை மரணிக்கச்செய்து பின்னர் அவரை உயிர்ப்பித்து (அவரிடம்) “நீர் எவ்வளவு காலம் இருந்தீர்?” எனக் கேட்டான். (தற்க)வர்ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சில பாகம் இருந்தேன்என்று கூறினார். (அதற்கு அல்லாஹ்) அவ்வாறல்ல நீர் நூறு வருடங்கள் (இந்நிலையில்) இருந்தீர்என்று கூறினான்

ஆகவே உமது உணவையும் பானத்தையும் நீர் நோக்குவீராக அவை எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகவில்லை. இன்னும் உமது கழுதையின்பால் நோக்குவீராக. மனிதர்களுக்கு உம்மை ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்குவதற்காகவும் (மரணிக்கச்செய்து உம்மை உயிர்கொடுத்தெழுப்பினோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளின்பால் எவ்வாறு அவற்றைச்சேர்த்து பின்னர் அதன் மீது மாமிசத்தை அணிவிக்கின்றோம் என்று நீர் நோக்குவீராக. பின்னர் அவருக்கு (அது) தெளிவானபோது அவர்நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன் என்று நான் அறிகிறேன்என்று கூறினார்.”(அல்பகறா:259)

முற்றுமொரு சம்பவம்தான் இப்றாஹீம் (அலை) அவர்கள் சம்பந்தப்பட்டது. ஒரு முறை அவர்கள் மரணித்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதைத் தனக்குக் காண்பிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டியபோது அல்லாஹ் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றைத் துண்டுகளாக்கி அதன்பின்பு மலைகளில் அவற்றைக் கொண்டுபோய் வைத்துவிட்டு அழைக்குமாறு கூறினான். அதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

இன்னும் இப்றாஹீம்என் இரட்சகனே! மரணித்தோரை நீ எவ்வாறு உயிர்ப்பிப்பாய் என்பதை எனக்குக் காண்பிஎனக் கூறியபோது அவன் “(ஏன்) நீர் நம்பவில்லையா?” என்று கேட்டான். (தற்க)வர்ஏன் இல்லை! எனது இதயம் அமைதியடைவதற்காகஎன்று கூறினார். (அதற்கு அல்லாஹ்) “பறவைகளிலிருந்து நான்கைப் பிடித்து பின்னர் நீர் அவைகளைத் துண்டாக்கி அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஒவ்வொரு மலையின் மீதும் வைத்துவிடுவீராக! பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக. அவை உம்மிடம் வேகமாய் வந்துசேரும்.”(அல்பகறா:260)

மீள் உயிர்ப்பித்தல் விஞ்ஞான நோக்கு

ஆகவே மேற்கூறிய சரித்திரச்சான்றுகள் மறுமை நாளையும் அங்கு மனிதன் மீள உயிர்ப்பிக்கப்படுவதன் யதார்த்தத்தையும் நிதர்சனப்படுத்துகின்றன. இனி எமது சிந்தனைகளைச் சற்று சிறகடிக்கவிட்டு அல்லாஹ் எவ்வாறு மனிதனை மீள எழுப்புகின்றான் என்பதன் படிமுறைகளை விஞ்ஞானரீதியாக நோக்குவோம்.

மீள் உயிர்ப்பித்தலுக்கு மலைகளின் பங்கு அளப்பரியது. கடலில் மலைகளின் உருவாக்கம் பற்றிய மேலோட்டமான அறிவிருந்தால் இதனை எம்மால் இலகுவாகப் புரிந்துகொள்ள முடியுமென நினைக்கின்றேன். வெள்ளம், மழை மற்றும் மனித செயற்பாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் மண்ணரிப்புக்குள்ளாகி இறுதியில் அவை கடலை வந்தடைகின்றன. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்குத் தொடர்ந்து மண் கடலில் படிவதால் மலைகள் தோற்றம் பெறுகின்றன. மண்ணரிப்புக்குள்ளாகி அதனோடு சேர்ந்து இறந்துகிடக்கும் உயிரினங்களின் மூலக்கூறுகளும் படிமங்களும் கடலில் படிகின்றன. இவ்வாறு தோற்றம்பெறும் ஒரு மலையை ஆய்வுசெய்யும்போது அம்மலையில் படிந்த உயிரினங்களின் னுNயு மூலக்கூறுகளை சிதையாமல் பெறமுடியுமாயின் அவ்வுயிரினம் எக்காலப்பகுதியில் வாழ்ந்தது, அதன் பிரதி போன்ற பல தகவல்களைப் பெறமுடியுமென தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவ்வாறுதான் பூமி முற்றாகச் சிதைவடைந்து அதில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டு மண்ணோடு மண்ணாகிய பின்பும் மீள் உயிர்ப்பித்தலுக்கு மலைகள் சான்றாக, களஞ்சியமாக விளங்குவதாகக் கூர்ப்பியலாளர் ஒருவர் குறிப்பிடுகின்றார். (அல்ஹஸனாத்ஃ2005ஃமார்ச்) மேற்கூறப்பட்ட இப்றாஹீம் (அலை) அவர்களின் சம்பவத்தில்;கூட அல்லாஹ் அப்பறவைகளைத் துண்டாக்கி மலைகளில்தான் வைக்குமாறு கட்டளையிடுகின்றான். இந்த விடயத்தைச் சற்று நினைவுடுத்திப்பாருங்கள். மீள் உயிர்ப்பித்தலில் மலைகளின் வகிபாகம் குறித்த பூரண அறிவு அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. அவன் யாவற்றையும் அறிந்தவன்.

மனிதன் இறந்து உக்கி மண்ணோடு மண்ணாகிச் சென்றதன் பின் எந்த ஒரு சான்றுமே இல்லாத நிலையில் அவன் எவ்வாறு மீண்டும் எழுப்பப்படுகின்றான்?” என்ற ஒரு கேள்வி அன்றைய ஆரம்ப சமூகம் தொடக்கம் இன்றுவரை இருந்து வருகின்றது. இதற்கான விடை மிக்க ஆச்சரியமாகவும் மறுமையையும் மீள் உயிர்ப்பித்தலையும் ஏன் இஸ்லாத்தையும்கூட நிதர்சனப்படுத்துவதாக உள்ளது. விஞ்ஞானத்தின் சாயல்கூட இல்லாத அந்த சமூகத்தில் எவ்வாறு ஒரு தனிமனிதர் இது போன்ற விஞ்ஞானக் கருத்தைக் கூறியிருக்க முடியும். அதுவும் எழுத வாசிக்க தெரியாத ஒரு சாமானியரால் எவ்வாறு அது சாத்தியமாகும் என்று சிந்திக்க வைக்கிறது. அதுவே அல்குர்ஆன் ஓர் இறைவேதம் என்பதைச் சான்றுபகர்கின்றது.

மனித உடலில் சிறியதோர் எலும்புத் துண்டு அமைந்துள்ளது. இதனை அரபு மொழியில்அஜ்புஸ்ஸனப்எனப்படும். இது வெறும் கண்களுக்குப் புலப்படாத அணுவளவு சிறியதொரு பொருள். எனினும் இதனைகுத எலும்புஎன்று (Coccyx) விஞ்ஞானம் பெயர்குறிக்கின்றது. முதுகெலும்புத் தொடரின் இறுதியில் காணப்படும் சிறு துண்டு எலும்பே இது என நுnஉலஉடழிநனயைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனிதன் இறந்து உக்கிச் சிதைந்து மண்ணோடு மண்ணாகினாலும் எத்தனை கோடி வருடங்கள் கடந்தாலும் இந்த அஜ்புஸ்ஸனப் என்ற என்பு அழியாது. தீயிட்டுக் கொழுத்தினாலும் இது கருகாது. அவ்வளவு நுண்ணியதாகவும் பாதுகாப்பானதாகவும் படைக்கப்பட்டுள்ளது. இவ்வென்புதான் மனிதனின் மீள் உயிர்ப்பித்தலுக்குச் சான்றாக உள்ளது. இதனைத்தான் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

ஆதமின் மகனின் (உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும். மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) குத எலும்பின் நுணியைத்தவிர. அதனைக்கொண்டே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாகப்) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான்என்று கூறினார்கள். (முஸ்லிம் தமிழாக்கம், பாகம் 4, ஹதீஸ் எண்-5660,5661)

ஆக இவ்வாறு ஆதம் (அலை) அவர்கள் முதல் இறுதி மனிதன் வரை அனைவரினதும் அஜ்புஸ்ஸனப் எனப்படும் குத எலும்பு பல கோடி வருடங்களாக இப்பூமியின் ஆழத்தில் படியப்பட்டே இருக்கும். மறுமை நாளில் இரண்டாம் ஸுர் (குழல்) ஊதப்பட்டு பூமி பலமாக அசைக்கப்படும்போது இந்தப் படிமங்கள் யாவும் பூமியின் மேற்பகுதிக்குக் கொண்டுவந்து வெளித்தள்ளப்படும். இதனை அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

பூமியானது (அதன் அடிப்பாகத்திலிருந்து) கடுமையான அசைவாக அது அசைக்கப்பட்டு விடும்போது, இன்னும் பூமி தனது சுமைகளை (எல்லாம்) வெளிப்படுத்திவிடும்போது…”(அல்தில்தால்:1,2)

இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டதன் பின்பு அல்லாஹ் ஒரு மழையைப் பொழிவிப்பான். அப்போது புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று மனிதர்கள் உயிர்பெற்று எழுந்து வருவார்கள். இதனை நபியவர்கள் நீண்டதொரு ஹதீஸின் தொடரிலே மிக அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

பின்பு அல்லாஹ் வானத்திலிருந்து ஒரு நீரைப் பொழியவைப்பான். உடனே (றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஒரே ஒரு எலும்பைத்தவிர! அது குத எலும்பின் (அணுவளவு) நுணியாகும். அதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமையில்) படைக்க்படும்.” என்றார்கள் (முஸ்லிம்)

இவ்வாறு உயிர்ப்பித்து எழுப்பப்படும் அனைவரும், எவ்வாறு ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றிலிருந்து நிர்வாணமாகவும் விருத்தசேதனம் செய்யப்படாமலும் பிறக்குமோ அதேபோன்றுதான் மனிதன் மறுமையில் மஹ்~ர் வெளியில் எழுப்பப்படுவான். இதனை நபியவர்கள் இவ்வாறு மொழிந்தார்கள்.

நீங்கள் (மறுமை நாளில்) வெறுங்காலுடனும் நிர்வாணமாகவும் (கத்னா) விருத்தசேதனம் செய்யப்படாத நிலையிலும் ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” (புகாரி,முஸ்லிம்) அல்லாஹ் கூறுகின்றான்

முதல் படைப்பை நாம் ஆரம்பித்ததுபோன்றே அதை நாம் (திரும்பவும்) மீளவைப்போம்.”(அல் அன்பியா:104)

ஆகவே இறுதியில் அல்லாஹ் உயிரினங்கள் அனைத்தையும் மீள உயிர்ப்பித்து எழுப்பியதன் பின்பு அவற்றுக்கிடையே மிக நுணுக்கமான முறையில் தீர்ப்பளித்து விட்டு விலங்குகள் அனைத்தையும் மண்ணோடு மண்ணாக்கிவிடுவான். அவற்றின் கதை அத்தோடு முடிந்துவிடும். பின்பு மரணம் ஓர் ஆட்டின் வடிவில் கொண்டுவரப்பட்டு அறுக்கப்படும். அத்தோடு மறுமையில் இன்னுமொரு மரணம் இருக்காது. அதன்பின் சகலருக்கும் நீண்ட நீடுழி வாழ்க்கைதான். சுவன வாசிகள் சுவனத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் வாழ்வார்கள். மரணத்துக்கே அல்லாஹ் முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்.

மனிதனின் மரணத்தின் பின்னர் மீண்டும் எவ்வாறு உயிர்ப்பிக்கப்படுகின்றான் என்பதை விளங்கிக்கொள்ள அல்லாஹ் எமக்குப் பல்வேறு அத்தாட்சிகளைக் காண்பிக்கின்றான். அவற்றைப் பற்றிச் சிந்திக்காது மரணத்தின் பின்பு உயிர்ப்பிக்கப்படுவது அசாத்தியமானது என்பதை வெறும் வார்த்தைகளால் கூறிவிடுவது எவ்வளவு மடமை? எனவே மறுமையின் மீள் உயிர்ப்பித்தலைப் பற்றி சிந்தித்து மரணத்தை அஞ்சி அல்லாஹ்வின் வல்லமைகளை உணர்ந்து நன்றியுடன் வாழ்வோம்.

உசாத்துணைகள்:-

அகீததுல் இஸ்லாம் / தப்ஸீர் இப்னு கஸீர் / ஸஹீஹுல் முஸ்லிம் / அல்ஹஸனாத் / 2005 / மார்ச்

ஆலிப் அலி (இஸ்லாஹி)


உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...