"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label முஹம்மத் நபியின் சரிதை கூறும் பிரம்மாண்டமான புத்தகம். Show all posts
Showing posts with label முஹம்மத் நபியின் சரிதை கூறும் பிரம்மாண்டமான புத்தகம். Show all posts

15 March 2012

முஹம்மத் நபியின் சரிதை கூறும் பிரம்மாண்டமான புத்தகம்


இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக்கூறும் மிகப் பிரம்மாண்டமானதொரு புத்தகம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதனையையும் இது பெற்றுள்ளது.


உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப்பாரமான புத்தகமாகவும் இது காணப்படுகின்றது. இப்புத்தகத்தை உருவாக்குவதற்காக 11மில்லியன் திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளன. இதுவே உலகில் அதிகளவு செலவில் உருவாக்கப்பட்ட முதல் புத்தகமாகும்.

 Creator Bela Varga of Hungary turns a page of the existing world's largest book

துபாயின் பிரதி ஆட்சியாளாரும்,ஐக்கிய அரபு இராட்சியத்தின் நிதி அமைச்சருமான செய்க் ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்களால் இப்புத்தகமானது வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் அதிகாரிகள், ராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்ற பலரும் கலந்துகொண்டனர்.


இஸ்லாத்தின் இறுதி நபியாக முஹம்மத் (ஸல்)அவர்கள் காணப்படுவதுடன்,சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவராககவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயற்திட்டத்தின் நோக்கம் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இப்புத்தகம் 420 பக்கங்ளைக்கொண்டதுடன் ஆயிரம் கிலோகிராம் நிறையையும் கொண்டுள்ளது. அத்தோடு இது 5 மீற்றர் நீளமும் 4 மீற்றர் அகலமும் உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது. நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் பற்றி சமூகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்புத்தகத்தின் 50,000 சாதாரண பிரதிகளை தனது சொந்தச்செலவில் வெளியிடுவதற்கு செய்க் ஹம்தான் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பு - ஈமெயிலில் கிடைத்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப் பற்றிக்கூறும் மிகப் பிரம்மாண்டமானதொரு புத்தகம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு உலகிலேயே மிகப்பெரிய புத்தகம் என்ற கின்னஸ் சாதனையையும் இது பெற்றுள்ளது.


உலகின் மிகப்பெரிய மற்றும் மிகப்பாரமான புத்தகமாகவும் இது காணப்படுகின்றது. இப்புத்தகத்தை உருவாக்குவதற்காக 11மில்லியன் திர்ஹம்கள் செலவிடப்பட்டுள்ளன. இதுவே உலகில் அதிகளவு செலவில் உருவாக்கப்பட்ட முதல் புத்தகமாகும்.

 Creator Bela Varga of Hungary turns a page of the existing world's largest book

துபாயின் பிரதி ஆட்சியாளாரும்,ஐக்கிய அரபு இராட்சியத்தின் நிதி அமைச்சருமான செய்க் ஹம்தான் பின் அல்மக்தூம் அவர்களால் இப்புத்தகமானது வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர் அதிகாரிகள், ராஜதந்திரிகள், அறிஞர்கள் மற்றும் வர்த்தகர்கள் போன்ற பலரும் கலந்துகொண்டனர்.


இஸ்லாத்தின் இறுதி நபியாக முஹம்மத் (ஸல்)அவர்கள் காணப்படுவதுடன்,சர்வதேச மற்றும் மனிதாபிமான ரீதியில் மிகவும் செல்வாக்குவாக்குச் செலுத்தியவராககவும் நபி(ஸல்) அவர்கள் விளங்குகின்றார்கள். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்னிலைப் படுத்துவதன் மூலம் இஸ்லாத்தையும்,முஸ்லிம்களையும் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இச்செயற்திட்டத்தின் நோக்கம் என இப்புத்தகத்தின் வெளியீட்டாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இப்புத்தகம் 420 பக்கங்ளைக்கொண்டதுடன் ஆயிரம் கிலோகிராம் நிறையையும் கொண்டுள்ளது. அத்தோடு இது 5 மீற்றர் நீளமும் 4 மீற்றர் அகலமும் உடையது என்பதும் குறிப்பிடத்தக்கது. நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியான வாழ்வைப் பற்றி சமூகம் அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இப்புத்தகத்தின் 50,000 சாதாரண பிரதிகளை தனது சொந்தச்செலவில் வெளியிடுவதற்கு செய்க் ஹம்தான் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பு - ஈமெயிலில் கிடைத்தது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...