"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."
Showing posts with label ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி தொடர்பாக தஸ்லீமா நஸ்ரின் விசனம். Show all posts
Showing posts with label ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி தொடர்பாக தஸ்லீமா நஸ்ரின் விசனம். Show all posts

10 November 2011

ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி தொடர்பாக தஸ்லீமா நஸ்ரின் விசனம்


பங்களாதேஷைச் தேசர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி தொடர்பாக விசனக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் அல்லது தெடர்ந்து வரும் அய்யாமுத் தஷ்ரீக் எனும் மூன்று நாட்களில் ஒரு நாளில் ஆடுஇ மாடு அல்லது ஒட்டகம் என்பவற்றில் ஏதேனுமொன்றைக் குர்பானி கொடுப்பது ஒரு வணக்கமாகும். இதன் மூலம் அல்லாஹ் மனிதர்களது உள எண்ணத்தின் தூய்மைத்தன்மையைப் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான் “குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (இறையச்சம் ) தான் அவனை அடையும். ( அல் குர்ஆன்-22:37). 

ஆனால் இதற்கு மாற்றமாக தஸ்லீமா நஸ்ரின் டுவிட்டரில் தோன்றி குர்பானிக்காக மிருகங்களை அறுப்பதை விமர்சித்துள்ளார். அப்பாவி மிருகங்களின் ரத்தத்தை கேட்கும் கடவுள் எப்படி சிறந்த கடவுளாக இருக்க
முடியும் என்று அறியாத்தனமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். உணவுக்காக அப்பாவி மிருகங்களை கொலை செய்து விட்டு கடவுள் பெரியவன் என்று சொல்வது தேவையில்லாதது என்றும் இம்மிருகங்கள் அல்லாஹ்வை நம்பாததால் தான் அவற்றுக்கு இக்கதி என்றும் அவைகளுக்காகத்
தான் பரிதாபப்படுவதாகவும் தஸ்லீமா கூறியுள்ளார்.


ஏற்கனவே லஜ்ஜா எனும் நாவலில் முஸ்லீம்களை மோசமாக எழுதிய காரணத்தால் பங்களாதேஷை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டவர்
தஸ்லீமா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

பங்களாதேஷைச் தேசர்ந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் ஹஜ்ஜுப் பெருநாள் குர்பானி தொடர்பாக விசனக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் அல்லது தெடர்ந்து வரும் அய்யாமுத் தஷ்ரீக் எனும் மூன்று நாட்களில் ஒரு நாளில் ஆடுஇ மாடு அல்லது ஒட்டகம் என்பவற்றில் ஏதேனுமொன்றைக் குர்பானி கொடுப்பது ஒரு வணக்கமாகும். இதன் மூலம் அல்லாஹ் மனிதர்களது உள எண்ணத்தின் தூய்மைத்தன்மையைப் பார்க்கின்றான். அல்லாஹ் கூறுகின்றான் “குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை ஆனால் உங்களுடைய தக்வா (இறையச்சம் ) தான் அவனை அடையும். ( அல் குர்ஆன்-22:37). 

ஆனால் இதற்கு மாற்றமாக தஸ்லீமா நஸ்ரின் டுவிட்டரில் தோன்றி குர்பானிக்காக மிருகங்களை அறுப்பதை விமர்சித்துள்ளார். அப்பாவி மிருகங்களின் ரத்தத்தை கேட்கும் கடவுள் எப்படி சிறந்த கடவுளாக இருக்க
முடியும் என்று அறியாத்தனமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். உணவுக்காக அப்பாவி மிருகங்களை கொலை செய்து விட்டு கடவுள் பெரியவன் என்று சொல்வது தேவையில்லாதது என்றும் இம்மிருகங்கள் அல்லாஹ்வை நம்பாததால் தான் அவற்றுக்கு இக்கதி என்றும் அவைகளுக்காகத்
தான் பரிதாபப்படுவதாகவும் தஸ்லீமா கூறியுள்ளார்.


ஏற்கனவே லஜ்ஜா எனும் நாவலில் முஸ்லீம்களை மோசமாக எழுதிய காரணத்தால் பங்களாதேஷை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டவர்
தஸ்லீமா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...