"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

11 April 2023

லைலத்துல் கத்ர் – ஓர் இரவா? ஒரு முழு நாளா? ஆய்வு


லைலதுல் கத்ர் முழுப் பிரபஞ்சத்திற்குமானது.

அல்குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட பலகை) இலிருந்து கீழ் வானத்தில் காணப்படுகின்ற "பைத்துல் இஸ்ஸா" எனப்படுகின்ற கன்னியம் பொருந்திய இடத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்ட நாள்தான் புனித ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனப்படுகின்றது. இதனை The Night of Decree என்று அழைக்கின்றோம். அதாவது இங்கு சொல்லப்படுகின்ற இந்த நாள் பூமிக்கு மட்டும் உரித்தானதொரு நாளோ இரவோ அல்ல. மாற்றமாக இந்த நாள், இந்த நேரம் முழுப் பிரபஞ்சத்திற்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டதன் கண்ணியம், மகத்துவம் முழுப் பிரபஞ்சத்திற்கும் சேரும்.

எனவே இதனை நமது புவிச் சுழற்சி மற்றும் புவிச் சுற்றுகையினால் ஏற்படுகின்ற இரவு பகல், பருவ கால மாற்றங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு கணிப்பது தவறானது. இப்படி சிந்திக்கும் போதுதான் பூமியில் ஒரு பகுதிக்கு இரவாக இருந்து மற்றயை பகுதிக்கு பகலாக இருக்கும்போது உலகின் பாதி பேருக்கு லைலதுல் கத்ர் இரவை அடைய முடியாமல் போகுமே என்ற கேள்விகளும் வட துருவத்தில் வாழும் மக்கள் பல மாதங்களுக்கு இரவையே காணாமல் இருப்பார்கள்,  சுமார் 23 மணி நேரங்கள் நோன்பு நோற்பார்கள் அப்படியென்றால் அவர்களுக்கு லைலதுல் கத்ர் பாக்கியம் எப்படி கிடைக்கும் என்ற கேள்விகளும் எழும்பும்.



உண்மையில் லைலதுல் கத்ர் என்பது மேலே குறிப்பிடப்பட்டது போல எமது பூமிக்கு மட்டும் உரித்தான, பூமியில் ஏற்படுகின்ற இரவு பகலை மட்டும் வைத்து தீர்மானிக்கின்ற ஒன்றல்ல. அல்குர்ஆன் பிரபஞ்சத்திற்கு அப்பால், வெளியில் இருக்கின்ற லவ்ஹுல் மஹ்பூலில் இருந்து பிரபஞ்சத்திற்குள் இருக்கின்ற கீழ் வாணத்திற்கு இறங்கியது என்பதால் லைலதுல் கத்ர் என்பது பிரபஞ்சத்திகே பொதுவான ஒரு நாள் என்பதை விளங்க முடிகின்றது.  

அத்தோடு உலகில் பெரும்பாலானோர் லைலத்துல் கத்ர்ஒரு இரவு என்றே கூறி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் ஆதாரம்: அரபி மொழியில் லைலத்துஎன்றால் இரவுஎன்று பொருள். அச்சொல்லைக் கொண்டு இறைமறை திருக்குர்ஆனில் லைலத்துல் கத்ர்என அல்லாஹ் கூறியிருப்பதாலும், இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களின் நபிமொழி (ஹதீஸ்)களிலும் அவ்விதமே குறிப்பிடப்படுவதாலும் லைலத்துல் கத்ர்என்றால் = கண்ணியமிக்க (கத்ர்) இரவு என்றே கூற வேண்டுமென எண்ணுகின்றனர். மேலும் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் பற்பல தமிழ் மற்றும் ஏனைய மொழி பெயர்ப்புக்களை காட்டுகிறார்கள். அம்மொழி பெயர்ப்புக்களிலும் அவ்விதமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலதிகமாக திருக்குர்ஆனில் வரும் எல்லா இடங்களிலும் லைலத்துஎன்பதற்கு இரவு என்றே பொருள் கொள்ள வேண்டுமென அடம் பிடிப்போரும் இவர்களில் உள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்க்கவும்

இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், நபிமொழி (ஹதீஸ்) களில் லைலத்துல் கத்ர்என்று அரபியிலேயே கூறப்பட்டுள்ளன. அகில உலக அதிபதி ஏகனிறைவனின் எந்தவொரு அருட்கொடையையும் அகில உலக மக்கள் அனைவருக்கும் எவ்வித பாகுப்பாடு, வேறுபாடின்றி, பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும். அதுவே இயற்கையின் சட்டம்; அவ்வியற்கைய உருவாக்கிய (அல்-ஃபாதிர்) ஏக இறைவனின் நியதி. லைலத்துஎன்பது இரவை மட்டும் குறித்தால் ஒவ்வொரு வருடமும் உலக மக்களில் பாதி பேருக்கு மட்டுமே அவ்விரவு கிடைக்கும். பாகலில் இருக்கும் மீதி பாதி பேருக்கு அவ்விரவு கிடைக்கவே கிடைக்காது. இப்படிப்பட்ட வேறுபாட்டை எல்லாம் வல்ல, அகில உலகத்தின் அதிபதி, ஏகனிறைவன் அல்லாஹ்வோ, அகில உலகத்தின் அருட்கொடையாக அகில உலகத்தின் அதிபதி, ஏகனிறைவனால் அனுப்பப்பட்ட நமது இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களோ கூறியிருக்கவே மாட்டார்கள். எனவே, ஆயிரம் மாதங்களைவிட மகிமை பொருந்திய, சிறப்புமிக்க லைலத்துல் கத்ர்உலக மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டுமென்ற பேரவாவில், நல்லெண்ணத்தில் திருக்குர்ஆன், நபிமொழி (ஹதீஸ்)களில் லைலத்துன்என்ற அரபிச் சொல் என்னென்ன பொருள்களில், அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

நமது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது நாவினால் நவின்ற, பேசிய, சொல்லிய ஒவ்வொரு சொல்லும், வாக்கும், பேச்சும் ஏகனிறைவனின் வாக்கு, சொல்லுக்கொப்பவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஏனெனில், ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் தானே பாடம் கற்று தந்ததைப் போல (பார்க்க: அல்-குர்ஆன்: 2:30) நமது இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லஹ்வின் உறுதிமிக்க உன்னதத் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களால் பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டார்கள் என்பதை மேற்கண்ட 53:5 முதல் 10 வசனங்களில் காணலாம். இதனடிப்படையில் லைலத்துன், லைல்என்ற சொற்கள், எவ்வித சந்தேகமுமுமில்லாத, மாசு மறுவற்ற ஏகனிறைவனின் இறுதி மறை திருக்குர்ஆனில் என்னென்ன பொருளில், அர்த்தத்தில் வருகிறது என்பதைப் பார்த்தால் லைலத்துல் கத்ர் ஓர் இரவா? ஒரு முழு நாளா?: என்ற வினாவிற்கு எவ்வித ஐயமுமில்லாமல் விடை கிடைத்து விடும் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனடிப்படையில் லைலத்துல் கத்ர்ஓரு இரவா? ஒரு முழு நாளா? என ஆய்வு செய்வோம்.


திருக்குர்ஆனில் இரவு, பகல் எனக் குறிக்கும் லைல் வ நஹார்என்ற இரு சொற்கள் சேர்ந்து சுமார் 60 இடங்களில் வருகின்றன. இவ்விடங்களில் ஒரு முழுமையான நாளில் வரும் பகல், இரவு என்ற இரு பகுதிகளையும் இரு சொற்களால் லைல் வ நஹார்என அல்லாஹ் நமக்கு தொளிவாக்குகிறான். இங்கு லைல்என்றால் முழு நாள் என்றோ, “நஹார்என்றால் முழு நாள் என்றோ எவரும் பொருள் சொல்ல மாட்டார்கள். அப்படி பொருள் கொள்ளவும் கூடாது.

மேலும், திருக்குர்ஆனில் இரவு - அதிகாலை, வைகரை, விடியற் காலை என பொருள்படும் லைல், ஸுப்ஹ்என்ற இரு சொற்கள் சுமார் மூன்று (6:96; 74:33; 81:17) இடங்களிலும், முழு இறை வசனங்களை கூர்ந்து படிக்கையில் லைல்என்ற சொல் இரவு என்று மட்டும் பொருள் பட சுமார் (2:187, 6:76; 10:27; 11:81; 15:65; 17:78,79; 39:9; 50:40; 51:17; 52:49; 73:6,20; 76:26; 86:4) பதினைந்து இடங்களிலும் வருகிறது. இது மட்டுமின்றி லைலத்துஎன்ற சொல் திருக்குர்ஆனில் சுமார் எட்டு இடங்களிலும் (2:52; 7:142; 7:143; 2:187; 44:3; 97:1,2,3) அதன் பன்மை சொல் லயாலின்சுமார் மூன்று (19:10; 69:7; 89:2) இடங்களிலும் வருகின்றன. அதன் விபரங்களைப் பார்ப்போம்.

இரவு, அதிகாலை என பொருள் படும் லைல், ஸுப்ஹ்என்ற இரு சொற்கள்:-

1. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் இவை யாவும் வல்லமைமிக்கோன், எல்லாம் அறிந்தோன் (ஏகனின்) ஏற்பாடாகும். (அல்-குர்ஆன்: 6:96).

2.இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது. (33) விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது, (அல்-குர்ஆன்: 74:34,35).

3.பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், (17) மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.(அல்-குர்ஆன்: 81:17,18).

கூர்ந்து படிக்கையில் லைல்என்ற சொல் இரவு என்று மட்டும் பொருள்:

1.நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்-குர்ஆன்: 2:187).

2. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் (இப்றாஹிம்(அலை) ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; "இதுதான் என் இறைவன்!" என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், "நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்" என்று சொன்னார். (அல்-குர்ஆன்: 6:76).

3. இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது (அல்-குர்ஆன்: 10:27).

4. இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்று விடும்! (அல்-குர்ஆன்: 11:81).

5. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். (அல்-குர்ஆன்: 15:65).

6. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக! இன்னும், ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலை நிறுத்துவீராக); நிச்சயமாக, ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. (அல்-குர்ஆன்: 17:78).

7. இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக! (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், 'மகாமம் மஹ்முதா' என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும். (அல்-குர்ஆன்: 17:79).

8. எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (அல்-குர்ஆன்: 39:9).

9. இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக. (அல்-குர்ஆன்: 50:40).

10.அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். (அல்-குர்ஆன்: 51:17).

11. இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக! (அல்-குர்ஆன்: 52:49).

12. நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்குவது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும், வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது. (அல்-குர்ஆன்: 73:6).

13. நிச்சயமாக, நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்(அல்-குர்ஆன்: 73:20).

14. இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக. (அல்-குர்ஆன்: 76:26).

15. மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், (அல்-குர்ஆன்: 84:17)

16. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). (அல்-குர்ஆன்: 84:18)

இவ்விறை வசனங்கள் அனைத்துத்திலும் லைல் அல்லது லைலத்துஎன்ற இரு சொற்களில் ஒன்று இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் முன், பின் சொற்கள், இடம், பொருள், ஏவலைக் காணும் போது இங்கு இரவு என்று மட்டுமே பொருள், அர்த்தம் கொள்ள முடியும் எனத் தெளிவாக அறியலாம்.

லைலத்துன்” (இரவு) முழுமையான நாளை குறிக்கும் திருமறை வசனங்கள்:

ஏகனிறைவன் அனுப்பிய முந்திய இறைத்தூதர்களில் ஒருவரான ஜக்கரிய்யா (அலை) அவர்கள் தனக்கும், தன் மனைவிக்கும் வயது முதிர்ந்த நிலையில் குழந்தை பாக்கியம் வேண்டிய ஏகனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறார்கள் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அவருக்கு வாரிசு பிறக்கும் என வாக்களிக்கிறான். அவ்விறை வாக்கை நேரில் உணர ஜக்கரிய்யா (அலை) அவர்கள்:

1. "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று (ஜகரிய்யா) வேண்டினார்; "நீர் சுகமாக இருக்கும் நிலையிலேயே மூன்று இரவுகள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான். (அல்-குர்ஆன்: 19:10).

2."என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள் வாயாக!" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று கூறினான். (அல்-குர்ஆன்: 3:41).

இவ்விரு வசனங்களிலும் ஒரே நபருக்கு (ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு), ஒரே செயலுக்கு (பிரார்த்தனைக்கு) இரு விதமாக அல்லாஹ் பதிலளிக்கிறான். வசனம்: 19:10ல் மூன்று (லயாலின்) இரவுகள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீராக! என்றும், இவ்வசனத்திற்கு விளக்கமாக வசனம்: 3:41ல் மூன்று (அய்யாமின்) நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேச மாட்டீர்! என்றும் அல்லாஹ் அறிவுறுத்து வதிலிருந்து இங்கு மூன்று (லயாலின்) இரவுகள் என்பது மூன்று (அய்யாமின்) நாட்கள் என்பது தெள்ளத் தெளிவாகிற்து. இவ்விரு வசனங்கள் மட்டுமே லைலத்துஅதன் பன்மைச் சொல் லயாலின்என்பதற்கு அல்லாஹ் முழு நாளைக் குறிக்க பயன்படுத்தியிருப்பதை அறியலாம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக மேலும் பல இறை வசனங்கள் இருப்பதைப் பாருங்கள்.

3. மேலும் நாம் மூஸாவுக்கு (வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள். (அல்-குர்ஆன்: 2:51).

4. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழமை பெற்றது. (அல்-குர்ஆன்: 7:142 – இரு முறைகள்)

இவ்விரு வசனங்களிலும் ஒரே நபருக்கு (மூஸா (அலை) அவர்களுக்கு), ஒரே செயலுக்கு - அருள் வேதம் பெற தூர் ஸீனா மலையில் இருந்தது பற்றி - இரு விதமாக அல்லாஹ் பதிலளிக்கிறான். முதல் வசனம் 2:51ல் மூஸாவுக்கு (வேதம் அருள) நாற்பது (லைலத்தன்) இரவுகளை வாக்களித்தோம் என்கிறான். இங்கு மூஸா (அலை) அவர்கள் தூர் ஸீனா மலையில் 40 இரவுகள் மட்டுமே தங்கியிருந்தார், பகலில் தங்கவில்லை எனப் பொருள் கொள்ள முடியாது. அவ்விதம் பொருள் கொண்டால், இவ்வசனத்தில் தொடர்ந்து வரும் மூஸா (அலை) மக்கள் அந்நாட்களில் காளைக் கன்றைக் கடவுளாக்கியதை மூஸா (அலை) தடுத்திருப்பார்கள். எனவே மூஸா (அலை) அவர்கள் தூர் ஸீனா மலையில் 40 இரவுகள் தங்கிருந்தார் என்றால் முழுமையாக 40 நாட்கள் தங்கியிருந்தார் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதனை எவரும் மறுக்க முடியாது. இதனை தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ் வசனம் 7:142ல் கூறுவதைப் பாருங்கள்.


மூஸாவுக்கு நாம் முப்பது (லைலத்தன்) இரவுகளை வாக்களித்தோம்; பின்னர் பத்தைக் கொண்டு பூர்த்தி செய்தோம். அதாவது முதலில் முப்பது நாட்களைக் கொடுத்து பின்னர் பத்து நாட்களை அதிகரித்து இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக் கெடு நாற்பது நாட்களாக முழமை பெற்றது. அதாவது மூஸா (அலை) அவர்கள் தூர் ஸீனா மலையில் முழுமயாக நாற்பது (40) நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து இருந்தார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக் கெடு நாற்பது நாட்களாக முழுமை பெற்றது என்ற இறை வாக்கிலிருந்து நாற்பது இரவுகள், பகல்களைக் கொண்ட முழுமையான நாற்பது நாட்களின் காலக்கெடு (மீகாத்) என்பது தெளிவாகிறது.  மாறாக இவ்வசனங்களில் இடம் பெறும் லைலத்தன்என்பதற்கு இரவு மட்டுமே எனப் பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகி விடும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

5. விடியற் காலையின் மீது சத்தியமாக, (1) பத்து இரவுகளின் மீது சத்தியமாக,  (அல்-குர்ஆன்: 89:2).

திருக்குர்ஆனின் 89 வது அத்தியாயம் இஸ்லாத்தின் ஐங்கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையின் நாட்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அன்றாட நாட்களின் ஆரம்பமான அதிகாலை, விடியற்காலையின் மீது சத்தியமாக! என்றும், துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து முழுமையான நாட்களின் மீது சத்தியமாக! என அல்லாஹ் கூறுவதைக் காணலாம். ஏனெனில் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் 8 முதல் 10 வரையான நாட்களில் தான் ஹஜ் வணக்கங்களின் மினா பயணம், மினாவில் தங்குதல், அரஃபா பயணம், ஜபலே ரஹ்மத்தில் நிற்றல், பிரார்த்தனை, முஸ்தலிஃபா இரவு தங்குதல், மினா திரும்புதல், அங்கு தங்குதல், பலியிடுதல், முடி களைதல், இஹ்ராம் களைதல் போன்ற அனைத்து செயல்களும் முழு நாட்களிலும்தான் நிகழ்த்தப்படுகின்றன. எனவே இங்கு பத்து இரவுகளின் மீது சத்தியமாகஎன்பதை பத்து நாட்களின் மீது சத்தியமாக என்றே பொருள் கொள்ள வேண்டும். மாறாக இவ்வசனங்களில் இடம் பெறும் லயாலின்என்பதற்கு இரவுகள் மட்டுமே எனப் பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகி விடும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

பூமிக்கு ஏகனிறைவனின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட மக்களில் ஆது என்ற முந்திய சமுதாயம் இப்பூமியில் செய்த அட்டூழியத்திற்காக கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். அவர்கள் மீது அல்லாஹ் கொடுங்காற்றினை எத்தனை நாட்கள் அடிக்கச் செய்தான் என்பதை ஏக வல்லோன் அல்லாஹ் அவனுடைய அருள் மறைக் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:-

6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். (69:6) அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான். (அல்-குர்ஆன்: 69:6, 7)

ஏக வல்லோன் அல்லாஹ் அவர்கள் மீது கொடுங்காற்றினை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான். அதாவது தொடர்ந்து ஏழு இரவுகளும் என்றால் ஏழு முழு நாட்களும் எட்டாவது நாளின் பகலில் மட்டும் என ஏழரை நாட்கள் ஆது கூட்டத்தினர் மீது கொடுங் காற்று வீசியுள்ளது. அதில் அவர்கள் அழிக்கப்பட்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெளிவாகிறது. எனவே இங்கு ஏழு (லயாலின்) இரவுகள் என்பதற்கு முழுமையான ஏழு நாட்கள் என்றே பொருள், அர்த்தம் செய்ய வேண்டும். மாறாக இவ்வசனங்களில் இடம் பெறும் லயாலின்என்பதற்கு இரவுகள் மட்டுமே எனப் பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகி விடும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

7. நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். (அல்-குர்ஆன்: 44:3).

8. நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (1) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (2) கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானது. (அல்-குர்ஆன்: 97:1 முதல் 3).

ஆக இந்த வசனங்களின் கருத்து லைலதுன் என்பது முழு நாளையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனடிப்படையில் உண்மையில் லைலதுல் கத்ர் என்பது மேலே குறிப்பிடப்பட்டது போல எமது பூமிக்கு மட்டும் உரித்தான, பூமியில் ஏற்படுகின்ற இரவு பலலை மட்டும் வைத்து தீர்மானிக்கின்ற ஒன்றல்ல அது முழுப் பிரபஞ்சத்திற்கே பொதுவான ஒன்று என்பதும் அது ஒரு இரவு மட்டும் வந்து போகும் ஒன்றல்ல மாறாக முழு நாளும் இருக்கக்கூடிய ஒன்று என்றும் தெளிவாகின்றது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.




எது எப்படியோ வல்லவன் அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விடவும், சுமார் 83 ஆண்டுகளைவிடவும் சிறப்பு வாய்ந்த அந்த லைலதுல் கத்ரின் முழு நாளையும் அடைந்து, நன்மைகள் செய்யும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!



லைலதுல் கத்ர் முழுப் பிரபஞ்சத்திற்குமானது.

அல்குர்ஆன் லவ்ஹுல் மஹ்பூல் (பாதுகாக்கப்பட்ட பலகை) இலிருந்து கீழ் வானத்தில் காணப்படுகின்ற "பைத்துல் இஸ்ஸா" எனப்படுகின்ற கன்னியம் பொருந்திய இடத்திற்கு மொத்தமாக இறக்கப்பட்ட நாள்தான் புனித ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் எனப்படுகின்றது. இதனை The Night of Decree என்று அழைக்கின்றோம். அதாவது இங்கு சொல்லப்படுகின்ற இந்த நாள் பூமிக்கு மட்டும் உரித்தானதொரு நாளோ இரவோ அல்ல. மாற்றமாக இந்த நாள், இந்த நேரம் முழுப் பிரபஞ்சத்திற்கும் உரித்தானதாகும். அல்குர்ஆன் இறக்கப்பட்டதன் கண்ணியம், மகத்துவம் முழுப் பிரபஞ்சத்திற்கும் சேரும்.

எனவே இதனை நமது புவிச் சுழற்சி மற்றும் புவிச் சுற்றுகையினால் ஏற்படுகின்ற இரவு பகல், பருவ கால மாற்றங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு கணிப்பது தவறானது. இப்படி சிந்திக்கும் போதுதான் பூமியில் ஒரு பகுதிக்கு இரவாக இருந்து மற்றயை பகுதிக்கு பகலாக இருக்கும்போது உலகின் பாதி பேருக்கு லைலதுல் கத்ர் இரவை அடைய முடியாமல் போகுமே என்ற கேள்விகளும் வட துருவத்தில் வாழும் மக்கள் பல மாதங்களுக்கு இரவையே காணாமல் இருப்பார்கள்,  சுமார் 23 மணி நேரங்கள் நோன்பு நோற்பார்கள் அப்படியென்றால் அவர்களுக்கு லைலதுல் கத்ர் பாக்கியம் எப்படி கிடைக்கும் என்ற கேள்விகளும் எழும்பும்.



உண்மையில் லைலதுல் கத்ர் என்பது மேலே குறிப்பிடப்பட்டது போல எமது பூமிக்கு மட்டும் உரித்தான, பூமியில் ஏற்படுகின்ற இரவு பகலை மட்டும் வைத்து தீர்மானிக்கின்ற ஒன்றல்ல. அல்குர்ஆன் பிரபஞ்சத்திற்கு அப்பால், வெளியில் இருக்கின்ற லவ்ஹுல் மஹ்பூலில் இருந்து பிரபஞ்சத்திற்குள் இருக்கின்ற கீழ் வாணத்திற்கு இறங்கியது என்பதால் லைலதுல் கத்ர் என்பது பிரபஞ்சத்திகே பொதுவான ஒரு நாள் என்பதை விளங்க முடிகின்றது.  

அத்தோடு உலகில் பெரும்பாலானோர் லைலத்துல் கத்ர்ஒரு இரவு என்றே கூறி வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் ஆதாரம்: அரபி மொழியில் லைலத்துஎன்றால் இரவுஎன்று பொருள். அச்சொல்லைக் கொண்டு இறைமறை திருக்குர்ஆனில் லைலத்துல் கத்ர்என அல்லாஹ் கூறியிருப்பதாலும், இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களின் நபிமொழி (ஹதீஸ்)களிலும் அவ்விதமே குறிப்பிடப்படுவதாலும் லைலத்துல் கத்ர்என்றால் = கண்ணியமிக்க (கத்ர்) இரவு என்றே கூற வேண்டுமென எண்ணுகின்றனர். மேலும் தங்களின் கூற்றுக்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் பற்பல தமிழ் மற்றும் ஏனைய மொழி பெயர்ப்புக்களை காட்டுகிறார்கள். அம்மொழி பெயர்ப்புக்களிலும் அவ்விதமே மொழி பெயர்க்கப்பட்டுள்ளன என்பதை எவரும் மறுக்க முடியாது. மேலதிகமாக திருக்குர்ஆனில் வரும் எல்லா இடங்களிலும் லைலத்துஎன்பதற்கு இரவு என்றே பொருள் கொள்ள வேண்டுமென அடம் பிடிப்போரும் இவர்களில் உள்ளனர்.

இந்த வீடியோவைப் பார்க்கவும்

இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், நபிமொழி (ஹதீஸ்) களில் லைலத்துல் கத்ர்என்று அரபியிலேயே கூறப்பட்டுள்ளன. அகில உலக அதிபதி ஏகனிறைவனின் எந்தவொரு அருட்கொடையையும் அகில உலக மக்கள் அனைவருக்கும் எவ்வித பாகுப்பாடு, வேறுபாடின்றி, பாரபட்சமின்றி கிடைக்க வேண்டும். அதுவே இயற்கையின் சட்டம்; அவ்வியற்கைய உருவாக்கிய (அல்-ஃபாதிர்) ஏக இறைவனின் நியதி. லைலத்துஎன்பது இரவை மட்டும் குறித்தால் ஒவ்வொரு வருடமும் உலக மக்களில் பாதி பேருக்கு மட்டுமே அவ்விரவு கிடைக்கும். பாகலில் இருக்கும் மீதி பாதி பேருக்கு அவ்விரவு கிடைக்கவே கிடைக்காது. இப்படிப்பட்ட வேறுபாட்டை எல்லாம் வல்ல, அகில உலகத்தின் அதிபதி, ஏகனிறைவன் அல்லாஹ்வோ, அகில உலகத்தின் அருட்கொடையாக அகில உலகத்தின் அதிபதி, ஏகனிறைவனால் அனுப்பப்பட்ட நமது இறைத் தூதர் நபி (ஸல்) அவர்களோ கூறியிருக்கவே மாட்டார்கள். எனவே, ஆயிரம் மாதங்களைவிட மகிமை பொருந்திய, சிறப்புமிக்க லைலத்துல் கத்ர்உலக மக்கள் அனைவருக்கும் பாரபட்சமின்றி கிடைக்க வேண்டுமென்ற பேரவாவில், நல்லெண்ணத்தில் திருக்குர்ஆன், நபிமொழி (ஹதீஸ்)களில் லைலத்துன்என்ற அரபிச் சொல் என்னென்ன பொருள்களில், அர்த்தத்தில் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

நமது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது நாவினால் நவின்ற, பேசிய, சொல்லிய ஒவ்வொரு சொல்லும், வாக்கும், பேச்சும் ஏகனிறைவனின் வாக்கு, சொல்லுக்கொப்பவே இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஏனெனில், ஆதி மனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் தானே பாடம் கற்று தந்ததைப் போல (பார்க்க: அல்-குர்ஆன்: 2:30) நமது இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லஹ்வின் உறுதிமிக்க உன்னதத் தூதர் ஜிப்ரீல் (அலை) அவர்களால் பாடம் கற்றுக் கொடுக்கப்பட்டார்கள் என்பதை மேற்கண்ட 53:5 முதல் 10 வசனங்களில் காணலாம். இதனடிப்படையில் லைலத்துன், லைல்என்ற சொற்கள், எவ்வித சந்தேகமுமுமில்லாத, மாசு மறுவற்ற ஏகனிறைவனின் இறுதி மறை திருக்குர்ஆனில் என்னென்ன பொருளில், அர்த்தத்தில் வருகிறது என்பதைப் பார்த்தால் லைலத்துல் கத்ர் ஓர் இரவா? ஒரு முழு நாளா?: என்ற வினாவிற்கு எவ்வித ஐயமுமில்லாமல் விடை கிடைத்து விடும் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனடிப்படையில் லைலத்துல் கத்ர்ஓரு இரவா? ஒரு முழு நாளா? என ஆய்வு செய்வோம்.


திருக்குர்ஆனில் இரவு, பகல் எனக் குறிக்கும் லைல் வ நஹார்என்ற இரு சொற்கள் சேர்ந்து சுமார் 60 இடங்களில் வருகின்றன. இவ்விடங்களில் ஒரு முழுமையான நாளில் வரும் பகல், இரவு என்ற இரு பகுதிகளையும் இரு சொற்களால் லைல் வ நஹார்என அல்லாஹ் நமக்கு தொளிவாக்குகிறான். இங்கு லைல்என்றால் முழு நாள் என்றோ, “நஹார்என்றால் முழு நாள் என்றோ எவரும் பொருள் சொல்ல மாட்டார்கள். அப்படி பொருள் கொள்ளவும் கூடாது.

மேலும், திருக்குர்ஆனில் இரவு - அதிகாலை, வைகரை, விடியற் காலை என பொருள்படும் லைல், ஸுப்ஹ்என்ற இரு சொற்கள் சுமார் மூன்று (6:96; 74:33; 81:17) இடங்களிலும், முழு இறை வசனங்களை கூர்ந்து படிக்கையில் லைல்என்ற சொல் இரவு என்று மட்டும் பொருள் பட சுமார் (2:187, 6:76; 10:27; 11:81; 15:65; 17:78,79; 39:9; 50:40; 51:17; 52:49; 73:6,20; 76:26; 86:4) பதினைந்து இடங்களிலும் வருகிறது. இது மட்டுமின்றி லைலத்துஎன்ற சொல் திருக்குர்ஆனில் சுமார் எட்டு இடங்களிலும் (2:52; 7:142; 7:143; 2:187; 44:3; 97:1,2,3) அதன் பன்மை சொல் லயாலின்சுமார் மூன்று (19:10; 69:7; 89:2) இடங்களிலும் வருகின்றன. அதன் விபரங்களைப் பார்ப்போம்.

இரவு, அதிகாலை என பொருள் படும் லைல், ஸுப்ஹ்என்ற இரு சொற்கள்:-

1. அவனே பொழுது விடியச் செய்பவன்; (நீங்கள் களைப்பாறி) அமைதி பெற அவனே இரவையும் காலக் கணக்கினை அறிவதற்காகச் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான் இவை யாவும் வல்லமைமிக்கோன், எல்லாம் அறிந்தோன் (ஏகனின்) ஏற்பாடாகும். (அல்-குர்ஆன்: 6:96).

2.இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது. (33) விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது, (அல்-குர்ஆன்: 74:34,35).

3.பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும், (17) மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.(அல்-குர்ஆன்: 81:17,18).

கூர்ந்து படிக்கையில் லைல்என்ற சொல் இரவு என்று மட்டும் பொருள்:

1.நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. (அல்-குர்ஆன்: 2:187).

2. ஆகவே அவரை இரவு மூடிக் கொண்டபோது அவர் (இப்றாஹிம்(அலை) ஒரு நட்சத்திரத்தைப் பார்த்தார்; "இதுதான் என் இறைவன்!" என்று கூறினார்; ஆனால் அது மறைந்த போது அவர், "நான் மறையக் கூடியவற்றை நேசிக்க மாட்டேன்" என்று சொன்னார். (அல்-குர்ஆன்: 6:76).

3. இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது (அல்-குர்ஆன்: 10:27).

4. இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்று விடும்! (அல்-குர்ஆன்: 11:81).

5. ஆகவே இரவில் ஒரு பகுதியில் உம்முடைய குடும்பத்தினருடன் நடந்து சென்று விடும்; அன்றியும் (அவர்களை முன்னால் செல்ல விட்டு) அவர்கள் பின்னே நீர் தொடர்ந்து செல்லும். உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். (அல்-குர்ஆன்: 15:65).

6. (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹ்ரு, அஸ்ரு, மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக! இன்னும், ஃபஜ்ருடைய தொழுகையையும் (நிலை நிறுத்துவீராக); நிச்சயமாக, ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாகயிருக்கிறது. (அல்-குர்ஆன்: 17:78).

7. இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக! (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், 'மகாமம் மஹ்முதா' என்னும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும். (அல்-குர்ஆன்: 17:79).

8. எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (அல்-குர்ஆன்: 39:9).

9. இன்னும் இரவிலிருந்தும், ஸுஜூதுக்குப் பின்னரும் அவனைத் தஸ்பீஹு செய்வீராக. (அல்-குர்ஆன்: 50:40).

10.அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். (அல்-குர்ஆன்: 51:17).

11. இன்னும், இரவின் ஒரு பாகத்திலும், நட்சத்திரங்கள் அடையும் நேரத்திலும் அவனைத்(துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக! (அல்-குர்ஆன்: 52:49).

12. நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்குவது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும், வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது. (அல்-குர்ஆன்: 73:6).

13. நிச்சயமாக, நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்(அல்-குர்ஆன்: 73:20).

14. இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக, அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக. (அல்-குர்ஆன்: 76:26).

15. மேலும், இரவின் மீதும், அது ஒன்று சேர்ப்பவற்றின் மீதும், (அல்-குர்ஆன்: 84:17)

16. பூரண சந்திரன் மீதும் (சத்தியம் செய்கின்றேன்). (அல்-குர்ஆன்: 84:18)

இவ்விறை வசனங்கள் அனைத்துத்திலும் லைல் அல்லது லைலத்துஎன்ற இரு சொற்களில் ஒன்று இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதன் முன், பின் சொற்கள், இடம், பொருள், ஏவலைக் காணும் போது இங்கு இரவு என்று மட்டுமே பொருள், அர்த்தம் கொள்ள முடியும் எனத் தெளிவாக அறியலாம்.

லைலத்துன்” (இரவு) முழுமையான நாளை குறிக்கும் திருமறை வசனங்கள்:

ஏகனிறைவன் அனுப்பிய முந்திய இறைத்தூதர்களில் ஒருவரான ஜக்கரிய்யா (அலை) அவர்கள் தனக்கும், தன் மனைவிக்கும் வயது முதிர்ந்த நிலையில் குழந்தை பாக்கியம் வேண்டிய ஏகனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கிறார்கள் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அவருக்கு வாரிசு பிறக்கும் என வாக்களிக்கிறான். அவ்விறை வாக்கை நேரில் உணர ஜக்கரிய்யா (அலை) அவர்கள்:

1. "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று (ஜகரிய்யா) வேண்டினார்; "நீர் சுகமாக இருக்கும் நிலையிலேயே மூன்று இரவுகள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான். (அல்-குர்ஆன்: 19:10).

2."என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள் வாயாக!" என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), "உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!" என்று கூறினான். (அல்-குர்ஆன்: 3:41).

இவ்விரு வசனங்களிலும் ஒரே நபருக்கு (ஜக்கரிய்யா (அலை) அவர்களுக்கு), ஒரே செயலுக்கு (பிரார்த்தனைக்கு) இரு விதமாக அல்லாஹ் பதிலளிக்கிறான். வசனம்: 19:10ல் மூன்று (லயாலின்) இரவுகள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீராக! என்றும், இவ்வசனத்திற்கு விளக்கமாக வசனம்: 3:41ல் மூன்று (அய்யாமின்) நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேச மாட்டீர்! என்றும் அல்லாஹ் அறிவுறுத்து வதிலிருந்து இங்கு மூன்று (லயாலின்) இரவுகள் என்பது மூன்று (அய்யாமின்) நாட்கள் என்பது தெள்ளத் தெளிவாகிற்து. இவ்விரு வசனங்கள் மட்டுமே லைலத்துஅதன் பன்மைச் சொல் லயாலின்என்பதற்கு அல்லாஹ் முழு நாளைக் குறிக்க பயன்படுத்தியிருப்பதை அறியலாம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக மேலும் பல இறை வசனங்கள் இருப்பதைப் பாருங்கள்.

3. மேலும் நாம் மூஸாவுக்கு (வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள். (அல்-குர்ஆன்: 2:51).

4. மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழமை பெற்றது. (அல்-குர்ஆன்: 7:142 – இரு முறைகள்)

இவ்விரு வசனங்களிலும் ஒரே நபருக்கு (மூஸா (அலை) அவர்களுக்கு), ஒரே செயலுக்கு - அருள் வேதம் பெற தூர் ஸீனா மலையில் இருந்தது பற்றி - இரு விதமாக அல்லாஹ் பதிலளிக்கிறான். முதல் வசனம் 2:51ல் மூஸாவுக்கு (வேதம் அருள) நாற்பது (லைலத்தன்) இரவுகளை வாக்களித்தோம் என்கிறான். இங்கு மூஸா (அலை) அவர்கள் தூர் ஸீனா மலையில் 40 இரவுகள் மட்டுமே தங்கியிருந்தார், பகலில் தங்கவில்லை எனப் பொருள் கொள்ள முடியாது. அவ்விதம் பொருள் கொண்டால், இவ்வசனத்தில் தொடர்ந்து வரும் மூஸா (அலை) மக்கள் அந்நாட்களில் காளைக் கன்றைக் கடவுளாக்கியதை மூஸா (அலை) தடுத்திருப்பார்கள். எனவே மூஸா (அலை) அவர்கள் தூர் ஸீனா மலையில் 40 இரவுகள் தங்கிருந்தார் என்றால் முழுமையாக 40 நாட்கள் தங்கியிருந்தார் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதனை எவரும் மறுக்க முடியாது. இதனை தெளிவுபடுத்தும் விதமாக அல்லாஹ் வசனம் 7:142ல் கூறுவதைப் பாருங்கள்.


மூஸாவுக்கு நாம் முப்பது (லைலத்தன்) இரவுகளை வாக்களித்தோம்; பின்னர் பத்தைக் கொண்டு பூர்த்தி செய்தோம். அதாவது முதலில் முப்பது நாட்களைக் கொடுத்து பின்னர் பத்து நாட்களை அதிகரித்து இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக் கெடு நாற்பது நாட்களாக முழமை பெற்றது. அதாவது மூஸா (அலை) அவர்கள் தூர் ஸீனா மலையில் முழுமயாக நாற்பது (40) நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து இருந்தார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக் கெடு நாற்பது நாட்களாக முழுமை பெற்றது என்ற இறை வாக்கிலிருந்து நாற்பது இரவுகள், பகல்களைக் கொண்ட முழுமையான நாற்பது நாட்களின் காலக்கெடு (மீகாத்) என்பது தெளிவாகிறது.  மாறாக இவ்வசனங்களில் இடம் பெறும் லைலத்தன்என்பதற்கு இரவு மட்டுமே எனப் பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகி விடும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

5. விடியற் காலையின் மீது சத்தியமாக, (1) பத்து இரவுகளின் மீது சத்தியமாக,  (அல்-குர்ஆன்: 89:2).

திருக்குர்ஆனின் 89 வது அத்தியாயம் இஸ்லாத்தின் ஐங்கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையின் நாட்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அன்றாட நாட்களின் ஆரம்பமான அதிகாலை, விடியற்காலையின் மீது சத்தியமாக! என்றும், துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து முழுமையான நாட்களின் மீது சத்தியமாக! என அல்லாஹ் கூறுவதைக் காணலாம். ஏனெனில் துல் ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் 8 முதல் 10 வரையான நாட்களில் தான் ஹஜ் வணக்கங்களின் மினா பயணம், மினாவில் தங்குதல், அரஃபா பயணம், ஜபலே ரஹ்மத்தில் நிற்றல், பிரார்த்தனை, முஸ்தலிஃபா இரவு தங்குதல், மினா திரும்புதல், அங்கு தங்குதல், பலியிடுதல், முடி களைதல், இஹ்ராம் களைதல் போன்ற அனைத்து செயல்களும் முழு நாட்களிலும்தான் நிகழ்த்தப்படுகின்றன. எனவே இங்கு பத்து இரவுகளின் மீது சத்தியமாகஎன்பதை பத்து நாட்களின் மீது சத்தியமாக என்றே பொருள் கொள்ள வேண்டும். மாறாக இவ்வசனங்களில் இடம் பெறும் லயாலின்என்பதற்கு இரவுகள் மட்டுமே எனப் பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகி விடும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

பூமிக்கு ஏகனிறைவனின் பிரதிநிதியாக அனுப்பப்பட்ட மக்களில் ஆது என்ற முந்திய சமுதாயம் இப்பூமியில் செய்த அட்டூழியத்திற்காக கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். அவர்கள் மீது அல்லாஹ் கொடுங்காற்றினை எத்தனை நாட்கள் அடிக்கச் செய்தான் என்பதை ஏக வல்லோன் அல்லாஹ் அவனுடைய அருள் மறைக் குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:-

6. இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர். (69:6) அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான். (அல்-குர்ஆன்: 69:6, 7)

ஏக வல்லோன் அல்லாஹ் அவர்கள் மீது கொடுங்காற்றினை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான். அதாவது தொடர்ந்து ஏழு இரவுகளும் என்றால் ஏழு முழு நாட்களும் எட்டாவது நாளின் பகலில் மட்டும் என ஏழரை நாட்கள் ஆது கூட்டத்தினர் மீது கொடுங் காற்று வீசியுள்ளது. அதில் அவர்கள் அழிக்கப்பட்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக தெளிவாகிறது. எனவே இங்கு ஏழு (லயாலின்) இரவுகள் என்பதற்கு முழுமையான ஏழு நாட்கள் என்றே பொருள், அர்த்தம் செய்ய வேண்டும். மாறாக இவ்வசனங்களில் இடம் பெறும் லயாலின்என்பதற்கு இரவுகள் மட்டுமே எனப் பொருள் கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகி விடும். அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

7. நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். (அல்-குர்ஆன்: 44:3).

8. நிச்சயமாக, நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (1) மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? (2) கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக மேலானது. (அல்-குர்ஆன்: 97:1 முதல் 3).

ஆக இந்த வசனங்களின் கருத்து லைலதுன் என்பது முழு நாளையும் குறிக்கும் விதமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இதனடிப்படையில் உண்மையில் லைலதுல் கத்ர் என்பது மேலே குறிப்பிடப்பட்டது போல எமது பூமிக்கு மட்டும் உரித்தான, பூமியில் ஏற்படுகின்ற இரவு பலலை மட்டும் வைத்து தீர்மானிக்கின்ற ஒன்றல்ல அது முழுப் பிரபஞ்சத்திற்கே பொதுவான ஒன்று என்பதும் அது ஒரு இரவு மட்டும் வந்து போகும் ஒன்றல்ல மாறாக முழு நாளும் இருக்கக்கூடிய ஒன்று என்றும் தெளிவாகின்றது. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.




எது எப்படியோ வல்லவன் அல்லாஹ் ஆயிரம் மாதங்களை விடவும், சுமார் 83 ஆண்டுகளைவிடவும் சிறப்பு வாய்ந்த அந்த லைலதுல் கத்ரின் முழு நாளையும் அடைந்து, நன்மைகள் செய்யும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்!


உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...