"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 June 2012

இப்பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் வாழ்கின்றோமா?

வேற்றுக்கிரகவாசிகள் பற்றி அல்குர்ஆன்.

எமது பிரபஞ்சத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸிகள் காணப்படுகின்றன. பல்வீதி என்றழைக்கப்படும் கெலக்ஸியில்தான் எமது பூமி அமைந்துள்ளது. எமது இந்த கெலக்ஸியில் மாத்திரம் 250 பில்லியன்களுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் ஒன்றுதான் மது சூரியன். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞர்னிகளின் கூற்றுப்படி கடற்கரைகளில் உள்ள மணற்துணிக்கைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் வரும் மணற்துணிக்கைகளின் எண்ணிக்கையைவிட விண்ணில் காணப்படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். சூரியன் அம்மணற்துணிக்கைகளில் ஒன்று மாத்திரமேஎன்கிறார்கள்.

சூரியன் தன்னைத்தானே முழுமையாகச் சுற்றிமுடிக்க 25 நாட்கள் செல்கின்றன. ஆனால் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களுள் மிகப் பெரியதான vy Canis Majoris எனும் நட்சத்திரம் தன்னைத்தானே ஒரு முறை சுற்றி முடிக்க 1200 ஆண்டுகள் செல்கின்றன. இதன் விட்டம் 2,800,000,000km களாகும். ஆக விண்ணில் காணப்படும் இலட்சோப இலட்ச நட்சத்திரங்களில் ஒரு சிறு புள்ளிதான் எமது சூரியன். சூரியக் குடும்பத்தில் காணப்படும் சிறிய கோள்களில் ஒன்றான பூமியில்தான் நாம் வாழ்கின்றோம். பூமியிலும் 71% நீர்ப்பரப்பைத் தவிர்த்து 29% ஆன நிலப்பரப்பில்தான் நாம் வாழ்கின்றோம். நிலத்திலும் ஆட்டிக், அண்டாட்டிக் போன்ற கடும் குளிர் பிரதேசங்களில் மனிதன் காலடிவைக்காத இடங்களும் உண்டு. சஹாராபோன்ற பெரும் பாலை நிலங்கள் காணப்படுகின்றன. அமேசன் போன்ற அடர்ந்த பயங்கரமான காடுகள் உள்ளன. இவையனைத்தையும் கழித்துவிட்டுப் பார்த்தால் 29% இலும் சிறு பகுதியிலேயே மனிதன் வாழ்கின்றான்.

தற்போது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் நாம் அல்லாஹ்வை சர்வ வல்லமை மிக்க நாயனாக, அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இரட்சகனாக ஏற்றிருக்கின்றோம். அவன் நாடியதைச் செய்யக் கூடியவன். யாதேனும் ஒன்றை ஆக்க நினைத்தால் குன் என்ற ஒரு வார்த்தையின் மூலம் ஆக்கக்கூடியவன். 
அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. (19:35)

இத்தனை பேராற்றலும் மிக்க வல்லவன் அல்லாஹ் இப்பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸிகளில் ஒரு கெலக்ஸியில் அதிலுள்ள 200 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்களில் சூரியன் எனும் ஒரு நட்சத்திரத்தில் எட்டுக்கோள்களில் ஒன்றான பூமியில் 29% ஆன நிலப்பகுதியிலும் சிறு பகுதியில் வாழும் இந்த ஆறு அடி உயரமான மனிதர்களை மட்டும்தான் படைத்து நிர்வகிக்கிறான் என்பதை ஏற்க மனம் நாடுவதில்லை. இச்சிந்தனை இறைவல்லமையைக் குறைத்து மதிப்பிடுவதுபோன்று தோன்றுகிறது.

இத்தகையதொரு சிந்தனையில்தான் இன்றைய விஞ்ஞான உலகம்கூட மனிதன் தவிர்ந்த வேறு உயிர்களும் இப்பிரபஞ்சத்தில் எதாவதொரு மூலையில் இருக்கலாம் என்று நம்புகின்றது. விண்வெளியில் எண்ணிலடங்கா நட்சத்திர சூரியன்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றைச் சுற்றியும் பல இலட்சக்கணக்கான கோள்கள், உப கோள்கள் வலம்வருகின்றன. இவை ஏதாவதொன்றில் நிச்சயம் உயிரினங்கள் வாழவேண்டும். அவை மனிதர்களை விட விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் அதி உயர் நிலையில் இருக்கமுடியும். அல்லது காட்டு மிராண்டித்தனமான, முரட்டு சுபாவமுள்ள ஜீவராசிகளாகவும் இருக்கமுடியும் என்று சிந்திக்கின்றது.

ஆரம்ப எகிப்து சாம்ராஜ்யத்தில் பிரமிட்டுகளை வானுயரக் கட்டியமைகூட இதுதொடர்பான ஆய்வுகளுக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. அவர்களும் வேற்றுக் கிரகங்களில் உயிர்வாழ்க்கை பற்றி ஆராய்ந்துள்ளனர். பிரமிட்டுகளில் காணப்படும் சில வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய ஓவியங்கள் இதனைக் கட்டியம் கூறுகின்றன.

2009 ஆம் ஆண்டு அமெரிக்க வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாசா விண்வெளி மையம் தனது 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியபோது நவீன ஐன்ஸ்டீன் என அழைக்கப்படும் வானியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் உரையாற்றும்போது விண்ணகத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் மத்தியில் நாம் மட்டும் தனிமையாய் இருக்கின்றோமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் பல காலமாக இவ்வினா பற்றி நான் மிகவும் ஆழமாக அலசி ஆராய்ந்து வந்துள்ளேன். சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் யாவும் ஒரே முடிவிற்கு வருவதற்கு சாதகமாக அமைந்திருந்தன. இப்பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனிமையில் இல்லை என்பதுவே அம்முடிவு. இருப்பினும் வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்தால்  அவர்களின் சமிக்ஞைகளை இதுவரை ஏன் மனித இனம் கண்டறியவில்லை. எமது தொழில்நுட்பம் அவற்றை அறியும் ஆற்றல் அற்றனவா? வேற்றுக் கிரகவாசிகள் எங்களைவிட அதி முன்னேற்றமடைந்தவர்களா? இவைகள் இன்னும் ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயங்கள்என்று குறிப்பிட்டார்.

இறை நம்பிக்கையே அற்ற இவர்கள் இவ்வாறு சிந்திக்கும்போது ரப்புல் ஆலமீன் - அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கும் நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்? அவர்கள் சிந்திப்பதோடு நிற்கவில்லை விண்வெளி ஆய்வுகூடங்கள், செய்மதிகள் என பல்வேறு சாதனங்களை விண்ணில் ஏவி ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் நாம் சிந்திப்பதைக்கூட நிறுத்திவிட்டோம்.

ஆரம்ப காலங்களில் பூமி இயக்கமற்றது அதுவே அண்டத்தின் மையப்புள்ளியென்றும் கோள்கள் நட்சத்திரங்கள் அனைத்தும் பூமியை மையமாகக்கொண்டு சுற்றிவருவதாகவும் நம்பப்பட்டது. இதுபோன்ற விளக்கங்கள் அக்காலத்தில் நிலவிவந்த சமயக் கருத்துக்களுக்கு இசைவாகவே இருந்தன. ஏனெனில் கடவுளின் புதல்வர் அவதரித்து, மனித அழிவு, விடுதலை என்பவற்றில் பங்கெடுத்துக்கொண்ட இப்புவி அண்டத்தின் மையமாகத்தான் இருக்கவேண்டுமென்று கிறிஸ்தவ மதபோதகர்கள்கூட பிரச்சாரம் செய்தனர்.

இக்கருத்தை சமயத் தலைவரான ஒரஸ்மே (Oresme) மற்றும் அறிஞர் குஸா (Cusa) போன்ற பலர் மறுத்துரைத்தனர். அதில் இத்தாலியைச் சேர்ந்த ஜியோர்டானோ புரூனே (கி.பி. 1548 – 1600) என்பவர் முக்கியமானவர். பூமியல்லாது வேறுபல உலகங்களும் இருக்கின்றன என்பதை இவர் வலியுருத்திப் பின்வருமாறு கூறினார். கடவுளின் திறனும் நற்பண்பும் முடிவுள்ள உலகம் ஒன்றைத்தான் படைக்க முடியும் என்று நான் கருதவில்லை. அவனது வல்லமை எண்ணிலடங்காத பல உலகங்களைப் படைக்கக்கூடியது. ஆகவே புவியைப்போன்று பல உலகங்கள் இருக்கின்றனஎன்றார். இக்கருத்து பைபிலுக்கு முரணாணது என்பதால் கிறிஸ்தவ மடத்தின் எதிர்ப்புக்குள்ளான இவ் அறிஞர் கி.பி. 1600 ல் உயிரோடு நெருப்பில் கொளுத்தப்பட்டார்.

ஜியோர்டானோ புரூனே எனும் ஆய்வாளரின் மேற்போந்த கூற்றை அல்குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கும் அற்புதத்தைப் பாருங்கள்.
ஏழு வானங்களையும் அதே தொகையான பூமிகளையும் அல்லாஹ்தான் சிருஷ்டித்தான்”(65:12)
இவ்வசனம் எமது பூமி மட்டுமல்லாது எண்ணிலடங்காத பூமிகள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

எமது ஞாயிற்றுத் தொகுதியில் பூமியைத் தவிர உயிர் வாழ்க்கைக்கு உகந்த கோள்கள் எதுவும் இல்லை. என்றாலும் செவ்வாய்க் கிரகம் பூமியின் அளவை ஒத்திருப்பதாலும் ஆய்வுகளின்போது செவ்வாய்க்கிரகத்தில் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாலும் அங்கு உயிர் வாழ்க்கை மிகக் குறைந்த விகிதாசாரத்தில் சாத்தியப்படலாம் என விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். விஞ்ஞானிகள் தொடர்ந்தும் விண்ணை ஆராய்ந்ததில் கான்சர் எனப்படும் கெலக்ஸியில் 55 கன்கரி நட்சத்திரத்தைச் சுற்றி வட்டமிடும் ஐந்து கிரகங்களில் ஒன்றில் பூமியை ஒத்த தற்பவெப்ப சூழ்நிலை காணப்படுவதாகவும் 2009ம் ஆண்டு நாஸா விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

இது மாத்திரமன்றி எமது பால்வெளி மண்டலத்தில் பூமியைப் போன்ற மிதமான வெப்பநிலையுடன் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக வானவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி பிரான்சின் கிரனோபில் நகரில் உள்ள கிரகங்கள் மற்றும் வானியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேவியர் போன்பில்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது பால் மண்டலத்தில் சுமார் 16,000 கோடி கிரகங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 40 சதவீதம் பூமியைப் போன்றே உள்ளன. இவற்றை Super Earth என்று குறிப்பிடலாம். அவற்றின் மேற்பரப்பு தண்ணீர் ஓடுவதற்கேற்ப அமைந்துள்ளதுடன், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற மிதமான வெப்பநிலையும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பூமியைப்போல 1 முதல் 10 மடங்கு பெரியவை. என்றாலும் நட்சத்திரங்களின் அளவோடு ஒப்பிடுகையில் 80 சதவீதம் மட்டுமே இருக்கும். இவை சூரியனோடு ஒப்பிடும்போது மங்கலாகவும் குளிர்ச்சியாகவும் உள்ளன. ஜுபிடர் மற்றும் சனிக் கிரகங்கலைப்போல மிக மிகத் தொலைவில் இவை அமைந்துள்ளனஎன்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விண்ணியல் விஞ்ஞானியான P. Guerin எழுதுகிறார் : பிரபஞ்சமெங்கும் தராளமாக கோள் தொகுதிகள் இருக்கின்றன என்ற உண்மையை எல்லாச் சான்றுகளும் புலப்படுத்துகின்றன. சூரிய மண்டலமும் பூமியும்தான் அபூர்வமானவையன்று

இவ்வாறு விண்வெளியில் உயிர் வாழ்க்கை சாத்தியப்படும் கோள்கள் பற்றியும் அவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதுபற்றியும் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுவரை விண்ணை ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் தொலைநோக்குக் கருவிகளை விட பத்து மடங்கு பலம்வாய்ந்த தொலை நோக்கு கருவியொன்றை சிலி நாட்டில் உள்ள எடகாமா பாலைவனத்தில் நிறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வேற்றுக் கிரகங்களில் உயிர்கள் பற்றிய ஆய்வுகளை நடாத்துவதற்கென்றே இந்த இராட்சதத் தொலைநோக்கி பயன்படப்போகின்றது. இதனை 35 இலட்சம் டொலர் செலவில் பிரித்தானியாவின் துர்ஹைம் மற்றும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் ஐக்கிய அமெரிக்காவின் நாஸா நிறுவனத்தின் விஞ்ஞானிகளும் ரதர்போர்ட் எப்லன்டன் ஆய்வுமையமும் இணைந்து அமைக்கவுள்ளனர். இதன் மூலம் 14 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலுள்ள விண் பொருட்களையும் உண்ணிப்பாகப் பார்க்கும் ஆற்றலுள்ளதாக இஸ்தாபகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இல்லைஎன்ற கருதுகோள்தான் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிகமான திரைப்படங்களுக்குக்கும் புனைக் கதைகளுக்கும் நாவல்களுக்கும் கருவாக அமைந்துள்ளது. வேற்றுக் கிரகங்களிலிருந்து முரட்டுத்தனமான கொடூரமான ஜீவிகள் பூமியை ஆக்கிரமிக்க வருவதுபோன்றும் அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுவதுபோன்றும் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. Avatar, John Carter, Green Lantern, Independence Day, Aliens, Cowboys & Aliens போன்ற திரைப்படங்கள் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி எடுக்கப்பட்டுள்ள சில திரைப்படங்களாகும்.


இப்பிரபஞ்சத்தில் பூமி போன்ற கிகங்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்யும் அதே தருனம் ஏழு வானங்களையும் அதே தொகையான பூமிகளையும் அல்லாஹ்தான் சிருஷ்டித்தான்” (65:12) என்ற அல்குர்ஆனிய வசனம் அப்படியான பூமிகள் இருப்பதாகக் கூறுகின்றது. அவற்றில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கும் இதே வேளை உயிரினங்களும் இருக்கலாம் என்பதுபோன்று உரைக்கும் சில வசனங்களை இங்கு அவதானிக்க முடிகிறது. அல்குர்ஆன் வானம் பற்றியும் பூமி பற்றியும் முக்கியப் படுத்திப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுவதுபோன்று இவற்றிற்கு மத்தியில் உள்ளவை பற்றியும் முக்கியப் படுத்திக் கூறுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்.
வானங்களிலும் பூமியிலும் இருப்பவைகளும் இவற்றுக்கிடையில் இருப்பவைகளும் பூமியில் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே உரியன.” (20:6) “அவன்தான் வானங்களையும் பூமியையும் இவற்றுக்கு இடையிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் சிறுஷ்டித்தான்.” (25:59) 
வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ளவை பற்றி அல்லாஹ் பின்வரும் வசனங்களிலும் முக்கியப்படுத்திக் கூறுகின்றான் : (32:4/ 50:38/ 21:16/ 44:7/ 44:38/ 78:37/ 15:85/ 46:3/ 48:4/ 48:7/ 43:85) (ஒன்லைனில் அல்குர்ஆன் வசனங்களைப் பார்க்க)த்திரு வசனங்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள், விண் கற்கள் என்பவற்றோடு அங்கு உயிரினங்கள் இருக்கின்றன என்பதையும் சூசகமாகக் கூறுவதாகக் கொள்ளலாம். ஏனெனில் 65 ஆவது அத்தியாயம் 12 ஆவது வசனத்தில் ஏழு வானங்களைப்போன்று ஏழு பூமிகளும் இருப்பதாகக் கூறும் அவ்வசனத்தின் தொடரில் அவைகளுக்கிடையில் கட்டளைகளை இறக்கிக்கொண்டே இருக்கின்றான்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கட்டளை என்பது வஹியாகவோ அல்லது அவனது நிர்வாக ஒழுங்குகளாகவோ இருக்கலாம். பூமியில் வாழும் எமக்கு அல்லாஹ் கட்டளைகளை இறக்கியது போன்று மற்ற பூமிகளில் வாழ்கின்ற உயிரினங்களிருந்தால் அவற்றுக்கும் கட்டளைகளை இறக்குவதாகவும் இருக்கலாம்.

ஆதம், ஹவ்வா இருவரையும் அல்லாஹ் சுவனத்திலிருந்து இப்பூமிக்கு இறக்கியதாலும் எமது ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹிலிருந்து இப்பூமியை வந்தடைவதாலும் ஒரு வகையில் நாமும் வேற்றுக் கிரகவாசிகள்தாம் என்பதை மறக்கக்கூடாது.

அல்லாஹ் பிரபஞ்சத்தைப் படைத்துவிட்டு மலக்குகளைப் பார்த்து இவற்றின் பெயர்களைக் கூறுங்கள் என்றபோது “மலக்குகள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேகமிக்கவன்” எனக் கூறினார்கள். [2:32] அப்படிப்பட்ட மலக்குகளிடம் அல்லாஹ் நான் மனிதர்களைப் படைக்கப்போகின்றேன் என்று கூறியபோது...
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.” [2:30]
இங்கு அல்லாஹ் மனிதர்களைப் படைக்க முன்பே மலக்குகளுக்கு மனிதர்களின் பண்பு தெரிந்திருக்கின்றது. அவர்கள் இரத்தம் சிந்தி பூமியில் குழப்பம் செய்பவர்களென்ற முன் அனுபவம் மலக்குகளுக்கு இருந்திருக்கின்றது. அப்படியானால் அல்லாஹ் எம்மைப் போன்றோ அல்லது வேறு அமைப்பிலோ இதற்கு முன்பு உயிரினங்களைப் படைத்திருக்க வேண்டும். அதுபற்றிய முன் அனுபவம் இருப்பதால் மலக்குகள் இம்முறை அல்லாஹ்விடம் இவ்வாறு கூறியிருக்கவேண்டும்.
இப்பூமியில் வாழும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்பவை தவிர்த்து இப்பிரபஞ்சத்தில் ஜின்கள், சைத்தான்கள், மலக்குமார்களும் இருக்கின்றார்கள் என்பதை ஞாபகத்தில்கொள்ளவேண்டும். இவர்களையும் தவிர்த்து இன்னும் உயிரினங்கள் வாழ்கின்றனவா இல்லையா என்பது உறுதியாகக் கூறமுடியாதவொன்று. அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன்.

என்றாலும் இதுபற்றிய ஆய்வுகளில் முடியுமானால் சக்திகளை, வளங்களைத் திரட்டிக்கொண்டு ஈடுபடுமாறு பின்வரும் அல்குர்ஆனிய வசனம் தூண்டுதல் அளிக்கின்றது.
மனு, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் மற்றும் பூமியினது பிரதேசங்களை ஊடுருவிச் சென்றுவிட முடியுமானால் சென்று விடுங்கள். ஆயினும் ஆற்றலுடனன்றி நீங்கள் ஊடுருவிச் செல்லமுடியாது.” (55:33)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

வேற்றுக்கிரகவாசிகள் பற்றி அல்குர்ஆன்.

எமது பிரபஞ்சத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸிகள் காணப்படுகின்றன. பல்வீதி என்றழைக்கப்படும் கெலக்ஸியில்தான் எமது பூமி அமைந்துள்ளது. எமது இந்த கெலக்ஸியில் மாத்திரம் 250 பில்லியன்களுக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கவேண்டுமென விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் ஒன்றுதான் மது சூரியன். அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞர்னிகளின் கூற்றுப்படி கடற்கரைகளில் உள்ள மணற்துணிக்கைகள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் வரும் மணற்துணிக்கைகளின் எண்ணிக்கையைவிட விண்ணில் காணப்படும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். சூரியன் அம்மணற்துணிக்கைகளில் ஒன்று மாத்திரமேஎன்கிறார்கள்.

சூரியன் தன்னைத்தானே முழுமையாகச் சுற்றிமுடிக்க 25 நாட்கள் செல்கின்றன. ஆனால் மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரங்களுள் மிகப் பெரியதான vy Canis Majoris எனும் நட்சத்திரம் தன்னைத்தானே ஒரு முறை சுற்றி முடிக்க 1200 ஆண்டுகள் செல்கின்றன. இதன் விட்டம் 2,800,000,000km களாகும். ஆக விண்ணில் காணப்படும் இலட்சோப இலட்ச நட்சத்திரங்களில் ஒரு சிறு புள்ளிதான் எமது சூரியன். சூரியக் குடும்பத்தில் காணப்படும் சிறிய கோள்களில் ஒன்றான பூமியில்தான் நாம் வாழ்கின்றோம். பூமியிலும் 71% நீர்ப்பரப்பைத் தவிர்த்து 29% ஆன நிலப்பரப்பில்தான் நாம் வாழ்கின்றோம். நிலத்திலும் ஆட்டிக், அண்டாட்டிக் போன்ற கடும் குளிர் பிரதேசங்களில் மனிதன் காலடிவைக்காத இடங்களும் உண்டு. சஹாராபோன்ற பெரும் பாலை நிலங்கள் காணப்படுகின்றன. அமேசன் போன்ற அடர்ந்த பயங்கரமான காடுகள் உள்ளன. இவையனைத்தையும் கழித்துவிட்டுப் பார்த்தால் 29% இலும் சிறு பகுதியிலேயே மனிதன் வாழ்கின்றான்.

தற்போது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள் நாம் அல்லாஹ்வை சர்வ வல்லமை மிக்க நாயனாக, அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் ஏக இரட்சகனாக ஏற்றிருக்கின்றோம். அவன் நாடியதைச் செய்யக் கூடியவன். யாதேனும் ஒன்றை ஆக்க நினைத்தால் குன் என்ற ஒரு வார்த்தையின் மூலம் ஆக்கக்கூடியவன். 
அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. (19:35)

இத்தனை பேராற்றலும் மிக்க வல்லவன் அல்லாஹ் இப்பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் 300 மில்லியனுக்கும் அதிகமான கெலக்ஸிகளில் ஒரு கெலக்ஸியில் அதிலுள்ள 200 பில்லியனுக்கும் அதிகமான நட்சத்திரங்களில் சூரியன் எனும் ஒரு நட்சத்திரத்தில் எட்டுக்கோள்களில் ஒன்றான பூமியில் 29% ஆன நிலப்பகுதியிலும் சிறு பகுதியில் வாழும் இந்த ஆறு அடி உயரமான மனிதர்களை மட்டும்தான் படைத்து நிர்வகிக்கிறான் என்பதை ஏற்க மனம் நாடுவதில்லை. இச்சிந்தனை இறைவல்லமையைக் குறைத்து மதிப்பிடுவதுபோன்று தோன்றுகிறது.

இத்தகையதொரு சிந்தனையில்தான் இன்றைய விஞ்ஞான உலகம்கூட மனிதன் தவிர்ந்த வேறு உயிர்களும் இப்பிரபஞ்சத்தில் எதாவதொரு மூலையில் இருக்கலாம் என்று நம்புகின்றது. விண்வெளியில் எண்ணிலடங்கா நட்சத்திர சூரியன்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றைச் சுற்றியும் பல இலட்சக்கணக்கான கோள்கள், உப கோள்கள் வலம்வருகின்றன. இவை ஏதாவதொன்றில் நிச்சயம் உயிரினங்கள் வாழவேண்டும். அவை மனிதர்களை விட விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியில் அதி உயர் நிலையில் இருக்கமுடியும். அல்லது காட்டு மிராண்டித்தனமான, முரட்டு சுபாவமுள்ள ஜீவராசிகளாகவும் இருக்கமுடியும் என்று சிந்திக்கின்றது.

ஆரம்ப எகிப்து சாம்ராஜ்யத்தில் பிரமிட்டுகளை வானுயரக் கட்டியமைகூட இதுதொடர்பான ஆய்வுகளுக்காக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. அவர்களும் வேற்றுக் கிரகங்களில் உயிர்வாழ்க்கை பற்றி ஆராய்ந்துள்ளனர். பிரமிட்டுகளில் காணப்படும் சில வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய ஓவியங்கள் இதனைக் கட்டியம் கூறுகின்றன.

2009 ஆம் ஆண்டு அமெரிக்க வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நாசா விண்வெளி மையம் தனது 50 ஆவது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியபோது நவீன ஐன்ஸ்டீன் என அழைக்கப்படும் வானியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் உரையாற்றும்போது விண்ணகத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் மத்தியில் நாம் மட்டும் தனிமையாய் இருக்கின்றோமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் பல காலமாக இவ்வினா பற்றி நான் மிகவும் ஆழமாக அலசி ஆராய்ந்து வந்துள்ளேன். சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் யாவும் ஒரே முடிவிற்கு வருவதற்கு சாதகமாக அமைந்திருந்தன. இப்பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனிமையில் இல்லை என்பதுவே அம்முடிவு. இருப்பினும் வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் வாழ்ந்தால்  அவர்களின் சமிக்ஞைகளை இதுவரை ஏன் மனித இனம் கண்டறியவில்லை. எமது தொழில்நுட்பம் அவற்றை அறியும் ஆற்றல் அற்றனவா? வேற்றுக் கிரகவாசிகள் எங்களைவிட அதி முன்னேற்றமடைந்தவர்களா? இவைகள் இன்னும் ஆழமாக ஆராயப்படவேண்டிய விடயங்கள்என்று குறிப்பிட்டார்.

இறை நம்பிக்கையே அற்ற இவர்கள் இவ்வாறு சிந்திக்கும்போது ரப்புல் ஆலமீன் - அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வை ஈமான் கொண்டிருக்கும் நாம் எவ்வாறு சிந்திக்க வேண்டும்? அவர்கள் சிந்திப்பதோடு நிற்கவில்லை விண்வெளி ஆய்வுகூடங்கள், செய்மதிகள் என பல்வேறு சாதனங்களை விண்ணில் ஏவி ஆராய்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் நாம் சிந்திப்பதைக்கூட நிறுத்திவிட்டோம்.

ஆரம்ப காலங்களில் பூமி இயக்கமற்றது அதுவே அண்டத்தின் மையப்புள்ளியென்றும் கோள்கள் நட்சத்திரங்கள் அனைத்தும் பூமியை மையமாகக்கொண்டு சுற்றிவருவதாகவும் நம்பப்பட்டது. இதுபோன்ற விளக்கங்கள் அக்காலத்தில் நிலவிவந்த சமயக் கருத்துக்களுக்கு இசைவாகவே இருந்தன. ஏனெனில் கடவுளின் புதல்வர் அவதரித்து, மனித அழிவு, விடுதலை என்பவற்றில் பங்கெடுத்துக்கொண்ட இப்புவி அண்டத்தின் மையமாகத்தான் இருக்கவேண்டுமென்று கிறிஸ்தவ மதபோதகர்கள்கூட பிரச்சாரம் செய்தனர்.

இக்கருத்தை சமயத் தலைவரான ஒரஸ்மே (Oresme) மற்றும் அறிஞர் குஸா (Cusa) போன்ற பலர் மறுத்துரைத்தனர். அதில் இத்தாலியைச் சேர்ந்த ஜியோர்டானோ புரூனே (கி.பி. 1548 – 1600) என்பவர் முக்கியமானவர். பூமியல்லாது வேறுபல உலகங்களும் இருக்கின்றன என்பதை இவர் வலியுருத்திப் பின்வருமாறு கூறினார். கடவுளின் திறனும் நற்பண்பும் முடிவுள்ள உலகம் ஒன்றைத்தான் படைக்க முடியும் என்று நான் கருதவில்லை. அவனது வல்லமை எண்ணிலடங்காத பல உலகங்களைப் படைக்கக்கூடியது. ஆகவே புவியைப்போன்று பல உலகங்கள் இருக்கின்றனஎன்றார். இக்கருத்து பைபிலுக்கு முரணாணது என்பதால் கிறிஸ்தவ மடத்தின் எதிர்ப்புக்குள்ளான இவ் அறிஞர் கி.பி. 1600 ல் உயிரோடு நெருப்பில் கொளுத்தப்பட்டார்.

ஜியோர்டானோ புரூனே எனும் ஆய்வாளரின் மேற்போந்த கூற்றை அல்குர்ஆன் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியிருக்கும் அற்புதத்தைப் பாருங்கள்.
ஏழு வானங்களையும் அதே தொகையான பூமிகளையும் அல்லாஹ்தான் சிருஷ்டித்தான்”(65:12)
இவ்வசனம் எமது பூமி மட்டுமல்லாது எண்ணிலடங்காத பூமிகள் இப்பிரபஞ்சத்தில் இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றது.

எமது ஞாயிற்றுத் தொகுதியில் பூமியைத் தவிர உயிர் வாழ்க்கைக்கு உகந்த கோள்கள் எதுவும் இல்லை. என்றாலும் செவ்வாய்க் கிரகம் பூமியின் அளவை ஒத்திருப்பதாலும் ஆய்வுகளின்போது செவ்வாய்க்கிரகத்தில் நுண்ணுயிரிகள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளதாலும் அங்கு உயிர் வாழ்க்கை மிகக் குறைந்த விகிதாசாரத்தில் சாத்தியப்படலாம் என விஞ்ஞானிகள் ஊகிக்கின்றனர். விஞ்ஞானிகள் தொடர்ந்தும் விண்ணை ஆராய்ந்ததில் கான்சர் எனப்படும் கெலக்ஸியில் 55 கன்கரி நட்சத்திரத்தைச் சுற்றி வட்டமிடும் ஐந்து கிரகங்களில் ஒன்றில் பூமியை ஒத்த தற்பவெப்ப சூழ்நிலை காணப்படுவதாகவும் 2009ம் ஆண்டு நாஸா விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர்.

இது மாத்திரமன்றி எமது பால்வெளி மண்டலத்தில் பூமியைப் போன்ற மிதமான வெப்பநிலையுடன் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற கிரகங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதாக வானவியல் வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி பிரான்சின் கிரனோபில் நகரில் உள்ள கிரகங்கள் மற்றும் வானியல் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சேவியர் போன்பில்ஸ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் கூறியதாவது பால் மண்டலத்தில் சுமார் 16,000 கோடி கிரகங்கள் காணப்படுகின்றன. இவற்றில் 40 சதவீதம் பூமியைப் போன்றே உள்ளன. இவற்றை Super Earth என்று குறிப்பிடலாம். அவற்றின் மேற்பரப்பு தண்ணீர் ஓடுவதற்கேற்ப அமைந்துள்ளதுடன், உயிரினங்கள் வசிப்பதற்கேற்ற மிதமான வெப்பநிலையும் உள்ளன. இவை ஒவ்வொன்றும் பூமியைப்போல 1 முதல் 10 மடங்கு பெரியவை. என்றாலும் நட்சத்திரங்களின் அளவோடு ஒப்பிடுகையில் 80 சதவீதம் மட்டுமே இருக்கும். இவை சூரியனோடு ஒப்பிடும்போது மங்கலாகவும் குளிர்ச்சியாகவும் உள்ளன. ஜுபிடர் மற்றும் சனிக் கிரகங்கலைப்போல மிக மிகத் தொலைவில் இவை அமைந்துள்ளனஎன்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விண்ணியல் விஞ்ஞானியான P. Guerin எழுதுகிறார் : பிரபஞ்சமெங்கும் தராளமாக கோள் தொகுதிகள் இருக்கின்றன என்ற உண்மையை எல்லாச் சான்றுகளும் புலப்படுத்துகின்றன. சூரிய மண்டலமும் பூமியும்தான் அபூர்வமானவையன்று

இவ்வாறு விண்வெளியில் உயிர் வாழ்க்கை சாத்தியப்படும் கோள்கள் பற்றியும் அவற்றில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதுபற்றியும் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இதுவரை விண்ணை ஆய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் தொலைநோக்குக் கருவிகளை விட பத்து மடங்கு பலம்வாய்ந்த தொலை நோக்கு கருவியொன்றை சிலி நாட்டில் உள்ள எடகாமா பாலைவனத்தில் நிறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வேற்றுக் கிரகங்களில் உயிர்கள் பற்றிய ஆய்வுகளை நடாத்துவதற்கென்றே இந்த இராட்சதத் தொலைநோக்கி பயன்படப்போகின்றது. இதனை 35 இலட்சம் டொலர் செலவில் பிரித்தானியாவின் துர்ஹைம் மற்றும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும் ஐக்கிய அமெரிக்காவின் நாஸா நிறுவனத்தின் விஞ்ஞானிகளும் ரதர்போர்ட் எப்லன்டன் ஆய்வுமையமும் இணைந்து அமைக்கவுள்ளனர். இதன் மூலம் 14 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பாலுள்ள விண் பொருட்களையும் உண்ணிப்பாகப் பார்க்கும் ஆற்றலுள்ளதாக இஸ்தாபகர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இல்லைஎன்ற கருதுகோள்தான் வேற்றுக்கிரக வாசிகள் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிகமான திரைப்படங்களுக்குக்கும் புனைக் கதைகளுக்கும் நாவல்களுக்கும் கருவாக அமைந்துள்ளது. வேற்றுக் கிரகங்களிலிருந்து முரட்டுத்தனமான கொடூரமான ஜீவிகள் பூமியை ஆக்கிரமிக்க வருவதுபோன்றும் அதனை எதிர்த்து மனிதர்கள் போராடுவதுபோன்றும் பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. Avatar, John Carter, Green Lantern, Independence Day, Aliens, Cowboys & Aliens போன்ற திரைப்படங்கள் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி எடுக்கப்பட்டுள்ள சில திரைப்படங்களாகும்.


இப்பிரபஞ்சத்தில் பூமி போன்ற கிகங்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்யும் அதே தருனம் ஏழு வானங்களையும் அதே தொகையான பூமிகளையும் அல்லாஹ்தான் சிருஷ்டித்தான்” (65:12) என்ற அல்குர்ஆனிய வசனம் அப்படியான பூமிகள் இருப்பதாகக் கூறுகின்றது. அவற்றில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கும் இதே வேளை உயிரினங்களும் இருக்கலாம் என்பதுபோன்று உரைக்கும் சில வசனங்களை இங்கு அவதானிக்க முடிகிறது. அல்குர்ஆன் வானம் பற்றியும் பூமி பற்றியும் முக்கியப் படுத்திப் பல்வேறு இடங்களில் குறிப்பிடுவதுபோன்று இவற்றிற்கு மத்தியில் உள்ளவை பற்றியும் முக்கியப் படுத்திக் கூறுகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்.
வானங்களிலும் பூமியிலும் இருப்பவைகளும் இவற்றுக்கிடையில் இருப்பவைகளும் பூமியில் புதைந்து கிடப்பவைகளும் அவனுக்கே உரியன.” (20:6) “அவன்தான் வானங்களையும் பூமியையும் இவற்றுக்கு இடையிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் சிறுஷ்டித்தான்.” (25:59) 
வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ளவை பற்றி அல்லாஹ் பின்வரும் வசனங்களிலும் முக்கியப்படுத்திக் கூறுகின்றான் : (32:4/ 50:38/ 21:16/ 44:7/ 44:38/ 78:37/ 15:85/ 46:3/ 48:4/ 48:7/ 43:85) (ஒன்லைனில் அல்குர்ஆன் வசனங்களைப் பார்க்க)த்திரு வசனங்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடையில் உள்ள கோள்கள், நட்சத்திரங்கள், விண் கற்கள் என்பவற்றோடு அங்கு உயிரினங்கள் இருக்கின்றன என்பதையும் சூசகமாகக் கூறுவதாகக் கொள்ளலாம். ஏனெனில் 65 ஆவது அத்தியாயம் 12 ஆவது வசனத்தில் ஏழு வானங்களைப்போன்று ஏழு பூமிகளும் இருப்பதாகக் கூறும் அவ்வசனத்தின் தொடரில் அவைகளுக்கிடையில் கட்டளைகளை இறக்கிக்கொண்டே இருக்கின்றான்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கட்டளை என்பது வஹியாகவோ அல்லது அவனது நிர்வாக ஒழுங்குகளாகவோ இருக்கலாம். பூமியில் வாழும் எமக்கு அல்லாஹ் கட்டளைகளை இறக்கியது போன்று மற்ற பூமிகளில் வாழ்கின்ற உயிரினங்களிருந்தால் அவற்றுக்கும் கட்டளைகளை இறக்குவதாகவும் இருக்கலாம்.

ஆதம், ஹவ்வா இருவரையும் அல்லாஹ் சுவனத்திலிருந்து இப்பூமிக்கு இறக்கியதாலும் எமது ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹிலிருந்து இப்பூமியை வந்தடைவதாலும் ஒரு வகையில் நாமும் வேற்றுக் கிரகவாசிகள்தாம் என்பதை மறக்கக்கூடாது.

அல்லாஹ் பிரபஞ்சத்தைப் படைத்துவிட்டு மலக்குகளைப் பார்த்து இவற்றின் பெயர்களைக் கூறுங்கள் என்றபோது “மலக்குகள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேகமிக்கவன்” எனக் கூறினார்கள். [2:32] அப்படிப்பட்ட மலக்குகளிடம் அல்லாஹ் நான் மனிதர்களைப் படைக்கப்போகின்றேன் என்று கூறியபோது...
(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான்.” [2:30]
இங்கு அல்லாஹ் மனிதர்களைப் படைக்க முன்பே மலக்குகளுக்கு மனிதர்களின் பண்பு தெரிந்திருக்கின்றது. அவர்கள் இரத்தம் சிந்தி பூமியில் குழப்பம் செய்பவர்களென்ற முன் அனுபவம் மலக்குகளுக்கு இருந்திருக்கின்றது. அப்படியானால் அல்லாஹ் எம்மைப் போன்றோ அல்லது வேறு அமைப்பிலோ இதற்கு முன்பு உயிரினங்களைப் படைத்திருக்க வேண்டும். அதுபற்றிய முன் அனுபவம் இருப்பதால் மலக்குகள் இம்முறை அல்லாஹ்விடம் இவ்வாறு கூறியிருக்கவேண்டும்.
இப்பூமியில் வாழும் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்பவை தவிர்த்து இப்பிரபஞ்சத்தில் ஜின்கள், சைத்தான்கள், மலக்குமார்களும் இருக்கின்றார்கள் என்பதை ஞாபகத்தில்கொள்ளவேண்டும். இவர்களையும் தவிர்த்து இன்னும் உயிரினங்கள் வாழ்கின்றனவா இல்லையா என்பது உறுதியாகக் கூறமுடியாதவொன்று. அல்லாஹ்வே யாவற்றையும் நன்கறிந்தவன்.

என்றாலும் இதுபற்றிய ஆய்வுகளில் முடியுமானால் சக்திகளை, வளங்களைத் திரட்டிக்கொண்டு ஈடுபடுமாறு பின்வரும் அல்குர்ஆனிய வசனம் தூண்டுதல் அளிக்கின்றது.
மனு, ஜின் கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் மற்றும் பூமியினது பிரதேசங்களை ஊடுருவிச் சென்றுவிட முடியுமானால் சென்று விடுங்கள். ஆயினும் ஆற்றலுடனன்றி நீங்கள் ஊடுருவிச் செல்லமுடியாது.” (55:33)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...