"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 October 2018

அவுஸ்த்ரேலியாவின் அதிசயம் கங்காரு


“Kangaroo என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவுஸ்த்ரேலியாவின் தேசிய விலங்கு என அறியப்பட்டிருக்கும் இவ் விலங்குகள் உண்மையில் அந்நாட்டின் தேசியவிலங்கு அல்ல. மாறாக அந்நாட்டின் அதிசயம் என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் அவுஸ்த்ரேலியாவின் தேசிய முத்திரையில் கங்காருக்கள் இடம்படித்துள்ளன. கங்காருவால் பின்னோக்கி நடக்கவோ நகரவோ முடியாது. எனவே முன்னேற்றத்துக்கான அடையாளமாக இது அர முத்திரையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய சுவாரஷ்யமுள்ள இவ்விலங்கில் இறை வல்லமைகளைக் கண்டுகொள்ள  இத்தொடரில் சற்று முயற்சிப்போம்.

சுவாரஷ்யமான பெயர்
கங்காருவுக்கு கங்காரு என்கிற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி செவிவழித் தகவல் ஒன்று உண்டு. முதன் முதலில் அவுஸ்த்ரேலியா வந்திறங்கிய ஐரோப்பியர்கள், ஆங்காங்கே ஒரு வகை விசித்திர மிருகங்கள் பல அடி உயரத்திற்குத் துள்ளித் திரிவதைக் கண்டு வியந்துபோனார்களாம். தலை மானைப் போல இருக்கிறது. ஆனால் கொம்பு இல்லை, நின்றால் மனிதனைப் போல் நிற்கிறது, ஆனால் நடக்கத்தெரியவில்லை, தவளை போல தத்தித் தாவித்தாவிப் போகிறது. இப்படி ஒரு மிருகத்தை இதற்கு முன்னர் அறியாததால் ஆச்சரியத்தில் விழித்தார்கள். அங்கே போன சில கங்காருக்களைக் காட்டி, இது என்னவென்று அங்கிருந்த பூர்வகுடிகளைக் கேட்க, அவர்களோ, ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று க்குப் புரியவில்லையேஎன்று அவர்களுடைய மொழியில் கென் கு ரூ - Kan Ghu Ru என்று சொன்னார்கள். 

இவர்கள் அதன்பெயரே அதுதான் என்று நினைத்து கென் கு ரூவை காங்கரூவாக்கிவிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல, வயிற்றில் குட்டிகளோடு திரிந்த தாய் கங்காருக்களைப் பார்த்து அவையெல்லாம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நினைத்திருந்தார்களாம் ஐரோப்பியர்கள். பொதுவாக ஆண் கங்காருக்களை பக் (buck), பூமர் (boomer), ஓல்டுமேன்(old man), ஜாக் (Jack) என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். பெண் கங்காருக்களை டொ (doe), ஃப்ளையர் (flyer), ஜில் (Jill) என்று சொல்வார்கள். குட்டிகளை ஜோய் (Joey) என்று குறிப்பிடுவார்கள்.

வகை இனங்கள்
இவை மார்சுபியல் (marsupials) என்னும் வகையைச் சேர்ந்த உயிரினங்களாகும். மார்சுபியல் என்பது வயிற்றில் நெகிழும் தன்மையுடைய பை போன்ற அமைப்புள்ள விலங்குகளைக் குறித்துக்காட்ட வழங்கப்படும் விஞ்ஞானப் பெயராகும். இந்த வகை விலங்குகளுக்கு முழு வளர்ச்சியடையாத நிலையில்தான் குட்டிகள் பிறக்கும். அந்தக் குட்டிகள் முழு வளர்ச்சி பெறும்வரை தாய் தன் வயிற்றிலிருக்கும் பையில் (Pouch) வைத்து வளர்க்கவேண்டும். கொஹாலா (koalas), போஸம் (possums), ஒபோஸம் (opossums), டாஸ்மேனியன் டெவில் (Tasmanian devils), வோம்பேட் (wombats) போன்றவையும் மார்சுபியல் வகையில் உள்ளடங்கும். வயிற்றில்கை அமைப்பைக்கொண்ட மார்சுபியல் விலங்கினங்களில் இப்போது உலகத்தில் வாழ்பவை மொத்தமாக 334 இனங்கள்தாம். அவற்றில் அன்னளவாக 70 வீதம் அதாவது 220 இனம் அவுஸ்த்ரேலியாவிலும், நியூ கினியாவிலும், சுற்றியுள்ள தீவுகளிலும் வாழ்கின்றன. மற்ற முப்பது வீதம் அமெரிக்காவில் வாழ்கின்றன.


கங்காருக்கள் மார்சுபியலிலேயே மேக்ரோபாட் (macropod) என்னும் வகையைச் சார்ந்தவை. மேக்ரோபாட் என்றால் மிகப்பெரிய பாதங்கள் கொண்டவை என்று பொருள். கங்காருக்களில் 56 இனங்கள் இருக்கின்ற. குளிர் பிரதேத்தில், பாலைவனத்தில், மழைக்காடுகளில், கடலோரப் பகுதிகளில் என அனைத்து இடங்களிலிலும் வாழும் பல வகை இனங்கள் உண்டு. வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழலுக்கேற்றபடி அவை தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்கின்றன. தற்போதைய கணிப்பின்படி அவுஸ்த்ரேலியாவில் உள்ள கங்காருகளின் எண்ணிக்கை சுமார் 34 மில்லியன். 2020ல் இது 240 மில்லியனாக அதிகரிக்கும் என கணக்கெடுப்புகள் கூறுகின்றன. கங்காருக்கள் குழுக்களாகத்தான் வாழும். குழுவை மாப் (mob), கோர்ட் (court) என்று குறிப்பிடுவார்கள். ஒரு குழுவில் பத்து முதல் நூறு வரையிலான அங்கத்தினர்கள் இருக்கும்.

அதிசய உடலமைப்பு
கழுத்திற்கு மேல் மான்களது போன்ற முக அமைப்பை இவை கொண்டுள்ளன. அத்தோடு சிறிய இரண்டு முன் கைகள். அதனைவிட பெரிய நீண்ட நீளமான கால்கள், நீளமான, உறுதியான பாதங்கள், கடிணமான கணமான நீண்ட வால், வயிற்றில் ஒரு பெரிய பை இப்படியான வினோதமான உடலமைப்புகளைக்கொண்ட ஒரு விலங்குதான் இந்த கங்காரு. இரண்டு பின்கால்களால் மட்டும் எழுந்து நின்றால் சரியாக மனிதத் தோற்றத்திலேயே இருக்கும். எலிகளின் தோற்ற அமைப்பும் ஓரளவுக்கு உண்டு.


இரண்டு நீண்ட காதுகளும் அபாரமான கேள்திறன் ஆற்றல் கொண்டவை. உணவுண்டவாறே அவ்வப்போது காதுகளை அசைத்து ஆபத்துக்கள் வருகின்றதா என்று பார்த்துக்கொள்ளும். அதேபோன்று கூர்மையான பார்வைச் சக்தியும் உண்டு. மோப்ப சக்தியும் அபாரம். இவற்றின் முன் கைகளை உணவுண்ணும் போது குணிந்து புற்களைக் கிளருவதற்கும் எழுந்து நின்று எதிரியுடன் சண்டையிடுவதற்கும்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றன. பின்னங்கால்களால் இவை தத்தி, தாவி, பாய்ந்து செல்கின்றன.  கங்காரு மணிக்கு நாற்பது முதல் அறுபது கிலோமீட்டர் வேகம் வரையிலும் ஓடும். இரண்டு மீட்டர் உயரமும், 6 மீட்டர் நீளமும்கொண்ட இடைவெளியை ஒரே மூச்சில் தாண்டவல்லது. அது வேகமாக ஓடும்போது சமநிலை (balance) பேணுவதற்கு அதன் வால்தான் உதவுகிறது.

வீடியோக்களில் கங்காரு ஓடும்போது பார்த்திருப்பீர்கள். வாலால் உந்தி உந்தி ஓடுவது போல இருக்கும். உண்மைதான். வாலில்லையென்றால் கங்காருவால் ஒட மட்டுமில்லை, நகரவும் முடியாது. நமக்கு கட்டை விரல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்காருவுக்கு வால். கங்காருக்களால் தங்கள் கால்களைக் கொண்டு நடக்கவும் முடியாது, முன்பே குறிப்பிட்டது போல் பின்னோக்கி நகரவும் இயலாது. ஆனால் நன்றாக நீந்தத்தெரியும். ஏதாவது ஆபத்து வரும்போது பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்தால் அதற்குள் இறங்கி நீந்தித் தப்பித்துவிடும். கங்காருக்களில் மிகவும் பெரிய வகை சிவப்பு கங்காரு இனம்தான். கங்காரு இனத்தில் மட்டுமல்ல, உலகிலுள்ள மார்சுபியல் வகை விலங்குகளிலேயே பெரியதும் இதுதான். இது நின்றால் ஆறடி இருக்கும். கிட்டத்தட்ட மனிதர்களின் உயரம். எடை 85 கிலோ இருக்கும். வாலிலிருந்து மூக்கு வரை 10 அடி நீளமிருக்கும். சிவப்புக் கங்காரு இனத்தில் பெரியதும் பலமானதும் ஆளுமையுடையதும் ஆண்தான்.


உணவு முறை
கங்காருக்கள் இரவு விலங்குகள் (Nocturnal animals). இரவுநேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்கும். உணவு தேடிப்போகும். சில வகைகள் அதிகாலை நேரத்திலும், பின்மதியத்திலும் உணவு உண்ணப்போகும். பகல் முழுவதும் ஏதேனும் மரநிழலிலோ, பாறையிடுக்குகளிலோ, அழகாக பக்கவாட்டில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். கூட்டமாகவே இருக்கும். கங்காரு பெரும்பாலும் புல்தான் தின்னும். இலை குழைகள், காய்ந்த புற்கள் என்பவைதான் இவற்றின் உணவு. சிலபோது காட்டுப் பாதைகளில் செல்லும் மணிதர்கள் உண்டுவிட்டு எரியும் உணவு மீதிகளையும் உண்ணும். மற்ற கால்நடைகளைப் போலவே கங்காருக்களுக்கும் இரைப்பை அறைகள் உண்டு. அதனால் இவையும் இரவில் உண்ட உணவை பகலில் அசைபோட்டு விழுங்கும். மிகவும் குறைந்த அளவே தண்ணீர் குடிக்கும். தண்ணீர் இல்லாமலேயே பல மாதங்கள் அவற்றால் உயிர்வாழ முடியும்.

கங்காருச் சண்டை

கங்காருவுக்கு விழைச்சல் நிலங்களைப் பாதுகாக்க வளர்க்கும் டிங்கோ நாய்கள், வேட்டை நாய்கள், நரிகள், காட்டு நாய்கள், பூனைகள் மற்றும் மனிதர்கள்தான் எதிரிகள். பொதுவாக இவை மனிதர்களை தாக்காது என்றாலும் அவர்களால் ஏதேனும் ஆபத்தின் அறிகுறியைக் கண்டால் தாக்கக் கூடியவை. கங்காருக்கள் குத்துச்சண்டையில் தேர்ந்தவை. எதிரியை சமாளிக்கவேண்டிய நெருக்கடியில் தங்கள் முன்னங்கால்களால் நன்றாக குத்து விடும். அல்லது வாலை நிலத்தில் ஊன்றி நின்று பின்னங்கால்கள் இரண்டையும் தூக்கி பலமாக அடிவயிற்றில் உதைவிடும். எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் தங்கள் ஆளுமையை நிரூபிக்கவும், பெண் கங்காருக்களை கவரவும் பலம் வாய்ந்த ஆண் கங்காருக்கள் தங்களுக்குள் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடுவதுண்டு. தாய்க்கங்காரு தனது குட்டிகளுக்கும் சண்டைசெய்யப் பழக்கிக்கொடுக்கும். ஏனெனில் இதுதான் அவற்றுக்குரிய ஒரே தற்காப்புப் பொரிமுறை.

கங்காருகளின் பிறப்பும் வளர்ப்பும்

கங்காரு வருடதிற்க்கு ஒரு குட்டியே போடும். அதனுடைய கர்ப்பகாலம் வெறும் 33 நாட்கள்தான். அதனால் குட்டி பிறக்கும்போது இரண்டு கிராம் எடையுடன் ஒரு அங்குல நீளத்தில் ஒரு சிறு விதையின் அளவுதான் இருக்கும். கண்காது கால் உடல் என்று எதுவும் முழுமையாக உருவாகாமல் சதைக் கட்டியாக ஒரு புழுவைப் போல இருக்கும். மனிதக் கருவோடு ஒப்பிடுகையில் இது ஏழுவார சிசுவுக்கு சமம். 23 வாரங்களுக்குக் குறைந்த காலத்தில் குறைப்பிரசவமாகும் மனித சிசுக்கள் உயிர்பிழைப்பது அரிது. ஆனால் கங்காருவின் குட்டிகள் பிறப்பதே இந்நிலையில்தான். பிறந்ததும் அங்கு ஓர் அற்புதம் நிகழ்கின்றது. குட்டி கங்காரு பிறந்ததும் அதற்கு அல்லா ஏற்படுத்தி வைத்திருக்கும் உள்ளுணர்வு காரணமாக உந்தப்பட்டு தன் தாயின் வயிற்றில் இருக்கும் பையைத் தேடிக்கொண்டு மெது மெதுவாக நகர ஆரம்பிக்கின்றது. ஏனென்றால் அதற்குத் தெரியும் தனக்கான உணவும் பாதுகாப்பும் அங்குதான் உள்ளது என்று.

தாய்க்கங்காருவால் அந்தக் குட்டியைத் தொடக்கூட இயலாத அளவுக்கு குட்டி மிகச்சிறியதாக இருக்கும். ஆனால் தாய் என்ன செய்யுமென்றால், குட்டி, பைக்கு போகும் பாதையை நாவால் நக்கி நக்கி சுத்தம் செய்து கொடுக்கும். குட்டியும் தன்னுடைய முன்னங்கால் விரல்களால் தாயின் வயிற்று ரோமத்தைப் பற்றிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்து நகர்ந்து நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் பைக்குப் போய்விடும். அந்தப் பையும் ஒரு மிகப் பெரும் அதிசயம்தான். அதற்குள் நான்கு பால்காம்புகள் இருக்கும். அதில் ஒன்றை வாயால் பிடித்ததென்றால் அவ்வளவுதான். உடனே அந்த பால்காம்பு வீங்கி குட்டியின் வாயைவிட்டு வெளியில் வராதபடி உள்ளே நன்றாகப் பொருந்திவிடும். அப்புறமென்ன, தாய் எத்தனை குதி குதித்தாலும் தாவினாலும் குட்டி பத்திரமாக பைக்குள் இருக்கும். விழவே விழாது. இன்னுமொரு வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தக் குட்டிக்கு பாலை உறிஞ்சிக் குடிக்கவும் தெரியாது. தசைகள் சுருங்கிவிரிவது மூலமாகதான் பால் குட்டிக்குப் போய்ச்சேரும். சுப்ஹானல்லாஹ்!

பைக்குள் வளரும் குட்டி

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் குட்டிக் கங்காரு அதே நிலையில் பைக்குள்தான் இருக்கும். அதற்குள் அது முழுவளர்ச்சி பெற்றுவிடும். எவ்வளவு நேரந்தான் உள்ளேயே இருப்பது. அலுத்துப்போகுமே எனவே அவ்வப்போது மெதுவாக தலையை மட்டும் பைக்கு வெளியே நீட்டி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்கும். கங்காருக்குட்டிகள் பார்க்க அவ்வளவு அழகு. அதிலும் தாயின் வயிற்றுப்பைக்குள் அமர்ந்தபடி தலையை மட்டும் வெளியில் நீட்டி உலகமறியாத குழந்தை போல அப்பாவித்தனமாக விழிப்பது அவ்வளவு அழகு. பைக்கு வெளியே எட்டிப் பார்த்தாலும் பையைவிட்டு முழுவதுமாய் வெளியில் வர பயமிருக்கும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வெளியில் வரும். வந்தாலும் தாய் உடனேயே இருக்கும். சின்னதாய் ஏதும் சப்தம் வித்தியாசமாகக் கேட்டாலும் உடனே பைக்குள் ஒடி ஒளிந்துகொள்ளும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், பயமெல்லாம் போய்விடும். தாயை விட்டு கொஞ்சதூரம் விலகிப் போய் மேய ஆரம்பித்துவிடும்.  முன்போல் பயமிருக்காது. ஆனால் தாய் எப்போதும் கவனமாகவே இருக்கும். ஆபத்து வரும் அறிகுறி அறிந்தால், உடனே தரையில் காலைத் தட்டும். சட்டென்று குட்டி அம்மாவின் பைக்குள் ஏறிக்கொள்ள, அம்மா அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்துவிடும். கங்காருக்கள் பெரிய அளவில் சத்தமெழுப்பாது. சின்னதாய் செருமல்கள், மெல்லிய குரைப்பொலி, சன்னமான பக் பக், க்ளக் க்ளக் போன்ற ஒலிகளைத்தான் வெளிப்படுத்தும். பெரும்பாலும் தரையில் கால்களைத் தட்டி ஒலியெழுப்பும். குட்டியை அழைக்கவும், ஆபத்தின்போது எச்சரிக்கை  விடுக்கவும் தரையில் கால்களைத் தட்டி ஒலியெழுப்பும்.

கங்காரு வேட்டை

கங்காரு இனம் மிக வேகமாக பெருகி வருவதால் அவுஸ்த்ரேலிய மக்களின் பயிர்ச்செய்கைகளுக்கு இது பெரிதும் ஆபத்தாக உள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்து வருகிறது. கங்காரு ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிரழிக்கும் பிராணியாகத்தான் (pest) கருதப்படுகிறது. எனவே இவற்றின் எண்ணிக்கை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கங்காருக்களை வேட்டையாட அனுமதியளித்துள்ளது. எனவே இறைச்சிக்காகவும் அவற்றின் தோழுக்காகவும் கங்காருகள் வேட்டையாடப்படுகின்றன. கங்காருவை அவுஸ்த்ரேலியாவிலிருந்து உயிரோடு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். உயிரியல் பூங்காக்கள் விதிவிலக்கு. ஆனால் அவுஸ்த்ரேலியாவிலிருந்து கிட்டத்தட்ட 55 நாடுகளுக்கு உணவுக்காக கங்காரு இறைச்சி ஏற்றுமதியாகிறது. ரோமங்களுக்காகவும், தோல்பொருள் தயாரிக்கவும் அதன் தோலும் கூட ஏற்றுமதியாகிறது. இதனுடைய தோல் மிருதுவாக இருப்பதால் காலணிகள், முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் தயாரிக்க மிகவும் ஏற்றதாம்.ஆனாலும் பல விலங்குநல அமைப்புகள் கங்காருவைக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆய்வரங்கங்கள் நடத்தி, அறிக்கைகள் சமர்ப்பித்தபடிதான் இருக்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

“Kangaroo என்றழைக்கப்படும் கங்காருக்கள் உண்மையிலேயே அதிசயமானவை. பெயரில் மட்டுமல்ல அவற்றின் தோற்றத்திலும் வாழ்க்கை அமைப்பிலும்தான். அவுஸ்த்ரேலியாவின் தேசிய விலங்கு என அறியப்பட்டிருக்கும் இவ் விலங்குகள் உண்மையில் அந்நாட்டின் தேசியவிலங்கு அல்ல. மாறாக அந்நாட்டின் அதிசயம் என்றுதான் கூறவேண்டும். அதனால்தான் அவுஸ்த்ரேலியாவின் தேசிய முத்திரையில் கங்காருக்கள் இடம்படித்துள்ளன. கங்காருவால் பின்னோக்கி நடக்கவோ நகரவோ முடியாது. எனவே முன்னேற்றத்துக்கான அடையாளமாக இது அர முத்திரையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இத்தகைய சுவாரஷ்யமுள்ள இவ்விலங்கில் இறை வல்லமைகளைக் கண்டுகொள்ள  இத்தொடரில் சற்று முயற்சிப்போம்.

சுவாரஷ்யமான பெயர்
கங்காருவுக்கு கங்காரு என்கிற பெயர் எப்படி வந்தது என்பது பற்றி செவிவழித் தகவல் ஒன்று உண்டு. முதன் முதலில் அவுஸ்த்ரேலியா வந்திறங்கிய ஐரோப்பியர்கள், ஆங்காங்கே ஒரு வகை விசித்திர மிருகங்கள் பல அடி உயரத்திற்குத் துள்ளித் திரிவதைக் கண்டு வியந்துபோனார்களாம். தலை மானைப் போல இருக்கிறது. ஆனால் கொம்பு இல்லை, நின்றால் மனிதனைப் போல் நிற்கிறது, ஆனால் நடக்கத்தெரியவில்லை, தவளை போல தத்தித் தாவித்தாவிப் போகிறது. இப்படி ஒரு மிருகத்தை இதற்கு முன்னர் அறியாததால் ஆச்சரியத்தில் விழித்தார்கள். அங்கே போன சில கங்காருக்களைக் காட்டி, இது என்னவென்று அங்கிருந்த பூர்வகுடிகளைக் கேட்க, அவர்களோ, ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று க்குப் புரியவில்லையேஎன்று அவர்களுடைய மொழியில் கென் கு ரூ - Kan Ghu Ru என்று சொன்னார்கள். 

இவர்கள் அதன்பெயரே அதுதான் என்று நினைத்து கென் கு ரூவை காங்கரூவாக்கிவிட்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல, வயிற்றில் குட்டிகளோடு திரிந்த தாய் கங்காருக்களைப் பார்த்து அவையெல்லாம் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் என்று நினைத்திருந்தார்களாம் ஐரோப்பியர்கள். பொதுவாக ஆண் கங்காருக்களை பக் (buck), பூமர் (boomer), ஓல்டுமேன்(old man), ஜாக் (Jack) என்றெல்லாம் குறிப்பிடுவார்கள். பெண் கங்காருக்களை டொ (doe), ஃப்ளையர் (flyer), ஜில் (Jill) என்று சொல்வார்கள். குட்டிகளை ஜோய் (Joey) என்று குறிப்பிடுவார்கள்.

வகை இனங்கள்
இவை மார்சுபியல் (marsupials) என்னும் வகையைச் சேர்ந்த உயிரினங்களாகும். மார்சுபியல் என்பது வயிற்றில் நெகிழும் தன்மையுடைய பை போன்ற அமைப்புள்ள விலங்குகளைக் குறித்துக்காட்ட வழங்கப்படும் விஞ்ஞானப் பெயராகும். இந்த வகை விலங்குகளுக்கு முழு வளர்ச்சியடையாத நிலையில்தான் குட்டிகள் பிறக்கும். அந்தக் குட்டிகள் முழு வளர்ச்சி பெறும்வரை தாய் தன் வயிற்றிலிருக்கும் பையில் (Pouch) வைத்து வளர்க்கவேண்டும். கொஹாலா (koalas), போஸம் (possums), ஒபோஸம் (opossums), டாஸ்மேனியன் டெவில் (Tasmanian devils), வோம்பேட் (wombats) போன்றவையும் மார்சுபியல் வகையில் உள்ளடங்கும். வயிற்றில்கை அமைப்பைக்கொண்ட மார்சுபியல் விலங்கினங்களில் இப்போது உலகத்தில் வாழ்பவை மொத்தமாக 334 இனங்கள்தாம். அவற்றில் அன்னளவாக 70 வீதம் அதாவது 220 இனம் அவுஸ்த்ரேலியாவிலும், நியூ கினியாவிலும், சுற்றியுள்ள தீவுகளிலும் வாழ்கின்றன. மற்ற முப்பது வீதம் அமெரிக்காவில் வாழ்கின்றன.


கங்காருக்கள் மார்சுபியலிலேயே மேக்ரோபாட் (macropod) என்னும் வகையைச் சார்ந்தவை. மேக்ரோபாட் என்றால் மிகப்பெரிய பாதங்கள் கொண்டவை என்று பொருள். கங்காருக்களில் 56 இனங்கள் இருக்கின்ற. குளிர் பிரதேத்தில், பாலைவனத்தில், மழைக்காடுகளில், கடலோரப் பகுதிகளில் என அனைத்து இடங்களிலிலும் வாழும் பல வகை இனங்கள் உண்டு. வாழும் இடத்தின் தட்பவெப்ப சூழலுக்கேற்றபடி அவை தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துக்கொள்கின்றன. தற்போதைய கணிப்பின்படி அவுஸ்த்ரேலியாவில் உள்ள கங்காருகளின் எண்ணிக்கை சுமார் 34 மில்லியன். 2020ல் இது 240 மில்லியனாக அதிகரிக்கும் என கணக்கெடுப்புகள் கூறுகின்றன. கங்காருக்கள் குழுக்களாகத்தான் வாழும். குழுவை மாப் (mob), கோர்ட் (court) என்று குறிப்பிடுவார்கள். ஒரு குழுவில் பத்து முதல் நூறு வரையிலான அங்கத்தினர்கள் இருக்கும்.

அதிசய உடலமைப்பு
கழுத்திற்கு மேல் மான்களது போன்ற முக அமைப்பை இவை கொண்டுள்ளன. அத்தோடு சிறிய இரண்டு முன் கைகள். அதனைவிட பெரிய நீண்ட நீளமான கால்கள், நீளமான, உறுதியான பாதங்கள், கடிணமான கணமான நீண்ட வால், வயிற்றில் ஒரு பெரிய பை இப்படியான வினோதமான உடலமைப்புகளைக்கொண்ட ஒரு விலங்குதான் இந்த கங்காரு. இரண்டு பின்கால்களால் மட்டும் எழுந்து நின்றால் சரியாக மனிதத் தோற்றத்திலேயே இருக்கும். எலிகளின் தோற்ற அமைப்பும் ஓரளவுக்கு உண்டு.


இரண்டு நீண்ட காதுகளும் அபாரமான கேள்திறன் ஆற்றல் கொண்டவை. உணவுண்டவாறே அவ்வப்போது காதுகளை அசைத்து ஆபத்துக்கள் வருகின்றதா என்று பார்த்துக்கொள்ளும். அதேபோன்று கூர்மையான பார்வைச் சக்தியும் உண்டு. மோப்ப சக்தியும் அபாரம். இவற்றின் முன் கைகளை உணவுண்ணும் போது குணிந்து புற்களைக் கிளருவதற்கும் எழுந்து நின்று எதிரியுடன் சண்டையிடுவதற்கும்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றன. பின்னங்கால்களால் இவை தத்தி, தாவி, பாய்ந்து செல்கின்றன.  கங்காரு மணிக்கு நாற்பது முதல் அறுபது கிலோமீட்டர் வேகம் வரையிலும் ஓடும். இரண்டு மீட்டர் உயரமும், 6 மீட்டர் நீளமும்கொண்ட இடைவெளியை ஒரே மூச்சில் தாண்டவல்லது. அது வேகமாக ஓடும்போது சமநிலை (balance) பேணுவதற்கு அதன் வால்தான் உதவுகிறது.

வீடியோக்களில் கங்காரு ஓடும்போது பார்த்திருப்பீர்கள். வாலால் உந்தி உந்தி ஓடுவது போல இருக்கும். உண்மைதான். வாலில்லையென்றால் கங்காருவால் ஒட மட்டுமில்லை, நகரவும் முடியாது. நமக்கு கட்டை விரல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்காருவுக்கு வால். கங்காருக்களால் தங்கள் கால்களைக் கொண்டு நடக்கவும் முடியாது, முன்பே குறிப்பிட்டது போல் பின்னோக்கி நகரவும் இயலாது. ஆனால் நன்றாக நீந்தத்தெரியும். ஏதாவது ஆபத்து வரும்போது பக்கத்தில் ஏதாவது நீர்நிலை இருந்தால் அதற்குள் இறங்கி நீந்தித் தப்பித்துவிடும். கங்காருக்களில் மிகவும் பெரிய வகை சிவப்பு கங்காரு இனம்தான். கங்காரு இனத்தில் மட்டுமல்ல, உலகிலுள்ள மார்சுபியல் வகை விலங்குகளிலேயே பெரியதும் இதுதான். இது நின்றால் ஆறடி இருக்கும். கிட்டத்தட்ட மனிதர்களின் உயரம். எடை 85 கிலோ இருக்கும். வாலிலிருந்து மூக்கு வரை 10 அடி நீளமிருக்கும். சிவப்புக் கங்காரு இனத்தில் பெரியதும் பலமானதும் ஆளுமையுடையதும் ஆண்தான்.


உணவு முறை
கங்காருக்கள் இரவு விலங்குகள் (Nocturnal animals). இரவுநேரத்தில்தான் சுறுசுறுப்பாக இயங்கும். உணவு தேடிப்போகும். சில வகைகள் அதிகாலை நேரத்திலும், பின்மதியத்திலும் உணவு உண்ணப்போகும். பகல் முழுவதும் ஏதேனும் மரநிழலிலோ, பாறையிடுக்குகளிலோ, அழகாக பக்கவாட்டில் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும். கூட்டமாகவே இருக்கும். கங்காரு பெரும்பாலும் புல்தான் தின்னும். இலை குழைகள், காய்ந்த புற்கள் என்பவைதான் இவற்றின் உணவு. சிலபோது காட்டுப் பாதைகளில் செல்லும் மணிதர்கள் உண்டுவிட்டு எரியும் உணவு மீதிகளையும் உண்ணும். மற்ற கால்நடைகளைப் போலவே கங்காருக்களுக்கும் இரைப்பை அறைகள் உண்டு. அதனால் இவையும் இரவில் உண்ட உணவை பகலில் அசைபோட்டு விழுங்கும். மிகவும் குறைந்த அளவே தண்ணீர் குடிக்கும். தண்ணீர் இல்லாமலேயே பல மாதங்கள் அவற்றால் உயிர்வாழ முடியும்.

கங்காருச் சண்டை

கங்காருவுக்கு விழைச்சல் நிலங்களைப் பாதுகாக்க வளர்க்கும் டிங்கோ நாய்கள், வேட்டை நாய்கள், நரிகள், காட்டு நாய்கள், பூனைகள் மற்றும் மனிதர்கள்தான் எதிரிகள். பொதுவாக இவை மனிதர்களை தாக்காது என்றாலும் அவர்களால் ஏதேனும் ஆபத்தின் அறிகுறியைக் கண்டால் தாக்கக் கூடியவை. கங்காருக்கள் குத்துச்சண்டையில் தேர்ந்தவை. எதிரியை சமாளிக்கவேண்டிய நெருக்கடியில் தங்கள் முன்னங்கால்களால் நன்றாக குத்து விடும். அல்லது வாலை நிலத்தில் ஊன்றி நின்று பின்னங்கால்கள் இரண்டையும் தூக்கி பலமாக அடிவயிற்றில் உதைவிடும். எதிரிகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் தங்கள் ஆளுமையை நிரூபிக்கவும், பெண் கங்காருக்களை கவரவும் பலம் வாய்ந்த ஆண் கங்காருக்கள் தங்களுக்குள் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடுவதுண்டு. தாய்க்கங்காரு தனது குட்டிகளுக்கும் சண்டைசெய்யப் பழக்கிக்கொடுக்கும். ஏனெனில் இதுதான் அவற்றுக்குரிய ஒரே தற்காப்புப் பொரிமுறை.

கங்காருகளின் பிறப்பும் வளர்ப்பும்

கங்காரு வருடதிற்க்கு ஒரு குட்டியே போடும். அதனுடைய கர்ப்பகாலம் வெறும் 33 நாட்கள்தான். அதனால் குட்டி பிறக்கும்போது இரண்டு கிராம் எடையுடன் ஒரு அங்குல நீளத்தில் ஒரு சிறு விதையின் அளவுதான் இருக்கும். கண்காது கால் உடல் என்று எதுவும் முழுமையாக உருவாகாமல் சதைக் கட்டியாக ஒரு புழுவைப் போல இருக்கும். மனிதக் கருவோடு ஒப்பிடுகையில் இது ஏழுவார சிசுவுக்கு சமம். 23 வாரங்களுக்குக் குறைந்த காலத்தில் குறைப்பிரசவமாகும் மனித சிசுக்கள் உயிர்பிழைப்பது அரிது. ஆனால் கங்காருவின் குட்டிகள் பிறப்பதே இந்நிலையில்தான். பிறந்ததும் அங்கு ஓர் அற்புதம் நிகழ்கின்றது. குட்டி கங்காரு பிறந்ததும் அதற்கு அல்லா ஏற்படுத்தி வைத்திருக்கும் உள்ளுணர்வு காரணமாக உந்தப்பட்டு தன் தாயின் வயிற்றில் இருக்கும் பையைத் தேடிக்கொண்டு மெது மெதுவாக நகர ஆரம்பிக்கின்றது. ஏனென்றால் அதற்குத் தெரியும் தனக்கான உணவும் பாதுகாப்பும் அங்குதான் உள்ளது என்று.

தாய்க்கங்காருவால் அந்தக் குட்டியைத் தொடக்கூட இயலாத அளவுக்கு குட்டி மிகச்சிறியதாக இருக்கும். ஆனால் தாய் என்ன செய்யுமென்றால், குட்டி, பைக்கு போகும் பாதையை நாவால் நக்கி நக்கி சுத்தம் செய்து கொடுக்கும். குட்டியும் தன்னுடைய முன்னங்கால் விரல்களால் தாயின் வயிற்று ரோமத்தைப் பற்றிக்கொண்டே முன்னோக்கி நகர்ந்து நகர்ந்து நான்கு அல்லது ஐந்து நிமிடத்தில் பைக்குப் போய்விடும். அந்தப் பையும் ஒரு மிகப் பெரும் அதிசயம்தான். அதற்குள் நான்கு பால்காம்புகள் இருக்கும். அதில் ஒன்றை வாயால் பிடித்ததென்றால் அவ்வளவுதான். உடனே அந்த பால்காம்பு வீங்கி குட்டியின் வாயைவிட்டு வெளியில் வராதபடி உள்ளே நன்றாகப் பொருந்திவிடும். அப்புறமென்ன, தாய் எத்தனை குதி குதித்தாலும் தாவினாலும் குட்டி பத்திரமாக பைக்குள் இருக்கும். விழவே விழாது. இன்னுமொரு வியப்பான விஷயம் என்னவென்றால் அந்தக் குட்டிக்கு பாலை உறிஞ்சிக் குடிக்கவும் தெரியாது. தசைகள் சுருங்கிவிரிவது மூலமாகதான் பால் குட்டிக்குப் போய்ச்சேரும். சுப்ஹானல்லாஹ்!

பைக்குள் வளரும் குட்டி

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் குட்டிக் கங்காரு அதே நிலையில் பைக்குள்தான் இருக்கும். அதற்குள் அது முழுவளர்ச்சி பெற்றுவிடும். எவ்வளவு நேரந்தான் உள்ளேயே இருப்பது. அலுத்துப்போகுமே எனவே அவ்வப்போது மெதுவாக தலையை மட்டும் பைக்கு வெளியே நீட்டி ஜன்னல் வழியாக வேடிக்கை பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்கும். கங்காருக்குட்டிகள் பார்க்க அவ்வளவு அழகு. அதிலும் தாயின் வயிற்றுப்பைக்குள் அமர்ந்தபடி தலையை மட்டும் வெளியில் நீட்டி உலகமறியாத குழந்தை போல அப்பாவித்தனமாக விழிப்பது அவ்வளவு அழகு. பைக்கு வெளியே எட்டிப் பார்த்தாலும் பையைவிட்டு முழுவதுமாய் வெளியில் வர பயமிருக்கும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும் வெளியில் வரும். வந்தாலும் தாய் உடனேயே இருக்கும். சின்னதாய் ஏதும் சப்தம் வித்தியாசமாகக் கேட்டாலும் உடனே பைக்குள் ஒடி ஒளிந்துகொள்ளும். இன்னும் கொஞ்சம் வளர்ந்ததும், பயமெல்லாம் போய்விடும். தாயை விட்டு கொஞ்சதூரம் விலகிப் போய் மேய ஆரம்பித்துவிடும்.  முன்போல் பயமிருக்காது. ஆனால் தாய் எப்போதும் கவனமாகவே இருக்கும். ஆபத்து வரும் அறிகுறி அறிந்தால், உடனே தரையில் காலைத் தட்டும். சட்டென்று குட்டி அம்மாவின் பைக்குள் ஏறிக்கொள்ள, அம்மா அந்த இடத்தை விட்டு ஓட ஆரம்பித்துவிடும். கங்காருக்கள் பெரிய அளவில் சத்தமெழுப்பாது. சின்னதாய் செருமல்கள், மெல்லிய குரைப்பொலி, சன்னமான பக் பக், க்ளக் க்ளக் போன்ற ஒலிகளைத்தான் வெளிப்படுத்தும். பெரும்பாலும் தரையில் கால்களைத் தட்டி ஒலியெழுப்பும். குட்டியை அழைக்கவும், ஆபத்தின்போது எச்சரிக்கை  விடுக்கவும் தரையில் கால்களைத் தட்டி ஒலியெழுப்பும்.

கங்காரு வேட்டை

கங்காரு இனம் மிக வேகமாக பெருகி வருவதால் அவுஸ்த்ரேலிய மக்களின் பயிர்ச்செய்கைகளுக்கு இது பெரிதும் ஆபத்தாக உள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்து வருகிறது. கங்காரு ஆஸ்திரேலியாவின் முத்திரையில் இடம்பெறுமளவுக்கு அங்கீகாரம் பெற்றிருந்தாலும் பல இடங்களில் அது ஒரு பயிரழிக்கும் பிராணியாகத்தான் (pest) கருதப்படுகிறது. எனவே இவற்றின் எண்ணிக்கை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு கங்காருக்களை வேட்டையாட அனுமதியளித்துள்ளது. எனவே இறைச்சிக்காகவும் அவற்றின் தோழுக்காகவும் கங்காருகள் வேட்டையாடப்படுகின்றன. கங்காருவை அவுஸ்த்ரேலியாவிலிருந்து உயிரோடு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். உயிரியல் பூங்காக்கள் விதிவிலக்கு. ஆனால் அவுஸ்த்ரேலியாவிலிருந்து கிட்டத்தட்ட 55 நாடுகளுக்கு உணவுக்காக கங்காரு இறைச்சி ஏற்றுமதியாகிறது. ரோமங்களுக்காகவும், தோல்பொருள் தயாரிக்கவும் அதன் தோலும் கூட ஏற்றுமதியாகிறது. இதனுடைய தோல் மிருதுவாக இருப்பதால் காலணிகள், முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் தயாரிக்க மிகவும் ஏற்றதாம்.ஆனாலும் பல விலங்குநல அமைப்புகள் கங்காருவைக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஆய்வரங்கங்கள் நடத்தி, அறிக்கைகள் சமர்ப்பித்தபடிதான் இருக்கின்றன.

ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...