"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 January 2012

இஸ்லாமிய நூலகங்களும் அவற்றின் வீழ்ச்சியும்


இஸ்லாமிய வரலாற்றில் மாத்திரமன்றி உலக வரலாற்றிலேயே அறிவியல் வீரியம் பெற்றமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது நூலகங்களே! அன்றைய அறிஞர்களால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான நூற்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அன்றைய ஆட்சியார்களால் முக்கியத்துவம் கொடுத்து ஒன்று சேர்க்கப்பட்டன. அவ்வகையில் இஸ்லாமிய உலகெங்கும் பல நூலகங்கள் தோற்றம்பெற்றன.

ஆரம்பமாகப் பள்ளிவாயில்களைத் தளமாகக்கொண்டு அல்குர்ஆன், ஹதீஸ் தொடர்பான கலை நூல்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் பள்ளிவாயில்களுடன் இணைந்தாற்போல் நூலகங்கள் உருவாகின. உதாரணமாக மர்வ் நகரில் ஜாமிஉல் கபீர் பள்ளிவாயிலில் இரண்டு நூலகங்கள் காணப்பட்டன. அதேபோல் டமஸ்கஸின் மஸ்ஜிதுல் உமவி, கெய்ரோவின் ஜாமிஉல் அஸ்ஹர், பக்தாதின் ஜாமிஉல் மன்ஸுர் மற்றும் ஜாமிஉல் கமரிய்யா, மர்வு நகரில் ஜாமிஉல் மஸ்ஜித் அல்ஜாமிஉ, டியுனிஸியாவின் ஜாமிஉஸ் ஸைதூனா, மக்கா, மதீனா போன்ற பள்ளிவாயில்களுடன் பெரும் நூலகங்கள் இருந்து வந்துள்ளன.

6ம், 7ம் நூற்றாண்டுகளில் கிரேக்க மொழியினாளான நூல்கள் அரபுக்கு மொழிபெயர்க்கப்பட்டு பல  விஞ்ஞான, மருத்துவ, இலக்கிய நூல்கள் எழுத்துவடிவம் பெற்று அவற்றுக்கென நிறுவனங்கள் நிறுவி சேகரிக்கப்பட்டன. 11ம் நூற்றாண்டில் பக்தாத் சுமார் 100 நூல்நிலையங்களைக் கொண்டிருந்தது.கி.பி. 1249களில் அபூஸகரிய்யா என்பவர் டியூனிஸியாவில் சுமார் 36000 வல்யூம்களைக்கொண்ட நூலகமொன்றை நிறுவினார். கி.பி. 1300இல் ஸன்ஆவிலிருந்த மாலிக் தாவூதின் நூலகம் ஒரு இலட்சம் வல்யூம் நூல்களை உள்ளடக்கியிருந்தது.

“For five centuries, from 700 tp 1200, Islam led the world in power, order, and extent of government; in refinement of manners; in standards of living; in human legislation and religious tolerance; in literature, scholarships, science, medicines, and philosophy.” By: Dr.Bader Malek,(Aljumuah issue   No:10)


ஸிரியாவில் காணப்பட்ட ஒரு நூலகத்தில் சகல கலைகளையும் தழுவிய மூன்று மில்லியன் நூல்களும் 50,000 அல்குர்ஆன் பிரதிகளும் 80,000 தப்ஸீர் நூல்களும் இருந்ததாக வரலாற்றாசிரியர் இப்னு புராத் குறிப்பிடுகின்றார். கோர்டோவா நகரில் 70 நூலகங்கள் காணப்பட்டன. அவற்றுல் 5 இலட்சம் கையைழுத்துப்பிரதிகள் பாதுகாக்கப்பட்டடுள்ளன. ஸமூர் பின் அர்தசீர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நூலகம் 10,000 முதல் 14,000 வரையான வல்யூம் நூல்களை உள்ளடக்கியிருந்தது.

இஸ்லாமிய கற்கை சார்ந்ததும் அதுதவிர்ந்ததுமான பல்வேறு துறைசார் வௌ;வேறு மொழிகளிளாலான பெருவாரியான நூல்கள் உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டு பிரதிபண்ணப்பட்டு பாதுகாக்கப்பட்டன. விஞ்ஞானம், தத்துவம், வரலாறு, சமஸ்கிருதம், இந்துக்காவியம், பிரஞ்சுக் காதல் கவிதைகள் என பல்வேறு நூல்கள் அன்றைய முஸ்லிம்களது நூலகங்களில் காணப்பட்டன. அப்பாஸியக் கலீபாக்களில் பக்தாத், புகாரா, டமஸ்கஸ், கெய்ரோ, கோர்டோவா, கிரனடா போன்ற நகரங்கள் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் தூண்டுகோளாய்க் காணப்பட்டன.

அப்பாஸியக் கலீபாக்களால் பக்தாதில் நிறுவப்பட்ட பைதுல் ஹிக்மா முதலாவது நூலகமாகவும் இரண்டாவதாக பாதிமிகளால் கெய்ரோவில் நிறுவப்பட்ட பைதுல் இல்மும் மூன்றாவதாக உமையாக்களால் ஸ்பைனில் நிறுவப்பட்ட கோர்டோவாவும் இஸ்லாமிய உலகின் சிறப்புமிகு முப்பெரும் நூலகங்களாகத் திகழ்கின்றன.

இவ்வாறு உலகின் நாலா புறங்களிலும் இஸ்லாம் பரவியதனால் அங்கு பள்ளிவாயில்கள் கட்டப்பட்டன. பள்ளிவாயில்களை மையமாக வைத்து பலநூறு நூலகங்களும் பல பகுதிகளிலும் நிர்மானிக்கப்பட்டன. முஸ்லிம் அறிஞர்களால் நடாத்தப்பட்ட பாட வகுப்புக்களில் பாடம் கற்கவும் இந்நூல் நிலையங்களிலிருந்து அறிவுபெறவும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கல்விபெறுவதற்காய் பலரும் வருகைதந்தனர். ஸ்டென்லி லேன்பூஸ் என்ற அறிஞர் அவரது Moors in Spain என்ற நூலில் இதுபற்றி பின்வறுமாறு குறிப்பிடுகின்றார். முஸ்லிம்களின் நகரங்களில் மாத்திரம் பெருக்கெடுத்தோடிய கல்விச் சுனையிலிருந்து அறிவு நீர் பருகுவதற்கு பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் படையெடுத்தனர் இதேகருத்தை பிரய்வோல்டர், கொஸ்தாத்லேபண்ட், சைபர், ஜோன்போல் சார்டர் போன்ற அறிஞர்களும் உறுதியாக ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் அன்றைய முஸ்லிம்கள்தான் என்ற உண்மையை இன்றைய மேற்குலகின் சில பேரறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும்கூட ஏற்றுக்கொள்கின்றனர்.

நூலகங்களின் அழிவும் அறிவுத்துறையின் வீழ்ச்சியும்.

உலக வரலாற்றில் அறிவியல் வீரியம் பெற அச்சாணியாயமைந்த இஸ்லாமிய நூலகங்களின் பேரழிவுக்குப் பல்வேறு நிகழ்வுகள் காரணமாயமைந்தன. இஸ்லாமிய நாடுகளுக்குள் நாடுகாண் பயணங்கள் என்ற பெயரில் மேற்கு நுழைய ஆரம்பித்தது. அதன் பின்பு முஸ்லிம்களிடம் கொளித்துக்காணப்பட்ட வளங்களைச் சூறையாடவும் நிலங்களை ஆக்கிரமிக்கவும் யுத்தங்களைத் தொடுத்தனர். இக்காலப்பகுதியில் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையின்மையாலும் அசிரத்தையாலும் இஸ்லாத்தின் எதிரிகள் யுத்தங்களில் வெற்றியீட்டிவந்தனர். முஸ்லிம் இஸ்பைனின் வீழ்ச்சிக்கும் இதுவே முழு முதற்காரணமாக நோக்கப்படுகின்றது.

அதன் பின்னர் ஆக்கிரமிப்புக்குள்ளான பகுதிகளில் முஸ்லிம்கள் கட்டிக்காத்து வந்த அறிவியல் பொக்கிஷங்களான பல்கலைக்கழகங்கள், நூல்நிலையங்கள், பள்ளிவாயில்கள், மாட மாளிகைகள் என்பன தகர்த்தெறியப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டன. அறிவை விருத்தி செய்யும் மத்தியஸ்தளங்களாயிருந்த எத்தனையோ நூலகங்கள் போர்வீரர்களால் அழிக்கப்பட்டன. இச்செயல் முஸ்லிம் உலகத்துக்கு மட்டுமல்லது முழு உலகுக்குமான பாரிய இழப்பாயமைந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

1175 இல் எகிப்தை ஸலடின் மன்னன் ஆக்கிரமித்தபோது அங்கு காணப்பட்ட பெருமதிவாய்ந்த நூல்கள் தமக்கு மத்தியில் பிரித்தெடுக்கப்பட்டன. ஸ்பெய்ன், ஸிரியா, வட ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்த பல நூலகங்கள் சிலுவைப்போர் வீரர்களால் அழிவுக்குள்ளாக்கப்பட்டன. இதனை ஷேரா இவ்வாறு குறிப்பிடுகின்றார். கிறிஸ்தவர்கள் சிலுவைப்போராட்டங்களின் போது இஸ்லாமிய நூலகங்களைப் பண்பாடற்ற முறையில் அழித்தொழித்தனர். இதனால் இஸ்லாமிய உலகம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஸபூர் பின் அர்த்தஷீர் என்பவரால் பக்தாதில் நிறுவப்பட்ட பெரிய நூலகம் தீ விபத்தினால் அழிவுக்குள்ளாகியது. கி.பி. 1257இல் ஹிஜாஸின் ஒரு நூலகம் மின்னல் தாக்கி தீக்கிறையானது.

சிரியாவிலிருந்த நூலகம் முதலாவது சிலுவைப் போரின்போது தீ மூட்டப்பட்டு அழிவுக்குள்ளாகியது. அவ்வாறே கி.பி. 1218-1220 காலப்பகுதியில் மத்தியாசியாவிலிருந்து படையெடுத்துவந்த மங்கோலியத் தாத்தாரியப் படைகள் புகாரா, ஸமர்கந்து, மர்வா போன்ற நகரங்களை அழித்தொழித்ததோடு அங்கிருந்த அறிஞர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் என பலரையும் கொன்று குவித்தன. மீண்டும் 1258 இல் படையெடுத்து பக்தாதையும் சேதப்படுத்தின. மீண்டும் 1336 இல் படையெடுத்த மங்கோலியப் படை பைதுல் ஹிக்மாவையும் அழித்தது. தாருல் இல்ம் நிறுவப்பட்டு ஆறு தசாப்தங்களின் பின்பு துருக்கி இராணுவத்தால் அது அழிக்கப்பட்டது. ஏராளமான கையழுத்துப்பிரதிலிகள் தீயிட்டுக் கரிக்கப்பட்டன. இப்படைவீரர்கள் பெருமதிவாய்ந்த புத்தக அட்டைகளைக்கொண்டு தமது பாதணிகளை அமைத்துக்கொண்டார்hகள். அந்தளவு பண்பாடற்ற முறையில் இஸ்லாமிய நூலகங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டன.

ஸ்பெய்ன் அரசு பிற்பட்ட கலங்களில் சிறுசிறு சிற்றரசுகளாகப் பிரிந்தமையால் கோர்டோவாவில் மாத்திரம் காணப்பட்ட சுமார் 400000 600000 வரையான நூல்கள் சிதறிச் சென்றன. அதன்பின்னர் காலவோட்டத்தில் இஸ்லாமிய நாடுகளைநோக்கி மேற்குலகம்  கட்டவிழ்த்துவிட்ட சிந்தனைப்படையெடுப்பால் பல இஸ்லாமியப் புத்திஜீவிகள் மூளைச்சலவைசெய்யப்பட்டு மேற்குசார்புடையோராயினர். அவ்வாறே அவர்கள் மேற்கொண்ட கீழைத்தேய ஆய்வுகளினூடாக முஸ்லிம் அறிவுக்கருவூலங்கள் மேற்கு நோக்கி நகர்த்தப்பட்டன. இன்றும் நகர்த்தப்பட்டு வருகின்றன. அதில் பேர்லின் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தேசிய நூலகம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

ஜேர்மன் தேசிய நூலகம் : இஸ்லாமிய அறிவியல் பொக்கிஷங்கள் மேற்குநோக்கி நகர்த்தப்பட்டமைக்கு ஓர் உதாரணம்.
ஜேர்மன் தேசிய நூலகம் பேர்லின் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்குலகின் அறிவியல் எழுச்சிக்கும் பல கீழைத்தேய ஆய்வாளர்களது ஆய்வாறாய்ச்சிகளுக்கும் பங்காற்றிய நூலகங்களில் ஜேர்மன் தேசிய நூலகமும் பிரதானமான ஒன்றாகும். இது உலகளவில் உள்ள பெரும் நூலகங்களில் ஐந்நாவது பெரிய நூலகமாகக் கருதப்படுகின்றது. டமஸ்கஸின் ழாஹிரிய்யா நூலகம், துருக்கியின் இஸ்தான்பூல் நூலகம், அமெரிக்காவின் பிரிஸ்டன் பல்கலைக்கழக நூலகம் அத்தோடு கெய்ரோ நூலகம் என்பவற்றுக்கு அடுத்தபடியாக இந்நூலகம் காணப்படுகின்றது. இதனை நிர்மாணிப்பதற்காக 200 மில்லியன் ஜேர்மன் மார்க் செலவாகியுள்ளது. அத்தோடு இந்நூலகத்தில் சுமார் மூன்றரை மில்லியன் புத்தகங்கள் காணப்படுகின்றன. அவற்றுல் அதிகமான கையெழுத்துப்பிரதிகள் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் 9000 அரேபியக் கையெழுத்துப் பிரதிகளும் 2500 பாரசீகக் கையெழுத்துப் பிரதிகளும் 3500 துருக்கிய கையெழுத்துப் பிரதிகளும் 60 உருதுக் கையெழுத்துப் பிரதிகளும் இன்னும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் கையெழுத்துப் பிரதிகளும் அடங்குகின்றன. இவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்டவை தவிர இன்னும் பட்டியலிடப்படாத 14000 கையெழுத்துப் பிரதிகள் இங்கு காணப்படுகின்றன.

பொதுவாக இங்கு காணப்படுகின்ற பெரும்பான்மையான அரபுக் கையெழுத்துப்பிரதிகளனைத்தும் அல்குர்ஆன் பிரதிகளாகவும் தப்ஸீர் கலை, ஹதீஸ்கலை, தர்க்கக்கலை, சூபித்துவம், கவிதை, அரபு இலக்கண இலக்கியங்கள், வரலாறு போன்ற பல்வேறு துறைசார் பிரதிகளாகக் காணப்படுகின்றன.

அச்சு இந்திரங்களில்லாத காலத்தில் கைகளால் எழுதப்பட்டவையே இந்த கையெழுத்துப் பிரதிகள். 8ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அரபு நூல்கள் ஓலைகளிலும் தோல்களிலுமே எழுதிப் பாதுகாக்கப்பட்டன. கி.பி.800ம் ஆண்டில் காகித உற்பத்தி சீனாவிலிருந்து பக்தாதுக்கு வந்ததும் இஸ்லாமிய உலகின் அறிவு, ஆராய்ச்சிகள் ஏடுகளிலும் ஓலைகளிலும் கையெழுத்துக்களாக வடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.எனவேதான் கையெழுத்துப்பிரதிகளுக்குள்ள பெருமதி இன்னும் குறையாமலுள்ளது. புத்தகம் எவ்வளவுதான் கணணி மயப்படுத்தபப்பட்டாலும் புத்தகங்களுக்குள்ள பெருமதி குறைவதில்லை. அதேபோன்று நவீன அச்சு இயந்திரங்களால் எவ்வளவுதான் புத்தகங்கள் அச்சிடப்பட்டாலும் கையால் எழுதப்பட்ட மூலப்பிரதிகளுக்கு என்றும் மௌசு குறைவதுமில்லை. இக்கையெழுத்துப் பிரதிகள் பல்வேறு ஆய்வுகளுக்கும் சிறந்த வலிமையுள்ள மூலாதாரங்களாத் திகழ்கின்றன. இதனால்தான் அவை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

முஸ்லிம் நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அன்பளிப்புகள் மூலமாகவும் முஸ்லிம்களிடமிருந்து விலைக்கு வாங்கியதனூடாகவும் இன்னும் பல வழிகளிலும் கையெழுத்துப்பிரதிகள் இன்நூலத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. இந்நூலகத்தை உருவாக்குவதற்காக புரூஸியா (ஜேர்மன்) மன்னன் பர்தரீக் வில்லியம் (1620 1688) அரேபிய இஸ்லாமியக் கையெழுத்துப்பிரதிகளைச் சேகரிப்பதற்காக பெருமளவில் முயற்சிகளை எடுத்துள்ளார். அதற்காக சிறந்த கீழைத்தேய ஆய்வாளர்களான ரிச்சட், ஹென்றிஸ் ஆகியோரை கையெழுத்துப்பிரதிகளைத் திரட்டுவதற்காகவென மன்னர் நியமித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

அதன் பின்னர் அதிகளவிலான கையெழுத்துப்பிரதிகள் கி.பி. 19ம் நூற்றாண்டளவிலேயே அங்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ஆரம்பம் முதலே புரூஸியாவுக்கும் (ஜேர்மன்) உஸ்மானியப் பேரரசுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் பேணப்பட்டு வந்தமையினாலும் இரு உலகப்போர்களிலும் ஒரே கூட்டணியாக ஜேர்மனியும் துருக்கியும் இணைந்திருந்ததாலும் அரேபிய துருக்கிய பாரசீகக் கையெழுத்துப்பிரதிகள் இந்நூலகத்தைநோக்கிச் செல்லப் பிரதாண காரணமாயமைந்தன.

புரூஸிய நாட்டு மன்னன டமஸ்கஸ் நகரில் கன்ஸல் அல் புரூஸி என்பவரை இக்கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிப்பதற்காகவே நியமித்திருந்தார். இவர் மூலமாக 60 கையெழுத்துப் பிரதிகள் இந்நூலகத்தில் இருடைய முயற்சியினால் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல இஸ்லாமிய நகரங்களில் ஆற்களை நியமித்து பிரதிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பிரதிகள் சேமிப்பதற்காகவே பல நாடுகாண் பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. எட்வர்ட் என்ற நாடுகாண் பயணி யெமனுக்கு ஒரு குழுவை அனுப்பி அங்கிரிருந்து 250 கையெழுத்துப் பிரதிகளை விலைக்கு வாங்கி ஜேர்மன் மன்னனிடம் கொடுத்ததாகவும் அவை பேர்லின் நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும்; நூலக வரலாறு கூறுகின்றது. அதேபோன்று கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய ஸப்ரன்ஜர் எனும் நாடுகாண் பயணி 2000 இற்கும் அதிகமான கையெழுத்துப்பிரதிகளைத் திரட்டியுள்ளார். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியத் தீபகற்பத்தின் தென்பகுதியில் மொழியியல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட லான்ட் ப்ரிஜ் எனும் நிருவனமும் அதிகளவிலான பிரதிகளைத் திரட்டியது.


முன்பு வீடுகளின் வரவேற்பறைச் சுவர்கள் முழுதும் புத்தக இராக்கைகளால் மறைந்திருந்தன. ஆனால் இன்று சமையலறையில் வைக்கவேண்டிய பீங்கான், கத்தி, கரண்டி, கோப்பைகளையெல்லாம் கெபினட்டில் பூட்டி முன் ஹோலில் வைக்கிறார்கள்.

கீழைத்தேய மேலைத்தேய இஸ்லாமிய நாடுகளுடன் ஐரோப்பா மேற்கொண்டு வந்த வனிக நடவடிக்கைகளும் இந்ந ஆவனங்கள் ஐரோப்பாவுக்குக் கடத்தப்படக் காரணமாயமைந்தன. ஐரோப்பிய வர்த்தகர்கள் முஸ்லிம் நாடுகளில் காணப்பட்ட அறிவியல் வளங்களையும் பெறுமதி வாய்ந்த பொக்கிஷங்களையும் தாராளமாகத் திரட்டியுள்ளனர். பிரித்தானியர் தமது காலணித்துவ செயற்பாடுகளுக்காக நிருவிய கிழக்கிந்தியக் கம்பனி இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

அரேபியர் பற்றியும் அவர்களது வரலாற்று நாகரீகங்கள் பற்றியும் அறிவதில் பேர்லின் பல்கலைக்கழகத்தில் காணப்படும் இக்கையெழுத்துப்பிரதிகள் பெரும் பங்காற்றியுள்ளன. அரேபியரின் பண்பாடு, அறிவு பற்றிய வரலாறு எனும் தலைப்பில் ஐந்து பாகங்களைக்கொண்ட நூலையும் அரேபிய இலக்கிய வரலறு என்ற நூலையும் எழுதிய பிரபல கீழைத்தேய ஆய்வாளர் கார்ல் புரூக்ல்மன் தனது இவ்வாய்வுகளை இந்நூலகத்திலிருந்துதான் ஆரம்பித்தார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் இக்கையெழுத்துப் பிரதிகளைப் புத்தகங்களாக வெளியிட ஆரம்பித்த ஜேர்மனிய கீழைத்தேயவாதிகள் இதுவரைக்கும் 20 வீதமான கையெழுத்துப்பிரதிகளையே வெளியிட்டுள்ளனர். அதிலும் இவர்கள் இஸ்லாமிய சிந்தனைகள் குறித்து வெளியிடும் புத்தகங்கள் பிழையான கருத்துக்களைக் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. ஏனெனில் இஸ்லாமிய நாகரீகம் வீழ்ச்சியடைந்து முஸ்லிம்கள் பலவீனமுற்றிருந்த காலத்திலிருந்த இஸ்லாத்துக்கு முற்றிலும் மாறான சிந்தனைகளை விதைக்கும் கருத்துக்களைக் கொண்ட கையெழுத்துப்பரதிகளையே இவர்கள் தேடித் தேடி நூலுருப்படுத்தி வெளியிடுகின்றனர்.

எம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட எமது அறிவியல் பொக்கிஷங்களை இன்று மேற்கு எம்மையே அழிப்பதற்காகப் பயன்படுத்தப்பகின்றது. அறிவியலை மேற்குலகம் முஸ்லிம்களிடமிருந்துதான் பெற்றுக்கொண்டன  என்பதை மறுக்கமுடியாது. மனித நாகரிகத்துக்கும் அறிவியல் எழுச்;சிக்கும் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை ஐரோப்பிய எழுத்தாளர் ஜே.பி.ட்ரெண்ட் தனது ஸ்பெய்னும் போர்த்துக்களும் என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

ஐரோப்பாவில் லௌகீகத்துறையிலும் ஆன்மித்துறையிலும் அறியாமை இருள் கவ்வியிருந்தபோது ஸ்பெயன் முஸ்லிம்கள் சிறப்புற்ற நாகரிகத்தையும் ஸ்திரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தனர். கலை, விஞ்ஞானம், தத்துவம், கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம்கள் பெரும் பங்கெடுத்தனர். அவர்களின் கருத்துக்களின் தாக்கம் 13;ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தோமஸ் அக்கியுனாஸ், தாந்தேபோன்ற தத்துவஞானிகளின் சிந்தனைகளையும் தாக்கத் தவரவில்லை என்கிறார்.

கி.பி. 750 முதல் 1100 வரையான கால அறிவுலகம் முஸ்லிம்களின் கையில் இருந்தது. அச்சந்தர்ப்பத்தில்தான் ஐரோப்பா இருண்ட கண்டம் எனப்பட்டது. அம்மக்களிடம் கல்வியறிவுகள் காணப்படவில்லை. நாகரிகமான வாழ்க்கை இருக்கவில்லை. அஞ்ஞானம் அவர்களை ஆக்கிரமித்திருந்தது. எழுத்து, வாசிப்பு என்பன விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மதகுர்மார்களிடம் மட்டுமே காணப்பட்டது. அது மட்டுமன்றி மத நிம்பிக்iiகையற்று வர்க்க பேதங்களோடு வாழ்ந்தனர். வலியோன் எளியோனை அடக்கி அடிமை முறை உச்சத்திலிருந்தது. மனித எரிமைகள் மதிக்கப்படவில்லை. Victor Robinson அன்றைய ஐரோப்பாவின் கல்வித்தரத்தைப் பற்றிக் கூறுகையில் ஐரோப்பியப் பிரபுக்களுக்கு கையெழுத்துக்கூடப் போடத்தெரியாதிருந்த காலத்pல் ஸ்பெய்ன் குர்துபாவின் சிறார்கள் பாடசாலைசென்று வந்தனர் என்கிறார்.

The Making of Humanity என்ற நூலில் Sir ரொபட் ப்ரிபோல்ட் குறிப்பிடுவது இதற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. அவர் குறிப்பிடுவதாவது அரேபிய முஸ்லிம்களின் செல்வாக்கினாலேயே உண்மையான மறுமலர்ச்சிக்கு வழிகோலிய கலாசாரப் புரட்சி ஏற்பட்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்குத் தொட்டிலாய் அமைந்தது ஸ்பெய்னின் முஸ்லிம்களேயன்றி இத்தாலி அல்ல என்கிறார்.

எனவே முஸ்லிம்கள் வாயிலாக ஐரோப்பாவில் அறிவியல் வளர்ச்சி முளைவிட்டுப்பரம்பியதால் அங்கு தோன்றிய அறிவியல் கலைகள் முஸ்லிம்களின் உரிமைகள். அவற்றை இஸ்லாமிய மயப்படுத்துவது முஸ்லிம்களின் தலையாய கடமை. இதனை முஸாபிர் என்ற கவிதையில் அல்லாமா இக்பால் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுக்கூறுகின்றார்.

அறேபியர்கள் ஐரோப்பாவிலே தமது
இறக்கைகளை விரித்தபோது
அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒரு புது
அதிதிவாரம் இடப்பட்டது.
பாலைவனத்து மைந்தர்கள்
விதைத்த விதையின் மரத்தை
ஐரோப்பயிர்கள் வேரருத்துவிட்டனர்.
அதனை இஸ்லாமிய மயப்படுத்துவோர் எத்துனை பேறு பெற்றவர்கள்?
இந்த தேவதை எமது மூதாதையர்
குவளையிலிருந்து வெளியேறியதாகும்
அதனை மீண்டும் கைப்பற்றுங்கள்
ஏனெனில், அது எங்களது வலையிரிருந்து புறப்பட்டது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

இஸ்லாமிய வரலாற்றில் மாத்திரமன்றி உலக வரலாற்றிலேயே அறிவியல் வீரியம் பெற்றமைக்கு முக்கிய காரணமாக அமைந்தது நூலகங்களே! அன்றைய அறிஞர்களால் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான நூற்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் அன்றைய ஆட்சியார்களால் முக்கியத்துவம் கொடுத்து ஒன்று சேர்க்கப்பட்டன. அவ்வகையில் இஸ்லாமிய உலகெங்கும் பல நூலகங்கள் தோற்றம்பெற்றன.

ஆரம்பமாகப் பள்ளிவாயில்களைத் தளமாகக்கொண்டு அல்குர்ஆன், ஹதீஸ் தொடர்பான கலை நூல்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் பள்ளிவாயில்களுடன் இணைந்தாற்போல் நூலகங்கள் உருவாகின. உதாரணமாக மர்வ் நகரில் ஜாமிஉல் கபீர் பள்ளிவாயிலில் இரண்டு நூலகங்கள் காணப்பட்டன. அதேபோல் டமஸ்கஸின் மஸ்ஜிதுல் உமவி, கெய்ரோவின் ஜாமிஉல் அஸ்ஹர், பக்தாதின் ஜாமிஉல் மன்ஸுர் மற்றும் ஜாமிஉல் கமரிய்யா, மர்வு நகரில் ஜாமிஉல் மஸ்ஜித் அல்ஜாமிஉ, டியுனிஸியாவின் ஜாமிஉஸ் ஸைதூனா, மக்கா, மதீனா போன்ற பள்ளிவாயில்களுடன் பெரும் நூலகங்கள் இருந்து வந்துள்ளன.

6ம், 7ம் நூற்றாண்டுகளில் கிரேக்க மொழியினாளான நூல்கள் அரபுக்கு மொழிபெயர்க்கப்பட்டு பல  விஞ்ஞான, மருத்துவ, இலக்கிய நூல்கள் எழுத்துவடிவம் பெற்று அவற்றுக்கென நிறுவனங்கள் நிறுவி சேகரிக்கப்பட்டன. 11ம் நூற்றாண்டில் பக்தாத் சுமார் 100 நூல்நிலையங்களைக் கொண்டிருந்தது.கி.பி. 1249களில் அபூஸகரிய்யா என்பவர் டியூனிஸியாவில் சுமார் 36000 வல்யூம்களைக்கொண்ட நூலகமொன்றை நிறுவினார். கி.பி. 1300இல் ஸன்ஆவிலிருந்த மாலிக் தாவூதின் நூலகம் ஒரு இலட்சம் வல்யூம் நூல்களை உள்ளடக்கியிருந்தது.

“For five centuries, from 700 tp 1200, Islam led the world in power, order, and extent of government; in refinement of manners; in standards of living; in human legislation and religious tolerance; in literature, scholarships, science, medicines, and philosophy.” By: Dr.Bader Malek,(Aljumuah issue   No:10)


ஸிரியாவில் காணப்பட்ட ஒரு நூலகத்தில் சகல கலைகளையும் தழுவிய மூன்று மில்லியன் நூல்களும் 50,000 அல்குர்ஆன் பிரதிகளும் 80,000 தப்ஸீர் நூல்களும் இருந்ததாக வரலாற்றாசிரியர் இப்னு புராத் குறிப்பிடுகின்றார். கோர்டோவா நகரில் 70 நூலகங்கள் காணப்பட்டன. அவற்றுல் 5 இலட்சம் கையைழுத்துப்பிரதிகள் பாதுகாக்கப்பட்டடுள்ளன. ஸமூர் பின் அர்தசீர் என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட நூலகம் 10,000 முதல் 14,000 வரையான வல்யூம் நூல்களை உள்ளடக்கியிருந்தது.

இஸ்லாமிய கற்கை சார்ந்ததும் அதுதவிர்ந்ததுமான பல்வேறு துறைசார் வௌ;வேறு மொழிகளிளாலான பெருவாரியான நூல்கள் உலகின் நாலா பக்கங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்டு பிரதிபண்ணப்பட்டு பாதுகாக்கப்பட்டன. விஞ்ஞானம், தத்துவம், வரலாறு, சமஸ்கிருதம், இந்துக்காவியம், பிரஞ்சுக் காதல் கவிதைகள் என பல்வேறு நூல்கள் அன்றைய முஸ்லிம்களது நூலகங்களில் காணப்பட்டன. அப்பாஸியக் கலீபாக்களில் பக்தாத், புகாரா, டமஸ்கஸ், கெய்ரோ, கோர்டோவா, கிரனடா போன்ற நகரங்கள் அறிவு வளர்ச்சிக்குப் பெரும் தூண்டுகோளாய்க் காணப்பட்டன.

அப்பாஸியக் கலீபாக்களால் பக்தாதில் நிறுவப்பட்ட பைதுல் ஹிக்மா முதலாவது நூலகமாகவும் இரண்டாவதாக பாதிமிகளால் கெய்ரோவில் நிறுவப்பட்ட பைதுல் இல்மும் மூன்றாவதாக உமையாக்களால் ஸ்பைனில் நிறுவப்பட்ட கோர்டோவாவும் இஸ்லாமிய உலகின் சிறப்புமிகு முப்பெரும் நூலகங்களாகத் திகழ்கின்றன.

இவ்வாறு உலகின் நாலா புறங்களிலும் இஸ்லாம் பரவியதனால் அங்கு பள்ளிவாயில்கள் கட்டப்பட்டன. பள்ளிவாயில்களை மையமாக வைத்து பலநூறு நூலகங்களும் பல பகுதிகளிலும் நிர்மானிக்கப்பட்டன. முஸ்லிம் அறிஞர்களால் நடாத்தப்பட்ட பாட வகுப்புக்களில் பாடம் கற்கவும் இந்நூல் நிலையங்களிலிருந்து அறிவுபெறவும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கல்விபெறுவதற்காய் பலரும் வருகைதந்தனர். ஸ்டென்லி லேன்பூஸ் என்ற அறிஞர் அவரது Moors in Spain என்ற நூலில் இதுபற்றி பின்வறுமாறு குறிப்பிடுகின்றார். முஸ்லிம்களின் நகரங்களில் மாத்திரம் பெருக்கெடுத்தோடிய கல்விச் சுனையிலிருந்து அறிவு நீர் பருகுவதற்கு பிரான்ஸ், ஜேர்மன், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து மாணவர்கள் படையெடுத்தனர் இதேகருத்தை பிரய்வோல்டர், கொஸ்தாத்லேபண்ட், சைபர், ஜோன்போல் சார்டர் போன்ற அறிஞர்களும் உறுதியாக ஏற்றுக்கொள்கின்றனர். இன்றைய நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் அன்றைய முஸ்லிம்கள்தான் என்ற உண்மையை இன்றைய மேற்குலகின் சில பேரறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும்கூட ஏற்றுக்கொள்கின்றனர்.

நூலகங்களின் அழிவும் அறிவுத்துறையின் வீழ்ச்சியும்.

உலக வரலாற்றில் அறிவியல் வீரியம் பெற அச்சாணியாயமைந்த இஸ்லாமிய நூலகங்களின் பேரழிவுக்குப் பல்வேறு நிகழ்வுகள் காரணமாயமைந்தன. இஸ்லாமிய நாடுகளுக்குள் நாடுகாண் பயணங்கள் என்ற பெயரில் மேற்கு நுழைய ஆரம்பித்தது. அதன் பின்பு முஸ்லிம்களிடம் கொளித்துக்காணப்பட்ட வளங்களைச் சூறையாடவும் நிலங்களை ஆக்கிரமிக்கவும் யுத்தங்களைத் தொடுத்தனர். இக்காலப்பகுதியில் இஸ்லாமிய ஆட்சியாளர்களிடம் காணப்பட்ட ஒற்றுமையின்மையாலும் அசிரத்தையாலும் இஸ்லாத்தின் எதிரிகள் யுத்தங்களில் வெற்றியீட்டிவந்தனர். முஸ்லிம் இஸ்பைனின் வீழ்ச்சிக்கும் இதுவே முழு முதற்காரணமாக நோக்கப்படுகின்றது.

அதன் பின்னர் ஆக்கிரமிப்புக்குள்ளான பகுதிகளில் முஸ்லிம்கள் கட்டிக்காத்து வந்த அறிவியல் பொக்கிஷங்களான பல்கலைக்கழகங்கள், நூல்நிலையங்கள், பள்ளிவாயில்கள், மாட மாளிகைகள் என்பன தகர்த்தெறியப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டன. அறிவை விருத்தி செய்யும் மத்தியஸ்தளங்களாயிருந்த எத்தனையோ நூலகங்கள் போர்வீரர்களால் அழிக்கப்பட்டன. இச்செயல் முஸ்லிம் உலகத்துக்கு மட்டுமல்லது முழு உலகுக்குமான பாரிய இழப்பாயமைந்தது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

1175 இல் எகிப்தை ஸலடின் மன்னன் ஆக்கிரமித்தபோது அங்கு காணப்பட்ட பெருமதிவாய்ந்த நூல்கள் தமக்கு மத்தியில் பிரித்தெடுக்கப்பட்டன. ஸ்பெய்ன், ஸிரியா, வட ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்த பல நூலகங்கள் சிலுவைப்போர் வீரர்களால் அழிவுக்குள்ளாக்கப்பட்டன. இதனை ஷேரா இவ்வாறு குறிப்பிடுகின்றார். கிறிஸ்தவர்கள் சிலுவைப்போராட்டங்களின் போது இஸ்லாமிய நூலகங்களைப் பண்பாடற்ற முறையில் அழித்தொழித்தனர். இதனால் இஸ்லாமிய உலகம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஸபூர் பின் அர்த்தஷீர் என்பவரால் பக்தாதில் நிறுவப்பட்ட பெரிய நூலகம் தீ விபத்தினால் அழிவுக்குள்ளாகியது. கி.பி. 1257இல் ஹிஜாஸின் ஒரு நூலகம் மின்னல் தாக்கி தீக்கிறையானது.

சிரியாவிலிருந்த நூலகம் முதலாவது சிலுவைப் போரின்போது தீ மூட்டப்பட்டு அழிவுக்குள்ளாகியது. அவ்வாறே கி.பி. 1218-1220 காலப்பகுதியில் மத்தியாசியாவிலிருந்து படையெடுத்துவந்த மங்கோலியத் தாத்தாரியப் படைகள் புகாரா, ஸமர்கந்து, மர்வா போன்ற நகரங்களை அழித்தொழித்ததோடு அங்கிருந்த அறிஞர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் என பலரையும் கொன்று குவித்தன. மீண்டும் 1258 இல் படையெடுத்து பக்தாதையும் சேதப்படுத்தின. மீண்டும் 1336 இல் படையெடுத்த மங்கோலியப் படை பைதுல் ஹிக்மாவையும் அழித்தது. தாருல் இல்ம் நிறுவப்பட்டு ஆறு தசாப்தங்களின் பின்பு துருக்கி இராணுவத்தால் அது அழிக்கப்பட்டது. ஏராளமான கையழுத்துப்பிரதிலிகள் தீயிட்டுக் கரிக்கப்பட்டன. இப்படைவீரர்கள் பெருமதிவாய்ந்த புத்தக அட்டைகளைக்கொண்டு தமது பாதணிகளை அமைத்துக்கொண்டார்hகள். அந்தளவு பண்பாடற்ற முறையில் இஸ்லாமிய நூலகங்கள் அழிவுக்குள்ளாக்கப்பட்டன.

ஸ்பெய்ன் அரசு பிற்பட்ட கலங்களில் சிறுசிறு சிற்றரசுகளாகப் பிரிந்தமையால் கோர்டோவாவில் மாத்திரம் காணப்பட்ட சுமார் 400000 600000 வரையான நூல்கள் சிதறிச் சென்றன. அதன்பின்னர் காலவோட்டத்தில் இஸ்லாமிய நாடுகளைநோக்கி மேற்குலகம்  கட்டவிழ்த்துவிட்ட சிந்தனைப்படையெடுப்பால் பல இஸ்லாமியப் புத்திஜீவிகள் மூளைச்சலவைசெய்யப்பட்டு மேற்குசார்புடையோராயினர். அவ்வாறே அவர்கள் மேற்கொண்ட கீழைத்தேய ஆய்வுகளினூடாக முஸ்லிம் அறிவுக்கருவூலங்கள் மேற்கு நோக்கி நகர்த்தப்பட்டன. இன்றும் நகர்த்தப்பட்டு வருகின்றன. அதில் பேர்லின் நகரில் அமைந்துள்ள ஜேர்மன் தேசிய நூலகம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.

ஜேர்மன் தேசிய நூலகம் : இஸ்லாமிய அறிவியல் பொக்கிஷங்கள் மேற்குநோக்கி நகர்த்தப்பட்டமைக்கு ஓர் உதாரணம்.
ஜேர்மன் தேசிய நூலகம் பேர்லின் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்குலகின் அறிவியல் எழுச்சிக்கும் பல கீழைத்தேய ஆய்வாளர்களது ஆய்வாறாய்ச்சிகளுக்கும் பங்காற்றிய நூலகங்களில் ஜேர்மன் தேசிய நூலகமும் பிரதானமான ஒன்றாகும். இது உலகளவில் உள்ள பெரும் நூலகங்களில் ஐந்நாவது பெரிய நூலகமாகக் கருதப்படுகின்றது. டமஸ்கஸின் ழாஹிரிய்யா நூலகம், துருக்கியின் இஸ்தான்பூல் நூலகம், அமெரிக்காவின் பிரிஸ்டன் பல்கலைக்கழக நூலகம் அத்தோடு கெய்ரோ நூலகம் என்பவற்றுக்கு அடுத்தபடியாக இந்நூலகம் காணப்படுகின்றது. இதனை நிர்மாணிப்பதற்காக 200 மில்லியன் ஜேர்மன் மார்க் செலவாகியுள்ளது. அத்தோடு இந்நூலகத்தில் சுமார் மூன்றரை மில்லியன் புத்தகங்கள் காணப்படுகின்றன. அவற்றுல் அதிகமான கையெழுத்துப்பிரதிகள் மிகவும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் 9000 அரேபியக் கையெழுத்துப் பிரதிகளும் 2500 பாரசீகக் கையெழுத்துப் பிரதிகளும் 3500 துருக்கிய கையெழுத்துப் பிரதிகளும் 60 உருதுக் கையெழுத்துப் பிரதிகளும் இன்னும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் கையெழுத்துப் பிரதிகளும் அடங்குகின்றன. இவ்வாறு அட்டவணைப்படுத்தப்பட்டவை தவிர இன்னும் பட்டியலிடப்படாத 14000 கையெழுத்துப் பிரதிகள் இங்கு காணப்படுகின்றன.

பொதுவாக இங்கு காணப்படுகின்ற பெரும்பான்மையான அரபுக் கையெழுத்துப்பிரதிகளனைத்தும் அல்குர்ஆன் பிரதிகளாகவும் தப்ஸீர் கலை, ஹதீஸ்கலை, தர்க்கக்கலை, சூபித்துவம், கவிதை, அரபு இலக்கண இலக்கியங்கள், வரலாறு போன்ற பல்வேறு துறைசார் பிரதிகளாகக் காணப்படுகின்றன.

அச்சு இந்திரங்களில்லாத காலத்தில் கைகளால் எழுதப்பட்டவையே இந்த கையெழுத்துப் பிரதிகள். 8ம் நூற்றாண்டு காலப்பகுதியில் அரபு நூல்கள் ஓலைகளிலும் தோல்களிலுமே எழுதிப் பாதுகாக்கப்பட்டன. கி.பி.800ம் ஆண்டில் காகித உற்பத்தி சீனாவிலிருந்து பக்தாதுக்கு வந்ததும் இஸ்லாமிய உலகின் அறிவு, ஆராய்ச்சிகள் ஏடுகளிலும் ஓலைகளிலும் கையெழுத்துக்களாக வடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டன.எனவேதான் கையெழுத்துப்பிரதிகளுக்குள்ள பெருமதி இன்னும் குறையாமலுள்ளது. புத்தகம் எவ்வளவுதான் கணணி மயப்படுத்தபப்பட்டாலும் புத்தகங்களுக்குள்ள பெருமதி குறைவதில்லை. அதேபோன்று நவீன அச்சு இயந்திரங்களால் எவ்வளவுதான் புத்தகங்கள் அச்சிடப்பட்டாலும் கையால் எழுதப்பட்ட மூலப்பிரதிகளுக்கு என்றும் மௌசு குறைவதுமில்லை. இக்கையெழுத்துப் பிரதிகள் பல்வேறு ஆய்வுகளுக்கும் சிறந்த வலிமையுள்ள மூலாதாரங்களாத் திகழ்கின்றன. இதனால்தான் அவை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்கப்பட்டுவருகின்றன.

முஸ்லிம் நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற அன்பளிப்புகள் மூலமாகவும் முஸ்லிம்களிடமிருந்து விலைக்கு வாங்கியதனூடாகவும் இன்னும் பல வழிகளிலும் கையெழுத்துப்பிரதிகள் இன்நூலத்தை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. இந்நூலகத்தை உருவாக்குவதற்காக புரூஸியா (ஜேர்மன்) மன்னன் பர்தரீக் வில்லியம் (1620 1688) அரேபிய இஸ்லாமியக் கையெழுத்துப்பிரதிகளைச் சேகரிப்பதற்காக பெருமளவில் முயற்சிகளை எடுத்துள்ளார். அதற்காக சிறந்த கீழைத்தேய ஆய்வாளர்களான ரிச்சட், ஹென்றிஸ் ஆகியோரை கையெழுத்துப்பிரதிகளைத் திரட்டுவதற்காகவென மன்னர் நியமித்ததாகவும் வரலாறு கூறுகின்றது.

அதன் பின்னர் அதிகளவிலான கையெழுத்துப்பிரதிகள் கி.பி. 19ம் நூற்றாண்டளவிலேயே அங்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. ஆரம்பம் முதலே புரூஸியாவுக்கும் (ஜேர்மன்) உஸ்மானியப் பேரரசுக்கும் இடையே நெருக்கமான உறவுகள் பேணப்பட்டு வந்தமையினாலும் இரு உலகப்போர்களிலும் ஒரே கூட்டணியாக ஜேர்மனியும் துருக்கியும் இணைந்திருந்ததாலும் அரேபிய துருக்கிய பாரசீகக் கையெழுத்துப்பிரதிகள் இந்நூலகத்தைநோக்கிச் செல்லப் பிரதாண காரணமாயமைந்தன.

புரூஸிய நாட்டு மன்னன டமஸ்கஸ் நகரில் கன்ஸல் அல் புரூஸி என்பவரை இக்கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிப்பதற்காகவே நியமித்திருந்தார். இவர் மூலமாக 60 கையெழுத்துப் பிரதிகள் இந்நூலகத்தில் இருடைய முயற்சியினால் சேகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல இஸ்லாமிய நகரங்களில் ஆற்களை நியமித்து பிரதிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பிரதிகள் சேமிப்பதற்காகவே பல நாடுகாண் பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. எட்வர்ட் என்ற நாடுகாண் பயணி யெமனுக்கு ஒரு குழுவை அனுப்பி அங்கிரிருந்து 250 கையெழுத்துப் பிரதிகளை விலைக்கு வாங்கி ஜேர்மன் மன்னனிடம் கொடுத்ததாகவும் அவை பேர்லின் நூலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும்; நூலக வரலாறு கூறுகின்றது. அதேபோன்று கிழக்கிந்தியக் கம்பனியில் பணியாற்றிய ஸப்ரன்ஜர் எனும் நாடுகாண் பயணி 2000 இற்கும் அதிகமான கையெழுத்துப்பிரதிகளைத் திரட்டியுள்ளார். சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் அரேபியத் தீபகற்பத்தின் தென்பகுதியில் மொழியியல் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்ட லான்ட் ப்ரிஜ் எனும் நிருவனமும் அதிகளவிலான பிரதிகளைத் திரட்டியது.


முன்பு வீடுகளின் வரவேற்பறைச் சுவர்கள் முழுதும் புத்தக இராக்கைகளால் மறைந்திருந்தன. ஆனால் இன்று சமையலறையில் வைக்கவேண்டிய பீங்கான், கத்தி, கரண்டி, கோப்பைகளையெல்லாம் கெபினட்டில் பூட்டி முன் ஹோலில் வைக்கிறார்கள்.

கீழைத்தேய மேலைத்தேய இஸ்லாமிய நாடுகளுடன் ஐரோப்பா மேற்கொண்டு வந்த வனிக நடவடிக்கைகளும் இந்ந ஆவனங்கள் ஐரோப்பாவுக்குக் கடத்தப்படக் காரணமாயமைந்தன. ஐரோப்பிய வர்த்தகர்கள் முஸ்லிம் நாடுகளில் காணப்பட்ட அறிவியல் வளங்களையும் பெறுமதி வாய்ந்த பொக்கிஷங்களையும் தாராளமாகத் திரட்டியுள்ளனர். பிரித்தானியர் தமது காலணித்துவ செயற்பாடுகளுக்காக நிருவிய கிழக்கிந்தியக் கம்பனி இதற்குச் சிறந்த உதாரணமாகும்.

அரேபியர் பற்றியும் அவர்களது வரலாற்று நாகரீகங்கள் பற்றியும் அறிவதில் பேர்லின் பல்கலைக்கழகத்தில் காணப்படும் இக்கையெழுத்துப்பிரதிகள் பெரும் பங்காற்றியுள்ளன. அரேபியரின் பண்பாடு, அறிவு பற்றிய வரலாறு எனும் தலைப்பில் ஐந்து பாகங்களைக்கொண்ட நூலையும் அரேபிய இலக்கிய வரலறு என்ற நூலையும் எழுதிய பிரபல கீழைத்தேய ஆய்வாளர் கார்ல் புரூக்ல்மன் தனது இவ்வாய்வுகளை இந்நூலகத்திலிருந்துதான் ஆரம்பித்தார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் இக்கையெழுத்துப் பிரதிகளைப் புத்தகங்களாக வெளியிட ஆரம்பித்த ஜேர்மனிய கீழைத்தேயவாதிகள் இதுவரைக்கும் 20 வீதமான கையெழுத்துப்பிரதிகளையே வெளியிட்டுள்ளனர். அதிலும் இவர்கள் இஸ்லாமிய சிந்தனைகள் குறித்து வெளியிடும் புத்தகங்கள் பிழையான கருத்துக்களைக் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. ஏனெனில் இஸ்லாமிய நாகரீகம் வீழ்ச்சியடைந்து முஸ்லிம்கள் பலவீனமுற்றிருந்த காலத்திலிருந்த இஸ்லாத்துக்கு முற்றிலும் மாறான சிந்தனைகளை விதைக்கும் கருத்துக்களைக் கொண்ட கையெழுத்துப்பரதிகளையே இவர்கள் தேடித் தேடி நூலுருப்படுத்தி வெளியிடுகின்றனர்.

எம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட எமது அறிவியல் பொக்கிஷங்களை இன்று மேற்கு எம்மையே அழிப்பதற்காகப் பயன்படுத்தப்பகின்றது. அறிவியலை மேற்குலகம் முஸ்லிம்களிடமிருந்துதான் பெற்றுக்கொண்டன  என்பதை மறுக்கமுடியாது. மனித நாகரிகத்துக்கும் அறிவியல் எழுச்;சிக்கும் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை ஐரோப்பிய எழுத்தாளர் ஜே.பி.ட்ரெண்ட் தனது ஸ்பெய்னும் போர்த்துக்களும் என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

ஐரோப்பாவில் லௌகீகத்துறையிலும் ஆன்மித்துறையிலும் அறியாமை இருள் கவ்வியிருந்தபோது ஸ்பெயன் முஸ்லிம்கள் சிறப்புற்ற நாகரிகத்தையும் ஸ்திரமான பொருளாதார வாழ்க்கையையும் அமைத்திருந்தனர். கலை, விஞ்ஞானம், தத்துவம், கவிதை முதலிய துறைகளின் வளர்ச்சியில் முஸ்லிம்கள் பெரும் பங்கெடுத்தனர். அவர்களின் கருத்துக்களின் தாக்கம் 13;ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தோமஸ் அக்கியுனாஸ், தாந்தேபோன்ற தத்துவஞானிகளின் சிந்தனைகளையும் தாக்கத் தவரவில்லை என்கிறார்.

கி.பி. 750 முதல் 1100 வரையான கால அறிவுலகம் முஸ்லிம்களின் கையில் இருந்தது. அச்சந்தர்ப்பத்தில்தான் ஐரோப்பா இருண்ட கண்டம் எனப்பட்டது. அம்மக்களிடம் கல்வியறிவுகள் காணப்படவில்லை. நாகரிகமான வாழ்க்கை இருக்கவில்லை. அஞ்ஞானம் அவர்களை ஆக்கிரமித்திருந்தது. எழுத்து, வாசிப்பு என்பன விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மதகுர்மார்களிடம் மட்டுமே காணப்பட்டது. அது மட்டுமன்றி மத நிம்பிக்iiகையற்று வர்க்க பேதங்களோடு வாழ்ந்தனர். வலியோன் எளியோனை அடக்கி அடிமை முறை உச்சத்திலிருந்தது. மனித எரிமைகள் மதிக்கப்படவில்லை. Victor Robinson அன்றைய ஐரோப்பாவின் கல்வித்தரத்தைப் பற்றிக் கூறுகையில் ஐரோப்பியப் பிரபுக்களுக்கு கையெழுத்துக்கூடப் போடத்தெரியாதிருந்த காலத்pல் ஸ்பெய்ன் குர்துபாவின் சிறார்கள் பாடசாலைசென்று வந்தனர் என்கிறார்.

The Making of Humanity என்ற நூலில் Sir ரொபட் ப்ரிபோல்ட் குறிப்பிடுவது இதற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. அவர் குறிப்பிடுவதாவது அரேபிய முஸ்லிம்களின் செல்வாக்கினாலேயே உண்மையான மறுமலர்ச்சிக்கு வழிகோலிய கலாசாரப் புரட்சி ஏற்பட்டது. ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக்குத் தொட்டிலாய் அமைந்தது ஸ்பெய்னின் முஸ்லிம்களேயன்றி இத்தாலி அல்ல என்கிறார்.

எனவே முஸ்லிம்கள் வாயிலாக ஐரோப்பாவில் அறிவியல் வளர்ச்சி முளைவிட்டுப்பரம்பியதால் அங்கு தோன்றிய அறிவியல் கலைகள் முஸ்லிம்களின் உரிமைகள். அவற்றை இஸ்லாமிய மயப்படுத்துவது முஸ்லிம்களின் தலையாய கடமை. இதனை முஸாபிர் என்ற கவிதையில் அல்லாமா இக்பால் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுக்கூறுகின்றார்.

அறேபியர்கள் ஐரோப்பாவிலே தமது
இறக்கைகளை விரித்தபோது
அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒரு புது
அதிதிவாரம் இடப்பட்டது.
பாலைவனத்து மைந்தர்கள்
விதைத்த விதையின் மரத்தை
ஐரோப்பயிர்கள் வேரருத்துவிட்டனர்.
அதனை இஸ்லாமிய மயப்படுத்துவோர் எத்துனை பேறு பெற்றவர்கள்?
இந்த தேவதை எமது மூதாதையர்
குவளையிலிருந்து வெளியேறியதாகும்
அதனை மீண்டும் கைப்பற்றுங்கள்
ஏனெனில், அது எங்களது வலையிரிருந்து புறப்பட்டது.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...