ஒருவிடயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும்உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது.ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம்கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்துமனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனிதஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.
இறைவனின்படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில்எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்ஷம் மனித உடலில்காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம்கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்குமட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அரபுமொழியில் நஃப்ஸ், ரூஹ் என்ற பதங்களில் இது அழைக்கப்படுகின்றது. ஆன்மா வல்லநாயன் அல்லாஹ்விடமிருந்துதான் மனிதனில் ஊதப்பட்டது. அதனை அல்லாஹ்அல்குர்ஆனில் பின்வரும் வசனங்களில கூறுகின்றான்.
﴾அவன்மனிதப் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். பின்னர் வடிகட்டிஎடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனது சந்ததியைஉண்டாக்கினான். பின்னர் அதனைச் செவ்வையாக உருவாக்கி தன்னுடைய ரூஹிலிருந்துஅதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான்.﴿ (அல்குர்ஆன் - 32:7,8,9) இதுபோன்றவசனங்கள் இன்னும் குர்ஆனில் காணப்படுகின்றன. (15:29/ 38:72/ 66:12/ 21:91)
உயிரும்ஆன்மாவும் ஒன்றானவையல்ல. இரண்டும் வெவ்வேறு அம்ஷங்களே! இதனை நபியவர்களதுஒரு ஹதீஸிலிருந்து விழங்க முடியும். நபியவர்கள் கூறினார்கள். “ஒரு குழந்தைதன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போதுஅதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில்அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்.” (முஸ்லிம்) இந்த ஹதீஸின்பிரகாரம் ஒரு ஆன்மா நான்கு மாதங்கள் வளர்ச்சியடைந்த பின்பே ஒரு சிசுவில்ஊதப்படுகின்றது. அவ்வாறெனில் அதற்கு முன்பே அச்சிசு படிப்படியாகவளர்ச்சியடைகின்றது. எப்பொருளும் உயிரின்றி வளர்ச்சியடையாது.வளர்ச்சியெய்தும் எப்பொருளுக்கும் உயிரிருக்கும். அப்படியானால்உயிரிருக்கின்ற படியால் தான் சிசு வளர்ச்சியடைகின்றது. அதற்கடுத்தபடியாகவேறு ஏதோவொன்று (ஆன்மா) உடலில் சேர்க்கப்படுகின்றது. மரங்கள் வளர்கின்றனஅவற்றுக்கு உயிருண்டு ஆனால் ஆன்மா இல்லை. இதன்மூலம் உயிரும் ஆன்மாவும்வெவ்வேறு அம்ஷங்கள் என்பதை விளங்கலாம்.
மனிதன்என்ற பதப்பிரயோகம் இப்பூமியில்தான் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்குமுன்னுள்ள கட்டங்களிலும் பின்னுள்ள கட்டங்களிலும் “ஆன்மா (ரூஹ்)” என்றேகுறிக்கப்படுகின்றது. மனித ஆன்மா ஆறு கட்ட நிலைகளைக் கடந்துதான்வேதனைமிக்க அல்லது இன்பம் சொட்டும் அழிவேயற்ற நிரந்தரமான வாழ்வைஅடைகின்றது. இவ்வுலக வாழ்வென்பது ஆன்மாவின் நீண்ட பயணத்தொடரின் மூன்றாம்கட்ட நிலையாகும். இம்மூன்றாம் கட்ட நிலையை ஏனைய கட்டங்களுடன்ஒப்பிடுகையில் இது சொற்பகாலம்தான் என்பதை விளங்கலாம். ஆன்மாவின் அந்த ஆறுகட்டப் பயணத் தொடரை பின்வரும் வரைபின் மூலம் விளங்கலாம்.
இவ்வரைபின் ஒவ்வொரு கட்டத்தையும் சற்று விரிவாக நோக்குவோம்.
முதற்கட்டம் :
முதல்மனிதர் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு ரூஹை (ஆன்மாவை)ஊதியதன் பின்பு அவரிலிருந்து மறுமை நாள் நிகழும் வரையிருக்கும் இறுதிமனிதன் வரையுள்ள அனைவரதும் ஆன்மாக்களைப் படைத்துள்ளான். அல்லாஹ்கூறுகின்றான்.
“நபியேஉமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களது முதுகுகளிலிருந்து அவர்களதுசந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தமக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான்உங்கள் இரட்சகனல்லவா? என்று (கேட்ட) சமயத்தில்...” (அல்அஃராப்:172)
அவ்வான்மாக்கள்இருக்குமிடம் “ஆலமுல் அர்வாஹ்” (ரூஹ்களின் உலகம்) என அழைக்கப்படுகின்றது.இதுவே ஆன்மாக்களின் பயணத்தொடரின் ஆரம்பகட்டம். இதில் ஒரு ஆன்மாதங்கியிருக்கும் காலமோ மிக நீண்டது. எவ்வளவெனின் இன்றொரு குழந்தைபிறக்குமென்றிருந்தால் அதன் ஆன்மா ஆதம் (அலை) அவர்களைப் படைத்ததிலிருந்துதாயின் கருவறையில் சேர்க்கப்படும்வரை எண்ணிப்பார்க்க முடியாத காலங்கள்ரூஹ்களின் உலகத்தில் தங்குகின்றது.
இரண்டாம் கட்டம் :
ஆன்மாஇரண்டாம் கட்டமாக தாயின் கருவறையை அடைகின்றது. இங்கு பொதுவாக நான்குஅல்லது ஐந்து மாதங்களே தங்கியிருக்கும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள்பின்வருமாறு கூறினார்கள்.
“ஒருகுழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போதுஅதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில்அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்.” (முஸ்லிம்)
மூன்றாம் கட்டம் :
தாயின்கருவறையிலிருந்து இப்பூவுலகை அடைகின்றது அவ்வான்மா. இதுதான் மிக முக்கியஇடம். ஆன்மாக்கள் எந்நோக்கத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டனவோஅந்நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டிய இடம் இதுதான். அல்லாஹ்விடம்ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியஇடம். இதில் ஆன்மா இறை வழிகாட்டலையும் அவன் தூதரின் போதனைகளையும் ஏற்றுப்பின்பற்றி வாழ்ந்தால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் சுபீட்சமானதாக அமையும்.மாறாக அவற்;றைப் புறக்கணித்து வாழ்ந்தால் வேதனை மிக்கதாக அமையும்.
இவ்வுலகவாழ்க்கை என்பது இரண்டு பாதைகளைப் பிரிக்கும் ஒரு சந்தி (Junction). தொடர்ந்து ஒரே பாதையில் (One way) வந்த ஆன்மா இங்கிருந்து பிரியும் இருபாதைகளில் ஏதாவது ஒரு பாதையின் மூலமே செல்லமுடியும். அல்லாஹ் இந்த இரண்டுபாதைகளையும் மனிதனுக்குக் காட்டித்தந்துள்ளான். அவன் கூறுகின்றான். “(நன்மை, தீமையாகிய) இரு பாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்.” (அல்பலத்:10) மற்றும் ஸ{ரதுத்தஹ்ரின் மூன்றாம் வசனத்தில் “நிச்சயமாக, நாம்அவனுக்கு (நல்லது, தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம், (அதைப்பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதனைப்பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்.” என்றுகூறுகின்றான்.
இவ்விருபாதைகளில் ஒன்று நரகின் பாதை மற்றையது சுவனத்தின் பாதை. (மேற்குறிப்பிட்டவரைபை அவதானிக்கவும்) எனவே இதில் நாம் சுவனத்திற்கான நேரான பாதையைத்தெரிவுசெய்யவேண்டும். மாற்றமாக இவ்வுலகை சுவனமாக எண்ணி மனம்போன போக்கில்வாழ்வது நேரெதிரான நரகின் பாதையைத் தெரிவுசெய்ததாயமையும். எனவேதான்அல்லாஹ் தனது கட்டளைகளின் பிரகாரம் உலகில் வாழுமாறும் உலகக் கவர்ச்சிகளில்மூழ்கிவிட வேண்டாமென்றும் கூறி உலக வாழ்க்கை அற்பமானது என்றுகூறுகின்றான்.
“இம்மைமறுமையின் விளைநிலம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்கää மறுமைக்கானகட்டுச்சாதனங்களை இங்குதான் தயார்செய்து கொள்ளவேண்டும். உலகம் எனும்இத்தேர்வுக் களத்தை நல்ல முறையில் எதிர்கொண்டால்தான் மறுமையில் சிறந்தபேறுகிடைக்கும்.
ஆன்மாவின்பயணத்தில் அது பூமியில் தங்கும் காலம்தான் மிகச் சொற்பமானது. இதனை ஏனையகாலகட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் “எனது உம்மத்தின் வாழ்க்கை 60-70 வயதுக்கு இடைப்பட்டதாகும்” (திர்மிதி) இந்த ஹதீஸ் குறிப்பிடும் இவ்வுலகில் ஆன்மாவின் வயதெல்லையையும்அது தங்கும் ஏனைய கட்டங்களின் கால அளவையும் ஒப்பிடுகையில் இது குறுகியகாலம்தான். எனினும் மனிதன் இங்குதான் தவறிழைக்கின்றான். இறைவனதுஅருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டு செருக்குக்கொள்கின்றான்.ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனதுபார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும் ஓர்இடம். ஏனெனில் நிரந்தரமான உயர்ந்த மறுமையின் சுவன வீட்டை அவன்மறுக்கிறானல்லவா? அதனால்தான் இது அற்பமானதென்பதை விளங்காதிருக்கின்றான்.
நான்காம் கட்டம் :
உடலைவிட்டுப்பிரியும் ஆன்மா அடுத்து ஆலமுல் பர்ஸகை அடைகின்றது. ஆலமுல் பர்ஸக் என்பதுமரணத்திற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை. மரணித்த ஒருவரது ஆன்மாநல்லதாக இருந்தால் அது இல்லிய்யீனிலும் அதுவே கெட்டதாக இருந்தால்ஸிஜ்ஜிய்யீனிலும் பதியப்பட்டதன் பின்பு பர்ஸகிலே சேர்க்கப்படும்.
இங்கும்ஆன்மாக்கள் நீண்டகாலம் தங்கியிருக்கும். எவ்வாறெனில் ஆலமுல்அர்வாஹிலிருக்கும் ஆன்மாக்கள் அனைத்தும் பூமியை அடைந்து, பின்பு பூமியைஅடைந்தவையெல்லாம் மரணித்து ஆலமுல் பர்ஸகை அடைந்து மறுமை நாளாகும்வரைஏற்கனவே பர்ஸகை அடைந்த ஆன்மாக்கள் நீண்டதொரு கால இடைவெளியில்தங்கியிருக்கும். இங்கு நல்ல ஆன்மாக்கள் இன்பத்தையும் கெட்ட ஆன்மாக்கள்வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தாம் கட்டம் :
ஆலமுல்பர்ஸகில் இருந்த ஆன்மாக்கள் அடுத்தகட்ட நகர்வாக மஹ்ஷர்வெளியை அடையும்.பூவுலகில் செய்த நன்மைக்கும் தீமைக்குமேற்ப கூலிவழங்கப்படும் தீர்ப்புநாள்தான் மஹ்ஷருடைய நாள். அது ஒரு மாபெரும் திடல். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து பூவுலகில் வாழ்ந்த இறுதி மனிதன்வரை அனைவரும் அங்குதிரண்டிருப்பார்கள். அனைத்து ஆன்மாக்களும் மீண்டும் அவற்றுக்கான புதியஉடல்களில் நுழைவிக்கப்பட்டிருக்கும். அவ்வுடல்கள் மறுமையின் வேதனையையோஅல்லது இன்பத்தையோ அனுபவிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும். அல்லாஹ்கூறுகின்றான். “ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு)ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கும்போது.” (அத்தக்வீர்:07)
இங்கும்ஆன்மாக்கள் மிக நீண்டகாலம் தங்கியிருக்கும். அது இத்துனை வருடங்கள்தான்என்று குறிப்பிட்டுக்கூற முடியாது. அதனை அல்லாஹ்தான் அறிவான். எனினும் இதுதொடர்பாக இரண்டு குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம்.
1. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 1000 வருடங்களுக்குச் சமன்.
“நிச்சயமாக உம் இரட்சகனிடத்தில் ஒரு நாள் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்.” (அல்ஹஜ்:47)
2. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 50, 000 வருடங்களுக்குச் சமன்.
“மலக்குகளும் ஜிப்ரீலும் இவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள். அதன் அளவு ஐம்பதாயிரம் வருடங்களாகும்.” (அல்மஆரிஜ்:04)
இவ்விருவசனங்களும் வித்தியாசமான கால அளவைக் காட்டினாலும் தப்ஸீர் அறிஞர்களின்கருத்துப்படி ஒரு முஸ்லிமுக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஆயிரம்வருடங்களுக்குச் சமனாகவும் ஒரு காபிருக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின்ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் இருக்கும் என ஒருகருத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு காலம் என எமது குறுகியஅறிவால் சரியாகக் குறித்துக் கூற முடியாது. ஆனாலும் ஒரு கணிப்பீட்டுக்காகஒரு முஸ்லிம் மஹ்ஷர் வெளியில் ஐந்து நாட்கள் தங்குவதாகக் கொண்டால் அதுஇப்பூமியின் ஐந்தாயிரம் வருடங்களுக்குச் சமன். இதுகூட பூவுலக வாழ்வைவிடநீண்டதே!
ஆறாங்கட்டம் :
ஆன்மாவினபயணத் தொடரின் இக்கட்ட வாழ்வுதான் நிரந்தரமானது. ஒவ்வொரு ஆன்மாவும்பூமியில் எவ்வகையான வாழ்க்கையை வாழ்ந்தனவோ அதற்கு ஏற்றதான வாழ்கையை இங்குபெற்றுக்கொள்ளும். உலகில் இஸ்லாம் கூறிய பிரகாரம் வாழ்ந்து நன்மைகள்புரிந்து இறைதிருப்தியைப் பெற்றிருந்தால் அந்த ஆன்மா சுவனத்தைஅனந்தரமாகக்கொள்ளும். இதற்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்தால் வேதனைகள்மிகுந்த நரகை ஒதுங்குமிடமாகப் பெற்றுக்கொள்ளும். இங்கு வாழும்வாழ்க்கைக்கு முடிவே இல்ல
ஆகஆன்மாவின் இந்த ஆறு கட்ட பயணங்களையும் எடுத்து நோக்கினால் மிகக் குறைந்தகால வாழ்க்கை பூமியிலேயே அமைகின்றது. இந்த சொற்பமான வாழ்க்கைஅற்பமானதுதான். ஆரம்பத்தில் கூறியதுபோன்று மனிதனுக்குவழங்கப்பட்டிருக்கும் இரண்டு பாதைகளும் இரண்டு விருப்பு, வெறுப்புகளைக்கொண்டது. ஒன்று இறை விருப்பு, வெறுப்பு. மற்றையது மனித விருப்பு, வெறுப்பு. இதில் மனித விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமையளித்தவன்நரகின் பாதையைத் தெரிவு செய்வான். இறை விருப்புக்கும் வெறுப்புக்கும்முன்னுரிமையளித்து அதன்படி வாழ்ந்தவன் சுவனப் பாதையைத்தெரிவுசெய்தவனாவான். அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர்வரம்புமீறிவிட்டாரோ மேலும் இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாரோநிச்சயமாக நரகம் அதுவே (அவர்) ஒதுங்குமிடமாகும். மேலும் யார் தனதுஇரட்சகனின் சந்நிதியைப் பயந்து தனது விருப்பு வெறுப்புகளிலிருந்தும் தனதுஉள்ளத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் ஒதுங்குமிடம் நிச்சயமாக (நிரந்தரஇன்பங்கள் நிரைந்த) சுவனம்தான்” (69:37- 41)
எனவேநாம் இந்த உலகினதும் மனித வாழ்வினதும் யதார்த்த நிலையை விளங்கவேண்டும்.உண்மையில் உலக வாழ்க்கை வீணும் வேடிக்கையும் நிறைந்தது. அற்பமும்சொற்பமும் விளைந்தது. ஆனால் இதுதான் மனித ஆன்மாவின் அடுத்தகட்டநகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு சந்தி. எனவேதான் இந்த உலக வாழ்வில்மனிதனை ஒரு வழிப்போக்கனைப்போல் வாழுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் உலகத்தில் ஓர் அன்னியனைப்போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல்வாழுங்கள்.” (புகாரி)
ஆகமனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக்கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம்வாழ்ந்துவிட்டுப்போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனது வாழ்வு இறைவழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் எமது பணி என்ன என்பதைவிளங்கவேண்டும். அதன்படி செயற்பட்டு நிரந்தர சுவனபதியை அனந்தரமாகக்கொள்வோம்
ஒருவிடயத்தை ஆழமாக விளங்கி விசுவாசிக்கும்போதுதான் அதன் சுவையும் கனதியும்உள்ளத்தில் ஆழப்பதிகின்றது. அதுமட்டுமன்றி ஈமானும் பலம்பெறுகின்றது.ஆன்மா, ஆன்மிகம் சம்பந்தமாக பல மதங்களும் பேசியுள்ளன. ஆனால் இஸ்லாம்கூறும் ஆன்மாவின் உண்மைத் தன்மையோ அது மனிதனை இறைவனிடம் நெருங்கவைத்துமனிதப் படைப்பின் நோக்கத்தைப் புறியவைக்கின்றது. அந்தவகையில் மனிதஆன்மாவின் பயணத்தொடர் குறித்து இக்கட்டுரையில் சற்று விளங்க முயற்சிப்போம்.
இறைவனின்படைப்புகளிலே மிகவும் உயர்ந்த படைப்பு மனிதன்தான். காரணம் யாதெனில்எந்தவொரு படைப்புக்கும் வழங்கப்படாத ‘ஆன்மா’ என்ற ஒரு அம்ஷம் மனித உடலில்காணப்படுகின்றது. இவ்வான்மா பறவைகளுக்கோ மிருகங்களுக்கோ தாவரங்களுக்கோ எம்கண்களுக்குப் புலப்படாத நுண்உயிரிகளுக்கோ வழங்கப்படவில்லை. மனிதனுக்குமட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
அரபுமொழியில் நஃப்ஸ், ரூஹ் என்ற பதங்களில் இது அழைக்கப்படுகின்றது. ஆன்மா வல்லநாயன் அல்லாஹ்விடமிருந்துதான் மனிதனில் ஊதப்பட்டது. அதனை அல்லாஹ்அல்குர்ஆனில் பின்வரும் வசனங்களில கூறுகின்றான்.
﴾அவன்மனிதப் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான். பின்னர் வடிகட்டிஎடுக்கப்பட்ட அற்ப நீரில் (இந்திரியத்தில்) இருந்து அவனது சந்ததியைஉண்டாக்கினான். பின்னர் அதனைச் செவ்வையாக உருவாக்கி தன்னுடைய ரூஹிலிருந்துஅதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான்.﴿ (அல்குர்ஆன் - 32:7,8,9) இதுபோன்றவசனங்கள் இன்னும் குர்ஆனில் காணப்படுகின்றன. (15:29/ 38:72/ 66:12/ 21:91)
உயிரும்ஆன்மாவும் ஒன்றானவையல்ல. இரண்டும் வெவ்வேறு அம்ஷங்களே! இதனை நபியவர்களதுஒரு ஹதீஸிலிருந்து விழங்க முடியும். நபியவர்கள் கூறினார்கள். “ஒரு குழந்தைதன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போதுஅதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில்அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்.” (முஸ்லிம்) இந்த ஹதீஸின்பிரகாரம் ஒரு ஆன்மா நான்கு மாதங்கள் வளர்ச்சியடைந்த பின்பே ஒரு சிசுவில்ஊதப்படுகின்றது. அவ்வாறெனில் அதற்கு முன்பே அச்சிசு படிப்படியாகவளர்ச்சியடைகின்றது. எப்பொருளும் உயிரின்றி வளர்ச்சியடையாது.வளர்ச்சியெய்தும் எப்பொருளுக்கும் உயிரிருக்கும். அப்படியானால்உயிரிருக்கின்ற படியால் தான் சிசு வளர்ச்சியடைகின்றது. அதற்கடுத்தபடியாகவேறு ஏதோவொன்று (ஆன்மா) உடலில் சேர்க்கப்படுகின்றது. மரங்கள் வளர்கின்றனஅவற்றுக்கு உயிருண்டு ஆனால் ஆன்மா இல்லை. இதன்மூலம் உயிரும் ஆன்மாவும்வெவ்வேறு அம்ஷங்கள் என்பதை விளங்கலாம்.
மனிதன்என்ற பதப்பிரயோகம் இப்பூமியில்தான் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்குமுன்னுள்ள கட்டங்களிலும் பின்னுள்ள கட்டங்களிலும் “ஆன்மா (ரூஹ்)” என்றேகுறிக்கப்படுகின்றது. மனித ஆன்மா ஆறு கட்ட நிலைகளைக் கடந்துதான்வேதனைமிக்க அல்லது இன்பம் சொட்டும் அழிவேயற்ற நிரந்தரமான வாழ்வைஅடைகின்றது. இவ்வுலக வாழ்வென்பது ஆன்மாவின் நீண்ட பயணத்தொடரின் மூன்றாம்கட்ட நிலையாகும். இம்மூன்றாம் கட்ட நிலையை ஏனைய கட்டங்களுடன்ஒப்பிடுகையில் இது சொற்பகாலம்தான் என்பதை விளங்கலாம். ஆன்மாவின் அந்த ஆறுகட்டப் பயணத் தொடரை பின்வரும் வரைபின் மூலம் விளங்கலாம்.
இவ்வரைபின் ஒவ்வொரு கட்டத்தையும் சற்று விரிவாக நோக்குவோம்.
முதற்கட்டம் :
முதல்மனிதர் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் படைத்து அவருக்கு ரூஹை (ஆன்மாவை)ஊதியதன் பின்பு அவரிலிருந்து மறுமை நாள் நிகழும் வரையிருக்கும் இறுதிமனிதன் வரையுள்ள அனைவரதும் ஆன்மாக்களைப் படைத்துள்ளான். அல்லாஹ்கூறுகின்றான்.
“நபியேஉமதிரட்சகன் ஆதமுடைய மக்களில் அவர்களது முதுகுகளிலிருந்து அவர்களதுசந்ததிகளை (வெளியாக்கி) அவர்களைத் தமக்கே சாட்சியாக்கி அவர்களிடம் நான்உங்கள் இரட்சகனல்லவா? என்று (கேட்ட) சமயத்தில்...” (அல்அஃராப்:172)
அவ்வான்மாக்கள்இருக்குமிடம் “ஆலமுல் அர்வாஹ்” (ரூஹ்களின் உலகம்) என அழைக்கப்படுகின்றது.இதுவே ஆன்மாக்களின் பயணத்தொடரின் ஆரம்பகட்டம். இதில் ஒரு ஆன்மாதங்கியிருக்கும் காலமோ மிக நீண்டது. எவ்வளவெனின் இன்றொரு குழந்தைபிறக்குமென்றிருந்தால் அதன் ஆன்மா ஆதம் (அலை) அவர்களைப் படைத்ததிலிருந்துதாயின் கருவறையில் சேர்க்கப்படும்வரை எண்ணிப்பார்க்க முடியாத காலங்கள்ரூஹ்களின் உலகத்தில் தங்குகின்றது.
இரண்டாம் கட்டம் :
ஆன்மாஇரண்டாம் கட்டமாக தாயின் கருவறையை அடைகின்றது. இங்கு பொதுவாக நான்குஅல்லது ஐந்து மாதங்களே தங்கியிருக்கும். இது குறித்து நபி (ஸல்) அவர்கள்பின்வருமாறு கூறினார்கள்.
“ஒருகுழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நான்கு மாதங்களை அடையும்போதுஅதனிடத்தில் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகின்றார். அவர் அந்த சிசுவில்அதற்குரிய ஆன்மாவை ஊதி இணைத்துவிடுகின்றார்.” (முஸ்லிம்)
மூன்றாம் கட்டம் :
தாயின்கருவறையிலிருந்து இப்பூவுலகை அடைகின்றது அவ்வான்மா. இதுதான் மிக முக்கியஇடம். ஆன்மாக்கள் எந்நோக்கத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டனவோஅந்நோக்கத்தை சரியாக நிறைவேற்ற வேண்டிய இடம் இதுதான். அல்லாஹ்விடம்ஆன்மாக்கள் ஆலமுல் அர்வாஹில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியஇடம். இதில் ஆன்மா இறை வழிகாட்டலையும் அவன் தூதரின் போதனைகளையும் ஏற்றுப்பின்பற்றி வாழ்ந்தால் அதன் அடுத்த கட்ட நகர்வுகள் சுபீட்சமானதாக அமையும்.மாறாக அவற்;றைப் புறக்கணித்து வாழ்ந்தால் வேதனை மிக்கதாக அமையும்.
இவ்வுலகவாழ்க்கை என்பது இரண்டு பாதைகளைப் பிரிக்கும் ஒரு சந்தி (Junction). தொடர்ந்து ஒரே பாதையில் (One way) வந்த ஆன்மா இங்கிருந்து பிரியும் இருபாதைகளில் ஏதாவது ஒரு பாதையின் மூலமே செல்லமுடியும். அல்லாஹ் இந்த இரண்டுபாதைகளையும் மனிதனுக்குக் காட்டித்தந்துள்ளான். அவன் கூறுகின்றான். “(நன்மை, தீமையாகிய) இரு பாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்து விட்டோம்.” (அல்பலத்:10) மற்றும் ஸ{ரதுத்தஹ்ரின் மூன்றாம் வசனத்தில் “நிச்சயமாக, நாம்அவனுக்கு (நல்லது, தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம், (அதைப்பின்பற்றி) அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதனைப்பின்பற்றாது) நன்றிகெட்ட (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்.” என்றுகூறுகின்றான்.
இவ்விருபாதைகளில் ஒன்று நரகின் பாதை மற்றையது சுவனத்தின் பாதை. (மேற்குறிப்பிட்டவரைபை அவதானிக்கவும்) எனவே இதில் நாம் சுவனத்திற்கான நேரான பாதையைத்தெரிவுசெய்யவேண்டும். மாற்றமாக இவ்வுலகை சுவனமாக எண்ணி மனம்போன போக்கில்வாழ்வது நேரெதிரான நரகின் பாதையைத் தெரிவுசெய்ததாயமையும். எனவேதான்அல்லாஹ் தனது கட்டளைகளின் பிரகாரம் உலகில் வாழுமாறும் உலகக் கவர்ச்சிகளில்மூழ்கிவிட வேண்டாமென்றும் கூறி உலக வாழ்க்கை அற்பமானது என்றுகூறுகின்றான்.
“இம்மைமறுமையின் விளைநிலம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கிணங்கää மறுமைக்கானகட்டுச்சாதனங்களை இங்குதான் தயார்செய்து கொள்ளவேண்டும். உலகம் எனும்இத்தேர்வுக் களத்தை நல்ல முறையில் எதிர்கொண்டால்தான் மறுமையில் சிறந்தபேறுகிடைக்கும்.
ஆன்மாவின்பயணத்தில் அது பூமியில் தங்கும் காலம்தான் மிகச் சொற்பமானது. இதனை ஏனையகாலகட்டங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் விளங்கலாம். நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள் “எனது உம்மத்தின் வாழ்க்கை 60-70 வயதுக்கு இடைப்பட்டதாகும்” (திர்மிதி) இந்த ஹதீஸ் குறிப்பிடும் இவ்வுலகில் ஆன்மாவின் வயதெல்லையையும்அது தங்கும் ஏனைய கட்டங்களின் கால அளவையும் ஒப்பிடுகையில் இது குறுகியகாலம்தான். எனினும் மனிதன் இங்குதான் தவறிழைக்கின்றான். இறைவனதுஅருட்கெடைகளையெல்லாம் பூரணமாக அனுபவித்துவிட்டு செருக்குக்கொள்கின்றான்.ஆடம்பரத்தில் ஆடுகின்றான். இறைவனையும் நிராகரிக்கின்றான். அவனதுபார்வையில் உலகம் என்பது வெறுமனே இன்பமனுபவித்துவிட்டுச் செல்லும் ஓர்இடம். ஏனெனில் நிரந்தரமான உயர்ந்த மறுமையின் சுவன வீட்டை அவன்மறுக்கிறானல்லவா? அதனால்தான் இது அற்பமானதென்பதை விளங்காதிருக்கின்றான்.
நான்காம் கட்டம் :
உடலைவிட்டுப்பிரியும் ஆன்மா அடுத்து ஆலமுல் பர்ஸகை அடைகின்றது. ஆலமுல் பர்ஸக் என்பதுமரணத்திற்கும் மறுமைக்கும் இடைப்பட்ட வாழ்க்கை. மரணித்த ஒருவரது ஆன்மாநல்லதாக இருந்தால் அது இல்லிய்யீனிலும் அதுவே கெட்டதாக இருந்தால்ஸிஜ்ஜிய்யீனிலும் பதியப்பட்டதன் பின்பு பர்ஸகிலே சேர்க்கப்படும்.
இங்கும்ஆன்மாக்கள் நீண்டகாலம் தங்கியிருக்கும். எவ்வாறெனில் ஆலமுல்அர்வாஹிலிருக்கும் ஆன்மாக்கள் அனைத்தும் பூமியை அடைந்து, பின்பு பூமியைஅடைந்தவையெல்லாம் மரணித்து ஆலமுல் பர்ஸகை அடைந்து மறுமை நாளாகும்வரைஏற்கனவே பர்ஸகை அடைந்த ஆன்மாக்கள் நீண்டதொரு கால இடைவெளியில்தங்கியிருக்கும். இங்கு நல்ல ஆன்மாக்கள் இன்பத்தையும் கெட்ட ஆன்மாக்கள்வேதனையையும் அனுபவித்துக் கொண்டிருக்கும்.
ஐந்தாம் கட்டம் :
ஆலமுல்பர்ஸகில் இருந்த ஆன்மாக்கள் அடுத்தகட்ட நகர்வாக மஹ்ஷர்வெளியை அடையும்.பூவுலகில் செய்த நன்மைக்கும் தீமைக்குமேற்ப கூலிவழங்கப்படும் தீர்ப்புநாள்தான் மஹ்ஷருடைய நாள். அது ஒரு மாபெரும் திடல். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து பூவுலகில் வாழ்ந்த இறுதி மனிதன்வரை அனைவரும் அங்குதிரண்டிருப்பார்கள். அனைத்து ஆன்மாக்களும் மீண்டும் அவற்றுக்கான புதியஉடல்களில் நுழைவிக்கப்பட்டிருக்கும். அவ்வுடல்கள் மறுமையின் வேதனையையோஅல்லது இன்பத்தையோ அனுபவிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும். அல்லாஹ்கூறுகின்றான். “ஆன்மாக்கள் (அவற்றின் உடல்களோடு)ஒன்றுசேர்க்கப்பட்டிருக்கும்போது.” (அத்தக்வீர்:07)
இங்கும்ஆன்மாக்கள் மிக நீண்டகாலம் தங்கியிருக்கும். அது இத்துனை வருடங்கள்தான்என்று குறிப்பிட்டுக்கூற முடியாது. அதனை அல்லாஹ்தான் அறிவான். எனினும் இதுதொடர்பாக இரண்டு குர்ஆன் வசனங்களைக் குறிப்பிடலாம்.
1. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 1000 வருடங்களுக்குச் சமன்.
“நிச்சயமாக உம் இரட்சகனிடத்தில் ஒரு நாள் நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் போன்றதாகும்.” (அல்ஹஜ்:47)
2. மஹ்ஷரின் ஒரு நாள் இப்பூமியின் 50, 000 வருடங்களுக்குச் சமன்.
“மலக்குகளும் ஜிப்ரீலும் இவன் பக்கம் ஒரு நாளில் உயர்ந்து செல்வார்கள். அதன் அளவு ஐம்பதாயிரம் வருடங்களாகும்.” (அல்மஆரிஜ்:04)
இவ்விருவசனங்களும் வித்தியாசமான கால அளவைக் காட்டினாலும் தப்ஸீர் அறிஞர்களின்கருத்துப்படி ஒரு முஸ்லிமுக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின் ஆயிரம்வருடங்களுக்குச் சமனாகவும் ஒரு காபிருக்கு மஹ்ஷரின் ஒரு நாள் இம்மையின்ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமனாகவும் இருக்கும் என ஒருகருத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு காலம் என எமது குறுகியஅறிவால் சரியாகக் குறித்துக் கூற முடியாது. ஆனாலும் ஒரு கணிப்பீட்டுக்காகஒரு முஸ்லிம் மஹ்ஷர் வெளியில் ஐந்து நாட்கள் தங்குவதாகக் கொண்டால் அதுஇப்பூமியின் ஐந்தாயிரம் வருடங்களுக்குச் சமன். இதுகூட பூவுலக வாழ்வைவிடநீண்டதே!
ஆறாங்கட்டம் :
ஆன்மாவினபயணத் தொடரின் இக்கட்ட வாழ்வுதான் நிரந்தரமானது. ஒவ்வொரு ஆன்மாவும்பூமியில் எவ்வகையான வாழ்க்கையை வாழ்ந்தனவோ அதற்கு ஏற்றதான வாழ்கையை இங்குபெற்றுக்கொள்ளும். உலகில் இஸ்லாம் கூறிய பிரகாரம் வாழ்ந்து நன்மைகள்புரிந்து இறைதிருப்தியைப் பெற்றிருந்தால் அந்த ஆன்மா சுவனத்தைஅனந்தரமாகக்கொள்ளும். இதற்குப் புறம்பான வாழ்வை வாழ்ந்தால் வேதனைகள்மிகுந்த நரகை ஒதுங்குமிடமாகப் பெற்றுக்கொள்ளும். இங்கு வாழும்வாழ்க்கைக்கு முடிவே இல்ல
ஆகஆன்மாவின் இந்த ஆறு கட்ட பயணங்களையும் எடுத்து நோக்கினால் மிகக் குறைந்தகால வாழ்க்கை பூமியிலேயே அமைகின்றது. இந்த சொற்பமான வாழ்க்கைஅற்பமானதுதான். ஆரம்பத்தில் கூறியதுபோன்று மனிதனுக்குவழங்கப்பட்டிருக்கும் இரண்டு பாதைகளும் இரண்டு விருப்பு, வெறுப்புகளைக்கொண்டது. ஒன்று இறை விருப்பு, வெறுப்பு. மற்றையது மனித விருப்பு, வெறுப்பு. இதில் மனித விருப்பு, வெறுப்புகளுக்கு முன்னுரிமையளித்தவன்நரகின் பாதையைத் தெரிவு செய்வான். இறை விருப்புக்கும் வெறுப்புக்கும்முன்னுரிமையளித்து அதன்படி வாழ்ந்தவன் சுவனப் பாதையைத்தெரிவுசெய்தவனாவான். அல்லாஹ் கூறுகின்றான்:
“எவர்வரம்புமீறிவிட்டாரோ மேலும் இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாரோநிச்சயமாக நரகம் அதுவே (அவர்) ஒதுங்குமிடமாகும். மேலும் யார் தனதுஇரட்சகனின் சந்நிதியைப் பயந்து தனது விருப்பு வெறுப்புகளிலிருந்தும் தனதுஉள்ளத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவன் ஒதுங்குமிடம் நிச்சயமாக (நிரந்தரஇன்பங்கள் நிரைந்த) சுவனம்தான்” (69:37- 41)
எனவேநாம் இந்த உலகினதும் மனித வாழ்வினதும் யதார்த்த நிலையை விளங்கவேண்டும்.உண்மையில் உலக வாழ்க்கை வீணும் வேடிக்கையும் நிறைந்தது. அற்பமும்சொற்பமும் விளைந்தது. ஆனால் இதுதான் மனித ஆன்மாவின் அடுத்தகட்டநகர்வுகளைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு சந்தி. எனவேதான் இந்த உலக வாழ்வில்மனிதனை ஒரு வழிப்போக்கனைப்போல் வாழுமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். “நீங்கள் உலகத்தில் ஓர் அன்னியனைப்போல் அல்லது ஒரு வழிப்போக்கனைப் போல்வாழுங்கள்.” (புகாரி)
ஆகமனிதன் என்பவன் இப்பூமியில் வெறுமனே உண்டு கழித்துவிட்டு இறந்துபோகக்கூடிய விலங்கினமோ அல்லது விரும்பியவாறு தனது மனோ இச்சையின் பிரகாரம்வாழ்ந்துவிட்டுப்போகும் சதைப் பிண்டமோ அல்ல. மாறாக அவனது வாழ்வு இறைவழிகாட்டலின் கீழ் அமையவேண்டும். இவ்வுலகில் எமது பணி என்ன என்பதைவிளங்கவேண்டும். அதன்படி செயற்பட்டு நிரந்தர சுவனபதியை அனந்தரமாகக்கொள்வோம்
0 comments:
Post a Comment
என்னை ஊக்குவியுங்கள்...