"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

08 January 2012

பணிப்பெண்களில் 1/3 துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்


இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களில் சராசரியாக மூவரில் ஒருவர் தாக்கப்படுதல், தீக்காயத்துக்கு உட்படுத்தப்படல், உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் போன்ற இடர்களை அனுபவிப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் சமூகசேவைப் பிரிவான கரிட்டாஸ் ஸ்ரீலங்கா செடக் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது. 31% ஆனோர் உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் குறித்தும் 30% ஆனோர் சம்பளம் வழங்கப்படாமை குறித்தும் 44% ஆனோர் உணவு வழங்கப்படாமை குறித்தும் 25% ஆனோர் உறங்குவதற்கான இடம் தரப்படாமை குறித்தும் முறையீடு செய்துள்ளனர்.

கரிட்டாஸ் நிறுவனத்தினால் அண்மையில் கொழும்பில் நடாத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சட்ட நிபுணரான சியாமளி ரணராஜா “வெளிநாட்டுப் பணிப்பெண்ணாகச் செல்லும் 90% ஆனோர் அதற்கு முன்பு தொழில் ஒன்றும் செய்யாதவர்ளே! சொந்த நாட்டில் பணிபுரியாத ஒரு பெண்ணுக்கு வெளிநாடுசென்று பணிபுரிவது கடினமாகத்தான் இருக்கும்” என்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

இலங்கையிலிருந்து வெளிநாட்டுக்குப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களில் சராசரியாக மூவரில் ஒருவர் தாக்கப்படுதல், தீக்காயத்துக்கு உட்படுத்தப்படல், உடல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல் போன்ற இடர்களை அனுபவிப்பதாக கத்தோலிக்க ஆயர்கள் அமைப்பின் சமூகசேவைப் பிரிவான கரிட்டாஸ் ஸ்ரீலங்கா செடக் நிறுவனத்தின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது. 31% ஆனோர் உடல் ரீதியான துஷ்பிரயோகங்கள் குறித்தும் 30% ஆனோர் சம்பளம் வழங்கப்படாமை குறித்தும் 44% ஆனோர் உணவு வழங்கப்படாமை குறித்தும் 25% ஆனோர் உறங்குவதற்கான இடம் தரப்படாமை குறித்தும் முறையீடு செய்துள்ளனர்.

கரிட்டாஸ் நிறுவனத்தினால் அண்மையில் கொழும்பில் நடாத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட சட்ட நிபுணரான சியாமளி ரணராஜா “வெளிநாட்டுப் பணிப்பெண்ணாகச் செல்லும் 90% ஆனோர் அதற்கு முன்பு தொழில் ஒன்றும் செய்யாதவர்ளே! சொந்த நாட்டில் பணிபுரியாத ஒரு பெண்ணுக்கு வெளிநாடுசென்று பணிபுரிவது கடினமாகத்தான் இருக்கும்” என்றார்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...