"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 March 2015

கெக் கெக் சொல்லும் பல்லிகளின் அற்புதம்


ஒருதடவை நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். மேலும் அதற்கு ஃபுவைஸிக் (தீங்குவிளைவிக்கக் கூடிய உயிரனம்) என்று பெயரிட்டர்கள்இது முஸ்லிம் கிரந்தத்தில் 4151 பதிவுசெய்யப்பட்டுள்ள ஸஹீஹானதொரு நபிமொழியாகும்.
இப்பிரபஞ்சப் படைப்புகளனைத்தையும் அல்லாஹ் வீனுக்காகப் படைக்கவில்லை. அவற்றை மனிதனுக்குப் பயனளிக்கும் விதத்தில்தான் படைத்துள்ளான். ஆனால் நபியவர்கள் ஏன் பல்லிகள் தீங்கிளைக்கக் கூடியனவென்றும் அவற்றைக் கெல்லுமாறும் பணித்தார்கள் என்பதை ஆராயும்போதுதான் அதிலுள்ள விஞ்ஞான உண்மை புரிய வருகின்றது. இது தொடர்பாக விளங்க எம்முடன் மிகவும் நெருக்கமான இப் பல்லிகளின் வாழ்க்கை முறை பற்றி அறிந்துகொள்வோம்.
இன, பெயர் அறிமுகம்.
பல்லி என்ற சொல் பிராணிக்கும், இனத்திற்கும் சொல்லப்படுகின்றது. Lizard என்ற பொருளில் பல்லி எனப்படுவது இனத்தைக் குறிக்கின்றது. இதில் மொத்தம் ஆறாயிரம் இனங்கள் உள்ளன. அவற்றில் வீட்டுச் சுவர்களில் ஓடும் பல்லி முதல் ஓனான், உடும்பு, சலமந்தரா (கபரகொயா), முதலை, கொமோடோ ட்ராகன் என பல இனங்கள் உள்ளடங்கும். அடுத்து பல்லி எனக் குறிப்பது எம் வீட்டுச் சுவர்களில் ஓடித்திரியும் ஆங்கிலத்தில் Gecko அழைக்கப்படும் பல்லிகளையாகும். இங்கு நாம் நோக்க இருப்பது வீட்டுப் பல்லிகளையே!

Gecko இனப் பல்லிகளில் சுமார் 1500 வகை இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.  வீட்டுப் பல்லி, மரப் பல்லி, சரகு இலைப் பல்லி, பச்சை நிறப் பல்லி, சிறுத்தைப் பல்லி, கீலா மான்ஸ்டர் என இன்னும் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன.  இவற்றில் கீலா மான்ஸ்டர் அதிக விஷத்தன்மைகொண்ட பல்லியாகும். ஊர்வன இனத்தைச் சேர்ந்த இப் பல்லிகள் குளிர் இரத்த உயிரிகள் என்பதால் உலகின் உஷ்ணப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றன. பல்லிகள் பாலை நிலங்களிலும், மணல் மேடுகளிலும், மரங்களிலும், புற் புதர்களிலும் வாழ்கின்றன. இவற்றை அதிகமாக எமது வீடுகளில் கண்டுகொள்ளலாம். வாசல், சமயலறை, சாப்பாட்டறை, களிவறை என எல்லாப் பகுதிகளிலும்  சுவர்களில் ஓடித்திரிவதைக் காணலாம்.
உடலமைப்பில் இறை அற்புதம்
1.         கண்கள் :

பல்லிகளுக்கு சிறந்த பார்வைச் சக்தி உண்டு. இருளிலும் அவற்றால் நன்கு பார்க்க முடியும்.  அதிகமான வீட்டினப் பல்லிகளுக்கு இமைகள் காணப்படுவதில்லை. எப்போதும் கண்கள் திறந்தே இருக்கும். எனவே அவை கண்களில் படியும் தூசியை அவ்வப்போது நாக்கினால் நக்கி சுத்தம் செய்து கொள்ளும்.  வேறு சில வகைப் பல்லிகளுக்கு இமைகள் உண்டு. மனிதப் பார்வைத் திறனை கணக்கிடும் போது இதன் பார்வை திறன் 350 மடங்கு கூர்மை கொண்டதாக உள்ளது. இதனால் பார்வை நேர் கோட்டில் மட்டுமே செலுத்த முடியும் என்பது பெரும் குறை.
2.         கூர்ந்த அவதானம் :

மற்ற ஊர்வண வற்றைவிட ஓணானுக்கும் பல்லிக்கும் அவதானம் அதிகம். வீட்டுப் பல்லிகளை நன்கு உற்றுநோக்கிப் பாருங்கள். எமது செயற்பாடுகளை அவை கூர்மையாக நோக்கும். எமது அசைவுகளை அவை அளந்து அதற்கேற்ப செயற்படும். உணவுப் பாத்திரங்கள், தேனீர்க் கோப்பைகள் வைக்கும் இடங்களுக்கு நேராக உச்சத்திற்கு வந்து மேலிந்து சிறுநீர், அல்லது மலம் கழிக்கும். நாம் களிவறை சென்றாலும் அதிலுள்ள பள்ளிகள் எம்மையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும். அவ்வளவு அவதானம் அவற்றுக்கு உண்டு. அவ்வாறே இயற்கை அணர்த்தங்களையும் முன்கூட்டியே உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.
3.         நாவு :

பாம்புகளைப் போலவே பல்லிகளும் காற்றை நாவினால் துழாவி மோப்பம் பிடிக்கும் ஆற்றல் கொண்டவை. இதன் மூலம் தமது உணவையும் எதிரியையும் பிரித்தறிந்துகெள்ளும். நாக்கில் இருக்கும் பசை போன்ற ஒட்டும் தன்மைகொண்ட ஒருவகைப் பதார்த்தம் இறைகளை இலகுவாகப் படித்துண்ண உதவுகின்றது. கணப்பொழுதில் ஒரு இறையை பல்லி தனது நாவைப் பயன்படுத்தி பற்றிக்கொள்ளும்.
4.         உடற் பகுதி :

உடல் எப்போதும் தரையுடன் ஒட்டியதாக இருக்கும். பாம்பைப் போன்று வளைந்து செல்லக்கூடிய தகவமைப்பையும் கொண்டிருக்கும். நீலம், பச்சை, பழுப்பு, வெள்ளை, மஞ்சள் என்ற நிற வித்தியாசங்களில் பல்லிகளைக் காணலாம். இவை தாம் வாழும் சூழலுக்குத் தக்கவாறு உடல் நிறங்களைக் கொண்டுள்ளன. இன்னும் சில பல்லிகள் தேவைக்கேற்ப தங்கள் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளவும் செய்கின்றன. சில பல்லிகள் குறிப்பிட்ட காலத்தில் தமது பழைய தோல்களை உறித்துக் களற்றிவிட்டு புதுவடிவம் பெறுகின்றன. வெள்ளை நிறப் பல்லிகளின் உடல் உற்பகுதிகள் வெளியே தெரியக் கூடிய வித்த்தில் மெலிதாக அமைந்திருக்கும்.
5.         கால்கள் :
பல்லிகள் சுர சுரப்பான, வழு வழுப்பான சுவர்களில் செங்குத்தாக ஊர்ந்து செல்வதைப் பார்த்திருப்பீர். சிலபோது சிவிலின்களில் தலைகீழாக்க் கூட நகர்ந்து செல்லும். இரும்பு, பிளாஸ்டிக் ஏன் கண்ணாடிகளில் கூட எவ்வாறு அவற்றால் நகர்ந்து செல்லமுடிகிறது? சிந்தித்ததுண்டா? சுபஹானல்லாஹ்! அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பாருங்கள்.

சுர சுரப்பான பகுதிகளில் நடக்கும்போது விரல்களையும் நகங்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் வழு வழுப்பன பகுதிகளில் நடக்க வேறு ஒரு உத்தியைக் கையாள்கின்றன. பல்லிகளின் கால் பாதங்களில் 14,000 க்கும் மேற்பட்ட நுண்ணிய காற்றுப் பைகள் காணப்படுகின்றன. இவை உறிஞ்சு குலாய்கள்போன்று செயற்படுகின்றன. கண்ணாடி போன்ற வழு வழுப்பான பகுதிகளில் நடக்க இந்த உறிஞ்சும் காற்றுப் பைகளைப் பயன்படுத்துகின்றன. காலை வழு வழுப்பான சுவற்றில் வைத்ததும் பாதத்தினடியில் உள்ள காற்றினை வெளியேற்றி அப்பகுதியை ஒரு சூன்யப்பகுதியாக மாற்றுகின்றன. உடனே சுவற்றில் பாதங்கள் பலமாக ஒட்டிக்கொள்ளும். மீண்டும் காலை விடுவிக்க நாடினால் காற்றுப் பைகளுடாக காற்றைக்கொண்டுவருகின்றன. கால்கள் விடுவிக்கப்படும். இவ்வாறு அவை நடைபோடுகின்றன. இந்தக் காற்றுப் பைகளைப் பயன்படுத்தி தனது எடையைப் போல் 8 மடங்கு அதிக எடையை ஒரு காலினால் தூக்க முடியும்.
6.         வால் :

எதிரிகளிடமிருந்து தப்பித்து தம் உயிரைக் காத்துக்கொள்ள இவை தமது வாலை ஒரு துரும்பாகப் பயன்படுத்துகின்றன.  பல்லியைப் பிடிக்க எதிரிவிலங்கு முயற்சித்தால் உடனே அவை தமது வாலைத் துண்டித்துவிட்டு ஓடிவிடும். துண்டான வால் சில நிமிடங்களுக்குத் துடித்துக்கெண்டிருக்கும்.  துரத்தி வரும் எதிரி துண்டான வாலைப் பார்த்து அதிர்ந்து நிற்கும் கணப்பொழுதில் பல்லி தலைமறைவாகிவிடும். இதற்கு Lizard tail autotomy என்று பெயர். இதில் இறைவனின் பங்கீட்டைப் பாருங்கள்.  துண்டாகிய வாலினால் பல்லி உயிர்த்தப்புகிறது, துரத்திவந்த எதிரி விலங்கின் சிரமத்திற்கு உணவும் கிடைக்கின்றது.
தொடர்பாடற் திறன்

ஊர்வன ஜந்துக்களில் ஒலி எழுப்பும் சக்தி பல்லிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. பல்லி சொல்லும் என்பது இதன் ஒலியெழுப்புதலைத்தான். மற்ற பல்லிகளுடன் தொடர்புகொள்ள இவை கெக்கெக்கெக்கெக்…” என்று ஒலியெழுப்புகின்றன. மட்டுமன்றி உடல் சைகைகளையும் மேற்கொள்கின்றன. தலையை உயர்த்திக் காட்டுதல், கழுத்தை இட, வலப் பங்களுக்கு அசைத்தல், உடலை சிலிர்த்தல், வாலை சுழற்றுதல் என்பன தகவல் பறிமாற்றத்திற்காகக் கையாளும் உடலசைவுகளாகும்.
தற்காப்புப் பொறிமுறை

சில பல்லிகள் தற்காப்புக்காக தங்கள் எச்சில், எச்சங்களை வெளியேற்றி துர்வாடையை எழுப்புகின்றன. இதைச் சற்றும் எதிர்பாராத அல்லது இந்த வாடையைத் தாங்க இயலாத எதிரி விலங்குகள் ஓடிவிடுகின்றன. இதனால் பல்லிகள் தப்பிவிடுகின்றன. அதேபோன்று மேலே கூறியது போல் வாலைத் துண்டித்துக்கொண்டும் தப்பித்துவிடுகின்றன. மரப் பல்லி, இலை சரகுப் பல்லி இவற்றின் நிறமும், இவற்றின் உடல் மீது உள்ள வண்ணத் திட்டுகளின் நிறமும் இவை வாழும் இடத்துடன் ஒத்திருப்பதால் இவை இருப்பதே இவற்றின் எதிரிகளின் கண்களுக்குத் தெரியாது. எனவே இயற்கையாகவே இவை பாதுகாப்புப் பெருகின்றன. இவ்வாறாக பல்லிகளுக்கு அல்லாஹ் பல்வேறு தற்காப்புப் பொறிமுறைகளைக் கொடுத்துள்ளான்.
உணவு முறைமை

பூச்சிகளை இவை விரும்பி உண்கின்றன. எப்போதும் இரவு நேரங்களில் வீட்டில் எரியும் மின்குமிழ்களுக்கு அருகில் வரும் பூச்சிகளையெல்லாம் லபக், லபக் என்று உண்டு விழுங்குவதைக் கண்டிருப்பிர்கள். நன்கு வளர்ந்த பல்லியானது ஒரு நாளைக்கு 50 கிராம் பூச்சிகளைக் கொன்று உண்ணும். சிறு எறும்புகள், ஈசல், பாச்சைப் புச்சி, கரப்பான் புச்சி, வெட்டுக் கிளி என்பன இவற்றின் அநேகமான உணவுகளாகும். இவ்வாறு புச்சிகளின் சனத்தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் பல்லிகளின் பங்கு முக்கியமானது. மட்டுமன்றி இனிப்புகளையும் விரும்பி உண்ணும். குடித்துவிட்டுவைத்த தேனீர்கோப்பை, எச்சில் பீங்கான் என்பவற்றிலும் இவை ருசி பார்க்கும்.
இனப்பெருக்கம்

இனப்பெருக்க காலங்களில் ஆண் பல்லி தேன் சிட்டின் ஒலியை ஒத்த கிரீச்சிடும் சப்தத்தை எழுப்பி தனக்கான துணையைத் தேடுகின்றது. வாலை முன்னும் பின்னும் சுழற்றி சங்கேதப் பாஷைகளைப் பரிமாறிக் கொள்ளும். இவ்வாறான செய்கைகள் மூலம்  ஆண், பெண்ணை உறவுக்கு அழைக்கிறது. இனப்பெருக்கத்திற்காகத் தயாராகும் காலங்களில் இவை அதிக புரதச் சத்தை கொண்ட புழு, வெட்டுக்கிளி போன்ற சிறு உயிரிகளை உணவாக்குகின்றன. முதல் தடவை இனப்பெருக்கத்தில் இணையும் ஒரு பல்லி அதன் பின் தனக்கென ஒரு வாழிட எல்லைப் பகுதியை நிர்ணயித்துக்கொள்கின்றது. அத்தோடு தனது ஆட்சிக்குள் 4 அல்லது 5 பெண் பல்லிகளையாவது சேர்த்துக்கொள்கின்றது. தமது எல்லைக்குள் வேறு பல்லிகள் நுழைந்தால் கடுமையாக அதனுடன் சண்டைபிடிக்கும். சிலபோது இரண்டும் தொப் என்று தரையில் விழும் காட்சிகளையும் நீங்கள் கண்டிருப்பீர்கள்.
பெண் பல்லி கருத்தரித்த பின் அதன் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் உண்டாகும்.  அவை வயிற்றுக்குள் இருப்பது வெளியில் இருந்து பார்த்தால்கூட எமக்குத் தென்படும்.  அதன் தோல் மெலிதாக இருப்பதுதான் இதற்குக் காரணம். ஓணான், முதலைகளைப் போன்று பல்லிகள் முட்டை இடுவதற்காக, எங்கும் குழி தோண்டி அவற்றை மூடிவிடுவதில்லை. எங்கு சற்றே ஒதுக்குப் புறமாக இடம் கிடைக்கிறதோ அங்கு முட்டைகளை இட்டு விடும்.  உதாரணத்திற்கு புத்தக அலுமாரியில், உடை அலுமாரியில், உபயோகத்தில் இல்லாத அட்டை அல்லது மரப் பெட்டிக்குள், மின்சார மீடர் போர்டு அல்லது மெயின் ஸ்விட்ச் என எங்கும் அவை முட்டையிடுகின்றன.
பல்லியுடன் தொடர்புபட்ட மூட நம்பிக்கைகள்
இந்தியாவில் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் பல்லிகளை தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்து அதனைத் தொட்டு வணங்கிவருகின்றனர். இதனால் எல்லா வகையான பாவங்களும், உடல் நோய்களும் நீங்குவதாக ஐதீகம். மேலும் பல்லி எம்மீது வீழ்ந்தால் அதற்குப் பலன் சொல்லும் ஜோசியர்களும் இருக்கின்றார்கள். வலது பக்கம் விழுந்தால் நல்லது நடக்கும், இடது பக்கம் விழுந்தால் கெட்டது நடக்கும் அதேபோன்று பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் இருக்கின்றது என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றும் பல்லி ஜோதிடர்களும் இருக்கின்றனர். நாம் ஒருவிடயத்தைச் சொல்லும் போது பல்லி கத்தினால் உடனே பாருங்கள் இதற்கு பல்லியும் சாட்சி சொல்கிறதுஎன்றும் சொல்வது பலிக்கும் என்றும் நம்புபவர்கள் எம்மிலும் இருக்கின்றனர். இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள் என்பதை மறந்துவிடக்கூடாது.
பல்லிகளில் நச்சுத்தன்மை

அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்தி " பல்லி விழுந்த உணவை உண்ட பள்ளி மாணவர்கள் வாந்தி, பேதி,காரணமாய் மருத்துவமனையில் அனுமதி" என்பதாகும். பல்லியின் உடலில் சால்மொனெல்லா என்ற ஒரு பாக்டீரியா காணப்படுகின்றது. இந்த உயிரணு மனித உடம்பில் டைபாய்டு போன்ற ஜுரத்தையோ, வாந்தி பேதியையோ உண்டாக்குகின்றது. உணவு தயாராகும் போது பல்லி அதில் விழுந்தால் அதன் உடலில் உள்ள சால்மொனெல்லா கிருமிகள் அழிந்திட வாய்ப்புகள் உண்டு.  அதே தயாரான உணவில் விழுந்து செத்தால் கிருமிகள் உயிரோடு இருக்க வாய்ப்பு உண்டு. எனவேதான் பல்லியைத் தொட்டாலும் கையை சவர்க்காரம் போட்டு நன்றாகக் கழுவிட வேண்டும்.
பல்லியின் எச்சத்திலும் நச்சுத் தன்மை உண்டு. அதிலும் கருப்புப் பகுதியைவிட வெள்ளை நிறப் பகுதிதான் விஷம் அதிகம். இது உணவுடன் கலந்து உண்ணப்படும்போது இறப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. உணவு, நீர்ப் பாத்திரங்களை மூடிவைக்கவேண்டும். சூரியனிலிருந்து வருகின்ற சில நச்சுக் கதிர்கள் மனிதனைத் தாக்காத வண்ணம் புமியில் இருக்கின்ற பல்லி, தேள், புரான், பாம்பு போன்ற பிராணிகள் அந்நச்சுக்களை சூழலிலிருந்து உறிஞசிக்கொள்கின்றன. எனவேதான் அவை விசத்தன்மைகொண்டனவாகவும் இருக்கின்றன. ஏனைய நச்சுப் பிராணிகள் வீட்டுக்கு வெளியே இருந்தபோதிலும் பல்லியோ எம் வீட்டுக்குள்ளேதான் இருக்கின்றன. எனவே அவற்றால் தீங்கேற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். பல்லியினால் சில நன்மைகள் இருந்தாலும் அதன் பாதிப்பு விபரீதமானது என்பதனாலோ என்னவோ நபிகளார் பல்லிகளைக் கொல்லுமாறு கூறியுள்ளார்கள். பின்வரும் ஆதாரபுர்வமான ஹதீஸ்களைப் பாருங்கள்.

ஒருதடவை நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். மேலும் அதற்கு ஃபுவைஸிக் (தீங்குவிளைவிக்கக் கூடிய உயிரனம்) என்று பெயரிட்டார்கள்” (முஸ்லிம் : 4151)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (நபி தீக் குண்டத்தில் எறியப்பட்ட பேது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள். அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி)  நூல் : புகாரி (3359)
தீங்கு தரக்கூடிய பல்லிகளைக் கொல்லவேண்டும் என்பதற்காக அவற்றை முறையின்றி சித்திரவதை செய்து கொல்லக் கூடாது. அவற்றுக்கு வேதனைகொடுக்காது ஒரே அடியில் கொல்வதே பொறுத்தமானது.
ஒரே அடியில் ஒருவர் ஒரு பல்லியைக் கொன்றால் அவருக்கு நூறு நன்மை கிடைக்கும். இரண்டாவது அடியில் கொன்றால் நூறை விடக் குறைவான நன்மையும். மூன்றாவது அடியில் கொன்றால் அதைவிடக் குறைவான நன்மையும் கிடைக்கும்அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்

எப்போதும் எம் வீடுகளைச் சுத்தமாக வைத்திருந்தால் பல்லிகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஒருதடவை நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். மேலும் அதற்கு ஃபுவைஸிக் (தீங்குவிளைவிக்கக் கூடிய உயிரனம்) என்று பெயரிட்டர்கள்இது முஸ்லிம் கிரந்தத்தில் 4151 பதிவுசெய்யப்பட்டுள்ள ஸஹீஹானதொரு நபிமொழியாகும்.
இப்பிரபஞ்சப் படைப்புகளனைத்தையும் அல்லாஹ் வீனுக்காகப் படைக்கவில்லை. அவற்றை மனிதனுக்குப் பயனளிக்கும் விதத்தில்தான் படைத்துள்ளான். ஆனால் நபியவர்கள் ஏன் பல்லிகள் தீங்கிளைக்கக் கூடியனவென்றும் அவற்றைக் கெல்லுமாறும் பணித்தார்கள் என்பதை ஆராயும்போதுதான் அதிலுள்ள விஞ்ஞான உண்மை புரிய வருகின்றது. இது தொடர்பாக விளங்க எம்முடன் மிகவும் நெருக்கமான இப் பல்லிகளின் வாழ்க்கை முறை பற்றி அறிந்துகொள்வோம்.
இன, பெயர் அறிமுகம்.
பல்லி என்ற சொல் பிராணிக்கும், இனத்திற்கும் சொல்லப்படுகின்றது. Lizard என்ற பொருளில் பல்லி எனப்படுவது இனத்தைக் குறிக்கின்றது. இதில் மொத்தம் ஆறாயிரம் இனங்கள் உள்ளன. அவற்றில் வீட்டுச் சுவர்களில் ஓடும் பல்லி முதல் ஓனான், உடும்பு, சலமந்தரா (கபரகொயா), முதலை, கொமோடோ ட்ராகன் என பல இனங்கள் உள்ளடங்கும். அடுத்து பல்லி எனக் குறிப்பது எம் வீட்டுச் சுவர்களில் ஓடித்திரியும் ஆங்கிலத்தில் Gecko அழைக்கப்படும் பல்லிகளையாகும். இங்கு நாம் நோக்க இருப்பது வீட்டுப் பல்லிகளையே!

Gecko இனப் பல்லிகளில் சுமார் 1500 வகை இனங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.  வீட்டுப் பல்லி, மரப் பல்லி, சரகு இலைப் பல்லி, பச்சை நிறப் பல்லி, சிறுத்தைப் பல்லி, கீலா மான்ஸ்டர் என இன்னும் எவ்வளவோ வகைகள் இருக்கின்றன.  இவற்றில் கீலா மான்ஸ்டர் அதிக விஷத்தன்மைகொண்ட பல்லியாகும். ஊர்வன இனத்தைச் சேர்ந்த இப் பல்லிகள் குளிர் இரத்த உயிரிகள் என்பதால் உலகின் உஷ்ணப் பிரதேசங்களிலேயே வாழ்கின்றன. பல்லிகள் பாலை நிலங்களிலும், மணல் மேடுகளிலும், மரங்களிலும், புற் புதர்களிலும் வாழ்கின்றன. இவற்றை அதிகமாக எமது வீடுகளில் கண்டுகொள்ளலாம். வாசல், சமயலறை, சாப்பாட்டறை, களிவறை என எல்லாப் பகுதிகளிலும்  சுவர்களில் ஓடித்திரிவதைக் காணலாம்.
உடலமைப்பில் இறை அற்புதம்
1.         கண்கள் :

பல்லிகளுக்கு சிறந்த பார்வைச் சக்தி உண்டு. இருளிலும் அவற்றால் நன்கு பார்க்க முடியும்.  அதிகமான வீட்டினப் பல்லிகளுக்கு இமைகள் காணப்படுவதில்லை. எப்போதும் கண்கள் திறந்தே இருக்கும். எனவே அவை கண்களில் படியும் தூசியை அவ்வப்போது நாக்கினால் நக்கி சுத்தம் செய்து கொள்ளும்.  வேறு சில வகைப் பல்லிகளுக்கு இமைகள் உண்டு. மனிதப் பார்வைத் திறனை கணக்கிடும் போது இதன் பார்வை திறன் 350 மடங்கு கூர்மை கொண்டதாக உள்ளது. இதனால் பார்வை நேர் கோட்டில் மட்டுமே செலுத்த முடியும் என்பது பெரும் குறை.
2.         கூர்ந்த அவதானம் :

மற்ற ஊர்வண வற்றைவிட ஓணானுக்கும் பல்லிக்கும் அவதானம் அதிகம். வீட்டுப் பல்லிகளை நன்கு உற்றுநோக்கிப் பாருங்கள். எமது செயற்பாடுகளை அவை கூர்மையாக நோக்கும். எமது அசைவுகளை அவை அளந்து அதற்கேற்ப செயற்படும். உணவுப் பாத்திரங்கள், தேனீர்க் கோப்பைகள் வைக்கும் இடங்களுக்கு நேராக உச்சத்திற்கு வந்து மேலிந்து சிறுநீர், அல்லது மலம் கழிக்கும். நாம் களிவறை சென்றாலும் அதிலுள்ள பள்ளிகள் எம்மையே உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும். அவ்வளவு அவதானம் அவற்றுக்கு உண்டு. அவ்வாறே இயற்கை அணர்த்தங்களையும் முன்கூட்டியே உணரக் கூடிய தன்மையும் பல்லிக்கு உண்டு.
3.         நாவு :

பாம்புகளைப் போலவே பல்லிகளும் காற்றை நாவினால் துழாவி மோப்பம் பிடிக்கும் ஆற்றல் கொண்டவை. இதன் மூலம் தமது உணவையும் எதிரியையும் பிரித்தறிந்துகெள்ளும். நாக்கில் இருக்கும் பசை போன்ற ஒட்டும் தன்மைகொண்ட ஒருவகைப் பதார்த்தம் இறைகளை இலகுவாகப் படித்துண்ண உதவுகின்றது. கணப்பொழுதில் ஒரு இறையை பல்லி தனது நாவைப் பயன்படுத்தி பற்றிக்கொள்ளும்.
4.         உடற் பகுதி :

உடல் எப்போதும் தரையுடன் ஒட்டியதாக இருக்கும். பாம்பைப் போன்று வளைந்து செல்லக்கூடிய தகவமைப்பையும் கொண்டிருக்கும். நீலம், பச்சை, பழுப்பு, வெள்ளை, மஞ்சள் என்ற நிற வித்தியாசங்களில் பல்லிகளைக் காணலாம். இவை தாம் வாழும் சூழலுக்குத் தக்கவாறு உடல் நிறங்களைக் கொண்டுள்ளன. இன்னும் சில பல்லிகள் தேவைக்கேற்ப தங்கள் உடல் நிறத்தை மாற்றிக் கொள்ளவும் செய்கின்றன. சில பல்லிகள் குறிப்பிட்ட காலத்தில் தமது பழைய தோல்களை உறித்துக் களற்றிவிட்டு புதுவடிவம் பெறுகின்றன. வெள்ளை நிறப் பல்லிகளின் உடல் உற்பகுதிகள் வெளியே தெரியக் கூடிய வித்த்தில் மெலிதாக அமைந்திருக்கும்.
5.         கால்கள் :
பல்லிகள் சுர சுரப்பான, வழு வழுப்பான சுவர்களில் செங்குத்தாக ஊர்ந்து செல்வதைப் பார்த்திருப்பீர். சிலபோது சிவிலின்களில் தலைகீழாக்க் கூட நகர்ந்து செல்லும். இரும்பு, பிளாஸ்டிக் ஏன் கண்ணாடிகளில் கூட எவ்வாறு அவற்றால் நகர்ந்து செல்லமுடிகிறது? சிந்தித்ததுண்டா? சுபஹானல்லாஹ்! அல்லாஹ்வின் படைப்பாற்றலைப் பாருங்கள்.

சுர சுரப்பான பகுதிகளில் நடக்கும்போது விரல்களையும் நகங்களையும் பயன்படுத்திக்கொள்கின்றன. ஆனால் வழு வழுப்பன பகுதிகளில் நடக்க வேறு ஒரு உத்தியைக் கையாள்கின்றன. பல்லிகளின் கால் பாதங்களில் 14,000 க்கும் மேற்பட்ட நுண்ணிய காற்றுப் பைகள் காணப்படுகின்றன. இவை உறிஞ்சு குலாய்கள்போன்று செயற்படுகின்றன. கண்ணாடி போன்ற வழு வழுப்பான பகுதிகளில் நடக்க இந்த உறிஞ்சும் காற்றுப் பைகளைப் பயன்படுத்துகின்றன. காலை வழு வழுப்பான சுவற்றில் வைத்ததும் பாதத்தினடியில் உள்ள காற்றினை வெளியேற்றி அப்பகுதியை ஒரு சூன்யப்பகுதியாக மாற்றுகின்றன. உடனே சுவற்றில் பாதங்கள் பலமாக ஒட்டிக்கொள்ளும். மீண்டும் காலை விடுவிக்க நாடினால் காற்றுப் பைகளுடாக காற்றைக்கொண்டுவருகின்றன. கால்கள் விடுவிக்கப்படும். இவ்வாறு அவை நடைபோடுகின்றன. இந்தக் காற்றுப் பைகளைப் பயன்படுத்தி தனது எடையைப் போல் 8 மடங்கு அதிக எடையை ஒரு காலினால் தூக்க முடியும்.
6.         வால் :

எதிரிகளிடமிருந்து தப்பித்து தம் உயிரைக் காத்துக்கொள்ள இவை தமது வாலை ஒரு துரும்பாகப் பயன்படுத்துகின்றன.  பல்லியைப் பிடிக்க எதிரிவிலங்கு முயற்சித்தால் உடனே அவை தமது வாலைத் துண்டித்துவிட்டு ஓடிவிடும். துண்டான வால் சில நிமிடங்களுக்குத் துடித்துக்கெண்டிருக்கும்.  துரத்தி வரும் எதிரி துண்டான வாலைப் பார்த்து அதிர்ந்து நிற்கும் கணப்பொழுதில் பல்லி தலைமறைவாகிவிடும். இதற்கு Lizard tail autotomy என்று பெயர். இதில் இறைவனின் பங்கீட்டைப் பாருங்கள்.  துண்டாகிய வாலினால் பல்லி உயிர்த்தப்புகிறது, துரத்திவந்த எதிரி விலங்கின் சிரமத்திற்கு உணவும் கிடைக்கின்றது.
தொடர்பாடற் திறன்

ஊர்வன ஜந்துக்களில் ஒலி எழுப்பும் சக்தி பல்லிகளுக்கு மட்டுமே இருக்கின்றது. பல்லி சொல்லும் என்பது இதன் ஒலியெழுப்புதலைத்தான். மற்ற பல்லிகளுடன் தொடர்புகொள்ள இவை கெக்கெக்கெக்கெக்…” என்று ஒலியெழுப்புகின்றன. மட்டுமன்றி உடல் சைகைகளையும் மேற்கொள்கின்றன. தலையை உயர்த்திக் காட்டுதல், கழுத்தை இட, வலப் பங்களுக்கு அசைத்தல், உடலை சிலிர்த்தல், வாலை சுழற்றுதல் என்பன தகவல் பறிமாற்றத்திற்காகக் கையாளும் உடலசைவுகளாகும்.
தற்காப்புப் பொறிமுறை

சில பல்லிகள் தற்காப்புக்காக தங்கள் எச்சில், எச்சங்களை வெளியேற்றி துர்வாடையை எழுப்புகின்றன. இதைச் சற்றும் எதிர்பாராத அல்லது இந்த வாடையைத் தாங்க இயலாத எதிரி விலங்குகள் ஓடிவிடுகின்றன. இதனால் பல்லிகள் தப்பிவிடுகின்றன. அதேபோன்று மேலே கூறியது போல் வாலைத் துண்டித்துக்கொண்டும் தப்பித்துவிடுகின்றன. மரப் பல்லி, இலை சரகுப் பல்லி இவற்றின் நிறமும், இவற்றின் உடல் மீது உள்ள வண்ணத் திட்டுகளின் நிறமும் இவை வாழும் இடத்துடன் ஒத்திருப்பதால் இவை இருப்பதே இவற்றின் எதிரிகளின் கண்களுக்குத் தெரியாது. எனவே இயற்கையாகவே இவை பாதுகாப்புப் பெருகின்றன. இவ்வாறாக பல்லிகளுக்கு அல்லாஹ் பல்வேறு தற்காப்புப் பொறிமுறைகளைக் கொடுத்துள்ளான்.
உணவு முறைமை

பூச்சிகளை இவை விரும்பி உண்கின்றன. எப்போதும் இரவு நேரங்களில் வீட்டில் எரியும் மின்குமிழ்களுக்கு அருகில் வரும் பூச்சிகளையெல்லாம் லபக், லபக் என்று உண்டு விழுங்குவதைக் கண்டிருப்பிர்கள். நன்கு வளர்ந்த பல்லியானது ஒரு நாளைக்கு 50 கிராம் பூச்சிகளைக் கொன்று உண்ணும். சிறு எறும்புகள், ஈசல், பாச்சைப் புச்சி, கரப்பான் புச்சி, வெட்டுக் கிளி என்பன இவற்றின் அநேகமான உணவுகளாகும். இவ்வாறு புச்சிகளின் சனத்தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் பல்லிகளின் பங்கு முக்கியமானது. மட்டுமன்றி இனிப்புகளையும் விரும்பி உண்ணும். குடித்துவிட்டுவைத்த தேனீர்கோப்பை, எச்சில் பீங்கான் என்பவற்றிலும் இவை ருசி பார்க்கும்.
இனப்பெருக்கம்

இனப்பெருக்க காலங்களில் ஆண் பல்லி தேன் சிட்டின் ஒலியை ஒத்த கிரீச்சிடும் சப்தத்தை எழுப்பி தனக்கான துணையைத் தேடுகின்றது. வாலை முன்னும் பின்னும் சுழற்றி சங்கேதப் பாஷைகளைப் பரிமாறிக் கொள்ளும். இவ்வாறான செய்கைகள் மூலம்  ஆண், பெண்ணை உறவுக்கு அழைக்கிறது. இனப்பெருக்கத்திற்காகத் தயாராகும் காலங்களில் இவை அதிக புரதச் சத்தை கொண்ட புழு, வெட்டுக்கிளி போன்ற சிறு உயிரிகளை உணவாக்குகின்றன. முதல் தடவை இனப்பெருக்கத்தில் இணையும் ஒரு பல்லி அதன் பின் தனக்கென ஒரு வாழிட எல்லைப் பகுதியை நிர்ணயித்துக்கொள்கின்றது. அத்தோடு தனது ஆட்சிக்குள் 4 அல்லது 5 பெண் பல்லிகளையாவது சேர்த்துக்கொள்கின்றது. தமது எல்லைக்குள் வேறு பல்லிகள் நுழைந்தால் கடுமையாக அதனுடன் சண்டைபிடிக்கும். சிலபோது இரண்டும் தொப் என்று தரையில் விழும் காட்சிகளையும் நீங்கள் கண்டிருப்பீர்கள்.
பெண் பல்லி கருத்தரித்த பின் அதன் வயிற்றில் இரண்டு அல்லது மூன்று முட்டைகள் உண்டாகும்.  அவை வயிற்றுக்குள் இருப்பது வெளியில் இருந்து பார்த்தால்கூட எமக்குத் தென்படும்.  அதன் தோல் மெலிதாக இருப்பதுதான் இதற்குக் காரணம். ஓணான், முதலைகளைப் போன்று பல்லிகள் முட்டை இடுவதற்காக, எங்கும் குழி தோண்டி அவற்றை மூடிவிடுவதில்லை. எங்கு சற்றே ஒதுக்குப் புறமாக இடம் கிடைக்கிறதோ அங்கு முட்டைகளை இட்டு விடும்.  உதாரணத்திற்கு புத்தக அலுமாரியில், உடை அலுமாரியில், உபயோகத்தில் இல்லாத அட்டை அல்லது மரப் பெட்டிக்குள், மின்சார மீடர் போர்டு அல்லது மெயின் ஸ்விட்ச் என எங்கும் அவை முட்டையிடுகின்றன.
பல்லியுடன் தொடர்புபட்ட மூட நம்பிக்கைகள்
இந்தியாவில் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் பல்லிகளை தங்கத்தாலும், வெள்ளியாலும் செய்து அதனைத் தொட்டு வணங்கிவருகின்றனர். இதனால் எல்லா வகையான பாவங்களும், உடல் நோய்களும் நீங்குவதாக ஐதீகம். மேலும் பல்லி எம்மீது வீழ்ந்தால் அதற்குப் பலன் சொல்லும் ஜோசியர்களும் இருக்கின்றார்கள். வலது பக்கம் விழுந்தால் நல்லது நடக்கும், இடது பக்கம் விழுந்தால் கெட்டது நடக்கும் அதேபோன்று பல்லி கிழக்கு நோக்கி இருந்தபடி சப்தம் எழுப்பினால் ஒருவித பலனும், மேற்கு நோக்கி இருக்கும் போது சப்தம் எழுப்பினால் மற்றொரு பலனும் இருக்கின்றது என்றெல்லாம் கூறி மக்களை ஏமாற்றும் பல்லி ஜோதிடர்களும் இருக்கின்றனர். நாம் ஒருவிடயத்தைச் சொல்லும் போது பல்லி கத்தினால் உடனே பாருங்கள் இதற்கு பல்லியும் சாட்சி சொல்கிறதுஎன்றும் சொல்வது பலிக்கும் என்றும் நம்புபவர்கள் எம்மிலும் இருக்கின்றனர். இதெல்லாம் வெறும் மூட நம்பிக்கைகள் என்பதை மறந்துவிடக்கூடாது.
பல்லிகளில் நச்சுத்தன்மை

அடிக்கடி பத்திரிகைகளில் வரும் செய்தி " பல்லி விழுந்த உணவை உண்ட பள்ளி மாணவர்கள் வாந்தி, பேதி,காரணமாய் மருத்துவமனையில் அனுமதி" என்பதாகும். பல்லியின் உடலில் சால்மொனெல்லா என்ற ஒரு பாக்டீரியா காணப்படுகின்றது. இந்த உயிரணு மனித உடம்பில் டைபாய்டு போன்ற ஜுரத்தையோ, வாந்தி பேதியையோ உண்டாக்குகின்றது. உணவு தயாராகும் போது பல்லி அதில் விழுந்தால் அதன் உடலில் உள்ள சால்மொனெல்லா கிருமிகள் அழிந்திட வாய்ப்புகள் உண்டு.  அதே தயாரான உணவில் விழுந்து செத்தால் கிருமிகள் உயிரோடு இருக்க வாய்ப்பு உண்டு. எனவேதான் பல்லியைத் தொட்டாலும் கையை சவர்க்காரம் போட்டு நன்றாகக் கழுவிட வேண்டும்.
பல்லியின் எச்சத்திலும் நச்சுத் தன்மை உண்டு. அதிலும் கருப்புப் பகுதியைவிட வெள்ளை நிறப் பகுதிதான் விஷம் அதிகம். இது உணவுடன் கலந்து உண்ணப்படும்போது இறப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. உணவு, நீர்ப் பாத்திரங்களை மூடிவைக்கவேண்டும். சூரியனிலிருந்து வருகின்ற சில நச்சுக் கதிர்கள் மனிதனைத் தாக்காத வண்ணம் புமியில் இருக்கின்ற பல்லி, தேள், புரான், பாம்பு போன்ற பிராணிகள் அந்நச்சுக்களை சூழலிலிருந்து உறிஞசிக்கொள்கின்றன. எனவேதான் அவை விசத்தன்மைகொண்டனவாகவும் இருக்கின்றன. ஏனைய நச்சுப் பிராணிகள் வீட்டுக்கு வெளியே இருந்தபோதிலும் பல்லியோ எம் வீட்டுக்குள்ளேதான் இருக்கின்றன. எனவே அவற்றால் தீங்கேற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். பல்லியினால் சில நன்மைகள் இருந்தாலும் அதன் பாதிப்பு விபரீதமானது என்பதனாலோ என்னவோ நபிகளார் பல்லிகளைக் கொல்லுமாறு கூறியுள்ளார்கள். பின்வரும் ஆதாரபுர்வமான ஹதீஸ்களைப் பாருங்கள்.

ஒருதடவை நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லுமாறு கட்டளையிட்டார்கள். மேலும் அதற்கு ஃபுவைஸிக் (தீங்குவிளைவிக்கக் கூடிய உயிரனம்) என்று பெயரிட்டார்கள்” (முஸ்லிம் : 4151)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும் படி உத்தரவிட்டார்கள். மேலும் அவர்கள் அது இப்ராஹீம் (நபி தீக் குண்டத்தில் எறியப்பட்ட பேது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது என்றும் சொன்னார்கள். அறிவிப்பவர் : உம்மு ஷரீக் (ரலி)  நூல் : புகாரி (3359)
தீங்கு தரக்கூடிய பல்லிகளைக் கொல்லவேண்டும் என்பதற்காக அவற்றை முறையின்றி சித்திரவதை செய்து கொல்லக் கூடாது. அவற்றுக்கு வேதனைகொடுக்காது ஒரே அடியில் கொல்வதே பொறுத்தமானது.
ஒரே அடியில் ஒருவர் ஒரு பல்லியைக் கொன்றால் அவருக்கு நூறு நன்மை கிடைக்கும். இரண்டாவது அடியில் கொன்றால் நூறை விடக் குறைவான நன்மையும். மூன்றாவது அடியில் கொன்றால் அதைவிடக் குறைவான நன்மையும் கிடைக்கும்அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்

எப்போதும் எம் வீடுகளைச் சுத்தமாக வைத்திருந்தால் பல்லிகளின் பெருக்கத்தைத் தடுக்கலாம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

2 comments:

Unknown said...

ஒரே அடியில் ஒருவர் ஒரு பல்லியைக் கொன்றால் அவருக்கு நூறு நன்மை கிடைக்கும். இரண்டாவது அடியில் கொன்றால் நூறை விடக் குறைவான நன்மையும். மூன்றாவது அடியில் கொன்றால் அதைவிடக் குறைவான நன்மையும் கிடைக்கும்” அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூல்: முஸ்லிம்

முஸ்லீம் யில் எந்த இடத்தில் பல்லியை கொன்றால் நூறு நன்மை னு இருக்கு சொல்லுங்க

Anonymous said...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு முதலாவது அடியில் கொன்ற வரைவிடக் குறைவாக இவ்வளவு இவ்வளவு நன்மைகள் உண்டு; மூன்றாவது அடியில் கொன்றவருக்கு இரண்டாவது அடியில் கொன்றவரைவிடக் குறைவாக நன்மை உண்டு.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4509.

http://www.tamililquran.com/muslimdisp.php?start=4505

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...