"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 June 2011

மரங்கொத்திப் பறவை (wood pecker)


சார்ள்ஸ் டாவினின் பரிணாம வாதத்துக்குச் சவால்விடும் மற்றுமோர் படைப்புதான் மரங்கொத்திப் பறவை (wood pecker) இதன் அன்றாடச் செயற்பாடுகளும் உடற்கட்டமைப்பும் கொண்டுள்ள அற்புதங்கள் எமக்கு அல்லாஹ்வை ஞாபகிக்கின்றன. எனவே இப்பறவையைப் பற்றி சற்று அறிந்துகொள்வோம்.

இவற்றின் பிரதான தொழில் மரம் கொத்துவதாகும். மரத்திலிலுள்ள பூச்சி, புழுக்களை உட்கொள்வதற்கே இவை மரத்தைக் கொத்துகின்றன. மேலும் தமது வாழிடத்தை அமைத்துக்கொள்வதற்கும் இவ்வாறு செய்கின்றன. அதிகமான மரங்கொத்திகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறம்கொண்டவை. ஆண்பறவையின் தலையில் சிவப்பு நிறச் சிறகுகள் காணப்படுகின்றன.உலகில் மொத்தம் 200 வகை மரங்கொத்திகள் காணப்படுகின்றன.

இவை அளவிலும் நிறத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. இவை மரத்தைக் கொத்தப் பயன்படுத்தும் முறை மிகவும் விசித்திரமானது. இச்செயன்முறையின்போது இவை தமது கூர்மையான அலகைக் கொத்தவும் பாத நகங்களை உறுதியாக மரத்தைப் பற்றிப்பிடிக்கவும் வாலை சமநிலையாக நிற்க ஆதாரமாகவும் பயன்படுத்துகின்றன.

மரங்கொத்தியின் பாதத்தின் முன்னால் இரண்டு விரல்களும் பின்னால் இரண்டு விரல்களும் காணப்படுகின்றன. இது ஏனைய பறவைகளிலிருந்தும் வித்தியாசமானதொரு கட்டமைப்பாகும். இந்த விரல்களால் மரத்தைப் பற்றிக்கொண்டு கீழே விழுந்துவிடாமல் மரத்தின் மேலும் கீழுமாக அவற்றால் நகரமுடியும். மரத்தைப் பற்றியதன் பின்பு மரத்தைக்கொத்த ஆரம்பிக்கின்றன.

ஒரு மரங்கொத்தி சாதாரணமாக ஒரு நாளைக்கு ஆயிரம் தடைவைகள் மரங்களைக் கொத்துகின்றது. ஒரு செக்கனுக்கு இதனால் 20 முறைகள் கொத்த முடியும். எவ்வளவு வேகமாகக் கொத்துகின்றது என்று பார்தீர்களா? இதே வேலையை எம்மால் செய்ய முடியுமா? முடியாது. அதுதான் ஒவ்வொரு படைப்பிற்கும் தேவையானதை அல்லாஹ்வே நிர்ணயித்துள்ளான். இவ்வாறு துரிதமாக இயங்கும்போது அதன் மண்டையோடு ஏதும் பாதிப்புக்களுக்கு உட்படாதவகையில் தலையில் உள்ள தசைகள் அதனைப் பாதுககாக்கின்றன.

மரங்களைக் கொத்தி தமது உணவைப் பெற்றுக்கொள்வதோடு கூடுகளையும் அமைத்துக்கொள்கின்றன இப்பறவைகள். பாதுகாப்பான இடத்திலும் உறுதியான மரங்களின் உச்சியிலும் தமது கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. அனேகமான பறவைகள் மரப் பொந்துகளில் கூடுகளை அமைக்கும்போது ஒரு நுழை வாயிலை மாத்திரமே அமைக்கின்றன ஆனால் மரங்கொத்திகள் தமது தற்பாதுகாப்பிற்காக இரண்டு வாயில்களை அமைத்துக்கொள்கின்றன. ஒரு வாயிலால் ஏதும் எதிரி விலங்குகள் வந்தால் இரண்டாவது வாயிலால் அது தப்பிததுவிடும்.

ஒரு பறவை மற்றப் பறவைகளுடன் தகவல்களைப் பறிமாற்றிக்கொள்ளவும் தமக்கு எதிகளிடமிருந்து ஆபத்து ஏற்படும்போது தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் மரங்களைக் கொத்துவதன் மூலம் ஓசை எழுப்புகின்றன. இவற்றின் தொடர்பாடலுக்காக அல்லாஹ் இவற்றுக்கு வழங்கியிருக்கும் மிக அற்புதமான நுட்பமே இதுவாகும்.

இவற்றின் உடலில் உள்ள மற்றுமொரு அற்புதம்தான் இவற்றின் நாக்கு. இது ஒரு மரங்கொத்தியின் அலகைவிட ஐந்து மடங்கு நீண்டதாகும். கறையான் எறும்பு போன்றவற்றின் புற்றுகளினுள் தனது நீளமான நாக்கைச் செலுத்தி இரையைப் பிடிக்கின்றன. இவற்றின் நாவில் வழுவழுப்பான ஒட்டும் தன்மைவாய்ந்த ஒருவகைத் திரவம் காணப்படுகின்றது. எனவே இதன்மூலம் பூச்சிகள் எளிதில் மாட்டிக்கொள்கின்றன. மேலும் இவற்றின் நாக்கு, அலகின் மேற்பகுதியில் நாசித்துவராத்துக்கு அருகாமையால் ஆரம்பமாகி மண்டையோட்டைத் தள்ளி, தொண்டை வழியாக வாயை அடைகின்றது. எப்போதும் சாதாரன நிலையில் உள்ள நாவு இரையைப் பற்றும்போது நீளமாகும்.

பூச்சி புழுக்களல்லாது பழங்கள், விதைகள் போன்றவற்றை உணவாகக்கொள்ளும் பறவைகளும் உள்ளன. ஒரு பெண்பறவை இரண்டு முதல் எட்டு வரையான வெள்ளை நிற முட்டைகளை ஒரே தடைவையில் இடுகின்றது.

இதுவரை நாம்பார்த்த இப்பறவையின் நுணுக்கங்கள் எல்லாம் படிப்படியாகப் பரிணாமமடைந்து வந்திருப்பதென்பது அசாத்தியத்திலும் அசாத்தியமானதே! பண்டைய காலப் படிமங்கள்கூட இம்மரங்கொத்திப் பறவை 25 மில்லியன் வருடகாலம் பழைமையானதென உறுதிப்படுத்துகின்றன. ஆக அன்றிருந்த பறவைதான் இன்றும் உள்ளது. இவை யாவற்றினதும் படைப்பாளன் வல்லநாயன் அல்லாஹ்வேயன்றி வேறு யாராக இருக்கமுடியும். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

சார்ள்ஸ் டாவினின் பரிணாம வாதத்துக்குச் சவால்விடும் மற்றுமோர் படைப்புதான் மரங்கொத்திப் பறவை (wood pecker) இதன் அன்றாடச் செயற்பாடுகளும் உடற்கட்டமைப்பும் கொண்டுள்ள அற்புதங்கள் எமக்கு அல்லாஹ்வை ஞாபகிக்கின்றன. எனவே இப்பறவையைப் பற்றி சற்று அறிந்துகொள்வோம்.

இவற்றின் பிரதான தொழில் மரம் கொத்துவதாகும். மரத்திலிலுள்ள பூச்சி, புழுக்களை உட்கொள்வதற்கே இவை மரத்தைக் கொத்துகின்றன. மேலும் தமது வாழிடத்தை அமைத்துக்கொள்வதற்கும் இவ்வாறு செய்கின்றன. அதிகமான மரங்கொத்திகள் கறுப்பு மற்றும் வெள்ளை நிறம்கொண்டவை. ஆண்பறவையின் தலையில் சிவப்பு நிறச் சிறகுகள் காணப்படுகின்றன.உலகில் மொத்தம் 200 வகை மரங்கொத்திகள் காணப்படுகின்றன.

இவை அளவிலும் நிறத்திலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. இவை மரத்தைக் கொத்தப் பயன்படுத்தும் முறை மிகவும் விசித்திரமானது. இச்செயன்முறையின்போது இவை தமது கூர்மையான அலகைக் கொத்தவும் பாத நகங்களை உறுதியாக மரத்தைப் பற்றிப்பிடிக்கவும் வாலை சமநிலையாக நிற்க ஆதாரமாகவும் பயன்படுத்துகின்றன.

மரங்கொத்தியின் பாதத்தின் முன்னால் இரண்டு விரல்களும் பின்னால் இரண்டு விரல்களும் காணப்படுகின்றன. இது ஏனைய பறவைகளிலிருந்தும் வித்தியாசமானதொரு கட்டமைப்பாகும். இந்த விரல்களால் மரத்தைப் பற்றிக்கொண்டு கீழே விழுந்துவிடாமல் மரத்தின் மேலும் கீழுமாக அவற்றால் நகரமுடியும். மரத்தைப் பற்றியதன் பின்பு மரத்தைக்கொத்த ஆரம்பிக்கின்றன.

ஒரு மரங்கொத்தி சாதாரணமாக ஒரு நாளைக்கு ஆயிரம் தடைவைகள் மரங்களைக் கொத்துகின்றது. ஒரு செக்கனுக்கு இதனால் 20 முறைகள் கொத்த முடியும். எவ்வளவு வேகமாகக் கொத்துகின்றது என்று பார்தீர்களா? இதே வேலையை எம்மால் செய்ய முடியுமா? முடியாது. அதுதான் ஒவ்வொரு படைப்பிற்கும் தேவையானதை அல்லாஹ்வே நிர்ணயித்துள்ளான். இவ்வாறு துரிதமாக இயங்கும்போது அதன் மண்டையோடு ஏதும் பாதிப்புக்களுக்கு உட்படாதவகையில் தலையில் உள்ள தசைகள் அதனைப் பாதுககாக்கின்றன.

மரங்களைக் கொத்தி தமது உணவைப் பெற்றுக்கொள்வதோடு கூடுகளையும் அமைத்துக்கொள்கின்றன இப்பறவைகள். பாதுகாப்பான இடத்திலும் உறுதியான மரங்களின் உச்சியிலும் தமது கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. அனேகமான பறவைகள் மரப் பொந்துகளில் கூடுகளை அமைக்கும்போது ஒரு நுழை வாயிலை மாத்திரமே அமைக்கின்றன ஆனால் மரங்கொத்திகள் தமது தற்பாதுகாப்பிற்காக இரண்டு வாயில்களை அமைத்துக்கொள்கின்றன. ஒரு வாயிலால் ஏதும் எதிரி விலங்குகள் வந்தால் இரண்டாவது வாயிலால் அது தப்பிததுவிடும்.

ஒரு பறவை மற்றப் பறவைகளுடன் தகவல்களைப் பறிமாற்றிக்கொள்ளவும் தமக்கு எதிகளிடமிருந்து ஆபத்து ஏற்படும்போது தம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் மரங்களைக் கொத்துவதன் மூலம் ஓசை எழுப்புகின்றன. இவற்றின் தொடர்பாடலுக்காக அல்லாஹ் இவற்றுக்கு வழங்கியிருக்கும் மிக அற்புதமான நுட்பமே இதுவாகும்.

இவற்றின் உடலில் உள்ள மற்றுமொரு அற்புதம்தான் இவற்றின் நாக்கு. இது ஒரு மரங்கொத்தியின் அலகைவிட ஐந்து மடங்கு நீண்டதாகும். கறையான் எறும்பு போன்றவற்றின் புற்றுகளினுள் தனது நீளமான நாக்கைச் செலுத்தி இரையைப் பிடிக்கின்றன. இவற்றின் நாவில் வழுவழுப்பான ஒட்டும் தன்மைவாய்ந்த ஒருவகைத் திரவம் காணப்படுகின்றது. எனவே இதன்மூலம் பூச்சிகள் எளிதில் மாட்டிக்கொள்கின்றன. மேலும் இவற்றின் நாக்கு, அலகின் மேற்பகுதியில் நாசித்துவராத்துக்கு அருகாமையால் ஆரம்பமாகி மண்டையோட்டைத் தள்ளி, தொண்டை வழியாக வாயை அடைகின்றது. எப்போதும் சாதாரன நிலையில் உள்ள நாவு இரையைப் பற்றும்போது நீளமாகும்.

பூச்சி புழுக்களல்லாது பழங்கள், விதைகள் போன்றவற்றை உணவாகக்கொள்ளும் பறவைகளும் உள்ளன. ஒரு பெண்பறவை இரண்டு முதல் எட்டு வரையான வெள்ளை நிற முட்டைகளை ஒரே தடைவையில் இடுகின்றது.

இதுவரை நாம்பார்த்த இப்பறவையின் நுணுக்கங்கள் எல்லாம் படிப்படியாகப் பரிணாமமடைந்து வந்திருப்பதென்பது அசாத்தியத்திலும் அசாத்தியமானதே! பண்டைய காலப் படிமங்கள்கூட இம்மரங்கொத்திப் பறவை 25 மில்லியன் வருடகாலம் பழைமையானதென உறுதிப்படுத்துகின்றன. ஆக அன்றிருந்த பறவைதான் இன்றும் உள்ளது. இவை யாவற்றினதும் படைப்பாளன் வல்லநாயன் அல்லாஹ்வேயன்றி வேறு யாராக இருக்கமுடியும். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...