"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

21 August 2013

பிரதான படைப்புகள் : மலக்கு, ஜின், மனிதன்.

ஓர் விஞ்ஞான ஒப்பீட்டாய்வு
இப்பிரபஞ்சத்தில் இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க சக்திஎன்று பல உள்ளன. இவற்றை பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம் மூன்றுக்கும் அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என அழைக்கப்படுகின்றது.
சக்திக்காப்பு விதியின் படி சடப்பொருட்கள் யாவும் அழியக் கூடியன. ஆனால் சக்தி அழிவதில்லை. அது நிலைத்திருக்கக் கூடியது. எல்பர்ட் எய்ன்ஸ்டீனின் சக்திச் சமன்பாட்டின் படி (E=mc2) “சடப் பொருட்கள் அனைத்தும் இறுதியில் சக்தியாகவே மாற்றமடைகின்றன. மறுதலையாக சக்தியே சடப்பொருளாகப் பரிணமிக்கிறது. சடம் அனைத்தும் சக்தியின் வடிவங்களேயன்றி வேறில்லை.
அல்குர்ஆனின் கூற்றுப்படி இறைவனே என்றும் நிலைத்திருப்பவன். (Real Absolute being) எய்ன்ஸ்டீனின் சக்திச் சமன்பாட்டின் படி சக்தியே என்றும் நிலையானது என்கிறது. உண்மையில் என்றும் நிலைத்திருப்பவன் இறைவனே. அவனே அனைத்து சக்திகளினதும் மூலம் என்பதை நாம் அறிகிறோம். குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்(3:2) (2:255)
சக்தி மற்றும் சடம் ஆகிய இரண்டிலுமான நாம் அறிந்த இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன. அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால் (LIGHT/RAY) படைக்கப்பட்ட மலக்குகள், இரண்டு சுட்டெரிக்கும் நெருப்பின் கொழுந்தினால் படைக்கப்பட்ட ஜின்கள் (FIRE - Smokeless Flame). இதனை விஞ்ஞான ஒளியின் நோக்கினால் ஜின்கள் ப்ளாஸ்மா (Plasma) வடிவில் இருப்பதாகவே எண்ணத்தோனறுகிறது. இவை இரண்டும் சக்திக்குள் அடங்குபவை. மூன்றாவது களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கம். இது சடத்தினுள் அடங்குகின்றது.
களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப்படைத்தான். நெருப்பின் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான் (55:14,15)
மனிதன் களிமண் எனும் சடத்தினால் ஆக்கப்பட்டாலும் அவனது உடலில் ஊதப்பட்டிருப்பது அல்லாஹ்வின் ரூஹ். அல்லாஹ் சக்தியின் மூலம், அவன் அழியாதவன் என்பதால் அவனது ரூஹிலிருந்து ஊதப்பட்ட மனித ரூஹும் அழிவதில்லை. ஏனெனில் மனித ரூஹும் ஒரு சக்தியாக (Energy) இருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன். ஜின்களும் மலக்குகளும் கூட சக்திக் கூறுகளினால் ஆக்கப்பட்டவர்கள். எனவே ரூஹ், ஜின், மலக்கு இவைகள் இவ்வுலகம் அழிந்தாலும், அழியாது நிலைத்திருக்கும் மறுமை வாழ்வை அவற்றால் அனுபவிக்க முடிகின்றது. மலக்குகளுக்கு சுவனம் நரகம் இல்லாவிட்டாலும் அவையும் நிலைத்திருக்கக்கூடியனவே!
களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித  உடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்புச் சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலை (Plasma-Radiant energy) அவை கொண்டுள்ளன. அதேபோன்று ஒளியினால் படைக்கப்பட்ட மலக்குகள் ஒளிக் கீற்றுக்களைப் பாய்ச்சுபவர்களாக இல்லை. ஆனால் ஒளியின் பண்புகளான ஒளியின் வேகத்தில் பயணித்தல் (300,000Km/h), எமது கண்களுக்குப் புலப்படாத கதிர்களைக் கொண்டிருத்தல் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர்.
இம்மூன்று படைப்புகளுக்கும் கால, சூழ, வெளி போன்றவற்றுக்கு ஏற்ப தேவையான ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். மலக்குகள் அதிகூடிய வேகத்தில் விண்ணில் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரை பயணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். காரணம் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்.
அதேபோன்று  மனிதர்களைப்போல் அல்லாமல் பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் ஜின்கள் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும்.  இடம், காலம், வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல! ஜின்களுக்கு அல்லாஹ் இவ்வாற்றலை மட்டுப்படுத்தி கொடுத்துள்ளான். ஏழு வானங்களைப் படைத்து அதில் தாழ்வான வானத்தில் ஒரு தடுப்பையும் அமைத்துள்ளான். அல்குர்ஆன் கூறுகிறது.
 “நிச்சயமாக நாம் (பூமிக்கு) சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்தோம்.  கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக (அவ்வாறு செய்தோம்) மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களது பேச்சுக்களை மறைந்திருந்து ஷைதான்களாகிய) இவர்கள் செவியேற்க மாட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரிகொள்ளிகளால்) எறியப்படுவார்கள்.” (37:6-10) (15:16-18) (67:05)
இவ்விடயத்தில் அனுபவப்பட்ட ஜின்களே இவ்வாறு கூறுகின்றன.
நாங்கள் வானத்தைத் தொட்டுப் பாரத்தோம். அப்போது வலிமைமிக்க பாதுகாவலர்களாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டதாக அதனைக்கண்டோம். (முன்பு) அங்கு (பேசப்படுபவற்றைச்) செவியேற்பதற்காக பல இடங்களில் அமர்பவர்களாகவும் இருந்தோம். (தற்போது அவற்றை) எவர் கேட்கிறாரோ அவர் குறிவைத்து (த் தாக்கக்) காத்திருக்கும் நெருப்புப்பந்தத்தை தமக்காகக் காண்பார்”. (72:8,9)
மனிதனை  அல்லாஹ்  பூமியில்  படைத்து  அவனுக்கான வாழ்வாதாரங்களையும் வழங்கியுள்ளான். மனிதனால் சுயமாக பிரபஞ்ச வெளியைக் கடக்க முடியாவிட்டாலும் அதற்கான சுல்தான் சக்திஇல்லாமல் செல்ல முடியாது என்று அல்குர்ஆன் (55:33) கூறுகின்றது.
மொத்தமாக நோக்கும்போது இப்பிரபஞ்ச வெளி எங்கும் மலக்குகளும், ஜின்களும் உலாவிக்கொண்டிருக்கின்றனர். சிலவேளை நாம் அறியாத இன்னும் பல படைப்புகளை அல்லாஹ் இப்பிரபஞ்சத்தில் வைத்திருக்கவும் கூடும். இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் இறைவனின் வல்லமைகளையும் நோக்கும்போது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகின்றது.
அல்லாஹ்வின் படைப்புகளான ஜின்களையும், மலக்குகளையும் நமது   கண்களால்   காண முடியாது.  நமது கண்களுக்கு  வெறும் 400 தொடக்கம் 700 நானோமீட்டர் (nanometer) அலைநீளத்திற்கு உட்பட்ட கதிர்களையே காண முடியும். மலக்குகள் இவற்றுக்கு அப்பாட்பட்ட அலைநீளம் கொண்ட கதிர்களால் படைக்கப்பட்டிருநப்பதால்தான் அவற்றை எம்மால் காண முடியாதுள்ளது.
ஜன்ன  என்ற அரபிச் சொல்லிருந்து ஜின் என்ற பதம் வந்துள்ளது. இதற்கு       மறைக்கப்பட்ட பொருள் என்று  அர்த்தம். ஜின்கள் நெருப்புச் சுவாலை வெப்பத்தால் அதாவது மின்காந்த வெப்ப அலை வடிவில் (Electromagnetic-Plasma Radiant Energy) படைக்கப்பட்டிருப்பதால் அவர்களையும் எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவர்களால் எம்மைப் பார்க்க முடியும்.
மனிதனால் இடத்திற்கு ஏற்றவாறு தனது குணத்தை (பச்சோந்தி) மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் மலக்குகளாலும் ஜின்களாலும் தமது உருவத்தையே மாற்றி பிற உருவங்களில் வர முடியும். நபியவர்கள் கூறினார்கள் மலக்குகள் நாய், பன்றி தவிர்ந்த மற்ற உயிரினங்களின் உருவத்தில் வருகின்றன”. அதேபோன்று ஜின்களுக்கும் தமது உருவத்தை மாற்றி பாம்பு, நாய், பூனை போன்ற உருவங்களில் வருகின்றன.   சைத்தான் அதிகமாக கருப்பு நிற நாய்களின் வடிவத்தில் வருவதாக நபியவர்கள் கூறினார்கள்.
அதேபோன்று வீட்டினுள் ஒரு ஜின் பாம்பாக உருவெடுத்து வந்தபோது அதனை அடிக்க முற்பட்ட ஒரு ஸஹாபியை அது தீண்டி அவர் மரணித்த சம்பவம் நபியவர்களுக்கு எத்திவைக்கப்பட்டமையும்வீடுகளுக்கு பாம்பு வந்தால் மூன்று முறை அவற்றை வெளியேறுமாறு சொல்லுமாறும் வெளியேறினால் அது ஜின் என்றும் இல்லாவிட்டால் அது பாம்புதான் அதனை அடிக்குமாறும் நபியவர்கள் கூறிய விடயங்களை நாம் அறிவோம்.
கடும் வெப்பத்தால் படைக்கப்பட்டு, பிளாஸ்மா நிலையில் உள்ள ஜின்கள் உருவம் மாறி வரும்போது வெப்பத்தை இழுக்கும் தன்மை கொண்ட கருப்பு நிற உருவில் தங்களை மறைத்துக் கொள்ளுகின்றனர். மேலும் மற்ற நிறங்களை விட கருப்பு நிறமானது கன பரிமாணங்களையும் மறைக்கும் தன்மை கொண்டது என்பதால் அந்த நிறத்தை அதிகம் தேர்வுசெய்வதாகவும் இருக்கலாம்.
சூரிய ஒளியில் உள்ள வெப்ப அலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கருப்பு நிறத்துக்கு  உள்ளது. மழைக் காலத்தில் நாம் கருப்புக் குடை பிடிக்கின்றோம். ஆனால் கோடை காலத்தில் கருப்பு குடைகள் வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்டதால் வெண்மை நிற குடைகளே சிறந்தது. ஏனெனில் வெண்மை நிறம் சூரிய வெப்பத்தை பிரதிபலித்து திருப்பி மேலே அனுப்பும் தன்மை கொண்டதாகும். கிரிக்கட் வீரர்கள் வெள்ளை உடை அணிவதும் மூக்கு, நெற்றி, உதடு போன்ற பகுதிகளுக்கு வெள்ளை நிறம் பூசுவதும் சூரியனின் வெப்பத்தைத் தவிர்க்கவாகும். எனவே ஜின்கள் கருப்பு நிறத்தை தம்மை மறைத்துக்கொள்வதற்காகத் தெரிவுசெய்வதாக இருக்கலாம்.
இறைவனின் வல்லமைகளை உணர்த்தும் இப்படைப்புகளோடு  விஞ்ஞானிகள் ஏலியன்ஸ் என்ற பெயரில் சுமார் 50 வருடகாலமாக ஆராய்ந்து வரும் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி அடுத்த தொடரில் ஆராய்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஓர் விஞ்ஞான ஒப்பீட்டாய்வு
இப்பிரபஞ்சத்தில் இறைவனது படைப்புகளை இரண்டாக வகைப்படுத்த முடியும். ஒன்று சக்திகள் (Energies). அதில் மின் சக்தி, வெப்ப சக்தி, காந்த சக்தி, ஒளிச் சக்தி, இயக்க சக்திஎன்று பல உள்ளன. இவற்றை பௌதியவியலில் (Physics) உள்ளடக்குவர். இரண்டாவது சடம் (Matter) எனப்படுகின்றது. இதில் திண்மம், திரவம், வாயு என்பவற்றோடு இம் மூன்றுக்கும் அப்பாட்பட்ட நான்காவது ஒரு பொருளும் உள்ளது. அது ப்ளாஸ்மா (Plasma) என அழைக்கப்படுகின்றது.
சக்திக்காப்பு விதியின் படி சடப்பொருட்கள் யாவும் அழியக் கூடியன. ஆனால் சக்தி அழிவதில்லை. அது நிலைத்திருக்கக் கூடியது. எல்பர்ட் எய்ன்ஸ்டீனின் சக்திச் சமன்பாட்டின் படி (E=mc2) “சடப் பொருட்கள் அனைத்தும் இறுதியில் சக்தியாகவே மாற்றமடைகின்றன. மறுதலையாக சக்தியே சடப்பொருளாகப் பரிணமிக்கிறது. சடம் அனைத்தும் சக்தியின் வடிவங்களேயன்றி வேறில்லை.
அல்குர்ஆனின் கூற்றுப்படி இறைவனே என்றும் நிலைத்திருப்பவன். (Real Absolute being) எய்ன்ஸ்டீனின் சக்திச் சமன்பாட்டின் படி சக்தியே என்றும் நிலையானது என்கிறது. உண்மையில் என்றும் நிலைத்திருப்பவன் இறைவனே. அவனே அனைத்து சக்திகளினதும் மூலம் என்பதை நாம் அறிகிறோம். குர்ஆன் கூறுகின்றது.
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை. அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்(3:2) (2:255)
சக்தி மற்றும் சடம் ஆகிய இரண்டிலுமான நாம் அறிந்த இறைவனின் மூன்று பெரும் படைப்புகள் இப்பிரபஞ்சத்தில் உள்ளன. அவை ஒன்று ஒளியால் அல்லது கதிரால் (LIGHT/RAY) படைக்கப்பட்ட மலக்குகள், இரண்டு சுட்டெரிக்கும் நெருப்பின் கொழுந்தினால் படைக்கப்பட்ட ஜின்கள் (FIRE - Smokeless Flame). இதனை விஞ்ஞான ஒளியின் நோக்கினால் ஜின்கள் ப்ளாஸ்மா (Plasma) வடிவில் இருப்பதாகவே எண்ணத்தோனறுகிறது. இவை இரண்டும் சக்திக்குள் அடங்குபவை. மூன்றாவது களிமண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கம். இது சடத்தினுள் அடங்குகின்றது.
களிமண்ணிலிருந்து, அவன் மனிதனைப்படைத்தான். நெருப்பின் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான் (55:14,15)
மனிதன் களிமண் எனும் சடத்தினால் ஆக்கப்பட்டாலும் அவனது உடலில் ஊதப்பட்டிருப்பது அல்லாஹ்வின் ரூஹ். அல்லாஹ் சக்தியின் மூலம், அவன் அழியாதவன் என்பதால் அவனது ரூஹிலிருந்து ஊதப்பட்ட மனித ரூஹும் அழிவதில்லை. ஏனெனில் மனித ரூஹும் ஒரு சக்தியாக (Energy) இருக்கவேண்டும் என்றே கருதுகின்றேன். ஜின்களும் மலக்குகளும் கூட சக்திக் கூறுகளினால் ஆக்கப்பட்டவர்கள். எனவே ரூஹ், ஜின், மலக்கு இவைகள் இவ்வுலகம் அழிந்தாலும், அழியாது நிலைத்திருக்கும் மறுமை வாழ்வை அவற்றால் அனுபவிக்க முடிகின்றது. மலக்குகளுக்கு சுவனம் நரகம் இல்லாவிட்டாலும் அவையும் நிலைத்திருக்கக்கூடியனவே!
களிமண்ணிலிருந்து படைக்கப்பட்ட மனிதனின் உடம்பு களி மண்ணாக இல்லை, இரத்தமும் தசையுமாகவே உள்ளது. அதேசமயம் மண்ணில் உள்ள அனைத்து சத்துக்களும் (Minerals) மனித  உடலில் உள்ளது. இது போலவே நெருப்புச் சுடரிலிருந்து படைக்கப்பட்ட ஜின்கள் நெருப்புச் சுவாலையாக இருப்பதில்லை. ஆனால் நெருப்பின் பண்பான வெப்ப ஆற்றலை (Plasma-Radiant energy) அவை கொண்டுள்ளன. அதேபோன்று ஒளியினால் படைக்கப்பட்ட மலக்குகள் ஒளிக் கீற்றுக்களைப் பாய்ச்சுபவர்களாக இல்லை. ஆனால் ஒளியின் பண்புகளான ஒளியின் வேகத்தில் பயணித்தல் (300,000Km/h), எமது கண்களுக்குப் புலப்படாத கதிர்களைக் கொண்டிருத்தல் போன்ற பண்புகளைக் கொண்டுள்ளனர்.
இம்மூன்று படைப்புகளுக்கும் கால, சூழ, வெளி போன்றவற்றுக்கு ஏற்ப தேவையான ஆற்றல்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். மலக்குகள் அதிகூடிய வேகத்தில் விண்ணில் ஸித்ரதுல் முன்தஹா என்ற இடம் வரை பயணிக்கும் ஆற்றல் பெற்றவர்கள். காரணம் அவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள்.
அதேபோன்று  மனிதர்களைப்போல் அல்லாமல் பிளாஸ்மா எனும் உருவமற்ற நிலையில் ஜின்கள் இருப்பதால் இவர்களால் அண்டவெளி முழுவதும் குறுகிய நேரத்தில் சுற்றிவர முடியும்.  இடம், காலம், வெளி, இவர்களுக்கு பொருட்டல்ல! ஜின்களுக்கு அல்லாஹ் இவ்வாற்றலை மட்டுப்படுத்தி கொடுத்துள்ளான். ஏழு வானங்களைப் படைத்து அதில் தாழ்வான வானத்தில் ஒரு தடுப்பையும் அமைத்துள்ளான். அல்குர்ஆன் கூறுகிறது.
 “நிச்சயமாக நாம் (பூமிக்கு) சமீபமாக உள்ள வானத்தை நட்சத்திரங்களின் அழகைக்கொண்டு அலங்கரித்தோம்.  கட்டுப்படாத ஒவ்வொரு ஷைத்தானிலிருந்தும் பாதுகாப்பதற்காக (அவ்வாறு செய்தோம்) மிக உயர்வான (மலக்குகளின்) கூட்டத்தார்பால் (அவர்களது பேச்சுக்களை மறைந்திருந்து ஷைதான்களாகிய) இவர்கள் செவியேற்க மாட்டார்கள். ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (எரிகொள்ளிகளால்) எறியப்படுவார்கள்.” (37:6-10) (15:16-18) (67:05)
இவ்விடயத்தில் அனுபவப்பட்ட ஜின்களே இவ்வாறு கூறுகின்றன.
நாங்கள் வானத்தைத் தொட்டுப் பாரத்தோம். அப்போது வலிமைமிக்க பாதுகாவலர்களாலும் தீப்பந்தங்களாலும் நிரப்பப்பட்டதாக அதனைக்கண்டோம். (முன்பு) அங்கு (பேசப்படுபவற்றைச்) செவியேற்பதற்காக பல இடங்களில் அமர்பவர்களாகவும் இருந்தோம். (தற்போது அவற்றை) எவர் கேட்கிறாரோ அவர் குறிவைத்து (த் தாக்கக்) காத்திருக்கும் நெருப்புப்பந்தத்தை தமக்காகக் காண்பார்”. (72:8,9)
மனிதனை  அல்லாஹ்  பூமியில்  படைத்து  அவனுக்கான வாழ்வாதாரங்களையும் வழங்கியுள்ளான். மனிதனால் சுயமாக பிரபஞ்ச வெளியைக் கடக்க முடியாவிட்டாலும் அதற்கான சுல்தான் சக்திஇல்லாமல் செல்ல முடியாது என்று அல்குர்ஆன் (55:33) கூறுகின்றது.
மொத்தமாக நோக்கும்போது இப்பிரபஞ்ச வெளி எங்கும் மலக்குகளும், ஜின்களும் உலாவிக்கொண்டிருக்கின்றனர். சிலவேளை நாம் அறியாத இன்னும் பல படைப்புகளை அல்லாஹ் இப்பிரபஞ்சத்தில் வைத்திருக்கவும் கூடும். இப்பிரபஞ்சத்தின் பிரம்மாண்டத்தையும் இறைவனின் வல்லமைகளையும் நோக்கும்போது அவ்வாறுதான் எண்ணத்தோன்றுகின்றது.
அல்லாஹ்வின் படைப்புகளான ஜின்களையும், மலக்குகளையும் நமது   கண்களால்   காண முடியாது.  நமது கண்களுக்கு  வெறும் 400 தொடக்கம் 700 நானோமீட்டர் (nanometer) அலைநீளத்திற்கு உட்பட்ட கதிர்களையே காண முடியும். மலக்குகள் இவற்றுக்கு அப்பாட்பட்ட அலைநீளம் கொண்ட கதிர்களால் படைக்கப்பட்டிருநப்பதால்தான் அவற்றை எம்மால் காண முடியாதுள்ளது.
ஜன்ன  என்ற அரபிச் சொல்லிருந்து ஜின் என்ற பதம் வந்துள்ளது. இதற்கு       மறைக்கப்பட்ட பொருள் என்று  அர்த்தம். ஜின்கள் நெருப்புச் சுவாலை வெப்பத்தால் அதாவது மின்காந்த வெப்ப அலை வடிவில் (Electromagnetic-Plasma Radiant Energy) படைக்கப்பட்டிருப்பதால் அவர்களையும் எம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவர்களால் எம்மைப் பார்க்க முடியும்.
மனிதனால் இடத்திற்கு ஏற்றவாறு தனது குணத்தை (பச்சோந்தி) மாற்றிக்கொள்ள முடியும். ஆனால் மலக்குகளாலும் ஜின்களாலும் தமது உருவத்தையே மாற்றி பிற உருவங்களில் வர முடியும். நபியவர்கள் கூறினார்கள் மலக்குகள் நாய், பன்றி தவிர்ந்த மற்ற உயிரினங்களின் உருவத்தில் வருகின்றன”. அதேபோன்று ஜின்களுக்கும் தமது உருவத்தை மாற்றி பாம்பு, நாய், பூனை போன்ற உருவங்களில் வருகின்றன.   சைத்தான் அதிகமாக கருப்பு நிற நாய்களின் வடிவத்தில் வருவதாக நபியவர்கள் கூறினார்கள்.
அதேபோன்று வீட்டினுள் ஒரு ஜின் பாம்பாக உருவெடுத்து வந்தபோது அதனை அடிக்க முற்பட்ட ஒரு ஸஹாபியை அது தீண்டி அவர் மரணித்த சம்பவம் நபியவர்களுக்கு எத்திவைக்கப்பட்டமையும்வீடுகளுக்கு பாம்பு வந்தால் மூன்று முறை அவற்றை வெளியேறுமாறு சொல்லுமாறும் வெளியேறினால் அது ஜின் என்றும் இல்லாவிட்டால் அது பாம்புதான் அதனை அடிக்குமாறும் நபியவர்கள் கூறிய விடயங்களை நாம் அறிவோம்.
கடும் வெப்பத்தால் படைக்கப்பட்டு, பிளாஸ்மா நிலையில் உள்ள ஜின்கள் உருவம் மாறி வரும்போது வெப்பத்தை இழுக்கும் தன்மை கொண்ட கருப்பு நிற உருவில் தங்களை மறைத்துக் கொள்ளுகின்றனர். மேலும் மற்ற நிறங்களை விட கருப்பு நிறமானது கன பரிமாணங்களையும் மறைக்கும் தன்மை கொண்டது என்பதால் அந்த நிறத்தை அதிகம் தேர்வுசெய்வதாகவும் இருக்கலாம்.
சூரிய ஒளியில் உள்ள வெப்ப அலைகளை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கருப்பு நிறத்துக்கு  உள்ளது. மழைக் காலத்தில் நாம் கருப்புக் குடை பிடிக்கின்றோம். ஆனால் கோடை காலத்தில் கருப்பு குடைகள் வெப்பத்தை உள்ளிழுக்கும் தன்மை கொண்டதால் வெண்மை நிற குடைகளே சிறந்தது. ஏனெனில் வெண்மை நிறம் சூரிய வெப்பத்தை பிரதிபலித்து திருப்பி மேலே அனுப்பும் தன்மை கொண்டதாகும். கிரிக்கட் வீரர்கள் வெள்ளை உடை அணிவதும் மூக்கு, நெற்றி, உதடு போன்ற பகுதிகளுக்கு வெள்ளை நிறம் பூசுவதும் சூரியனின் வெப்பத்தைத் தவிர்க்கவாகும். எனவே ஜின்கள் கருப்பு நிறத்தை தம்மை மறைத்துக்கொள்வதற்காகத் தெரிவுசெய்வதாக இருக்கலாம்.
இறைவனின் வல்லமைகளை உணர்த்தும் இப்படைப்புகளோடு  விஞ்ஞானிகள் ஏலியன்ஸ் என்ற பெயரில் சுமார் 50 வருடகாலமாக ஆராய்ந்து வரும் வேற்றுக் கிரகவாசிகள் பற்றி அடுத்த தொடரில் ஆராய்வோம்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

12 August 2013

நிறங்களில் இறை அற்புதம்

நாம் பார்க்கும் திசையெல்லாம் அழகுரக் காட்சியளிக்க முக்கிய காரணம் அல்லாஹ் அவனது படைப்புகள் அனைத்தையும் பல்வேறு நிறக்கலவையினால் படைத்திருப்பதால்தான். பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், தாவரங்கள், புற்பூண்டுகள், தரைத்தோற்றங்கள் என அனைத்திலும் இறைவன் தீட்டிய வண்ணங்களின் மகிமையைக் கண்டுகொள்ள முடியும். மனிதன் செயற்கையாகச் செய்யும் பொருட்களிலும்கூட வண்ணங்கள் முதலிடம் பெறுவதை அவதானிக்கலாம். அல்லாஹ் திருக்குர்ஆனிலும் பல்வேறு இடங்களில் நிறங்கள் பற்றிக் கூறி அவனது படைப்புகளை பல்வேறு நிறங்களில் படைத்திருப்பதாகவும் அதுபற்றி சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் இருப்பதாகவும் கூறுகின்றான். 
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், பற்பல நிறங்களையுடைய விதவிதமான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன. இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் அறிஞர்கள்தாம். [35:27 ,28]

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அகிலத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. [30:22]

நிறம் எவ்வாறு தோன்றுகின்றது?

ஒளிக்கதிர் ஒன்று பொருளொன்றின் மீது பட்டுத் தெறிப்படைந்து அது
நமது கண்களை வந்தடைவதால்தான் அப்பொருள் எமது கண்களுக்குப் புலப்படுகின்றது. நாம் வாழும் புவியைப் பொறுத்தரை ஒளியின் மூலம் சூரியனாகும். அடிப்படையில் சூரிய ஒளி “வெள்ளொளி” எனப்படுகின்றது. இதில் ஏழு நிறங்கள் கலந்திருப்பதாக விஞ்ஞானி ஐஷாக் நியுட்டனே (1671இல்) முதலாவதாகக் கண்டுடறிந்தார். இந்த ஏழு நிறங்களும் சேர்ந்தே இந்த உலகில் பலகோடி வண்ண மாயாஜாலங்களைப் புரிந்துவருவதாக அவர் நம்பினார்.

சிவப்பு (Red), செம்மஞ்சள்  (Orange), மஞ்சல் (yellow), கரு நீலம் (indigo), பச்சை (green), நீலம் (blue) ஊதா (violet) என்பனவே அந்த அடிப்படை ஏழு நிறங்களுமாகும். சூரிய ஒளியிலிருந்து தோன்றும் வானவில் கூட இந்த ஏழு நிறங்களையும் வெவ்வேறாகப் பிரதிபளிப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஒரு அரியத்தினூடாக ஒளியைப் பாய்ச்சும்போது அவ்வொளி ஏழு நிறங்களையும் வெவ்வேறாகப் பிரித்து வெளிப்படுத்துவதைச் செய்முறையூடாகவும் அவதானிக்கலாம். சிலர் அடிப்படை நிறங்கள் மூன்று என்றும் கூறுவர். என்றாலும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டது ஏழு என்பதேயாகும்.

அடிப்படை நிறங்கள் ஏழு என விஞ்ஞானம் கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்குர்ஆன் இதனை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. அரபு மொழியில் நிறத்தைக்கு குறிக்க “லவ்ன்” என்ற பதமும் அதன் பண்மை வடித்தில் நிறங்கள் என்பதைக் குறிக்க “அல்வான்” என்றும் பயன்படுத்தப்படுகின்றது. அல்குர்ஆனில் நிறங்கள் “அல்வான்” என மொத்தமாக ஏழு தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சூரியனிலிருந்து புவியை நோக்கி வரும் பல்வேறு கதிர்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைகின்றன. புவியை அடையும் கதிர்கள் அணைத்தையும்கூட எம்மால் பார்க்க முடியாது. அவற்றிலும் சில கதிர்கள் மட்டுமே எமது கண்களுக்குத் தெரிகின்றன. கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள்கூட வெறும் 400 தொடக்கம் 700 நானோமீட்டர் (nanometer) அலைநீளத்திற்கு உட்பட்டவையாகும். (நனோமீட்டர் என்பது ஒரு மீட்டரை ஒரு பில்லியனால் பிரித்தால் வரும் மிக நுட்பமான பகுதியாகும்.) இந்தக் கதிர்களின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையில் ஊதா நிற ஒளியும் உள்ளன.
அல்லாஹ்வின் அற்புதமானதொரு படைப்பு
இந்த அடிப்படையான ஏழு கதிர்கள் அல்லாது இன்னும் கோடிக்காணக்கான எமது கண்களுக்குப் புலப்படாத கதிர்கள் இப்பிரபஞசத்திலும், எம்மைச் சூழவும் இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். தற்போது அல்லாஹ்வின் ஒரு படைப்பு பற்றி விளங்க முயற்சிப்போம். அல்லாஹ் மலக்குமார்களை ஒளியால் படைத்திருக்கின்றான். ஒளி என்பதும் ஒரு கதிர்தான். எனவே மலக்குகள் 400 – 700 நனோமீட்டர்களுக்கு அப்பாற்பட்ட கதிர்வீச்சினால் படைக்கப்பட்டவர்களாக இருக்கலாம். எனவேதான் அவர்கள் எமது பக்கத்தில், எம்மைச் சூழ இருந்தபோதிலும் எம்மால் அவர்களைப் பார்க்க முடியாதுள்ளது. ஜின்கள் நெருப்பின் சுவாலையினால் படைக்கப்பட்டதொரு இனம் என்பதாலும் அவற்றையும் எமது ரூஹ்- ஆன்மாவையும் நமது கண்களால் காணமுடியாதிருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இறை மறுப்பாளர்கள் கூறுவதுபோன்று கண்களால் காண முடியாது என்பதற்காக மலக்குகளோ, ஜின்களோ ஏன் அல்லாஹ்வோ இல்லை என்று ஆகிவிடாது. அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களைப் பார்க்க்க்கூடிய சக்தி, ஆற்றல் எமது கண்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் ஸினாய் மலையில்வைத்து நபி மூஸா அவர்கள் அல்லாஹ்விடம் உன்னைப் பார்க்கவேண்டும் என்று கூறியபோது “நீர் என்னைப் பார்க்க முதல் இந்த நெருப்பைப் பாரும். அதனைப் பார்க்க உம்மால் முடிந்தால் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி ஒரு நெருப்புக் குண்டத்தை அல்லாஹ் உருவாக்கினான். அதனைப் பார்க்க முடியாமல் மூஸா அவர்கள் மயக்கமுற்று கீழே வீழ்ந்தார்கள். ஆக இவ்வுலகில் பார்வைச் சக்தி 400nm முதல் 700nm என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு மலக்குகளையோ, அல்லாஹ்வையோ பார்க்க முடியாது.
ஒருவகையில் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பார்வைப் புலன் அல்லாஹ்வின் ஒரு அருளும்தான். ஏனெனில் எல்லாக் கதிர்களையும் பார்க்கும் சக்தியை அல்லாஹ் இக்கண்களுக்குத் தந்திருந்தால் எக்ஸ் கதிர்கள் (X-Ray), கலியூதாக் கதிர்கள் (Ultra Violet Rays), காமாக் கதிர்கள் (Gamma Rays), கொஸ்மிக் கதிர்கள் (Cosmic Rays) என எல்லாக் கதிர்களும் எமது கண்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் நமது உடலை எக்ஸ்ரே (X-Ray) எடுத்துப் பார்த்தால் எப்படி எழும்புகள் மட்டும் தெரிகின்றதோ அதேபோன்று பார்ப்பவர்களெல்லாம் அழகின்றி பயங்கரமாக எழும்புகளாகக் காட்சியளித்திருப்பர். அல்லாஹ் பாதுகாத்துவிட்டான். மட்டுப்படுத்தப்பட்ட பார்வைச் சக்தியால்தான் தற்போது பார்ப்பவை அழகாகத் தோன்றுகின்றன.
ஆனால் நாம் மரணிக்கும்போது (ஸகராத் நிலையில்) அல்லாஹ் எமக்கு பிற கதிர்களையும் நிறங்களையும் பார்க்கும் அபார சக்தியைத்தருகின்றான். அதனால்தான் ரூஹைக் கைப்பற்றவரும் மலக்கையும் மண்ணறையில் வேதனை செய்யும் மலக்குகளையும் எமது ரூஹ் பிரிந்து செல்வதையும் பார்க்க முடிகின்றது. இங்கு மூஸா நபியால் பார்க்கச் சக்திபெறாத அல்லாஹ்வை சுவனத்தில் பார்க்க முடிவதும் மரணத்துடன் அல்லாஹ் எமது கண்களுக்கு தற்போதிருப்பதைவிட மேலதிகமான சக்தியைத் தருவதால்தான்.
பிரபஞ்சத்தில் அதிக வேகத்தில் பயணிக்கும் பொருள் ஒளி என்றும், ஒளி செக்கனுக்கு 300,000Km வேகத்தில் பயணிக்கிறது என்றும் நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. மலக்குகளும் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள் என்றவகையில் அவர்களும் ஒளியிற்கு சமாந்திரமான கதியில் பயணிக்கிறார்கள் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் மூன்று அல்குர்ஆனிய வசனங்களையும் (32:5,70:4,10:5) அடிப்படையாகக் கொண்டு நிறுவுகின்றனர். (பார்க்க : அல்ஹஸனாத் / டிசம்பர் / 2006 / பக்.36)  
உளவியலில் நிறம்.
மனிதனின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் நிறம் எவ்வாறு சம்மந்தப்படுகிறது என்பதைப் பற்றி கற்கும் கற்கைக்கு நிற உளவியல்” (Colour psychology) என்று கூறப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தமான ஏதோ ஒரு நிறம் இருக்கும். அந்த நிறம் விழித்திரையை அடைந்து மின்தூண்டல்களாக மாற்றப்பட்டு பார்வை நரம்புகளினூடாக மூளைக்குக் கடத்தப்படுகின்றன. பின்னர் அங்கு அது ஒரு அதிர்வை (vibrations) உண்டாக்கும். அது அவருக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். அதனால்தான் பூந்தோட்டங்களுக்கு நாம் சென்றால் இனம்தெரியாததொரு மனநிம்மதியும், புத்துணர்ச்சியும் எம்மை ஆட்கொள்கின்றது.
அதேபோன்று ஒருவருக்கு பிடிக்காத நிறங்களும் உண்டு. அது அவரை வெருப்படையச் செய்யும். கருப்பு நிறத்திற்கு அஞ்சுபவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் இருளுக்கு அஞ்சுகின்றனர். பிடித்த, பிடிக்காத நிறங்களை வைத்து ஒருவரது உள்ளத்தின் தன்மையை, அவரது ஆளுமையை இனங்கானும் முறை உளவியலில் மேற்கொள்ளப்படுகின்றது. மனிதனுக்கு மட்டுமன்றி தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் என அனைத்தும் ஏதோ ஒரு நிறத்தினால் தூண்டப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற உளவியலில் ஆபத்தைக் குறிக்கும் நிறங்களாக மஞ்சளும் கருப்பும் காணப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிறமும் ஒரு உளவியல் கருத்தைக் கூறுகின்றது.
நிறம் பற்றி அல்குர்ஆன்

நபியவர்கள் வெள்ளை நிறத்தை அதிகம் விரும்பினார்கள், கருப்பு நிறத்தையும் காவி நிறத்தையும் தவிர்ந்துகொள்ளுமாறு கூறினார்கள். இவ்வாறு நபிகளாரும் நிறம் பற்றி கரிசனை செழுத்தியுள்ளார்கள். விஞ்ஞானம் அடிப்படையில் 7 நிறங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அல்குர்ஆன் நிறம் என்ற வார்த்தையை 7 இடங்களில் பயன்படுத்தியுள்ளது. சுவனம் பசுமையானது என்று கூறும் இஸ்லாம் அதன் நிறமான பச்சை நிறம் அல்குர்ஆனில் 8 இடங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் சுவனத்தின் வாயில்கள் 8 என்றும் கூறியுள்ளார்கள். அதேபோன்று கருப்பு நிறம் அல்குர்ஆனில் 7 இடங்களில் வந்துள்ளது. நரகின் நிறமும் கருப்பு என்பதாக நபியவர்கள் கூறினார்கள். அதன் வாயில்களின் எண்ணிக்கையும் 7 என்று அல்குர்ஆன் கூறுகின்றது. மஞ்சல் நிறம் 5 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அல்குர்ஆனில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிறம் வெள்ளையாகும்.

இம்முழுப் பிரபஞ்சமும் தட்செயலாகத் தோன்றியது என்று கூறும் டாவினிஸவாதிகள் ஒவ்வொரு படைப்பிலும் காணப்படும் வர்ணஜாலங்களைப் பார்த்து வியக்கின்றனர். சாதாரணமாக மனிதன் தயாரிக்கும் ஒரு வீட்டிற்கே பல கடின முயற்சிகளால் பல்வேறு நிறங்களைத் தீட்டி அழகுபடுத்துகின்றான். அப்படியானால் இப்பாரி உலகம் மட்டும் எவ்வாறு தற்செயலாக அழகழகாக வர்ணம்பெற்று வந்திருக்க முடியும். இல்லை. நிச்சயமாக இது வல்லவன் அல்லாஹ்வின் ஒப்பற்ற படைப்பாற்றலின் வல்லமைதான், அவனது தூரிகையிலிருந்து சிந்திய வண்ணங்களால்தான் இவ்வுலகம் நிறம்பெற்றிருக்கிறது என்பதற்கு நிறங்களே சாட்சி.

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. [16:13] 

ஆலிப் அலி (இஸ்லாஹி)
நாம் பார்க்கும் திசையெல்லாம் அழகுரக் காட்சியளிக்க முக்கிய காரணம் அல்லாஹ் அவனது படைப்புகள் அனைத்தையும் பல்வேறு நிறக்கலவையினால் படைத்திருப்பதால்தான். பறவைகள், மிருகங்கள், பூச்சிகள், தாவரங்கள், புற்பூண்டுகள், தரைத்தோற்றங்கள் என அனைத்திலும் இறைவன் தீட்டிய வண்ணங்களின் மகிமையைக் கண்டுகொள்ள முடியும். மனிதன் செயற்கையாகச் செய்யும் பொருட்களிலும்கூட வண்ணங்கள் முதலிடம் பெறுவதை அவதானிக்கலாம். அல்லாஹ் திருக்குர்ஆனிலும் பல்வேறு இடங்களில் நிறங்கள் பற்றிக் கூறி அவனது படைப்புகளை பல்வேறு நிறங்களில் படைத்திருப்பதாகவும் அதுபற்றி சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் இருப்பதாகவும் கூறுகின்றான். 
நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? பின்னர் நாமே அதனைக் கொண்டு பல விதமான நிறங்களுடைய கனிகளை வெளியாக்கினோம். மலைகளிலிருந்து வெண்மையானதும், சிவந்ததும், பற்பல நிறங்களையுடைய விதவிதமான பாதைகளும் சுத்தக் கரிய நிறமுடையவும் உள்ளன. இவ்வாறே மனிதர்களிலும், ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும், பல நிறங்கள் இருக்கின்றன நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சவோரெல்லாம் அறிஞர்கள்தாம். [35:27 ,28]

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் அகிலத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. [30:22]

நிறம் எவ்வாறு தோன்றுகின்றது?

ஒளிக்கதிர் ஒன்று பொருளொன்றின் மீது பட்டுத் தெறிப்படைந்து அது
நமது கண்களை வந்தடைவதால்தான் அப்பொருள் எமது கண்களுக்குப் புலப்படுகின்றது. நாம் வாழும் புவியைப் பொறுத்தரை ஒளியின் மூலம் சூரியனாகும். அடிப்படையில் சூரிய ஒளி “வெள்ளொளி” எனப்படுகின்றது. இதில் ஏழு நிறங்கள் கலந்திருப்பதாக விஞ்ஞானி ஐஷாக் நியுட்டனே (1671இல்) முதலாவதாகக் கண்டுடறிந்தார். இந்த ஏழு நிறங்களும் சேர்ந்தே இந்த உலகில் பலகோடி வண்ண மாயாஜாலங்களைப் புரிந்துவருவதாக அவர் நம்பினார்.

சிவப்பு (Red), செம்மஞ்சள்  (Orange), மஞ்சல் (yellow), கரு நீலம் (indigo), பச்சை (green), நீலம் (blue) ஊதா (violet) என்பனவே அந்த அடிப்படை ஏழு நிறங்களுமாகும். சூரிய ஒளியிலிருந்து தோன்றும் வானவில் கூட இந்த ஏழு நிறங்களையும் வெவ்வேறாகப் பிரதிபளிப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள். ஒரு அரியத்தினூடாக ஒளியைப் பாய்ச்சும்போது அவ்வொளி ஏழு நிறங்களையும் வெவ்வேறாகப் பிரித்து வெளிப்படுத்துவதைச் செய்முறையூடாகவும் அவதானிக்கலாம். சிலர் அடிப்படை நிறங்கள் மூன்று என்றும் கூறுவர். என்றாலும் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டது ஏழு என்பதேயாகும்.

அடிப்படை நிறங்கள் ஏழு என விஞ்ஞானம் கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அல்குர்ஆன் இதனை சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது. அரபு மொழியில் நிறத்தைக்கு குறிக்க “லவ்ன்” என்ற பதமும் அதன் பண்மை வடித்தில் நிறங்கள் என்பதைக் குறிக்க “அல்வான்” என்றும் பயன்படுத்தப்படுகின்றது. அல்குர்ஆனில் நிறங்கள் “அல்வான்” என மொத்தமாக ஏழு தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
சூரியனிலிருந்து புவியை நோக்கி வரும் பல்வேறு கதிர்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைகின்றன. புவியை அடையும் கதிர்கள் அணைத்தையும்கூட எம்மால் பார்க்க முடியாது. அவற்றிலும் சில கதிர்கள் மட்டுமே எமது கண்களுக்குத் தெரிகின்றன. கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள்கூட வெறும் 400 தொடக்கம் 700 நானோமீட்டர் (nanometer) அலைநீளத்திற்கு உட்பட்டவையாகும். (நனோமீட்டர் என்பது ஒரு மீட்டரை ஒரு பில்லியனால் பிரித்தால் வரும் மிக நுட்பமான பகுதியாகும்.) இந்தக் கதிர்களின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையில் ஊதா நிற ஒளியும் உள்ளன.
அல்லாஹ்வின் அற்புதமானதொரு படைப்பு
இந்த அடிப்படையான ஏழு கதிர்கள் அல்லாது இன்னும் கோடிக்காணக்கான எமது கண்களுக்குப் புலப்படாத கதிர்கள் இப்பிரபஞசத்திலும், எம்மைச் சூழவும் இருக்கின்றன என்பதை நீங்கள் புரிந்திருப்பீர்கள். தற்போது அல்லாஹ்வின் ஒரு படைப்பு பற்றி விளங்க முயற்சிப்போம். அல்லாஹ் மலக்குமார்களை ஒளியால் படைத்திருக்கின்றான். ஒளி என்பதும் ஒரு கதிர்தான். எனவே மலக்குகள் 400 – 700 நனோமீட்டர்களுக்கு அப்பாற்பட்ட கதிர்வீச்சினால் படைக்கப்பட்டவர்களாக இருக்கலாம். எனவேதான் அவர்கள் எமது பக்கத்தில், எம்மைச் சூழ இருந்தபோதிலும் எம்மால் அவர்களைப் பார்க்க முடியாதுள்ளது. ஜின்கள் நெருப்பின் சுவாலையினால் படைக்கப்பட்டதொரு இனம் என்பதாலும் அவற்றையும் எமது ரூஹ்- ஆன்மாவையும் நமது கண்களால் காணமுடியாதிருக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இறை மறுப்பாளர்கள் கூறுவதுபோன்று கண்களால் காண முடியாது என்பதற்காக மலக்குகளோ, ஜின்களோ ஏன் அல்லாஹ்வோ இல்லை என்று ஆகிவிடாது. அவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களைப் பார்க்க்க்கூடிய சக்தி, ஆற்றல் எமது கண்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அதனால்தான் ஸினாய் மலையில்வைத்து நபி மூஸா அவர்கள் அல்லாஹ்விடம் உன்னைப் பார்க்கவேண்டும் என்று கூறியபோது “நீர் என்னைப் பார்க்க முதல் இந்த நெருப்பைப் பாரும். அதனைப் பார்க்க உம்மால் முடிந்தால் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி ஒரு நெருப்புக் குண்டத்தை அல்லாஹ் உருவாக்கினான். அதனைப் பார்க்க முடியாமல் மூஸா அவர்கள் மயக்கமுற்று கீழே வீழ்ந்தார்கள். ஆக இவ்வுலகில் பார்வைச் சக்தி 400nm முதல் 700nm என்ற அளவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் இங்கு மலக்குகளையோ, அல்லாஹ்வையோ பார்க்க முடியாது.
ஒருவகையில் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பார்வைப் புலன் அல்லாஹ்வின் ஒரு அருளும்தான். ஏனெனில் எல்லாக் கதிர்களையும் பார்க்கும் சக்தியை அல்லாஹ் இக்கண்களுக்குத் தந்திருந்தால் எக்ஸ் கதிர்கள் (X-Ray), கலியூதாக் கதிர்கள் (Ultra Violet Rays), காமாக் கதிர்கள் (Gamma Rays), கொஸ்மிக் கதிர்கள் (Cosmic Rays) என எல்லாக் கதிர்களும் எமது கண்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் நமது உடலை எக்ஸ்ரே (X-Ray) எடுத்துப் பார்த்தால் எப்படி எழும்புகள் மட்டும் தெரிகின்றதோ அதேபோன்று பார்ப்பவர்களெல்லாம் அழகின்றி பயங்கரமாக எழும்புகளாகக் காட்சியளித்திருப்பர். அல்லாஹ் பாதுகாத்துவிட்டான். மட்டுப்படுத்தப்பட்ட பார்வைச் சக்தியால்தான் தற்போது பார்ப்பவை அழகாகத் தோன்றுகின்றன.
ஆனால் நாம் மரணிக்கும்போது (ஸகராத் நிலையில்) அல்லாஹ் எமக்கு பிற கதிர்களையும் நிறங்களையும் பார்க்கும் அபார சக்தியைத்தருகின்றான். அதனால்தான் ரூஹைக் கைப்பற்றவரும் மலக்கையும் மண்ணறையில் வேதனை செய்யும் மலக்குகளையும் எமது ரூஹ் பிரிந்து செல்வதையும் பார்க்க முடிகின்றது. இங்கு மூஸா நபியால் பார்க்கச் சக்திபெறாத அல்லாஹ்வை சுவனத்தில் பார்க்க முடிவதும் மரணத்துடன் அல்லாஹ் எமது கண்களுக்கு தற்போதிருப்பதைவிட மேலதிகமான சக்தியைத் தருவதால்தான்.
பிரபஞ்சத்தில் அதிக வேகத்தில் பயணிக்கும் பொருள் ஒளி என்றும், ஒளி செக்கனுக்கு 300,000Km வேகத்தில் பயணிக்கிறது என்றும் நவீன விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது. மலக்குகளும் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள் என்றவகையில் அவர்களும் ஒளியிற்கு சமாந்திரமான கதியில் பயணிக்கிறார்கள் என்பதை இஸ்லாமிய அறிஞர்கள் பின்வரும் மூன்று அல்குர்ஆனிய வசனங்களையும் (32:5,70:4,10:5) அடிப்படையாகக் கொண்டு நிறுவுகின்றனர். (பார்க்க : அல்ஹஸனாத் / டிசம்பர் / 2006 / பக்.36)  
உளவியலில் நிறம்.
மனிதனின் உணர்வுகள் மற்றும் நடத்தைகளில் நிறம் எவ்வாறு சம்மந்தப்படுகிறது என்பதைப் பற்றி கற்கும் கற்கைக்கு நிற உளவியல்” (Colour psychology) என்று கூறப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் மிகவும் பிடித்தமான ஏதோ ஒரு நிறம் இருக்கும். அந்த நிறம் விழித்திரையை அடைந்து மின்தூண்டல்களாக மாற்றப்பட்டு பார்வை நரம்புகளினூடாக மூளைக்குக் கடத்தப்படுகின்றன. பின்னர் அங்கு அது ஒரு அதிர்வை (vibrations) உண்டாக்கும். அது அவருக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும். அதனால்தான் பூந்தோட்டங்களுக்கு நாம் சென்றால் இனம்தெரியாததொரு மனநிம்மதியும், புத்துணர்ச்சியும் எம்மை ஆட்கொள்கின்றது.
அதேபோன்று ஒருவருக்கு பிடிக்காத நிறங்களும் உண்டு. அது அவரை வெருப்படையச் செய்யும். கருப்பு நிறத்திற்கு அஞ்சுபவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் இருளுக்கு அஞ்சுகின்றனர். பிடித்த, பிடிக்காத நிறங்களை வைத்து ஒருவரது உள்ளத்தின் தன்மையை, அவரது ஆளுமையை இனங்கானும் முறை உளவியலில் மேற்கொள்ளப்படுகின்றது. மனிதனுக்கு மட்டுமன்றி தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் என அனைத்தும் ஏதோ ஒரு நிறத்தினால் தூண்டப்படுவதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற உளவியலில் ஆபத்தைக் குறிக்கும் நிறங்களாக மஞ்சளும் கருப்பும் காணப்படுகின்றன. இவ்வாறு ஒவ்வொரு நிறமும் ஒரு உளவியல் கருத்தைக் கூறுகின்றது.
நிறம் பற்றி அல்குர்ஆன்

நபியவர்கள் வெள்ளை நிறத்தை அதிகம் விரும்பினார்கள், கருப்பு நிறத்தையும் காவி நிறத்தையும் தவிர்ந்துகொள்ளுமாறு கூறினார்கள். இவ்வாறு நபிகளாரும் நிறம் பற்றி கரிசனை செழுத்தியுள்ளார்கள். விஞ்ஞானம் அடிப்படையில் 7 நிறங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அல்குர்ஆன் நிறம் என்ற வார்த்தையை 7 இடங்களில் பயன்படுத்தியுள்ளது. சுவனம் பசுமையானது என்று கூறும் இஸ்லாம் அதன் நிறமான பச்சை நிறம் அல்குர்ஆனில் 8 இடங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. நபியவர்கள் சுவனத்தின் வாயில்கள் 8 என்றும் கூறியுள்ளார்கள். அதேபோன்று கருப்பு நிறம் அல்குர்ஆனில் 7 இடங்களில் வந்துள்ளது. நரகின் நிறமும் கருப்பு என்பதாக நபியவர்கள் கூறினார்கள். அதன் வாயில்களின் எண்ணிக்கையும் 7 என்று அல்குர்ஆன் கூறுகின்றது. மஞ்சல் நிறம் 5 தடவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அல்குர்ஆனில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள நிறம் வெள்ளையாகும்.

இம்முழுப் பிரபஞ்சமும் தட்செயலாகத் தோன்றியது என்று கூறும் டாவினிஸவாதிகள் ஒவ்வொரு படைப்பிலும் காணப்படும் வர்ணஜாலங்களைப் பார்த்து வியக்கின்றனர். சாதாரணமாக மனிதன் தயாரிக்கும் ஒரு வீட்டிற்கே பல கடின முயற்சிகளால் பல்வேறு நிறங்களைத் தீட்டி அழகுபடுத்துகின்றான். அப்படியானால் இப்பாரி உலகம் மட்டும் எவ்வாறு தற்செயலாக அழகழகாக வர்ணம்பெற்று வந்திருக்க முடியும். இல்லை. நிச்சயமாக இது வல்லவன் அல்லாஹ்வின் ஒப்பற்ற படைப்பாற்றலின் வல்லமைதான், அவனது தூரிகையிலிருந்து சிந்திய வண்ணங்களால்தான் இவ்வுலகம் நிறம்பெற்றிருக்கிறது என்பதற்கு நிறங்களே சாட்சி.

இன்னும், பூமியில் அவன் படைத்திருப்பன பல விதமான நிறங்களையுடைய (செடி கொடிகள், பிராணிகள், பறவைகள், போன்ற)வையுமாகும்; நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் அருள் கொடைகளை நன்றியுடன்) நினைவு கூரும் மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சியுள்ளது. [16:13] 

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

07 August 2013

செயற்கைக் கருவூட்டலால் நோயுற்றுப் பிறக்கும் குழந்தைகள்

ஆண்-பெண் மலட்டுத் தன்மை என்பது சந்ததியைப் பெருக்க முடியாத உடல் சார்ந்த உயிரியல் குறைபாடாகும். மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைமுறைத் தேர்வுகளினால் உலகளவில் பெண்களைவிடவும் ஆண் மலட்டுத்தன்மை அபாயகரமான அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் அல்லது அவற்றின் ஊர்தலில் (Motility) வேகம் குறைதல் போன்றவை மருத்துவ ரீதியாக ஆண் மலட்டுத் தன்மை ஏற்படக் காரணமாயுள்ளன.
குடிப்பழக்கம், புகைபிடித்தல், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தொடர்ந்து உபயோகித்தல், சத்துக்குறைவான உணவு, விட்டமின் C குறைபாடு, தொடர்ச்சியான மன அழுத்தம், அளவுக்கதிகமான உடற்பயிற்சி, இறுக்கமான உள்ளாடைகள் அணிதல், ஆபாசத்திற்கு அடிமையாதல், மொபைல்போன் பாவனை, அதிகளவில் மடிக்கண்ணி பயன்படுத்தல் போன்ற தனிப்பட்ட வாழ்க்கை முறைகளும் ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பூச்சிக்கொல்லிகள் போன்ற பல வேதி நச்சுக்கள், காரீயம், பெயிண்ட், போன்ற சிலவகை வண்ணப்பூச்சுகள், கதிர்வீச்சு, பாதரசம், போரான், பென்சீன், தலேற்று, BCB, அடர் உலோகங்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் எனப் பல காரணிகள் மூலம் நமது ஆரோக்கியமான வாழ்க்கையில் மலட்டுத்தன்மை உட்பட பல நேரடி மற்றும் மறைமுக எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றன.
ஆண், பெண் மலட்டுத் தன்மையினால் குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலை வெறும் தனிப்பட்ட பிரச்சனை அல்ல, உலகம் முழுதும் இது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாக இன்று நோக்கப்படுகின்றது. நமது அண்டை நாடான இந்தியாவில் ஆண், பெண் மலட்டுத் தன்மை அச்சுறுத்தும் வேகத்தில் வளர்ந்து வருவதாக மும்பையில் இயங்கி வரும் பன்னாட்டு மக்கள் தொகை ஆய்வியல் நிறுவனம் [international institute of population sciences / iips) 2010 இல் வெளியிட்ட அறிக்கையில் 1981 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் முறையே 1991, 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கும் மேல் மலட்டுத்தன்மை பெருகியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 10% இந்திய இளைஞர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம், உற்பத்தி ஆகியவற்றில் தீவிரமான பாதிப்புகள் இருப்பதாகவும் அவை சொல்கின்றன. 16% பெண்கள் குழந்தைப்பேறில்லாமல் இருக்கிறார்கள். 17% பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை அல்லது மணமுறிவு உண்டாகக் காரணம் குழந்தைப்பேறின்மையே. ஒன்பது கோடி இந்திய ஆண்களுக்கு ஆண்குறி விறைத்தல் கோளாறு இருக்கிறது. இதற்கான மருந்துகள் விற்பனையில் புழங்கும் பணம் மட்டும் தொண்ணூறு கோடி ரூபாய். 2000ல் வெறும் ஏழாயிரமாக இருந்த மலட்டுத் தன்மைச் சிகிச்சை/செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைச் சுழற்சிகள் 2010ல் நாற்பதாயிரமாக உயர்ந்திருக்கிறது. இப்போது இந்தப் பிரச்சினையின் தீவிரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாரம்பரியமாக குழந்தைகளைத் தத்தெடுக்கும் முறை  பின்பற்றப்பட்டு வந்த்து. என்றாலும் இதில் கருவில் சுமந்து பிரசவித்து தாய்மைப் பேற்றை அடையும் திருப்தி காணப்படவில்லை. நவீன மருத்துவ வளர்ச்சியின் காரணமாக இந்தக் குறைக்குத் தீர்வாக செயற்கைக் கருவூட்டல் முறைகள் அறிமுகமாகின. செயற்கைக் கருவூட்டல் முறைகள் பல்வேறு விதங்களில் நடைபெறுகின்றன. உதாரணமாக்க் கூறின்.
உடலுறவின் போது ஆணின் விந்து 48 – 56 மணி நேரங்களில் பெண்ணின் சினை முட்டையைச் சென்றடையவில்லை என்றால் விந்தணு இறந்து விடும். எனவே நிமிடத்திற்கு 10 அங்குல தூரம் விந்தணு நீந்த வேண்டும். குறைவாக நீந்துவதால் குறித்த நேரத்தில் சினைமுட்டையை அடைய முடியாது விந்து இறந்து பிள்ளைப் பேறு அற்றுப்போகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் கணவனினதும் மனைவியனும் விந்தையும் முட்டையையும் வெளியே எடுத்து அவற்றை ஆய்வு கூடத்தில் குழாய்முறைப்படி கருக்கட்டவைத்து பின்னர் தாயின் கருவறையில் செலுத்தி வளரச் செய்வர். இதுவே Testtube முறை எனப்படுகின்றது. இஸ்லாத்தில் இம்முறையே அங்கீகரிக்கப்பட்ட முறையாகக் கொள்ளப்படுகின்றது.
மற்றுமொரு முறையாக குழந்தைப் பேற்றிற்கு ஆணிடம் விந்து வள
ம் இல்லாதிருந்தால் வேறு ஒரு ஆணின் விந்தை மாத்திரம் பெற்று அதனை குறித்த பெண்ணின் யோனி வழியாக உட்செலுத்தி கருத்தரிக்க வைப்பர். இதற்காக விந்து தானம் செய்வோர் விந்தினை கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்வோர் உலகில் உள்ளனர். உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டு வீர்ர்கள், சினிமா நடிகர்கள், உலக முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் என பலரும் தமது விந்தை கோடி விலைக்கு விற்கின்றனர். இது போல மதம், இனம், கல்வித்தகுதி, விளையாட்டு, கலைகளில் தேர்ச்சி, வீரம், அழகு போன்றவற்றை அடிப்படையாக வைத்து விந்தணுக்களை விற்கும், வாங்கும் வழக்கம் உலக நாடுகளில் உண்டு,
விந்துகளைப் பத்திரமாக உறைபதனப்படுத்தி வைக்கும் கூடங்களும் காணப்படுகின்றன. அவை “விந்து வங்கி (Sperm Bank)” என அழைக்கப்படுகின்றன. 1980ல் ராபர்ட் கிரஹாம் என்னும் அமெரிக்கர்தான் நோபல் பரிசு பெற்றவர்களின் விந்தணுக்களைச் சேகரித்து முதன் முதலாக ஒரு விந்தணு வங்கியை உருவாக்கினார்.

விந்தணு தானம் செய்தல் அல்லது விற்றல் போன்றே பெண்களும் தமது கருமுட்டையை தானம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பெண்ணிடம் சினை முட்டை உற்பத்திக் குறைவு காணப்படின் வங்கிகளில் உள்ள முட்டையை விலைக்கு வாங்கி அதன் மூலம் குழந்தை உருவாக்கம் செய்கின்றனர். இன்னுமொருபடி மேல்சென்று குழந்தை மீது ஆசை உள்ள பெண்கள், தம் வயிற்றில் சிசுவைச் சுமப்பதால் தமது அழகு மங்கிப் போகும் என்று நினைப்பவர்கள் தனதும் கணவனினதும் செயற்கையாகக் கருக்கட்ட வைத்த கருவை வேறு ஒரு பெண்ணின் கருவில் சுமக்கவைத்து அது பிறந்ததும் தாம் அதனை வளர்த்தெடுப்பர். சிசுவைச் சுமக்கும் பெண்ணுடன் ஏழவே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தாகும். எனவே இக்குழந்தையை அவள் சுமந்து பிரசவித்தாலும் அவளால் உரிமை கொண்டாட முடியாது. அவள் பிரசவித்து சுகமடையும் வரையிலான செலவீனங்களை கருவின் சொந்தக்கார்ர்களே பொறுப்பேற்க வேண்டும்.
உண்மையில் விந்தணு, சினை முட்டை தானம் அல்லது விற்பணை மூலம் குழந்தைப் பேறு அடைவது இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. ஆனால் அதனையும் மீறி இன்று வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இம்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய முறைகளால் பிறக்கும் குழந்தைகள் இன்று பல்வேறு மரபணுப் பாதிப்புகளுக்குட்பட்டு நோய் வாய்ப்பட்டு பிறக்கும் நிலை கண்டறியப்பட்டுள்ளது.

விந்தணு, சிணை முட்டையைப் பெற்று சேமிக்கும் முன்பு உரிமையாளரின் உடலாரோக்கியம் பரிசோதிக்கப்பட வேண்டும். தொற்று நோய்கள், மரபணுக் கோளாறுகள் போன்றவை முக்கியமாகப் பரீட்சிக்கப்பட வேண்டும்.  ஆனால் வெறும் தொழில் நோக்கிற்காக டாத்தப்படும் இந்த செயற்கைக் கருவூட்டல் முறைகளிலும் விந்தணு வங்கிகளிலும் இந்தப் பரிசோதனைகள் முழுமையாக உரிய கவனத்துடன் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பது ஒரு மிகமுக்கியமான கேள்விக்குறி. ஏனெனில் இதுவரை இவ்விடயத்தில் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படாத ஒரு நடைமுறைப் பிரச்சனை 2012 அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அமெரிக்க கள ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி ‘The New York Times நாளேடுஒரு கட்டுரையை வெளியிட்டு இப்பிரச்சினையின் பாரதூரத்தை வெளிக்கொணர்ந்தது.

குழந்தைப் பேற்றை விரும்பிய ஒரு அமெரிக்கத் தம்பதியினர் செயற்கைக் விந்தூட்டலின் மூலம் (Artificial Insemination) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தனர். பிறந்த குழந்தையின் குடல் அசைவில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டபோது சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் மரபணுப் பரிசோதனை செய்துபார்த்த்தில் குழந்தைக்கு சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்’ (Cystic Fibrosis) என்னும் மரபணுக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நுரையீரல், கல்லீரல், கணையம், குடல் என்பவற்றில் அளவுக்கு மீறி அடர்த்தியாக வளரும் இழைநார்கள் (fiber) மற்றும் கோழை (mucous layer) என்பவற்றால் உருவாகும் ஒரு வகை நோய். இது உருவாக அடிப்படைக் காரணம் விந்தணுவைப் பெற்றவரிடம் இருந்த பரம்பரை நோயே என தெரியவந்த்து. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், உணவு செரித்தலில் குறைபாடு, ஆண் மலட்டுத் தன்மை, நீரிழிவு, சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படல் பல உடல்நலக் குறைபாடுகளை இது ஏற்படுத்துகின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்ற மரபணு ரீதியிலான பிரச்சனைகளின் எல்லா
சாத்தியக்கூறும் ருமுட்டையை தானம் செய்யும் பெண்களிலும் உண்டு. ஆனால் விந்தணு தானத்தில் தான் மரபணுப் குறைபாடுகள் கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம் ஒரு முறையில் வெளியாகும் 4மி.லீ அளவு விந்தில் சுமார் 500 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுகின்றன. இவற்றை தானம் செய்வதன் மூலம் எத்தனை நூறு குழந்தைகளையும் உருவாக்க முடியும். 500 மில்லியனிலும் ஒன்று மட்டுமே சினை முட்டையுடன் சேரும். எது சேர வேண்டும் என்பதை அல்லாஹ்வே தீர்மானிக்கிறான். அது ஆரோக்கியமான விந்தாக இருக்கும். செயற்கையாக விந்தூட்டல் மேற்கொள்ளும் போது 500 மில்லியனிலும் எது ஆரோக்கியமானது என்பதை எவ்வாறு மனிதனால் தேர்வு செய்ய முடியும்? எனவே ஆரோக்கிய மற்ற விந்துகள் மூலம் நோயுள்ள சந்த்திகள் பிறக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

உதாரணமாக அமெரிக்காவில் ஒரு விந்தணுக் கொடையாளரின் விந்தணுக்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் வெள்ளையணு மற்றும் மூளைப் புற்று நோயை உருவாக்கும் மரபணுக் கோளாறுடன் பிறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல இருதய பாதிப்பு, மூளைக் கோளாறு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள், புற்று நோய் என்று பல நோய்களுக்கான மரபணுக்கோளாறுகளுடன் பிறந்த விந்தணு தானத்தில் உருவாக்கப்பட்ட பல நூறு குழந்தைகள் உண்டு. பலர் இள வயதிலேயே இறந்ததும் உண்டு.
பெண்கள் தமது கருமுட்டை தானம் செய்வதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும் உடலுக்கு வெளியில் ஆய்வகத்தில் விந்தணுகளுடன் கருவடையச் செய்வதற்காகவும் (invitro fertilization, artificial insemination) பெண்களின் முட்டையை அதிகளவில் உற்பத்திசெய்து மாதவிடாயின் போது பிரித்தெடுப்பதற்காகவும் ஒருவகை ஹோர்மோன் ஊசிமூம் ஏற்றப்படுகின்றது. இதனால் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹோர்மோனின் அளவு சாதாரன அளவை விட பதிமூன்று மடங்கு அதிகமாகிறது. இளம் வயதில் இத்தகைய ஹோர்மோன் ஊசி கொடுக்கப்படும் பெண்களுக்கு அடுத்து 16வருடங்களில் மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆக ஹராமான வழிமுறை மூலம் உருவாக்கிக்கொள்ளும் கருக்கள் அடுத்த பரம்பரையையே பாதிக்கும் மரபணு ரீதியான நோய்களைச் சுமந்துகொண்டு பிறக்கின்றன. இதனால் எதிர்காலத்தின் எத்தகைய சந்த்திகள் உருவாவார்கள் என்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஆண்-பெண் மலட்டுத் தன்மை என்பது சந்ததியைப் பெருக்க முடியாத உடல் சார்ந்த உயிரியல் குறைபாடாகும். மாறிவரும் சுற்றுச்சூழல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைமுறைத் தேர்வுகளினால் உலகளவில் பெண்களைவிடவும் ஆண் மலட்டுத்தன்மை அபாயகரமான அளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வீரியமுள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் அல்லது அவற்றின் ஊர்தலில் (Motility) வேகம் குறைதல் போன்றவை மருத்துவ ரீதியாக ஆண் மலட்டுத் தன்மை ஏற்படக் காரணமாயுள்ளன.
குடிப்பழக்கம், புகைபிடித்தல், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தொடர்ந்து உபயோகித்தல், சத்துக்குறைவான உணவு, விட்டமின் C குறைபாடு, தொடர்ச்சியான மன அழுத்தம், அளவுக்கதிகமான உடற்பயிற்சி, இறுக்கமான உள்ளாடைகள் அணிதல், ஆபாசத்திற்கு அடிமையாதல், மொபைல்போன் பாவனை, அதிகளவில் மடிக்கண்ணி பயன்படுத்தல் போன்ற தனிப்பட்ட வாழ்க்கை முறைகளும் ஆண்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. பூச்சிக்கொல்லிகள் போன்ற பல வேதி நச்சுக்கள், காரீயம், பெயிண்ட், போன்ற சிலவகை வண்ணப்பூச்சுகள், கதிர்வீச்சு, பாதரசம், போரான், பென்சீன், தலேற்று, BCB, அடர் உலோகங்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்கள் எனப் பல காரணிகள் மூலம் நமது ஆரோக்கியமான வாழ்க்கையில் மலட்டுத்தன்மை உட்பட பல நேரடி மற்றும் மறைமுக எதிர்விளைவுகளை உண்டாக்குகின்றன.
ஆண், பெண் மலட்டுத் தன்மையினால் குழந்தைப்பேறு இல்லாமல் போகும் நிலை வெறும் தனிப்பட்ட பிரச்சனை அல்ல, உலகம் முழுதும் இது ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையாக இன்று நோக்கப்படுகின்றது. நமது அண்டை நாடான இந்தியாவில் ஆண், பெண் மலட்டுத் தன்மை அச்சுறுத்தும் வேகத்தில் வளர்ந்து வருவதாக மும்பையில் இயங்கி வரும் பன்னாட்டு மக்கள் தொகை ஆய்வியல் நிறுவனம் [international institute of population sciences / iips) 2010 இல் வெளியிட்ட அறிக்கையில் 1981 ஆம் ஆண்டுக்குப் பின் ஒவ்வொரு பத்தாண்டு இடைவெளியிலும் முறையே 1991, 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கீடுகள் 50 சதவிகிதத்திற்கும் மேல் மலட்டுத்தன்மை பெருகியுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 10% இந்திய இளைஞர்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம், உற்பத்தி ஆகியவற்றில் தீவிரமான பாதிப்புகள் இருப்பதாகவும் அவை சொல்கின்றன. 16% பெண்கள் குழந்தைப்பேறில்லாமல் இருக்கிறார்கள். 17% பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சனை அல்லது மணமுறிவு உண்டாகக் காரணம் குழந்தைப்பேறின்மையே. ஒன்பது கோடி இந்திய ஆண்களுக்கு ஆண்குறி விறைத்தல் கோளாறு இருக்கிறது. இதற்கான மருந்துகள் விற்பனையில் புழங்கும் பணம் மட்டும் தொண்ணூறு கோடி ரூபாய். 2000ல் வெறும் ஏழாயிரமாக இருந்த மலட்டுத் தன்மைச் சிகிச்சை/செயற்கைக் கருவூட்டல் சிகிச்சைச் சுழற்சிகள் 2010ல் நாற்பதாயிரமாக உயர்ந்திருக்கிறது. இப்போது இந்தப் பிரச்சினையின் தீவிரம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பாரம்பரியமாக குழந்தைகளைத் தத்தெடுக்கும் முறை  பின்பற்றப்பட்டு வந்த்து. என்றாலும் இதில் கருவில் சுமந்து பிரசவித்து தாய்மைப் பேற்றை அடையும் திருப்தி காணப்படவில்லை. நவீன மருத்துவ வளர்ச்சியின் காரணமாக இந்தக் குறைக்குத் தீர்வாக செயற்கைக் கருவூட்டல் முறைகள் அறிமுகமாகின. செயற்கைக் கருவூட்டல் முறைகள் பல்வேறு விதங்களில் நடைபெறுகின்றன. உதாரணமாக்க் கூறின்.
உடலுறவின் போது ஆணின் விந்து 48 – 56 மணி நேரங்களில் பெண்ணின் சினை முட்டையைச் சென்றடையவில்லை என்றால் விந்தணு இறந்து விடும். எனவே நிமிடத்திற்கு 10 அங்குல தூரம் விந்தணு நீந்த வேண்டும். குறைவாக நீந்துவதால் குறித்த நேரத்தில் சினைமுட்டையை அடைய முடியாது விந்து இறந்து பிள்ளைப் பேறு அற்றுப்போகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் கணவனினதும் மனைவியனும் விந்தையும் முட்டையையும் வெளியே எடுத்து அவற்றை ஆய்வு கூடத்தில் குழாய்முறைப்படி கருக்கட்டவைத்து பின்னர் தாயின் கருவறையில் செலுத்தி வளரச் செய்வர். இதுவே Testtube முறை எனப்படுகின்றது. இஸ்லாத்தில் இம்முறையே அங்கீகரிக்கப்பட்ட முறையாகக் கொள்ளப்படுகின்றது.
மற்றுமொரு முறையாக குழந்தைப் பேற்றிற்கு ஆணிடம் விந்து வள
ம் இல்லாதிருந்தால் வேறு ஒரு ஆணின் விந்தை மாத்திரம் பெற்று அதனை குறித்த பெண்ணின் யோனி வழியாக உட்செலுத்தி கருத்தரிக்க வைப்பர். இதற்காக விந்து தானம் செய்வோர் விந்தினை கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்வோர் உலகில் உள்ளனர். உலகப் பிரசித்தி பெற்ற விளையாட்டு வீர்ர்கள், சினிமா நடிகர்கள், உலக முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் என பலரும் தமது விந்தை கோடி விலைக்கு விற்கின்றனர். இது போல மதம், இனம், கல்வித்தகுதி, விளையாட்டு, கலைகளில் தேர்ச்சி, வீரம், அழகு போன்றவற்றை அடிப்படையாக வைத்து விந்தணுக்களை விற்கும், வாங்கும் வழக்கம் உலக நாடுகளில் உண்டு,
விந்துகளைப் பத்திரமாக உறைபதனப்படுத்தி வைக்கும் கூடங்களும் காணப்படுகின்றன. அவை “விந்து வங்கி (Sperm Bank)” என அழைக்கப்படுகின்றன. 1980ல் ராபர்ட் கிரஹாம் என்னும் அமெரிக்கர்தான் நோபல் பரிசு பெற்றவர்களின் விந்தணுக்களைச் சேகரித்து முதன் முதலாக ஒரு விந்தணு வங்கியை உருவாக்கினார்.

விந்தணு தானம் செய்தல் அல்லது விற்றல் போன்றே பெண்களும் தமது கருமுட்டையை தானம் செய்ய ஆரம்பித்துள்ளனர். பெண்ணிடம் சினை முட்டை உற்பத்திக் குறைவு காணப்படின் வங்கிகளில் உள்ள முட்டையை விலைக்கு வாங்கி அதன் மூலம் குழந்தை உருவாக்கம் செய்கின்றனர். இன்னுமொருபடி மேல்சென்று குழந்தை மீது ஆசை உள்ள பெண்கள், தம் வயிற்றில் சிசுவைச் சுமப்பதால் தமது அழகு மங்கிப் போகும் என்று நினைப்பவர்கள் தனதும் கணவனினதும் செயற்கையாகக் கருக்கட்ட வைத்த கருவை வேறு ஒரு பெண்ணின் கருவில் சுமக்கவைத்து அது பிறந்ததும் தாம் அதனை வளர்த்தெடுப்பர். சிசுவைச் சுமக்கும் பெண்ணுடன் ஏழவே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தாகும். எனவே இக்குழந்தையை அவள் சுமந்து பிரசவித்தாலும் அவளால் உரிமை கொண்டாட முடியாது. அவள் பிரசவித்து சுகமடையும் வரையிலான செலவீனங்களை கருவின் சொந்தக்கார்ர்களே பொறுப்பேற்க வேண்டும்.
உண்மையில் விந்தணு, சினை முட்டை தானம் அல்லது விற்பணை மூலம் குழந்தைப் பேறு அடைவது இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது. ஆனால் அதனையும் மீறி இன்று வளர்ச்சியடைந்துள்ள நாடுகளில் இம்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய முறைகளால் பிறக்கும் குழந்தைகள் இன்று பல்வேறு மரபணுப் பாதிப்புகளுக்குட்பட்டு நோய் வாய்ப்பட்டு பிறக்கும் நிலை கண்டறியப்பட்டுள்ளது.

விந்தணு, சிணை முட்டையைப் பெற்று சேமிக்கும் முன்பு உரிமையாளரின் உடலாரோக்கியம் பரிசோதிக்கப்பட வேண்டும். தொற்று நோய்கள், மரபணுக் கோளாறுகள் போன்றவை முக்கியமாகப் பரீட்சிக்கப்பட வேண்டும்.  ஆனால் வெறும் தொழில் நோக்கிற்காக டாத்தப்படும் இந்த செயற்கைக் கருவூட்டல் முறைகளிலும் விந்தணு வங்கிகளிலும் இந்தப் பரிசோதனைகள் முழுமையாக உரிய கவனத்துடன் மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பது ஒரு மிகமுக்கியமான கேள்விக்குறி. ஏனெனில் இதுவரை இவ்விடயத்தில் பெரிதாக கவனத்தில் கொள்ளப்படாத ஒரு நடைமுறைப் பிரச்சனை 2012 அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அமெரிக்க கள ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி ‘The New York Times நாளேடுஒரு கட்டுரையை வெளியிட்டு இப்பிரச்சினையின் பாரதூரத்தை வெளிக்கொணர்ந்தது.

குழந்தைப் பேற்றை விரும்பிய ஒரு அமெரிக்கத் தம்பதியினர் செயற்கைக் விந்தூட்டலின் மூலம் (Artificial Insemination) ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தனர். பிறந்த குழந்தையின் குடல் அசைவில் ஏற்பட்ட பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி ஏற்பட்டபோது சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் மரபணுப் பரிசோதனை செய்துபார்த்த்தில் குழந்தைக்கு சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ்’ (Cystic Fibrosis) என்னும் மரபணுக் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது நுரையீரல், கல்லீரல், கணையம், குடல் என்பவற்றில் அளவுக்கு மீறி அடர்த்தியாக வளரும் இழைநார்கள் (fiber) மற்றும் கோழை (mucous layer) என்பவற்றால் உருவாகும் ஒரு வகை நோய். இது உருவாக அடிப்படைக் காரணம் விந்தணுவைப் பெற்றவரிடம் இருந்த பரம்பரை நோயே என தெரியவந்த்து. இதனால் மூச்சுவிடுவதில் சிரமம், உணவு செரித்தலில் குறைபாடு, ஆண் மலட்டுத் தன்மை, நீரிழிவு, சில சமயம் உயிருக்கே ஆபத்து ஏற்படல் பல உடல்நலக் குறைபாடுகளை இது ஏற்படுத்துகின்றது என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே போன்ற மரபணு ரீதியிலான பிரச்சனைகளின் எல்லா
சாத்தியக்கூறும் ருமுட்டையை தானம் செய்யும் பெண்களிலும் உண்டு. ஆனால் விந்தணு தானத்தில் தான் மரபணுப் குறைபாடுகள் கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம் ஒரு முறையில் வெளியாகும் 4மி.லீ அளவு விந்தில் சுமார் 500 மில்லியன் விந்தணுக்கள் காணப்படுகின்றன. இவற்றை தானம் செய்வதன் மூலம் எத்தனை நூறு குழந்தைகளையும் உருவாக்க முடியும். 500 மில்லியனிலும் ஒன்று மட்டுமே சினை முட்டையுடன் சேரும். எது சேர வேண்டும் என்பதை அல்லாஹ்வே தீர்மானிக்கிறான். அது ஆரோக்கியமான விந்தாக இருக்கும். செயற்கையாக விந்தூட்டல் மேற்கொள்ளும் போது 500 மில்லியனிலும் எது ஆரோக்கியமானது என்பதை எவ்வாறு மனிதனால் தேர்வு செய்ய முடியும்? எனவே ஆரோக்கிய மற்ற விந்துகள் மூலம் நோயுள்ள சந்த்திகள் பிறக்க வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

உதாரணமாக அமெரிக்காவில் ஒரு விந்தணுக் கொடையாளரின் விந்தணுக்களின் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் வெள்ளையணு மற்றும் மூளைப் புற்று நோயை உருவாக்கும் மரபணுக் கோளாறுடன் பிறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல இருதய பாதிப்பு, மூளைக் கோளாறு, நரம்பு மண்டலப் பிரச்சினைகள், புற்று நோய் என்று பல நோய்களுக்கான மரபணுக்கோளாறுகளுடன் பிறந்த விந்தணு தானத்தில் உருவாக்கப்பட்ட பல நூறு குழந்தைகள் உண்டு. பலர் இள வயதிலேயே இறந்ததும் உண்டு.
பெண்கள் தமது கருமுட்டை தானம் செய்வதற்காகவும் விற்பனை செய்வதற்காகவும் உடலுக்கு வெளியில் ஆய்வகத்தில் விந்தணுகளுடன் கருவடையச் செய்வதற்காகவும் (invitro fertilization, artificial insemination) பெண்களின் முட்டையை அதிகளவில் உற்பத்திசெய்து மாதவிடாயின் போது பிரித்தெடுப்பதற்காகவும் ஒருவகை ஹோர்மோன் ஊசிமூம் ஏற்றப்படுகின்றது. இதனால் ஈஸ்ட்ரோஜென் எனப்படும் ஹோர்மோனின் அளவு சாதாரன அளவை விட பதிமூன்று மடங்கு அதிகமாகிறது. இளம் வயதில் இத்தகைய ஹோர்மோன் ஊசி கொடுக்கப்படும் பெண்களுக்கு அடுத்து 16வருடங்களில் மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பிருப்பதாக ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆக ஹராமான வழிமுறை மூலம் உருவாக்கிக்கொள்ளும் கருக்கள் அடுத்த பரம்பரையையே பாதிக்கும் மரபணு ரீதியான நோய்களைச் சுமந்துகொண்டு பிறக்கின்றன. இதனால் எதிர்காலத்தின் எத்தகைய சந்த்திகள் உருவாவார்கள் என்பது அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...