"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 September 2014

துருக்கியின் புதிய பிரதமர் அஹமத் தாவுத் ஒக்லோ


துருக்கியின் பிரதமர் தைய்யிப் எர்துகான் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து புதிய பிரதமராக அஹமத் தாவுத் ஒக்லோ பதவியேற்றுள்ளார். அத்தோடு அண்மையில் அவர் தனது டிவிட்டர் கணக்கினூடாக துருக்கி அரசாங்கத்தின் இலக்குகளையும், பணிக்கூற்றையும் வெளியிட்டுள்ளார். தமது முழு முதல் இலக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பதோடு இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல எமது பிராந்தியத்துக்குமானதுஎன்று கூறியுள்ளார். "Our main goal is to build a better future for not only our country but the region as a whole"

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தையிப் எத்துகான் ஜனாதிபதியாகத் தேர்வானதைத் தொடர்ந்து அஹமத் தாவுத் ஒக்லோ AK கட்சியின் தலைவராகவும் துருக்கியின் புதிய பிரதமராகவும் பதவியேற்றுள்ளார்.



துருக்கியின் தாஷ்கந்த் என்ற பகுதியில் 1959 இல் பிறந்த இவர் ஒரு வியாபாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நான்காம் வயதிலேயே தாயை இழந்த தந்தையின் அரவணைப்பின் வளாந்தார். நான்காம் வகுப்பு வரை இஸ்தான்புளில் இருக்கும் 'ஹாஜ் சுலைமான் பெக்' பாடசாலையில் கல்வி கற்றுவிட்டு பின்னர் ஆரம்பக் கல்வியை பஹஷ்லீ பகுதியில் ஒரு பாடசாலையில் கற்றார். உயர்தரக் கல்வியை இஸ்தான்புளில் உள்ள ஆண்கள் பாடசாலையில் முடித்துவிட்டு இஸ்தான்புல் பொஸ்பூர் பல்கலைக் கழகத்தில் நிர்வாகம் மற்றும் பொருளாதார பீடத்தில் இணைந்து கல்வியைத் தொடர்ந்தார்.

1983 – 1984 கல்வியாண்டில் பட்டம் பெற்று வெளியேறிய இவர் முதுமாணிப் பட்டத்தைப் பொது நிர்வாகத் துறையிலும், கலாநிதிப் பட்டத்தை அரசியல் மற்றும் சர்வதேச துறையில் அதே பல்கலைக் கழகத்தில் பெற்றார். 1990 இல் மலேசியா சர்வதேச பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1993 இல் அரசியல் கற்கைகளுக்கான பகுதி ஏற்படுத்தப்பட்டு அதற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.




1995 – 1999 காலப்பகுதியில் இஸ்தான்புளில் உள்ள மர்மரா பல்கலைக் கழகத்தில் சர்வதேச தொடர்புகள் கற்கைகளில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். அரபு, ஜெர்மனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றவராவார். துருக்கிப் பிரதமராக ரஜப் தய்யிப் அர்துகான் சேவையாற்றிய போது துருக்கி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதுபோல நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார்கள். தற்போது இக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
Source : http://www.dailysabah.com

ஆலிப் அலி (இஸ்லாஹி)

துருக்கியின் பிரதமர் தைய்யிப் எர்துகான் ஜனாதிபதியானதைத் தொடர்ந்து புதிய பிரதமராக அஹமத் தாவுத் ஒக்லோ பதவியேற்றுள்ளார். அத்தோடு அண்மையில் அவர் தனது டிவிட்டர் கணக்கினூடாக துருக்கி அரசாங்கத்தின் இலக்குகளையும், பணிக்கூற்றையும் வெளியிட்டுள்ளார். தமது முழு முதல் இலக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பதோடு இது எமது நாட்டுக்கு மட்டுமல்ல எமது பிராந்தியத்துக்குமானதுஎன்று கூறியுள்ளார். "Our main goal is to build a better future for not only our country but the region as a whole"

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தையிப் எத்துகான் ஜனாதிபதியாகத் தேர்வானதைத் தொடர்ந்து அஹமத் தாவுத் ஒக்லோ AK கட்சியின் தலைவராகவும் துருக்கியின் புதிய பிரதமராகவும் பதவியேற்றுள்ளார்.



துருக்கியின் தாஷ்கந்த் என்ற பகுதியில் 1959 இல் பிறந்த இவர் ஒரு வியாபாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தனது நான்காம் வயதிலேயே தாயை இழந்த தந்தையின் அரவணைப்பின் வளாந்தார். நான்காம் வகுப்பு வரை இஸ்தான்புளில் இருக்கும் 'ஹாஜ் சுலைமான் பெக்' பாடசாலையில் கல்வி கற்றுவிட்டு பின்னர் ஆரம்பக் கல்வியை பஹஷ்லீ பகுதியில் ஒரு பாடசாலையில் கற்றார். உயர்தரக் கல்வியை இஸ்தான்புளில் உள்ள ஆண்கள் பாடசாலையில் முடித்துவிட்டு இஸ்தான்புல் பொஸ்பூர் பல்கலைக் கழகத்தில் நிர்வாகம் மற்றும் பொருளாதார பீடத்தில் இணைந்து கல்வியைத் தொடர்ந்தார்.

1983 – 1984 கல்வியாண்டில் பட்டம் பெற்று வெளியேறிய இவர் முதுமாணிப் பட்டத்தைப் பொது நிர்வாகத் துறையிலும், கலாநிதிப் பட்டத்தை அரசியல் மற்றும் சர்வதேச துறையில் அதே பல்கலைக் கழகத்தில் பெற்றார். 1990 இல் மலேசியா சர்வதேச பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1993 இல் அரசியல் கற்கைகளுக்கான பகுதி ஏற்படுத்தப்பட்டு அதற்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.




1995 – 1999 காலப்பகுதியில் இஸ்தான்புளில் உள்ள மர்மரா பல்கலைக் கழகத்தில் சர்வதேச தொடர்புகள் கற்கைகளில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார்கள். அரபு, ஜெர்மனி, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றவராவார். துருக்கிப் பிரதமராக ரஜப் தய்யிப் அர்துகான் சேவையாற்றிய போது துருக்கி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். அதுபோல நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் பிரதித் தலைவராக இருந்தார்கள். தற்போது இக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
Source : http://www.dailysabah.com

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...