"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

26 September 2010

மரணமும் மண்ணறை வாழ்வும்

ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)

இன்று உலகில் காணப்படுகின்ற எந்த மதமாயினும் எந்த இனமாயினும் எக்கலாசாரமாயினும் அவை அனைத்தும் ஒருமித்து உடன்படுமொருவிடயம்தான் மரணம். மரணத்தை யாரும் மறுப்பதில்லை. அவ்வாறே மறுத்தாலும் அது இன,  மத, மொழி வேற்றுமைகளுக்கு அப்பால்,  குழந்தை,  இளைஞன்,  வயோதிகன் என்ற பருவங்களையும் தாண்டி, ஆண், பெண் என்ற பால்வித்தியாசங்களையும் மீறி வந்தேதீரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

كل نفس ذائقة الموت “ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியவையே...!(அல்-அன்பியா:35) மற்றுமோர் இடத்தில் لكل امة اجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون “ஒவ்வோர் சமூகத்துக்கும் (குறிப்பிட்டதொரு) தவனையுண்டு. அவர்களது தவனை வந்துவிட்டால் ஒரு நாழிகையேனும் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.” (யூனுஸ்:49)

நவீன தொழிநுட்பங்களைப்பயன்படுத்தி எவ்வளவு பாதுகாப்புப் பொறிமுறைகளைக் கையாண்டு அமைக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்தாலும் மரணம் நிச்சயம் என்பதை மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (அது) மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்)களில் நீங்கள் இருந்தாலும் சரியே!” (அன்னிஸா:78)

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களைவைத்துப் பார்க்கும்போது மரணம் என்பது நிச்சயம் என்பதை விளங்கமுடிகிறது. வாழ்கின்றபோது மனிதர்களுக்குரிய கடமையாதெனில் கொடூரமான மரணவேதனையிலிருந்தும் அதன் பின்னுள்ள அகோரமான மண்ணறையின் தீங்குகளிலிருந்தும் அதனைத் தொடர்ந்துவரும் பயங்கரமான நரகப்படுகுழியின் தண்டனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தன் உலக வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகும்.

அவ்வாறு தன் வாழ்வைச் சிறப்புற அமைத்துக்கொள்ளும் பட்சத்தில் அவனது மரணவேதனை இதமானதாகவும் மண்ணறை சுவனப்பூஞ்சோலையாகவும் இறுதி ஒதுங்குமிடம் சதாவும் இன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிரந்தர சுவனமாகவும் அமையும்.

அந்தவகையில் நபியவர்கள் கூறிய இரண்டு விதமான மனிதர்களுடைய மரணநிலைபற்றியும் அவர்களது மண்ணறை வாழ்க்கை பற்றியும்,  பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் பிரபலமானதொரு ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். முதலாவது முஃமினான மனிதனின் மரணம். அடுத்து இறை நிறாகரிப்பாளனது மரணம். முதலில் ஒரு முஃமினுடைய மரண நிலைபற்றி அறிந்துகொள்வோம்.

முஃமினின் நிலை
அல்லாஹ் கூறுகின்றான்:
إن الذين قالوا ربنا الله ثم إستقاموا تتنزل عليهم الملئكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون
“எமதிரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்பு (அதில்) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோரது (மரணவேளையில்) வானவர்கள் இறங்கிவந்து மறுமைபற்றி நீங்கள் அச்சங்கொள்ளாதீர்கள். (இவ்வுலகில் விட்டுச்செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகங்கள் பற்றியும்) கவலைகொல்லாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தீர்களே அச்சுவனபதியைக்கொண்டு நன்மாராயம் பெறுங்கள்” என்று கூறுவர்.” (ஹாமீம் ஸஜ்தா:30)

பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒருமுறை அன்ஸாரிய சகோதரர் ஒருவரின் ஜனாஸாவிலே கலந்துகொள்வதற்காக நாம் நபியவர்களோடு சென்றுகொண்டிருந்தோம். மண்ணறை மைதானத்தை அடைந்ததும் நபியவர்கள் அங்கு அமர்ந்துகொண்டார்கள். நாமும் அண்ணலாரைச் சூழ அமர்ந்தோம். எமது தலைகளில் பறவைகள் வந்து நிற்குமளவுக்கு நாம் எவ்விதச் சலனமுமின்றி நபியவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தோம். நபியவர்கள் அவரது கையிலிருந்த ஒரு சிறு தடியினால் நிலத்தில் தட்டிவிட்டு தலையை உயர்த்தி “கப்ருடைய வேதனையைவிட்டும் அல்லாஹ்விடம் அபயம் தேடிக்கொள்ளுங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறினார்கள்.

பின்பு இவ்வாறு கூறினார்கள்:

ஒரு முஃமினான அடியான் மரணப்படுக்கையில் இருக்கும்போது சூரியனின் பிரகாசத்தோடும் வெண்நிற முகத்தோடும் “நாஷிதாத்” எனும் மலக்குகள் வானிலிருந்து இறங்கிவருவார்கள். அவர்களிடம் சுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கபனும் சுவனத்தின் வாசனைத் திறவியங்களும் இருக்கும். அவ்வானவர்கள் கண்ணெட்டும் தூரம்வரை அவருக்கு முன்னால் வீற்றிருப்பார்கள். பின்பு மலகுல்மௌத் வந்து அவரது தலைப்பகுதியில் அமர்ந்து “ஏ நல்ல ஆன்மாவே...! அல்லாஹ்வின் மன்னிப்பையும் திருப்பொறுத்தத்தையும் பெற்ற நிலையில் வெளியேறு” என்று கூறுவார். ஒரு குவலையிலிருந்து நீர் வடிந்தோடுவதுபோன்று அம்மனிதனின் ஆன்மா அவ்வுடலைவிட்டும் இலகுவான முறையில் வெளியேறும்.
 
உடனே அம்மலக்குகள் அவ்வான்மாவை சுவனத்து நறுமனங்கமலும் கபன் துணியில்வைத்து எடுத்துக்கொண்டு வானத்திற்கு உயர்ந்து செல்வார்கள். அந்த ஆன்மாவிலிருந்து கஸ்தூரி வாசம் வீசிக்கொண்டிருக்கும். வானத்தில் சஞ்ஜரித்துக்கொண்டிருக்கும் வேறு மலக்குகள் இம்மலக்குகளைக் கடந்துசெல்லும்போது “எவ்வளவு நறுமணமுள்ள ஆன்மா இது..!!” என்று கூறுவார்கள். அதற்கு அவ்வான்மாவைச் சுமந்துசெல்லும் மலக்குகள் “இது இன்னாரது மகன் இன்னாரது ஆன்மா” என்று உலகில் அவர் எப்பெயர் கூறி அழைக்கப்பட்டாரோ அப்பெயரையே கூறி மற்ற மலக்குகளுக்கு அறிமுகப்படுத்திவைப்பர்.

பின்பு முதல் வானத்தை அடைந்ததும் மலக்குகள் இவருக்காக அவ்வானத்தின் கதவைத் திறக்குமாறு கோறுவார்கள். வானம் திறபடும். இவ்வாறு ஒவ்வொரு வானத்தையும் கடந்து ஏழாவது வானத்தை அடைந்ததும் அல்லாஹ் “எனது அடியானை இல்லிய்யீனெனும் மிக உயர்ந்த இடத்தில் பதியுங்கள். பின்பு அவனை பூமிக்கே அனுப்புங்கள். ஏனெனில் அவனை நான் அங்குதான் படைத்தேன். அங்குதான் மரணிக்கச்செய்தேன். மீண்டும் அங்கிருந்தே உயிர்கொடுத்து உழுப்புவேன்” என்று வானவர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பான்.

மரண வீட்டில் இருக்கும் மையித் தன்னை விரைவாக கப்ரில் கொண்டுசென்று அடக்கம்செய்யுமாறும் கூறும். அதனைத் தாமதப்படுத்தும்போதெல்லாம் “ஏன் என்னைத் தாமதப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்கும். மிக்க சந்தோசமாக அமைதியாக இருக்கும். அவ்வாறு அம்மையித் பேசுவதை சுற்றியிருக்கும் மனு,  ஜின் இனத்தைத் தவிர மற்றைய அனைத்துப் படைப்புகளும் உணர்ந்துகொள்ளும்.

மண்ணறையிலே கொண்டுசென்று அடக்கம்செய்துவிட்டு அனைவரும் மீண்டு செல்லும்போதும் அம்மையித் கலக்கமோ,  நடுக்கமோ இன்றி மகிழ்வுடன் இருக்கும். பின்பு இல்லிய்யீனில் பதியப்பட்ட ஆன்மா பூமிக்குத் திருப்பப்பட்டு மண்ணறையிலிருக்கும் அதன் உடலோடு சேர்க்கப்பட்டுவிடும். அதனைத் தொடர்ந்து அழகான தோற்றத்தில் மனம்வீசும் நிலையில் இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் பிரகாசமாக இருப்பார்கள். மையித்தை அண்மித்து கேள்விகளை ஆரம்பிப்பார்கள்.

உனது இரட்சகன் யார்?            من ربك؟
உனது மார்க்கம் எது?            وما دينك؟
உனது வழிகாட்டி யார்?            ومن نبيك؟
 
இவை ஒவ்வொன்றுக்கும் அம்மையித் அழகான முறையில்

அல்லாஹ்வே எனதிரட்சகன்             ربي الله       
இஸ்லாம்தான் எனது மார்க்கம்    ديني الاسلام
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் எனது வழிகாட்டி    نبيي محمد (صل)
என்று பதிலளிக்கும்.

உடனே வானிலிருந்து ஒரு அசரீரி ஒலிக்கும். صدق عبدي  “எனதடியான் உண்மையுரைத்துவிட்டான்”

பின்பு அவ்வானவர்கள் அம்மையித்திற்கு அவரது இடது புறத்தில் பயங்கர நரகை எடுத்துக் காண்பிப்பார்கள். எனினும் வாழும்போது செய்த நல்லறங்களுக்காக அவரது வலப்புறத்தில் சுவனத்தை எடுத்துக்காண்பிப்பார்கள். பின்பு அவருக்கு சுவன ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுவன விரிப்புகளும் விரிக்கப்படும். அதுமுதல் அவ்வான்மா சுவனத்தின் இதமான தென்றல் காற்றை அனுபவித்துக்கொண்டிருக்கும். கண்ணெட்டும் தூரத்திற்கு அம்மண்ணறை விசாலமாக்கப்படும்.

அதன்பின்பு அழகானதொரு மனிதனின் தோற்றத்தில் மனம்வீசும் ஆடைகளை அணிந்துகொண்டு ஒருவர் அம்மையித்திடம் வருவார். வந்து “நீர் வாக்களிக்கப்பட்டிருந்த இந்நாளைக்கொண்டு நெற்செய்திபெறுங்கள்” என்று சுபசோபனம் கூறுவார். அதற்கு அவ்வான்மா “நீர் யார்?” என வினவும். அதற்கு அவ்வுருவம் “நீர் உலகில் செய்த நன்மையான காரியங்களின் மொத்த வடிவம்தான் நான்” என்று கூறும். பின்பு அம்மையித்திற்கு சுவனத்தின் காட்சிகள் காண்பிக்கப்படும். ஆதனைப் பார்த்து ரசித்துக்கொண்டே அவ்வான்மா “ربي أقم الساعة حتى ارجع إلى اهلي ومالي”  “எனதிரட்சகனே! எனது குடும்பத்தின்பாலும் சொத்து செல்வங்களின் பாலும் நான் செல்வதற்காக மறுமையை துரிதப்படுத்திவிடு” என்று பிறார்த்திக்கும். புpன்னர் அல்லாஹ் அவ்வுத்தம அடியானை புது மனமகனைப்போன்று மறுமைநாள் நிகழும்வரை உறங்கவைப்பான்.”

ஒரு முஃமினுடைய மரணத்தருவாயும் அதன்பின்னரான மண்ணறை நிகழ்வுகளும் இவ்வாறுதான் அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதேசமயம் ஒரு இறை நிராகரிப்பாளனதுää இணைவைப்பவனது நிலைமை எத்தகையது என்பதையும் நபியவர்கள் எமக்குத்தெளிவுபடுத்தியுள்ளார்கள். தெளிவுபடுத்தியது மாத்திரமின்றி அதிலிருந்து பாதுகாப்புத்தேடுமாறும் வலியுருத்தியுள்ளார்கள்.

நிராகரிப்பாளன்.

அல்லாஹ்வை நிராகரிக்கும், அவனுக்கு இணைவைக்கும்,  அவனது கட்டளைகளுக்கு மாறுசெய்யும் ஒருவனது மரண நிலை எவ்வாறிருக்கும் என்பதை திருமறைக் குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
ولو ترى إذ الظالمون في غمراة الموت والملائكة باسطوا ايديهم  اخرجوا انفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن اياته تستكبرون
 
“இவ்வநியாயக் காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின் மலக்குகள் தங்கள் கைகளைநீட்டி (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீது பொய்யைக் கூறிக்கொண்டிருந்ததாலும் அவனது வசனங்களை விட்டும் (ஏற்காது) பெருமையடித்துக்கொண்டிருந்ததாலும் இன்றைய தினம் உங்களுக்கு இழிவான வேதனைகொடுக்கப்படுகிறது. (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல்அன்ஆம்: 93)

ஒரு கெட்ட மனிதனது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தருவாயில் அவனை எவ்வாறு வானவர்கள் நெருங்குவார்கள் என்பதனை பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

“நாஸிஆத் எனும் மலக்குகள் கறுப்பு நிறத்தோற்றத்தில் அம்மனிதனிடம் இறங்கிவருவார்கள். அவனது கண்ணெட்டும் தூரம்வரை அமர்வார்கள். பின்னர் மலகுல் மௌத் அவனது தலைப்பகுதியில் வந்தமர்து “ஏ அழுக்குற்ற ஆன்மாவே! ஆல்லாஹ்வின் கோபத்திற்கும் அவனது வெறுப்பிற்குமாளான நிலையில் இவ்வுடலைவிட்டும் வெளியேறு” என்பார்கள். ஆப்போது அந்த ரூஹ் அவனது உடலெங்கும் ஓடி ஒழிந்துகொள்ள முயற்சிக்கும். ஆனால் அம்மலகுல்மௌத் அந்த ரூஹை பலவந்தமாக மிகக்கடுமையன முறையில் பறித்தெடுப்பார். அடர்ந்த முட்புதரின்மீது போட்டுவிட்டு இழுத்து எடுக்கப்பட்ட மெல்லிய ஆடையைப் போன்று அவனது ரூஹ் உருக்குலைந்து சின்னாபின்னமாகி அவ்வுடலைவிட்டும் வெளியேரும்.

ஆவ்வாறு ரூஹ் பிறியும் சந்தர்ப்பத்தில் அவன் அல்லாஹ்விடம் கூறுவான் “அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால் (அவன் தன் இரட்சகனிடம்) “என் இரட்சகனே! என்னை (உலக்கத்திற்கு)த் திருப்பி அனுப்பிவிடுவாயாக!” என்று கூறுவான். “உலகில் நான் விட்டுவந்ததில் (இனி) நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). ஆவ்வாறன்று நிச்சயமாக அது அவன் கூறும் வெறும் வார்த்தையே! இன்னும் அவர்கள் (மறுமைக்காக) எழுப்பப்படும் நாள்வரை அவர்கள் முன்னே தடுப்பு இருக்கிறது. (அதனால் அவர்கள் உலகின்பால் மீண்டுவர சக்திபெறமாட்டார்கள்.)” (அல்முஃமினூன் : 99,100)

உடனே அம்மலக்குகள் அந்த ரூஹை எடுத்து நரகிலிருந்து கொண்டுவரப்பட்ட தூநாற்றம் வீசக்கூடிய கபன் துணியால் சுற்றி எடுத்துக்கொண்டு வானத்தின்பால் உயர்ந்து செல்வார்கள். ஆச்சமயம் அண்டத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் பிற மலக்குகள் “என்னவொரு நாற்றமான ஆன்மா இது?” என்று வினவுவார்கள். ஆதற்கு அவ்வானவர்கள் “இன்னாரது மகன் இன்னாரது ஆன்மாதான் இது” என்று அவ்வான்மா பூமியில் என்ன பெயர் கூறி அழைக்கப்பட்டதோ அதே பெயரைக்கூறி ஏனைய வானவர்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பார்கள்.

இவ்வாறு உயரச்சென்று முதலாவது வானத்தை அடைந்ததும் மலக்குகள் அதன் வாயிலைத்திறக்குமாறு கோருவார்கள். ஆனால் அது திறபடமாட்டாது. இவ்வாறு கூறிவிட்டு நபியவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.

"إن الذين كذبوا باياتنا وإستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط"
“யார் எமது வசனங்களைப்பொய்ப்படுத்தி அதனைவிட்டும் பெறுமையடித்தார்களோ அவர்களுக்கு வானங்களின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது. ஊசியின் காது வழியாக ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சுவனம் நுழையவும் மாட்டார்கள்” (அல்-அஃராப் : 40)

புpன்னர் அல்லாஹ் அவ்வான்மாவைப் பூமியின் அடியிலிருக்கும் “ஸிஜ்ஜிய்யீனில்” பதியுமாறு மலக்குகளுக்குக் கட்டளையிடுவான். உடனே அது பூமியை நோக்கி வீசப்படும். இவ்வாறு கூறிவிட்டு நபியவர்கள் பின்வரும் குர்ஆனிய வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.

“فكانما خر من السماء فتخطفه الطير او تهوى به الريح في مكان سحيق”  
“அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக்கொண்டு சென்றதைப்போன்று அல்லது (பெருங்) காற்று அவனை வெகுதூரத்திலுள்ள இடத்திற்கு அவனை அடித்துச்சென்றதைப்போன்றோ ஆகிவிடுகிறான்.” (அல்ஹஜ் : 31)

மையித்தின் வீட்டிலிருந்து மண்ணறையில் அடக்கம் செய்வதற்காக மையித்தைத் தூக்கிவரும்போது அம்மய்யித் கதறுத்,  கத்தும்,  தன்னை எங்கு கொண்டுசெல்கின்றீர் என்று சப்தமிடும். மண்ணறையில் தன்னை அடக்கம்செய்யவேண்டாம் என்றும் அலறும். இவ்வாறு அந்த மையித் போடும் சப்தத்தை சுற்றியிருக்கும் மனிதனையும் ஜின்களையும் தவிற மற்ற அனைத்து உயிரினங்களும் செவிமடுக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மண்ணறையிலே அடக்கம் செய்யப்பட்டதும் வானத்திலிருந்து வீசப்பட்டு பூமியின் கீழ்ப்பகுதியிலிருக்கும் ஸிஜ்ஜிய்யீனில் அந்த ரூஹ் பதியப்பட்டதன் பின்னர் மீண்டும் மண்ணறையிலிருக்கும் அந்த உடலோடு அவ்வான்மா சேர்க்கப்படும். அதனைத் தொடர்ந்து நீல நிறக்கண்களையுடைய கறுப்பு நிறத்தில் படு பயங்கரமான தோற்றத்தில் முன்கர்,  நகீர் எனும் இரு மலக்குமார்கள் வருவார்கள். விசாரணை ஆரம்பமாகும்.

உனது இரட்சகன் யார்?            من ربك؟
உனது மார்க்கம் எது?            وما دينك؟
உனது வழிகாட்டி யார்?            ومن نبيك؟
அவ்வானவர்கள் இம்மூன்று கேள்விகளையும் கேட்டதும் அதற்கு அம்மனிதன் هاه هاه لا ادري”  “ஐயோ...! ஐயோ...! எனக்குத் தெரியவில்லையே...!” என்று புலம்புவான். உடனே வானிலிருந்து “அவன் பொய்யுரைத்துவிட்டான்” என்று ஒரு அசரீரி கேட்கும். உடனே அம்மலக்குகள் தமது கையிலிருக்கும் பாரிய சுத்தியலினால் அவனது தலையிலே ஓங்கி அடிப்பார்கள். அந்த சுத்தியலைக்கொண்டு பெரியதொரு மலையில் அடித்தால் அம்மலை வெடித்து தூள் தூளாகி இருந்த இடம்காணாது போய்விடும் என்று நபியவர்கள் அதன் கொடுமையை விளக்குகிறார்கள். அந்த சுத்தியலைக்கொண்டு அம்மனிதனின் தலையிலே அடித்ததும் அவனது தலை சிதறிச் சின்னாபின்னமாகி நொருங்கிப் போகும். அப்போது அவனிடும் கூச்சலைää ஓலத்தை மனிதனையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் செவிமடுப்பதாகவும் இதனை மனிதன் கேட்பானானால் அவ்விடத்திலேயே அவன் மூர்ச்சையாகி விடுவான் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

அதனைத்தொடர்ந்து முன்கர் நகீர் மலக்குகள் அம்மையித்தை வலப்புறம் திரும்பிப் பார்க்கக் கூறுவர். அங்கே அவன் சுவனத்தின் கண்கொள்ளாக் காட்சிகளைக் காண்பான். ஆனந்தத்தில் மிதந்துகொண்டிருப்பான். உடனே அம்மலக்குகள் “நீ உலகில் புரிந்த பாவகாரியங்களினால் நீ நுழையவேண்டிய இடம் இதுவல்ல நரகம்தான்” என்று கூறி அவனை இடப்புறம் திரும்பிப்பார்க்கக் கூறுவர். அங்கு அவன் நரகத்தின் பயங்கர வேதனைகளையும் தண்டனைகளையும் காண்பான். அதனைக் கண்டு அவன் அஞ்சி நடுநடுங்கிக்கொண்டிருப்பான்.

அதில் அவனுக்கு நெருப்பாலான ஆடைகள் அணிவிக்கப்படும். நெருப்பாலான விரிப்புகள் விரிக்கப்படும். நெருப்பினாலான போர்வைகளால் அவன் போர்த்தப்படுவான். நரகின் அனற்காற்று வீசும்போதெல்லாம் அவன் மயங்கி மயங்கி விழுவான். இதனை அல்குர்ஆன் “النار يعرضون عليها غدوا وعشيا”  “அந்(நரக) நெருப்பு அதன் மீது காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும்.” (அல்முஃமின் : 46) என்கிறது.

அதன் பின்னர் அவனிடத்தில் அசிங்கமான பயங்கரமான உருவத்தில் ஒரு மனிதன் வருவான். அவனைப் பார்த்தாலே மரணித்துவிடுமளவுக்கு அவனது தோற்றம் மிகப் பயங்கரமாக இருக்கும். அந்த மையித் அப்பயங்கர உருவத்தைப் பார்த்து “யார் நீ?” என்று கோட்பான். “எதற்கு என்னிடம் வந்தாய்?” என்று வினவுவான். அதற்கு அவ்வுருவம் “நீ உலகில் புரிந்த பாவகாரியங்களின் மொத்தவடிவம்தான் நான். அல்லாஹ் அப்பாவகாரியங்களை எனது வடிவில் தற்போது உன்னிடத்தில் அனுப்பியுள்ளான்” என்று கூறும்.

பின்பு மண்ணறையின் இருபக்கச் சுவர்களும் அவனை நெருக்க ஆரம்பிக்கும். படிப்படியாக நெருங்கி அவனது இரு விலா எண்புகளும் ஒன்றோடு ஒன்று பிணையுமளவுக்கு நெருக்கும். இந்த வேதனையே இப்படியென்றால் நரகின் படுபயங்கர வேதனை எப்படியிருக்குமோ என எண்ணி அவன் “رب لا تقم الساعة”  “இறைவா மறுமையை ஏற்படுத்தி விடாதே...!” என்பான். அதுமுதல் மறுமை நிகழும்வரை அவன் அம்மண்ணறையில் வேதனைகளை அனுபவித்துக்கொண்டே இருப்பான்.

இவ்வாறு தான் பாவியான ஓருவனது கப்ருடைய வாழ்க்கை இருக்கும். கப்ருடைய வேதனைகள் பெரும் பாவங்கள் செய்த, இறைவனுக்கு இணைவைத்து,  அவனை நிராகரித்தவனுக்குத்தான் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. இதற்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துவது பொருந்தும்.

ஒரு முறை நபியவர்கள் ஒரு கழுதையில் பிரயாணித்துக்கொண்டிருந்தார்கள். ஸஹாபாக்களில் சிலர் அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். இடைநடுவே கழுதை மிரண்டு அண்ணலாரை கீழே தள்ளிவிடுகின்றது. உடனே நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து இங்கு ஏதும் மண்ணறைகள் இருக்கின்றனவா என்று கேட்டார். அண்ணலாருக்கு இரண்டு மண்ணறைகள் காட்டப்பட்டன. நபியவர்கள் கூறினார்கள் “இவ்விரு மண்ணறைவாசிகளும் கப்ருடைய வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் வாழும் போது சிறு நீர் கழித்துவிட்டு ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யாதவர். (மற்றுமொரு அறிவிப்பில்) மக்களைவிட்டும் மறைந்திருந்து சிறு நீர்க் கழிக்காதவர். மற்றையவர் கோள் சொல்லி,  பொய் பேசித் திரிந்தவர் என்றார்கள்.

அதுமட்டுமன்றி அண்ணலாரின் மிக்க அன்புக்குரிய மனைவியர்தாம் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள். அவர்களைப் பார்த்தே நபியவர்கள் “ஆயிஷாவே! கப்ருடைய வேதனையிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள்” என்று கூறினார்கள்.

நபிகலாரோடு யுத்தங்களில் கலந்துகொண்ட ஒரு நபித்தோழர்தாம் முஸ்அப் பின் முஆத் (ரழி) அவர்கள். அந்த நபித்தோழர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் அல்லாஹ{ அக்பர் என்றார்கள். பின்பு ஸ{ப்ஹானல்லாஹ் என்றார்கள். வழமைக்கு மாற்றமான, நபியவர்களது இந்த செயற்பாடு குறித்து ஸஹாபாக்கள் வினவியபோது நபியவர்கள் கூறினார்கள். “முஸ்அப் அடக்கம் செய்யப்பட்டதும் கப்ர் அவரை நெருக்கியது கண்டு நான் அல்லாஹ{ அக்பர் என்றேன். அதன் காரணமாக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது. எனவே கண்டு ஸ{ப்ஹானல்லாஹ் என்றேன்” அந்த நபித்தோழரோடு எம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பாவங்களோடு சங்கமித்திருப்பவர்கள். அப்படியானால் எமது நிலை பற்றி நாம் சற்று அல்ல அதிகமாகவே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நபியவர்கள் ஒருமுறை “எனக்குப் பல காட்சிகள் காட்டப்பட்டன. எனினும் கப்ர் வேதனையைப் போன்று அகோரமான காட்சியை நான் எங்கும் காணவில்லை” என்று கூறினார்கள். மற்றுமொரு முறை கப்ர் உடைய விடயத்தில் இவ்வாறு கூறினார்கள் “நான் கேட்பதை நீங்களும் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். எனினும் அதனால் நீங்கள் மையித்தை அடக்கம் செய்யாது விட்டுவிடுவீர்களோ என்று அஞ்சுகின்றேன்” என்றார்கள்.

இறைத் தூதர்கூட தமது மௌத்துடைய நேரத்திலிருக்கும்போது எம்மைப் பார்த்து எச்சரித்த ஒரு விடயம்தான்  لااله الا الله إن للموت سكراة அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை,  நிச்சயமாக மரணத் தருவாயிலே வேதனை இருக்கின்றது” என்று மூன்று முறை கூறினார்கள்.

எனவே இந்த கப்ர் உடைய கொடூரமான வேதனைகளிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் நபி (ஸல்) அவர்கள் எமக்கு துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள்.  அத்தஹிய்யாத்திலே ஓதக்கூடிய மிக முக்கியமான துஆ.

اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحياء والممات ومن شر فتنة مسيح الدجال.
اللهم إني اعوذ بك من الجبن والبخل واعوذ بك من أن أرد الى ارزل الامر واعوذ بك من فتنة الدنياء واعوذ بك من فتنة القبر
 
அதிலும் ஒரு நிபந்தனையுண்டு. உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால் தௌபாவுடைய வாயில்கள் மூடப்பட்டுவிடும். அதன் பின்னால் கேட்கப்படும் எந்தப் பிறார்த்தனையும் ஏற்கப்படமாட்டாது. எனவே மரணம் எத்தருனம் எம்மை வந்தடையும் என்பதை நாம் அறியமாட்டோம். எனவே அதற்குத் தயாராயிருக்கும் வண்ணம் அல்லாஹ்விடம் தௌபாக்கேட்டு எமது பாவக்கரைகளைப் போக்கிக்கொள்ளவேண்டும். முஃமினான நல்லடியானது மரணம் போன்று எம் மரணமும் சம்பவிக்க ஆசைகொண்டு அதன்படி வாழவேண்டும். காபிரான பாவியின் மரணத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல்தேடவேண்டும். அல்லாஹ் எம்மனைவரது ஆன்மாக்களையும் நல்ல முறையில் கைப்பற்றுவானாக…!
 
ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)
 
ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)

இன்று உலகில் காணப்படுகின்ற எந்த மதமாயினும் எந்த இனமாயினும் எக்கலாசாரமாயினும் அவை அனைத்தும் ஒருமித்து உடன்படுமொருவிடயம்தான் மரணம். மரணத்தை யாரும் மறுப்பதில்லை. அவ்வாறே மறுத்தாலும் அது இன,  மத, மொழி வேற்றுமைகளுக்கு அப்பால்,  குழந்தை,  இளைஞன்,  வயோதிகன் என்ற பருவங்களையும் தாண்டி, ஆண், பெண் என்ற பால்வித்தியாசங்களையும் மீறி வந்தேதீரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இதனை அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்.

كل نفس ذائقة الموت “ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியவையே...!(அல்-அன்பியா:35) மற்றுமோர் இடத்தில் لكل امة اجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون “ஒவ்வோர் சமூகத்துக்கும் (குறிப்பிட்டதொரு) தவனையுண்டு. அவர்களது தவனை வந்துவிட்டால் ஒரு நாழிகையேனும் பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.” (யூனுஸ்:49)

நவீன தொழிநுட்பங்களைப்பயன்படுத்தி எவ்வளவு பாதுகாப்புப் பொறிமுறைகளைக் கையாண்டு அமைக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்தாலும் மரணம் நிச்சயம் என்பதை மற்றுமோர் இடத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

اينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة
“நீங்கள் எங்கிருந்தபோதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். (அது) மிகப்பலமாகக் கட்டப்பட்ட கோட்டை (கொத்தளங்)களில் நீங்கள் இருந்தாலும் சரியே!” (அன்னிஸா:78)

மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனங்களைவைத்துப் பார்க்கும்போது மரணம் என்பது நிச்சயம் என்பதை விளங்கமுடிகிறது. வாழ்கின்றபோது மனிதர்களுக்குரிய கடமையாதெனில் கொடூரமான மரணவேதனையிலிருந்தும் அதன் பின்னுள்ள அகோரமான மண்ணறையின் தீங்குகளிலிருந்தும் அதனைத் தொடர்ந்துவரும் பயங்கரமான நரகப்படுகுழியின் தண்டனைகளிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில் தன் உலக வாழ்க்கையை அமைத்துக்கொள்வதாகும்.

அவ்வாறு தன் வாழ்வைச் சிறப்புற அமைத்துக்கொள்ளும் பட்சத்தில் அவனது மரணவேதனை இதமானதாகவும் மண்ணறை சுவனப்பூஞ்சோலையாகவும் இறுதி ஒதுங்குமிடம் சதாவும் இன்பங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் நிரந்தர சுவனமாகவும் அமையும்.

அந்தவகையில் நபியவர்கள் கூறிய இரண்டு விதமான மனிதர்களுடைய மரணநிலைபற்றியும் அவர்களது மண்ணறை வாழ்க்கை பற்றியும்,  பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் பிரபலமானதொரு ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். முதலாவது முஃமினான மனிதனின் மரணம். அடுத்து இறை நிறாகரிப்பாளனது மரணம். முதலில் ஒரு முஃமினுடைய மரண நிலைபற்றி அறிந்துகொள்வோம்.

முஃமினின் நிலை
அல்லாஹ் கூறுகின்றான்:
إن الذين قالوا ربنا الله ثم إستقاموا تتنزل عليهم الملئكة الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون
“எமதிரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி பின்பு (அதில்) உறுதியாக நிலைத்துமிருந்தார்களே அத்தகையோரது (மரணவேளையில்) வானவர்கள் இறங்கிவந்து மறுமைபற்றி நீங்கள் அச்சங்கொள்ளாதீர்கள். (இவ்வுலகில் விட்டுச்செல்லும் மனைவி, மக்கள், சொத்து சுகங்கள் பற்றியும்) கவலைகொல்லாதீர்கள். நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தீர்களே அச்சுவனபதியைக்கொண்டு நன்மாராயம் பெறுங்கள்” என்று கூறுவர்.” (ஹாமீம் ஸஜ்தா:30)

பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஒருமுறை அன்ஸாரிய சகோதரர் ஒருவரின் ஜனாஸாவிலே கலந்துகொள்வதற்காக நாம் நபியவர்களோடு சென்றுகொண்டிருந்தோம். மண்ணறை மைதானத்தை அடைந்ததும் நபியவர்கள் அங்கு அமர்ந்துகொண்டார்கள். நாமும் அண்ணலாரைச் சூழ அமர்ந்தோம். எமது தலைகளில் பறவைகள் வந்து நிற்குமளவுக்கு நாம் எவ்விதச் சலனமுமின்றி நபியவர்களையே உற்று நோக்கிக்கொண்டிருந்தோம். நபியவர்கள் அவரது கையிலிருந்த ஒரு சிறு தடியினால் நிலத்தில் தட்டிவிட்டு தலையை உயர்த்தி “கப்ருடைய வேதனையைவிட்டும் அல்லாஹ்விடம் அபயம் தேடிக்கொள்ளுங்கள்” என்று இரண்டு அல்லது மூன்று தடவைகள் கூறினார்கள்.

பின்பு இவ்வாறு கூறினார்கள்:

ஒரு முஃமினான அடியான் மரணப்படுக்கையில் இருக்கும்போது சூரியனின் பிரகாசத்தோடும் வெண்நிற முகத்தோடும் “நாஷிதாத்” எனும் மலக்குகள் வானிலிருந்து இறங்கிவருவார்கள். அவர்களிடம் சுவனத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கபனும் சுவனத்தின் வாசனைத் திறவியங்களும் இருக்கும். அவ்வானவர்கள் கண்ணெட்டும் தூரம்வரை அவருக்கு முன்னால் வீற்றிருப்பார்கள். பின்பு மலகுல்மௌத் வந்து அவரது தலைப்பகுதியில் அமர்ந்து “ஏ நல்ல ஆன்மாவே...! அல்லாஹ்வின் மன்னிப்பையும் திருப்பொறுத்தத்தையும் பெற்ற நிலையில் வெளியேறு” என்று கூறுவார். ஒரு குவலையிலிருந்து நீர் வடிந்தோடுவதுபோன்று அம்மனிதனின் ஆன்மா அவ்வுடலைவிட்டும் இலகுவான முறையில் வெளியேறும்.
 
உடனே அம்மலக்குகள் அவ்வான்மாவை சுவனத்து நறுமனங்கமலும் கபன் துணியில்வைத்து எடுத்துக்கொண்டு வானத்திற்கு உயர்ந்து செல்வார்கள். அந்த ஆன்மாவிலிருந்து கஸ்தூரி வாசம் வீசிக்கொண்டிருக்கும். வானத்தில் சஞ்ஜரித்துக்கொண்டிருக்கும் வேறு மலக்குகள் இம்மலக்குகளைக் கடந்துசெல்லும்போது “எவ்வளவு நறுமணமுள்ள ஆன்மா இது..!!” என்று கூறுவார்கள். அதற்கு அவ்வான்மாவைச் சுமந்துசெல்லும் மலக்குகள் “இது இன்னாரது மகன் இன்னாரது ஆன்மா” என்று உலகில் அவர் எப்பெயர் கூறி அழைக்கப்பட்டாரோ அப்பெயரையே கூறி மற்ற மலக்குகளுக்கு அறிமுகப்படுத்திவைப்பர்.

பின்பு முதல் வானத்தை அடைந்ததும் மலக்குகள் இவருக்காக அவ்வானத்தின் கதவைத் திறக்குமாறு கோறுவார்கள். வானம் திறபடும். இவ்வாறு ஒவ்வொரு வானத்தையும் கடந்து ஏழாவது வானத்தை அடைந்ததும் அல்லாஹ் “எனது அடியானை இல்லிய்யீனெனும் மிக உயர்ந்த இடத்தில் பதியுங்கள். பின்பு அவனை பூமிக்கே அனுப்புங்கள். ஏனெனில் அவனை நான் அங்குதான் படைத்தேன். அங்குதான் மரணிக்கச்செய்தேன். மீண்டும் அங்கிருந்தே உயிர்கொடுத்து உழுப்புவேன்” என்று வானவர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பான்.

மரண வீட்டில் இருக்கும் மையித் தன்னை விரைவாக கப்ரில் கொண்டுசென்று அடக்கம்செய்யுமாறும் கூறும். அதனைத் தாமதப்படுத்தும்போதெல்லாம் “ஏன் என்னைத் தாமதப்படுத்துகிறீர்கள்?” என்று கேட்கும். மிக்க சந்தோசமாக அமைதியாக இருக்கும். அவ்வாறு அம்மையித் பேசுவதை சுற்றியிருக்கும் மனு,  ஜின் இனத்தைத் தவிர மற்றைய அனைத்துப் படைப்புகளும் உணர்ந்துகொள்ளும்.

மண்ணறையிலே கொண்டுசென்று அடக்கம்செய்துவிட்டு அனைவரும் மீண்டு செல்லும்போதும் அம்மையித் கலக்கமோ,  நடுக்கமோ இன்றி மகிழ்வுடன் இருக்கும். பின்பு இல்லிய்யீனில் பதியப்பட்ட ஆன்மா பூமிக்குத் திருப்பப்பட்டு மண்ணறையிலிருக்கும் அதன் உடலோடு சேர்க்கப்பட்டுவிடும். அதனைத் தொடர்ந்து அழகான தோற்றத்தில் மனம்வீசும் நிலையில் இரண்டு மலக்குகள் வருவார்கள். அவர்கள் பிரகாசமாக இருப்பார்கள். மையித்தை அண்மித்து கேள்விகளை ஆரம்பிப்பார்கள்.

உனது இரட்சகன் யார்?            من ربك؟
உனது மார்க்கம் எது?            وما دينك؟
உனது வழிகாட்டி யார்?            ومن نبيك؟
 
இவை ஒவ்வொன்றுக்கும் அம்மையித் அழகான முறையில்

அல்லாஹ்வே எனதிரட்சகன்             ربي الله       
இஸ்லாம்தான் எனது மார்க்கம்    ديني الاسلام
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் எனது வழிகாட்டி    نبيي محمد (صل)
என்று பதிலளிக்கும்.

உடனே வானிலிருந்து ஒரு அசரீரி ஒலிக்கும். صدق عبدي  “எனதடியான் உண்மையுரைத்துவிட்டான்”

பின்பு அவ்வானவர்கள் அம்மையித்திற்கு அவரது இடது புறத்தில் பயங்கர நரகை எடுத்துக் காண்பிப்பார்கள். எனினும் வாழும்போது செய்த நல்லறங்களுக்காக அவரது வலப்புறத்தில் சுவனத்தை எடுத்துக்காண்பிப்பார்கள். பின்பு அவருக்கு சுவன ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுவன விரிப்புகளும் விரிக்கப்படும். அதுமுதல் அவ்வான்மா சுவனத்தின் இதமான தென்றல் காற்றை அனுபவித்துக்கொண்டிருக்கும். கண்ணெட்டும் தூரத்திற்கு அம்மண்ணறை விசாலமாக்கப்படும்.

அதன்பின்பு அழகானதொரு மனிதனின் தோற்றத்தில் மனம்வீசும் ஆடைகளை அணிந்துகொண்டு ஒருவர் அம்மையித்திடம் வருவார். வந்து “நீர் வாக்களிக்கப்பட்டிருந்த இந்நாளைக்கொண்டு நெற்செய்திபெறுங்கள்” என்று சுபசோபனம் கூறுவார். அதற்கு அவ்வான்மா “நீர் யார்?” என வினவும். அதற்கு அவ்வுருவம் “நீர் உலகில் செய்த நன்மையான காரியங்களின் மொத்த வடிவம்தான் நான்” என்று கூறும். பின்பு அம்மையித்திற்கு சுவனத்தின் காட்சிகள் காண்பிக்கப்படும். ஆதனைப் பார்த்து ரசித்துக்கொண்டே அவ்வான்மா “ربي أقم الساعة حتى ارجع إلى اهلي ومالي”  “எனதிரட்சகனே! எனது குடும்பத்தின்பாலும் சொத்து செல்வங்களின் பாலும் நான் செல்வதற்காக மறுமையை துரிதப்படுத்திவிடு” என்று பிறார்த்திக்கும். புpன்னர் அல்லாஹ் அவ்வுத்தம அடியானை புது மனமகனைப்போன்று மறுமைநாள் நிகழும்வரை உறங்கவைப்பான்.”

ஒரு முஃமினுடைய மரணத்தருவாயும் அதன்பின்னரான மண்ணறை நிகழ்வுகளும் இவ்வாறுதான் அமையும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதேசமயம் ஒரு இறை நிராகரிப்பாளனதுää இணைவைப்பவனது நிலைமை எத்தகையது என்பதையும் நபியவர்கள் எமக்குத்தெளிவுபடுத்தியுள்ளார்கள். தெளிவுபடுத்தியது மாத்திரமின்றி அதிலிருந்து பாதுகாப்புத்தேடுமாறும் வலியுருத்தியுள்ளார்கள்.

நிராகரிப்பாளன்.

அல்லாஹ்வை நிராகரிக்கும், அவனுக்கு இணைவைக்கும்,  அவனது கட்டளைகளுக்கு மாறுசெய்யும் ஒருவனது மரண நிலை எவ்வாறிருக்கும் என்பதை திருமறைக் குர்ஆன் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
ولو ترى إذ الظالمون في غمراة الموت والملائكة باسطوا ايديهم  اخرجوا انفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن اياته تستكبرون
 
“இவ்வநியாயக் காரர்கள் மரண வேதனையில் இருக்கும் சமயத்தில் நீர் அவர்களைப் பார்ப்பீராயின் மலக்குகள் தங்கள் கைகளைநீட்டி (அவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள். நீங்கள் அல்லாஹ்வின்மீது பொய்யைக் கூறிக்கொண்டிருந்ததாலும் அவனது வசனங்களை விட்டும் (ஏற்காது) பெருமையடித்துக்கொண்டிருந்ததாலும் இன்றைய தினம் உங்களுக்கு இழிவான வேதனைகொடுக்கப்படுகிறது. (என்று கூறுவதை நீர் காண்பீர்)” (அல்அன்ஆம்: 93)

ஒரு கெட்ட மனிதனது உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் தருவாயில் அவனை எவ்வாறு வானவர்கள் நெருங்குவார்கள் என்பதனை பரா இப்னு ஆஸிப் (ரழி) அவர்கள அறிவிப்பில் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

“நாஸிஆத் எனும் மலக்குகள் கறுப்பு நிறத்தோற்றத்தில் அம்மனிதனிடம் இறங்கிவருவார்கள். அவனது கண்ணெட்டும் தூரம்வரை அமர்வார்கள். பின்னர் மலகுல் மௌத் அவனது தலைப்பகுதியில் வந்தமர்து “ஏ அழுக்குற்ற ஆன்மாவே! ஆல்லாஹ்வின் கோபத்திற்கும் அவனது வெறுப்பிற்குமாளான நிலையில் இவ்வுடலைவிட்டும் வெளியேறு” என்பார்கள். ஆப்போது அந்த ரூஹ் அவனது உடலெங்கும் ஓடி ஒழிந்துகொள்ள முயற்சிக்கும். ஆனால் அம்மலகுல்மௌத் அந்த ரூஹை பலவந்தமாக மிகக்கடுமையன முறையில் பறித்தெடுப்பார். அடர்ந்த முட்புதரின்மீது போட்டுவிட்டு இழுத்து எடுக்கப்பட்ட மெல்லிய ஆடையைப் போன்று அவனது ரூஹ் உருக்குலைந்து சின்னாபின்னமாகி அவ்வுடலைவிட்டும் வெளியேரும்.

ஆவ்வாறு ரூஹ் பிறியும் சந்தர்ப்பத்தில் அவன் அல்லாஹ்விடம் கூறுவான் “அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால் (அவன் தன் இரட்சகனிடம்) “என் இரட்சகனே! என்னை (உலக்கத்திற்கு)த் திருப்பி அனுப்பிவிடுவாயாக!” என்று கூறுவான். “உலகில் நான் விட்டுவந்ததில் (இனி) நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). ஆவ்வாறன்று நிச்சயமாக அது அவன் கூறும் வெறும் வார்த்தையே! இன்னும் அவர்கள் (மறுமைக்காக) எழுப்பப்படும் நாள்வரை அவர்கள் முன்னே தடுப்பு இருக்கிறது. (அதனால் அவர்கள் உலகின்பால் மீண்டுவர சக்திபெறமாட்டார்கள்.)” (அல்முஃமினூன் : 99,100)

உடனே அம்மலக்குகள் அந்த ரூஹை எடுத்து நரகிலிருந்து கொண்டுவரப்பட்ட தூநாற்றம் வீசக்கூடிய கபன் துணியால் சுற்றி எடுத்துக்கொண்டு வானத்தின்பால் உயர்ந்து செல்வார்கள். ஆச்சமயம் அண்டத்தில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் பிற மலக்குகள் “என்னவொரு நாற்றமான ஆன்மா இது?” என்று வினவுவார்கள். ஆதற்கு அவ்வானவர்கள் “இன்னாரது மகன் இன்னாரது ஆன்மாதான் இது” என்று அவ்வான்மா பூமியில் என்ன பெயர் கூறி அழைக்கப்பட்டதோ அதே பெயரைக்கூறி ஏனைய வானவர்களுக்கு அறிமுகப்படுத்திவைப்பார்கள்.

இவ்வாறு உயரச்சென்று முதலாவது வானத்தை அடைந்ததும் மலக்குகள் அதன் வாயிலைத்திறக்குமாறு கோருவார்கள். ஆனால் அது திறபடமாட்டாது. இவ்வாறு கூறிவிட்டு நபியவர்கள் பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.

"إن الذين كذبوا باياتنا وإستكبروا عنها لا تفتح لهم ابواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط"
“யார் எமது வசனங்களைப்பொய்ப்படுத்தி அதனைவிட்டும் பெறுமையடித்தார்களோ அவர்களுக்கு வானங்களின் வாயில்கள் திறக்கப்படமாட்டாது. ஊசியின் காது வழியாக ஒட்டகம் நுழையும்வரை அவர்கள் சுவனம் நுழையவும் மாட்டார்கள்” (அல்-அஃராப் : 40)

புpன்னர் அல்லாஹ் அவ்வான்மாவைப் பூமியின் அடியிலிருக்கும் “ஸிஜ்ஜிய்யீனில்” பதியுமாறு மலக்குகளுக்குக் கட்டளையிடுவான். உடனே அது பூமியை நோக்கி வீசப்படும். இவ்வாறு கூறிவிட்டு நபியவர்கள் பின்வரும் குர்ஆனிய வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.

“فكانما خر من السماء فتخطفه الطير او تهوى به الريح في مكان سحيق”  
“அப்பொழுது அவன் வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக்கொண்டு சென்றதைப்போன்று அல்லது (பெருங்) காற்று அவனை வெகுதூரத்திலுள்ள இடத்திற்கு அவனை அடித்துச்சென்றதைப்போன்றோ ஆகிவிடுகிறான்.” (அல்ஹஜ் : 31)

மையித்தின் வீட்டிலிருந்து மண்ணறையில் அடக்கம் செய்வதற்காக மையித்தைத் தூக்கிவரும்போது அம்மய்யித் கதறுத்,  கத்தும்,  தன்னை எங்கு கொண்டுசெல்கின்றீர் என்று சப்தமிடும். மண்ணறையில் தன்னை அடக்கம்செய்யவேண்டாம் என்றும் அலறும். இவ்வாறு அந்த மையித் போடும் சப்தத்தை சுற்றியிருக்கும் மனிதனையும் ஜின்களையும் தவிற மற்ற அனைத்து உயிரினங்களும் செவிமடுக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மண்ணறையிலே அடக்கம் செய்யப்பட்டதும் வானத்திலிருந்து வீசப்பட்டு பூமியின் கீழ்ப்பகுதியிலிருக்கும் ஸிஜ்ஜிய்யீனில் அந்த ரூஹ் பதியப்பட்டதன் பின்னர் மீண்டும் மண்ணறையிலிருக்கும் அந்த உடலோடு அவ்வான்மா சேர்க்கப்படும். அதனைத் தொடர்ந்து நீல நிறக்கண்களையுடைய கறுப்பு நிறத்தில் படு பயங்கரமான தோற்றத்தில் முன்கர்,  நகீர் எனும் இரு மலக்குமார்கள் வருவார்கள். விசாரணை ஆரம்பமாகும்.

உனது இரட்சகன் யார்?            من ربك؟
உனது மார்க்கம் எது?            وما دينك؟
உனது வழிகாட்டி யார்?            ومن نبيك؟
அவ்வானவர்கள் இம்மூன்று கேள்விகளையும் கேட்டதும் அதற்கு அம்மனிதன் هاه هاه لا ادري”  “ஐயோ...! ஐயோ...! எனக்குத் தெரியவில்லையே...!” என்று புலம்புவான். உடனே வானிலிருந்து “அவன் பொய்யுரைத்துவிட்டான்” என்று ஒரு அசரீரி கேட்கும். உடனே அம்மலக்குகள் தமது கையிலிருக்கும் பாரிய சுத்தியலினால் அவனது தலையிலே ஓங்கி அடிப்பார்கள். அந்த சுத்தியலைக்கொண்டு பெரியதொரு மலையில் அடித்தால் அம்மலை வெடித்து தூள் தூளாகி இருந்த இடம்காணாது போய்விடும் என்று நபியவர்கள் அதன் கொடுமையை விளக்குகிறார்கள். அந்த சுத்தியலைக்கொண்டு அம்மனிதனின் தலையிலே அடித்ததும் அவனது தலை சிதறிச் சின்னாபின்னமாகி நொருங்கிப் போகும். அப்போது அவனிடும் கூச்சலைää ஓலத்தை மனிதனையும் ஜின்களையும் தவிர மற்ற அனைத்து உயிரினங்களும் செவிமடுப்பதாகவும் இதனை மனிதன் கேட்பானானால் அவ்விடத்திலேயே அவன் மூர்ச்சையாகி விடுவான் என்றும் நபியவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

அதனைத்தொடர்ந்து முன்கர் நகீர் மலக்குகள் அம்மையித்தை வலப்புறம் திரும்பிப் பார்க்கக் கூறுவர். அங்கே அவன் சுவனத்தின் கண்கொள்ளாக் காட்சிகளைக் காண்பான். ஆனந்தத்தில் மிதந்துகொண்டிருப்பான். உடனே அம்மலக்குகள் “நீ உலகில் புரிந்த பாவகாரியங்களினால் நீ நுழையவேண்டிய இடம் இதுவல்ல நரகம்தான்” என்று கூறி அவனை இடப்புறம் திரும்பிப்பார்க்கக் கூறுவர். அங்கு அவன் நரகத்தின் பயங்கர வேதனைகளையும் தண்டனைகளையும் காண்பான். அதனைக் கண்டு அவன் அஞ்சி நடுநடுங்கிக்கொண்டிருப்பான்.

அதில் அவனுக்கு நெருப்பாலான ஆடைகள் அணிவிக்கப்படும். நெருப்பாலான விரிப்புகள் விரிக்கப்படும். நெருப்பினாலான போர்வைகளால் அவன் போர்த்தப்படுவான். நரகின் அனற்காற்று வீசும்போதெல்லாம் அவன் மயங்கி மயங்கி விழுவான். இதனை அல்குர்ஆன் “النار يعرضون عليها غدوا وعشيا”  “அந்(நரக) நெருப்பு அதன் மீது காலையிலும் மாலையிலும் எடுத்துக்காட்டப்படும்.” (அல்முஃமின் : 46) என்கிறது.

அதன் பின்னர் அவனிடத்தில் அசிங்கமான பயங்கரமான உருவத்தில் ஒரு மனிதன் வருவான். அவனைப் பார்த்தாலே மரணித்துவிடுமளவுக்கு அவனது தோற்றம் மிகப் பயங்கரமாக இருக்கும். அந்த மையித் அப்பயங்கர உருவத்தைப் பார்த்து “யார் நீ?” என்று கோட்பான். “எதற்கு என்னிடம் வந்தாய்?” என்று வினவுவான். அதற்கு அவ்வுருவம் “நீ உலகில் புரிந்த பாவகாரியங்களின் மொத்தவடிவம்தான் நான். அல்லாஹ் அப்பாவகாரியங்களை எனது வடிவில் தற்போது உன்னிடத்தில் அனுப்பியுள்ளான்” என்று கூறும்.

பின்பு மண்ணறையின் இருபக்கச் சுவர்களும் அவனை நெருக்க ஆரம்பிக்கும். படிப்படியாக நெருங்கி அவனது இரு விலா எண்புகளும் ஒன்றோடு ஒன்று பிணையுமளவுக்கு நெருக்கும். இந்த வேதனையே இப்படியென்றால் நரகின் படுபயங்கர வேதனை எப்படியிருக்குமோ என எண்ணி அவன் “رب لا تقم الساعة”  “இறைவா மறுமையை ஏற்படுத்தி விடாதே...!” என்பான். அதுமுதல் மறுமை நிகழும்வரை அவன் அம்மண்ணறையில் வேதனைகளை அனுபவித்துக்கொண்டே இருப்பான்.

இவ்வாறு தான் பாவியான ஓருவனது கப்ருடைய வாழ்க்கை இருக்கும். கப்ருடைய வேதனைகள் பெரும் பாவங்கள் செய்த, இறைவனுக்கு இணைவைத்து,  அவனை நிராகரித்தவனுக்குத்தான் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. இதற்கு ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துவது பொருந்தும்.

ஒரு முறை நபியவர்கள் ஒரு கழுதையில் பிரயாணித்துக்கொண்டிருந்தார்கள். ஸஹாபாக்களில் சிலர் அவரைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். இடைநடுவே கழுதை மிரண்டு அண்ணலாரை கீழே தள்ளிவிடுகின்றது. உடனே நபியவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து இங்கு ஏதும் மண்ணறைகள் இருக்கின்றனவா என்று கேட்டார். அண்ணலாருக்கு இரண்டு மண்ணறைகள் காட்டப்பட்டன. நபியவர்கள் கூறினார்கள் “இவ்விரு மண்ணறைவாசிகளும் கப்ருடைய வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அதில் ஒருவர் வாழும் போது சிறு நீர் கழித்துவிட்டு ஒழுங்கான முறையில் சுத்தம் செய்யாதவர். (மற்றுமொரு அறிவிப்பில்) மக்களைவிட்டும் மறைந்திருந்து சிறு நீர்க் கழிக்காதவர். மற்றையவர் கோள் சொல்லி,  பொய் பேசித் திரிந்தவர் என்றார்கள்.

அதுமட்டுமன்றி அண்ணலாரின் மிக்க அன்புக்குரிய மனைவியர்தாம் அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள். அவர்களைப் பார்த்தே நபியவர்கள் “ஆயிஷாவே! கப்ருடைய வேதனையிலிருந்து உன்னைப் பாதுகாத்துக்கொள்” என்று கூறினார்கள்.

நபிகலாரோடு யுத்தங்களில் கலந்துகொண்ட ஒரு நபித்தோழர்தாம் முஸ்அப் பின் முஆத் (ரழி) அவர்கள். அந்த நபித்தோழர் மரணித்து அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் அல்லாஹ{ அக்பர் என்றார்கள். பின்பு ஸ{ப்ஹானல்லாஹ் என்றார்கள். வழமைக்கு மாற்றமான, நபியவர்களது இந்த செயற்பாடு குறித்து ஸஹாபாக்கள் வினவியபோது நபியவர்கள் கூறினார்கள். “முஸ்அப் அடக்கம் செய்யப்பட்டதும் கப்ர் அவரை நெருக்கியது கண்டு நான் அல்லாஹ{ அக்பர் என்றேன். அதன் காரணமாக அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது. எனவே கண்டு ஸ{ப்ஹானல்லாஹ் என்றேன்” அந்த நபித்தோழரோடு எம்மை ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் பாவங்களோடு சங்கமித்திருப்பவர்கள். அப்படியானால் எமது நிலை பற்றி நாம் சற்று அல்ல அதிகமாகவே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நபியவர்கள் ஒருமுறை “எனக்குப் பல காட்சிகள் காட்டப்பட்டன. எனினும் கப்ர் வேதனையைப் போன்று அகோரமான காட்சியை நான் எங்கும் காணவில்லை” என்று கூறினார்கள். மற்றுமொரு முறை கப்ர் உடைய விடயத்தில் இவ்வாறு கூறினார்கள் “நான் கேட்பதை நீங்களும் கேட்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன். எனினும் அதனால் நீங்கள் மையித்தை அடக்கம் செய்யாது விட்டுவிடுவீர்களோ என்று அஞ்சுகின்றேன்” என்றார்கள்.

இறைத் தூதர்கூட தமது மௌத்துடைய நேரத்திலிருக்கும்போது எம்மைப் பார்த்து எச்சரித்த ஒரு விடயம்தான்  لااله الا الله إن للموت سكراة அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை,  நிச்சயமாக மரணத் தருவாயிலே வேதனை இருக்கின்றது” என்று மூன்று முறை கூறினார்கள்.

எனவே இந்த கப்ர் உடைய கொடூரமான வேதனைகளிலிருந்தும் எம்மைப் பாதுகாத்துக்கொள்ளத்தான் நபி (ஸல்) அவர்கள் எமக்கு துஆக்களைக் கற்றுத் தந்துள்ளார்கள்.  அத்தஹிய்யாத்திலே ஓதக்கூடிய மிக முக்கியமான துஆ.

اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحياء والممات ومن شر فتنة مسيح الدجال.
اللهم إني اعوذ بك من الجبن والبخل واعوذ بك من أن أرد الى ارزل الامر واعوذ بك من فتنة الدنياء واعوذ بك من فتنة القبر
 
அதிலும் ஒரு நிபந்தனையுண்டு. உயிர் தொண்டைக் குழியை அடைந்துவிட்டால் தௌபாவுடைய வாயில்கள் மூடப்பட்டுவிடும். அதன் பின்னால் கேட்கப்படும் எந்தப் பிறார்த்தனையும் ஏற்கப்படமாட்டாது. எனவே மரணம் எத்தருனம் எம்மை வந்தடையும் என்பதை நாம் அறியமாட்டோம். எனவே அதற்குத் தயாராயிருக்கும் வண்ணம் அல்லாஹ்விடம் தௌபாக்கேட்டு எமது பாவக்கரைகளைப் போக்கிக்கொள்ளவேண்டும். முஃமினான நல்லடியானது மரணம் போன்று எம் மரணமும் சம்பவிக்க ஆசைகொண்டு அதன்படி வாழவேண்டும். காபிரான பாவியின் மரணத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல்தேடவேண்டும். அல்லாஹ் எம்மனைவரது ஆன்மாக்களையும் நல்ல முறையில் கைப்பற்றுவானாக…!
 
ஆலிப் அலி (இஸ்லாஹிய்யா வளாகம்)
 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...