"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

09 October 2015

இரத்தத்தில் இறைவன் வைத்துள்ள அற்புதங்கள்

மனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும், அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவனது ஆற்றலையும் புரிந்துகொள்ளலாம். மனித உடலே இறை இருப்புக்கான ஓர் அத்தாட்சிதான். அல்லாஹ் கூறுகின்றான்.


سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ
நிச்சயமாக (அவனே) உண்மையானவன் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம். (41:53)

அந்தவகையில் எமது உடம்பில் உள்ள அல்லாஹ்வின் மற்றுமொரு அத்தாட்சியும் அற்புதமானவொன்றும்தான் இரத்தம் (Blood). திரவ நிலையில் சிவப்பு நிறத்தில் உடலில் உள்ள குருதிக் கலங்களுடாக இதயம் எனும் பம்பியின் உதவியுடன் உடல் முழுக்கப் பயனித்து மனிதனின் மட்டுமன்றி உயிர்ப்பிராணிகள் அனைத்தினது வாழ்க்கைகைகும் உதவும் அவசியமானவொன்றாக இரத்தம் இருக்கின்றது.

குருதிச் சுற்றோட்டம்.

எமது உடலில் தலை முதல் கால் பாதங்கள் வரை எண்ணிலடங்காத கலங்கள் காணப்படுகின்றன. அந்த கலங்களின் தொழிற்பாடுகளுக்கும் உயிர் வாழ்க்கைக்கு சக்தி அவசியம். சக்தி என்பது கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் என்பவற்றைக் கொண்டவை. ஒக்ஸிஜனும் மிக அவசியம். உடலின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ள கலங்களுக்கு இவற்றைச் சுமந்து சென்று சப்ளை செய்யும் வேலையையே இரத்தம் செய்கின்றது. சப்ளை செய்துவிட்டு சும்மா வெட்டியாகத் திரும்பி வருவதுமில்லை.

கலங்கள் உபயோகித்துவிட்டு எஞ்சியிருக்கின்ற கார்பன் டைஒக்சைடையும் இதர கழிவுகளையும் மீண்டும் சுமந்து கொண்டுவந்து காபனை நுரையீரலில் விட்டு விடுகின்றது. அது மூக்கு வழியே வெளியேறுகின்றது. மற்ற கழிவுகளை சிறுநீரகங்கள் சுத்திகரிக்கின்றன. 24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

இவ்வாறு நாடி நாளங்கள் எனும் குருதிக் கலன்கள் (blood vessels) ஊடாக இரத்தம் உடல் முழுதும் சுற்றுவதே குருதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. இதயத்தை மையமாக்க்கொண்டு சுற்றிவரும் ஒரு சுழற்சியில் ரத்தம் உடல் முழுதும் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்களாம். சுபஹானல்லாஹ்! நம்மை அறியாமல், நமது கட்டலைகள் எதுவும் இன்றி உடம்புக்குள் நடக்கும் பிரம்மாண்டமானதொரு வேலைதான் குருதிச் சுற்றோட்டம்.

இரத்தம் உற்பத்தி


காயங்கள் மூலம் இரத்தம் வெளியேறுதல் மற்றும் கழிவுகளாக வெளியேறுதல் என்ற சில செயற்பாடுகளால் குறையும் இரத்தம் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு அவ்வெற்றிடம் நிரப்ப்ப்படவும் வேண்டும். இந்த இரத்த உற்பத்தியை எமது எலும்பு மஜ்ஜைகள் செய்கின்றன. எலும்புகளுக்கு நடுவில் உள்ள வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை Bone Marrow இருக்கின்றது. இந்த எலும்பு மஜ்ஜைகளில்தான் சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் குருதிச் சிறு தட்டுக்கள் உற்பத்தியாகின்றன. மாதுளை, பீட்ரூட், கீரைகள், பழங்கள், இரைச்சி ஈரல் போன்ற இரத்த உற்பத்தியை தூண்டும் உணவுகளை நாம் உட்கொள்வது இதற்குத் துணை செய்யும்.

இரத்தத்தில் உள்ள அணுக்கள்.

இரத்தம் சிவப்பு அணுக்கள் (சென்குருதிச் சிறுதட்டுக்கள்), வெள்ளை அணுக்கள் (வெண் குருதிச் சிறுதட்டுக்கள்), குருதிச் சிறுதட்டுக்கள் என்பவற்றைக்கொண்ட ஒருவகை நீர்மப்பொருளாகும். அத்தோடு ப்ளாஸ்மா என்ற திரப் பொருளும் உண்டு. இதில் திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், திரவப்பொருள்கள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம். 96% ஆனவை இந்த சிவப்பு அணுக்களே. அத்தோடு வெள்ளை அணுக்கள் 3% உம் குருதிச் சிறுதட்டுக்கள் 1% உம் இரத்தத்தில் காணப்படுகின்றன.

1.சிவப்பு இரத்த அணுக்கள்.
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோகுளோபின் (hb)” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இவற்றின் பிரதான தொழில் ஒக்ஸிஜனை சுமந்து சென்று அவற்றைக் கலங்களுக்கு சேர்க்கின்றன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். இதன் கூடுதல் எண்ணிக்கையால்தான் இரத்தம் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றது. சுபஹானல்லாஹ்! ஒரு சொட்டு இரத்தத்திலே இவ்வளவு தொகை என்றால் முழு உடலிலும் எவ்வளவு இரத்த அணுக்களை அல்லாஹ் வைத்திருப்பான்.

இந்த சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்வரைதான். இவற்றில் அடங்கியுள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்துள்ள உணவுகள் மிக அவசியம். கீரைமுட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்துகள் அதிகம். பள்ளிப் பருவ மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இரும்புச் சத்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. இரத்த சோகை போன்ற நோய்களும் வராது.

2.வெள்ளை இரத்த அணுக்கள்
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போரிட்டு அழித்துவிடுவபை இந்த வெள்ளை இரத்த அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரமாக உள்ளன. கண்டவற்றையெல்லாம் வாயில் போட்டும் அரைத்து உண்ணும் வேலையை மட்டும்தான் நாம் செய்கின்றோம்.

ஆனால் அவை உடலுக்குள் சென்றதும் இந்த வெள்ளை இரத்த அணுக்கள்தான் அவற்றை ஆராய்ந்து நோய்க்கிருமிகளைக் கண்டால் உடனே அவற்றை அழித்து எமது ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகின்றன. இப்படியொரு காரியம் நடப்பது உண்மையில் எமக்கு தெரியாமலும் இருக்கலாம். வல்லவன் அல்லாஹ் எம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக எப்படியெல்லாம் எமது உடலை வடிவமைத்துள்ளான் என்று பார்த்தீர்களா?

3.குருதிச் சிறு தட்டுக்கள்.

உடலில் எங்காவது ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டவுடன் இரத்தம் வெளியேற ஆரம்பிக்கும். ஆனால் அது அப்படியே தொடர்வதில்லை. சிறிது நேரத்தில் இயற்கையாகவே அது நின்று விடும். இது அல்லாஹ்வின் மற்றுமொரு நுணுக்கமான ஏற்பாடு. இரத்தத்தில் உள்ள குறுதிச் சிறு தட்டுகளின் பிரதான செயல் இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி ஒரு வகை அடைப்பை ஏற்படுத்தி இரத்தக் கசிவை தடுத்துவிடுவதுதான். இரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியான ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் இரத்தத்தை உறைய வைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் இரத்தம் உறையாது. இதனைத்தான் குறுதி உறையா நோய் (ஈமோபீலியா) என்போம். இந்தக் இரத்தம் உறையும் செயற்பாட்டை நிஜமாகவே நாமாக செய்துகொள்கின்றோமா? அல்லது இறைவனின் கட்டலைப்படி இந்த குருதிச் சிறு தட்டுக்கள் இயங்குகின்றனவா? சுபஹானல்லாஹ்! அல்லாஹ்வே சகல வல்லமையும் படைத்தவன்.

இரத்தத்தின் வகைகள்

வெளிப்பார்வைக்கு அனைவரினது இரத்தமும் சிவப்பு நிறத்தில் ஒரே விதமாக இருந்தாலும் அல்லாஹ் அதிலும் வெவ்வேறு வகைகளை வைத்துள்ளான். 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர்தான் இரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை “A” வகை இரத்தம், “B” வகை இரத்தம், “AB” வகை இரத்தம் மற்றும் “O” வகை இரத்தம் என்பனவாகும்.

இவ்வாறு இரத்தம் குரூப் வாரியாக பிரிக்கப்படுவது இரத்த சிவப்பணுக்களில் உள்ள அன்டிஜன் (Antigen) எனும் ஒருவகைப் புரதப் பொருளை வைத்துத்தான். அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களில் A அன்டிஜன் இருந்தால், A குரூப் என்றும் B அன்டிஜன் இருந்தால் B குரூப் என்றும் AB என்ற இரண்டு அன்டிஜன்களும் இருந்தால் AB குரூப் என்றும் எந்தவிதமான அன்டிஜனும் இல்லையென்றால் அது O குரூப் என்றும் தரம் பிரிப்பர்.
மேற்கூறிய இரத்தத்னி வகைகளுக்கு ஏற்ப உலகில் A இரத்த வகையினர் 42% உம், B வகையினர் 8% உம், AB வகையினர் 3% உம், O வகையினர் 47% உம் உள்ளனரென ஓர் கணிப்பு சுட்டுகின்றது. ‘O’ வகை இரத்தத்தை யாருக்கும் வழங்கலாம் எனவே அதனை “Universal Donor” என்போம். காரணம் ‘O’ வகை இரத்தமுள்ளவர்கள் A, B, AB, O போன்ற இரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம். அதுபோன்று AB இரத்த வகையினரை Universal Recipient என்று அழைப்பார்கள். இவ்வகை இரத்தமுள்ளவர்களுக்கு A, B, AB, O, வகை இரத்தங்களைச் செலுத்த முடியும்.

நீர்ப் பம்பியல்ல குருதிப் பம்பி

தாயின் கருவறையில் கருக்கட்டல் நடைபெற்று 21ம் நாளிலிருந்தே இதயம் எனும் குருதிப் பம்பி தொழிற்பட ஆரம்பிக்கின்றது. மனிதனுக்குத் தேவையான ஆரம்ப கட்ட இரத்த்த்தை தாயின் உடலிலிருந்து கரு உறிஞ்சி வளர்கின்றது. 21ம் நாள் முதல் அவனது உயிர் பிரியும்வரை ஓய்வே இன்றி இரத்தத்தை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் அனுப்ப பம்பியாகச் செயற்படுகின்றது இதயம். மனித உடலில் சுமார் 4 - 5 லீட்டர் குருதி இருக்கின்றது. 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லீட்டர் அளவில் இரத்தம் இருக்கும். இந்த இரத்தத்தை மீண்டும் மீண்டும் இதயம் சுழற்சி முறையில் உடல் முழுதும் விணியோகிக்கின்றது. இதயத்திலிருந்து புறப்படும் இரத்தத்தின் அளவு ஒரு நாளைக்கு 8300 லீட்டர்களாகும்.


சுபஹானல்லாஹ்! எமது வீட்டு நீர்த்தாங்கியின் கொள்ளவு 1500 அல்லது 2000 லீட்டர் நீரையே நீர்ப் பம்பி பாய்ச்சுகின்றது. ஆனால் இதயம் ஒரு நாளைக்கு 8300 லீட்டரை அதுவும் வருடக்கணக்கில் பாய்ச்சுகின்றதென்றால் அல்லாஹ்வின் படைப்பாற்றல் எம்மால் புரிந்துகொள்ள முடியும். அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி ஆராய்பவர்களுக்கு அதில் நிறையப் படிப்பினைகளையும், அத்தாட்சிகளையும் அவன் வைத்திருக்கின்றான். படைப்பினங்களுடாக படைப்பாளனைக் கண்டுகொள்ளலாம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)
மனித உடலை அல்லாஹ் வடிவமைத்திருக்கும் நேர்த்தியையும், அதிலுள்ள நுணுக்கங்களையும் சற்று உற்றுப்பார்த்தால் அதில் அல்லாஹ்வின் அருளையும் அவனது ஆற்றலையும் புரிந்துகொள்ளலாம். மனித உடலே இறை இருப்புக்கான ஓர் அத்தாட்சிதான். அல்லாஹ் கூறுகின்றான்.


سَنُرِيهِمْ آيَاتِنَا فِي الْآفَاقِ وَفِي أَنْفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ الْحَقُّ
நிச்சயமாக (அவனே) உண்மையானவன் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், (ஏன்) அவர்களுக்குள்ளேயும் நாம் காண்பிக்கின்றோம். (41:53)

அந்தவகையில் எமது உடம்பில் உள்ள அல்லாஹ்வின் மற்றுமொரு அத்தாட்சியும் அற்புதமானவொன்றும்தான் இரத்தம் (Blood). திரவ நிலையில் சிவப்பு நிறத்தில் உடலில் உள்ள குருதிக் கலங்களுடாக இதயம் எனும் பம்பியின் உதவியுடன் உடல் முழுக்கப் பயனித்து மனிதனின் மட்டுமன்றி உயிர்ப்பிராணிகள் அனைத்தினது வாழ்க்கைகைகும் உதவும் அவசியமானவொன்றாக இரத்தம் இருக்கின்றது.

குருதிச் சுற்றோட்டம்.

எமது உடலில் தலை முதல் கால் பாதங்கள் வரை எண்ணிலடங்காத கலங்கள் காணப்படுகின்றன. அந்த கலங்களின் தொழிற்பாடுகளுக்கும் உயிர் வாழ்க்கைக்கு சக்தி அவசியம். சக்தி என்பது கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் என்பவற்றைக் கொண்டவை. ஒக்ஸிஜனும் மிக அவசியம். உடலின் மூலை முடுக்குகளில் எல்லாம் உள்ள கலங்களுக்கு இவற்றைச் சுமந்து சென்று சப்ளை செய்யும் வேலையையே இரத்தம் செய்கின்றது. சப்ளை செய்துவிட்டு சும்மா வெட்டியாகத் திரும்பி வருவதுமில்லை.

கலங்கள் உபயோகித்துவிட்டு எஞ்சியிருக்கின்ற கார்பன் டைஒக்சைடையும் இதர கழிவுகளையும் மீண்டும் சுமந்து கொண்டுவந்து காபனை நுரையீரலில் விட்டு விடுகின்றது. அது மூக்கு வழியே வெளியேறுகின்றது. மற்ற கழிவுகளை சிறுநீரகங்கள் சுத்திகரிக்கின்றன. 24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

இவ்வாறு நாடி நாளங்கள் எனும் குருதிக் கலன்கள் (blood vessels) ஊடாக இரத்தம் உடல் முழுதும் சுற்றுவதே குருதிச் சுற்றோட்டம் எனப்படுகின்றது. இதயத்தை மையமாக்க்கொண்டு சுற்றிவரும் ஒரு சுழற்சியில் ரத்தம் உடல் முழுதும் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்களாம். சுபஹானல்லாஹ்! நம்மை அறியாமல், நமது கட்டலைகள் எதுவும் இன்றி உடம்புக்குள் நடக்கும் பிரம்மாண்டமானதொரு வேலைதான் குருதிச் சுற்றோட்டம்.

இரத்தம் உற்பத்தி


காயங்கள் மூலம் இரத்தம் வெளியேறுதல் மற்றும் கழிவுகளாக வெளியேறுதல் என்ற சில செயற்பாடுகளால் குறையும் இரத்தம் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு அவ்வெற்றிடம் நிரப்ப்ப்படவும் வேண்டும். இந்த இரத்த உற்பத்தியை எமது எலும்பு மஜ்ஜைகள் செய்கின்றன. எலும்புகளுக்கு நடுவில் உள்ள வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை Bone Marrow இருக்கின்றது. இந்த எலும்பு மஜ்ஜைகளில்தான் சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் குருதிச் சிறு தட்டுக்கள் உற்பத்தியாகின்றன. மாதுளை, பீட்ரூட், கீரைகள், பழங்கள், இரைச்சி ஈரல் போன்ற இரத்த உற்பத்தியை தூண்டும் உணவுகளை நாம் உட்கொள்வது இதற்குத் துணை செய்யும்.

இரத்தத்தில் உள்ள அணுக்கள்.

இரத்தம் சிவப்பு அணுக்கள் (சென்குருதிச் சிறுதட்டுக்கள்), வெள்ளை அணுக்கள் (வெண் குருதிச் சிறுதட்டுக்கள்), குருதிச் சிறுதட்டுக்கள் என்பவற்றைக்கொண்ட ஒருவகை நீர்மப்பொருளாகும். அத்தோடு ப்ளாஸ்மா என்ற திரப் பொருளும் உண்டு. இதில் திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், திரவப்பொருள்கள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம். 96% ஆனவை இந்த சிவப்பு அணுக்களே. அத்தோடு வெள்ளை அணுக்கள் 3% உம் குருதிச் சிறுதட்டுக்கள் 1% உம் இரத்தத்தில் காணப்படுகின்றன.

1.சிவப்பு இரத்த அணுக்கள்.
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோகுளோபின் (hb)” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் இரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. இவற்றின் பிரதான தொழில் ஒக்ஸிஜனை சுமந்து சென்று அவற்றைக் கலங்களுக்கு சேர்க்கின்றன. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் சிவப்பு இரத்த அணுக்கள் இருக்கும். இதன் கூடுதல் எண்ணிக்கையால்தான் இரத்தம் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றது. சுபஹானல்லாஹ்! ஒரு சொட்டு இரத்தத்திலே இவ்வளவு தொகை என்றால் முழு உடலிலும் எவ்வளவு இரத்த அணுக்களை அல்லாஹ் வைத்திருப்பான்.

இந்த சிவப்பு இரத்த அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள்வரைதான். இவற்றில் அடங்கியுள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்துள்ள உணவுகள் மிக அவசியம். கீரைமுட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்துகள் அதிகம். பள்ளிப் பருவ மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு இரும்புச் சத்துள்ள உணவுகளை சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது. இரத்த சோகை போன்ற நோய்களும் வராது.

2.வெள்ளை இரத்த அணுக்கள்
இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போரிட்டு அழித்துவிடுவபை இந்த வெள்ளை இரத்த அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரமாக உள்ளன. கண்டவற்றையெல்லாம் வாயில் போட்டும் அரைத்து உண்ணும் வேலையை மட்டும்தான் நாம் செய்கின்றோம்.

ஆனால் அவை உடலுக்குள் சென்றதும் இந்த வெள்ளை இரத்த அணுக்கள்தான் அவற்றை ஆராய்ந்து நோய்க்கிருமிகளைக் கண்டால் உடனே அவற்றை அழித்து எமது ஆரோக்கிய வாழ்வுக்கு உதவுகின்றன. இப்படியொரு காரியம் நடப்பது உண்மையில் எமக்கு தெரியாமலும் இருக்கலாம். வல்லவன் அல்லாஹ் எம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக எப்படியெல்லாம் எமது உடலை வடிவமைத்துள்ளான் என்று பார்த்தீர்களா?

3.குருதிச் சிறு தட்டுக்கள்.

உடலில் எங்காவது ஒரு இடத்தில் காயம் ஏற்பட்டவுடன் இரத்தம் வெளியேற ஆரம்பிக்கும். ஆனால் அது அப்படியே தொடர்வதில்லை. சிறிது நேரத்தில் இயற்கையாகவே அது நின்று விடும். இது அல்லாஹ்வின் மற்றுமொரு நுணுக்கமான ஏற்பாடு. இரத்தத்தில் உள்ள குறுதிச் சிறு தட்டுகளின் பிரதான செயல் இரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி ஒரு வகை அடைப்பை ஏற்படுத்தி இரத்தக் கசிவை தடுத்துவிடுவதுதான். இரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியான ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் இரத்தத்தை உறைய வைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் இரத்தம் உறையாது. இதனைத்தான் குறுதி உறையா நோய் (ஈமோபீலியா) என்போம். இந்தக் இரத்தம் உறையும் செயற்பாட்டை நிஜமாகவே நாமாக செய்துகொள்கின்றோமா? அல்லது இறைவனின் கட்டலைப்படி இந்த குருதிச் சிறு தட்டுக்கள் இயங்குகின்றனவா? சுபஹானல்லாஹ்! அல்லாஹ்வே சகல வல்லமையும் படைத்தவன்.

இரத்தத்தின் வகைகள்

வெளிப்பார்வைக்கு அனைவரினது இரத்தமும் சிவப்பு நிறத்தில் ஒரே விதமாக இருந்தாலும் அல்லாஹ் அதிலும் வெவ்வேறு வகைகளை வைத்துள்ளான். 1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர்தான் இரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை “A” வகை இரத்தம், “B” வகை இரத்தம், “AB” வகை இரத்தம் மற்றும் “O” வகை இரத்தம் என்பனவாகும்.

இவ்வாறு இரத்தம் குரூப் வாரியாக பிரிக்கப்படுவது இரத்த சிவப்பணுக்களில் உள்ள அன்டிஜன் (Antigen) எனும் ஒருவகைப் புரதப் பொருளை வைத்துத்தான். அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. இரத்த சிவப்பணுக்களில் A அன்டிஜன் இருந்தால், A குரூப் என்றும் B அன்டிஜன் இருந்தால் B குரூப் என்றும் AB என்ற இரண்டு அன்டிஜன்களும் இருந்தால் AB குரூப் என்றும் எந்தவிதமான அன்டிஜனும் இல்லையென்றால் அது O குரூப் என்றும் தரம் பிரிப்பர்.
மேற்கூறிய இரத்தத்னி வகைகளுக்கு ஏற்ப உலகில் A இரத்த வகையினர் 42% உம், B வகையினர் 8% உம், AB வகையினர் 3% உம், O வகையினர் 47% உம் உள்ளனரென ஓர் கணிப்பு சுட்டுகின்றது. ‘O’ வகை இரத்தத்தை யாருக்கும் வழங்கலாம் எனவே அதனை “Universal Donor” என்போம். காரணம் ‘O’ வகை இரத்தமுள்ளவர்கள் A, B, AB, O போன்ற இரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம். அதுபோன்று AB இரத்த வகையினரை Universal Recipient என்று அழைப்பார்கள். இவ்வகை இரத்தமுள்ளவர்களுக்கு A, B, AB, O, வகை இரத்தங்களைச் செலுத்த முடியும்.

நீர்ப் பம்பியல்ல குருதிப் பம்பி

தாயின் கருவறையில் கருக்கட்டல் நடைபெற்று 21ம் நாளிலிருந்தே இதயம் எனும் குருதிப் பம்பி தொழிற்பட ஆரம்பிக்கின்றது. மனிதனுக்குத் தேவையான ஆரம்ப கட்ட இரத்த்த்தை தாயின் உடலிலிருந்து கரு உறிஞ்சி வளர்கின்றது. 21ம் நாள் முதல் அவனது உயிர் பிரியும்வரை ஓய்வே இன்றி இரத்தத்தை உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் அனுப்ப பம்பியாகச் செயற்படுகின்றது இதயம். மனித உடலில் சுமார் 4 - 5 லீட்டர் குருதி இருக்கின்றது. 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லீட்டர் அளவில் இரத்தம் இருக்கும். இந்த இரத்தத்தை மீண்டும் மீண்டும் இதயம் சுழற்சி முறையில் உடல் முழுதும் விணியோகிக்கின்றது. இதயத்திலிருந்து புறப்படும் இரத்தத்தின் அளவு ஒரு நாளைக்கு 8300 லீட்டர்களாகும்.


சுபஹானல்லாஹ்! எமது வீட்டு நீர்த்தாங்கியின் கொள்ளவு 1500 அல்லது 2000 லீட்டர் நீரையே நீர்ப் பம்பி பாய்ச்சுகின்றது. ஆனால் இதயம் ஒரு நாளைக்கு 8300 லீட்டரை அதுவும் வருடக்கணக்கில் பாய்ச்சுகின்றதென்றால் அல்லாஹ்வின் படைப்பாற்றல் எம்மால் புரிந்துகொள்ள முடியும். அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி ஆராய்பவர்களுக்கு அதில் நிறையப் படிப்பினைகளையும், அத்தாட்சிகளையும் அவன் வைத்திருக்கின்றான். படைப்பினங்களுடாக படைப்பாளனைக் கண்டுகொள்ளலாம்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

3 comments:

Anonymous said...

நரம்புக் கால்வாய் ஊடாக குருதி பயணிப்பதாக ஒரு இடத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்.அது தவறு.குருதிக் கலன்கள் ஊடாக -என்பதே சரியானது.

Aalif Ali said...

திருத்தியமைக்கு நன்றி அன்பரே!
உங்கள் பெயரையும் அறிமுகம் செய்துகொள்ளுங்கள்.

Mohammed shakeer said...

மனமார்ந்த வாழ்த்துகள். தொடரட்டும் உமது பணி.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...