"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

30 May 2012

பிறர் புகைத்துவிடும் புகையாலும் ஆபத்து


சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடானது. இதனால் இதயநோய்கள் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. அதேநேரத்தில் சிகரெட் பிடிக்காதவர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர். சிகரெட் பிடிக்காவிட்டாலும் கூட மற்றவர்விடும் புகையை சுவாசிப்பதால் இதயநோய் மற்றும் சுவாசநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் குறித்து கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 192 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 இலட்சம் பேர் பலியாகி வருகின்றனர். அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். 30 சதவீதம் ஆண்களும் பெண்களும் அடங்குவர். மேலும் இதய நோயினால் 3 இலட்சத்து 79 பேரும் 1 இலட்சத்து 65 பேரும் மூச்சுக் கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும் 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்த்துமாவினாலும் 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்றுநோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.

இவ்வாறு இறப்பவர்களில் இது உலகளவில் 1 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுவீடன்  தேசிய சுகாதார நலக்கழக விஞ்ஞானிகள் நடாத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது மேலும் குழந்தைகள் இருக்கும்போது பெரும்பாலான பெற்றோர் சிகரெட் பிடிக்கிறார்கள். அந்தப் புகை குழந்தைகளைப் பெருமளவில் பாதிக்கிறது. அது அவர்களை சாவை நோக்கி அழைத்துச் செல்கிறது. காதுகளினால் நோய் பரவுதல், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் அவர்களை அதிரடியாக பற்றிக்கொள்கின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்குக் கேடானது. இதனால் இதயநோய்கள் புற்றுநோய் போன்றவை ஏற்படுகின்றன. அதேநேரத்தில் சிகரெட் பிடிக்காதவர்களும் பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர். சிகரெட் பிடிக்காவிட்டாலும் கூட மற்றவர்விடும் புகையை சுவாசிப்பதால் இதயநோய் மற்றும் சுவாசநோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் குறித்து கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 192 நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 இலட்சம் பேர் பலியாகி வருகின்றனர். அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள். 30 சதவீதம் ஆண்களும் பெண்களும் அடங்குவர். மேலும் இதய நோயினால் 3 இலட்சத்து 79 பேரும் 1 இலட்சத்து 65 பேரும் மூச்சுக் கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும் 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்த்துமாவினாலும் 21 ஆயிரத்து 400 பேர் நுரையீரல் புற்றுநோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.

இவ்வாறு இறப்பவர்களில் இது உலகளவில் 1 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுவீடன்  தேசிய சுகாதார நலக்கழக விஞ்ஞானிகள் நடாத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது மேலும் குழந்தைகள் இருக்கும்போது பெரும்பாலான பெற்றோர் சிகரெட் பிடிக்கிறார்கள். அந்தப் புகை குழந்தைகளைப் பெருமளவில் பாதிக்கிறது. அது அவர்களை சாவை நோக்கி அழைத்துச் செல்கிறது. காதுகளினால் நோய் பரவுதல், ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் அவர்களை அதிரடியாக பற்றிக்கொள்கின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...