"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

06 July 2011

பூமியில் இறைவனின் துல்லியமான திட்டமிடல்கள்

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஞாயிற்றுத் தொகுதியில் காணப்படுகின்ற கோள்களிலேயே மிகவும் அழகான இப்பூமி பார்ப்பதற்கு நீல நிறத்தில் கோள வடிவத்தில் காட்சியளிக்கின்றது. அல்லஹ் இப்பூமியை உயிர்வாழ்க்கைக்குச் சாத்தியமான விதத்தில் பல்வேறு ஏற்பாடுகளுடன் மிகவும் அழகாகப் படைத்துள்ளான். இவ்வேற்பாடுகளில் காணப்படுகின்ற நுணுக்கமும் துல்லியமான திட்டமிடலும் இறை இருப்பைப் பறைசாட்டி நிற்கின்றன.

பூமியை நாம் உங்களுக்குத் தொட்டிலாக ஆக்கவில்லையா?” (78:6) என்ற அல்குர்ஆனிய வசனம் புவியில் உயிர்வாழ்க்கைக்காகக் காணப்படுகின்ற பல்வேறு சாத்தியப்பாடுகளையும் பட்டியலிட்டுக் கூறுகின்றது. தொட்டிலென்றால் அது எவ்வளவு சுகமானதும் பாதுகாப்பானதும் என்று நாம் அறிவோம். அதேபோன்றதுதான் இப்பூமியும் என்பதனையே அல்லாஹ் சூசகமாகக் கூறுகின்றான். ஏவ்வாறெல்லாம் அல்லாஹ் இப்புவியை ஒரு பாதுகாப்பான வாழிடமாக அமைத்துள்ளான் என்பதை சில உதாணரங்களுடாக அவதானிப்போம்.


1.சூரியனிலிருந்து பொருத்தமானளவு தூரத்தில் பூமியைப் படைத்துள்ளமை.

சூரியனிலிருந்து பொருத்தமானளவு தூரத்தில் மூன்றாவது நீள்வட்டப் பாதையில் அல்லாஹ் பூமியை அமைத்துள்ளான். இது பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சிறந்ததொரு ஏற்பாடாகும். இப்பூமி தற்போதிருப்பதை விட சற்றேனும் சூரியனை நெருங்கியிருந்தால் பூமி சூரியனின் வெப்பத்தால் பொசுங்கிப் போயிருக்கும். அல்லது இருக்கும் இடத்திலிருந்து சற்றேனும் தூரமாகியிருந்தால் பூமி குளிர்ந்து பணியால் மூடப்பட்டிருக்கும். இவ்விரண்டு நிலைகளிலும் உயிர்வாழ்க்கை சாத்தியமில்லை. எனவேதான் ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள பிற கோள்களில் உயிர்வாழ்க்கை சாத்தியமின்றி உள்ளது. ஆனால் அல்லாஹ் பூமியை துல்லியமான முறையில் சரியான இடத்தில் வைத்து சீரான வேகத்தில் இயக்குகின்றான்.


 2. சூரியனிலிருந்து பூமியின் தூரமும் பூமி சூரியனைச் சுற்றும் வேகமும்.

சூரியனிலிருந்து பூமி 14,96,80,000km தூரத்தில் அமைந்துள்ளது. அத்தோடு பூமி செக்கனுக்கு 18 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றது. சூரியனிலிருந்துள்ள தூரமும் பூமி சுற்றும் வேகமும் சேர்ந்துதான் பூமி அந்தரத்தில் சீராக நிற்கின்றது. இத்தூரத்தில் சிறிதளவு கூடுதல், குறைதல் ஏற்பட்டாலும் அல்லது பூமி சுற்றும் வேகத்தில் கூடுதல், குறைதல் ஏற்பட்டாலும் புவியின் இருப்பே கேள்விக்குறியாகி விடும். சுற்றும் வேகம் கூடி சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து சற்றே பூமி விலகினல் இப் பேரண்டத்தில் பூமி தொலைந்து காணமல் போய்விடும். சுற்றும் வேகம் குறைந்தால் பூமி சூரியனின் ஈர்ப்பு விசையினால் உள்ளீர்க்கப்பட்டு சூரியனினுள் புதைந்துவிடும். இவை ஏதும் நடக்காத விதத்தில் அல்லாஹ் பூமியை சரியான பொருத்தமான இடத்தில் சீரான வேகத்தில் இயங்கவைத்துள்ளான்.


3. புவியின் பருமன்.

பூமியின் அளவுப் பருமணை நோக்குவோம். இப்போதைய அளவைவிட பூமி இருமடங்கு பெரிதாக இருக்குமானால் பூமியின் ஈர்ப்பு விசை  அதிகரித்து உயிரினங்களின் வளர்ச்சி குன்றி குள்ளர்களாகி விட்டிருக்கும். அதேபோன்று பூமி தற்போதய அளவில் பாதியாக இருக்குமானால் ஈர்ப்பு விசை குறைந்து உயிரினங்கள் கட்டுப்பாடின்றி பல நூறு அடிகள்வரை உயர்ந்து வளர்ந்திருக்கும்.

4. புவியின் மேலோடு.

இது தற்போதிருப்பதைவிட சில அடிகள் கனதியாக இருக்குமானால் அது காபனீரொட்சைட்டையும் ஒட்சிசனையும் உறிஞ்சி எடுத்திருக்கும். இதனால் உரிர்வாழ்க்கை சாத்தியமற்றதாயிருக்கும். “பூமியின் மேலோடு தற்போதிருப்பதை விட சில அடிகளே கனதியாக இருக்குமானால் அது காபனீரொட்சைட்டையும் ஒட்சிசனையும் உறிஞ்சியிருக்கும். இதனால் உயிர் வாழ்க்கை அசாத்தியப்பட்டிருக்கும்என அமெரிக்க நியுயோர்க் விஞ்ஞான கலைக்கூடத்தின் தலைவர்  Morison தனது “Man does not stand alone” என்ற நூலில் கூறுகின்றார்.

அத்தோடு மேலோட்டின் கனதியால் பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர் யாவும் பூமியின் கீழே சென்று விடும். அதனால் நீரைப் பெறமுடியாது போய்விடும்.

உங்களுடைய தண்ணீரை (நீங்கள் பெறமுடியாதவாறு) பூமியினுள் (இழுக்கப்பட்டு வெகு ஆழத்திற்கு) சென்றுவிட்டால் பொங்கி ஓடும் நீரை உங்;களுக்குக் கொண்டுவருபவன் யார்?...” (67:30)


5. வளிமண்டலத்தில் ஒட்சிசன்.

வளிமண்டலத்தில் காணப்படுகின்ற ஒட்சிசன் வாயுவின் அளவும் பூமியில் உயிர்வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. தற்போது வளிமண்டலத்தில் 21% ஒட்சிசன் காணப்படுகின்றது. இந்த அளவு  50%  ஆக அதிகரிக்குமாயின் இலகுவில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் யாவும் தீப்பற்றி எரிந்து அழிந்துபோய்விடும். அதுவே 10% இற்கு குறைந்தால் எம்மால் நெருப்பையே பயன்படுத்த முடியாது போயிருக்கும்.

நீங்கள் மூட்டுகின்ற நெருப்பைப் பார்த்தீர்களா? அதனுடைய மரத்தை  நீங்கள்  உற்பத்திசெய்கிறீர்களா? அல்லது நாம்  உற்பத்தி செய்கிறோமா?” (56:71,72)


6. புவியில் உயிர்வாழ்க்கைக்கு உதவும் நீர்.

உயிர் வாழ்க்கைக்குத தேவையான மற்றுமொரு பிரதான அம்சம்தான் நீர். வேறு கிரகங்களில் இல்லாத நீர் எமது பூமிப் பந்தில்தான் தாராளமாகக் காணப்படுகின்றது. பூமியில் 71 % நீராகவும் 29 % நிலமாகவும் காணப்படுகின்றது. கடலில் உப்பு நீர் இறுப்பதுபோன்றே மனிதன் பருக முடியுமான விதத்தில் மதுரமான நீரையும் அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்றான். நீர் மட்டும் வற்றி இல்லாது போனால் பூமியில் எந்த உயிரும் எஞ்சாது.

(“நீங்கள் பருகுகின்றீர்களே அந்த நீரைப் பார்த்தீர்களா? அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம்  இறக்குகின்றோமா? நாம் நாடினால் அதனை (நீங்கள் பருக முடியாத) உப்பு நீராக மாற்றியிருப்போம்.” (56:68-70)


  7.புவிச் சுழற்சிக்கான காலம்.

பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றி முடிக்க 24 மணிநேரங்கள் செல்கின்றன. அதாவது மணிக்கு 1038 மைல் வேகத்தில் சுற்றுகின்றது. இதுவே மணிக்கு 100 மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றினால் எமது இரவும் பகலும் தற்போதைவிட பத்து மடங்கு நீண்டுவிடும். எனவே பகற்பொழுதின் சூரிய வெப்பம் தாவரங்களை எரித்துவிடும். அவ்வாறே இரவில் தாவரங்கள் குளிர்ந்து இறுகிவிடுவதோடு உணவுற்பத்தியும் தடைப்படும். இனால் உயிர்வாழ்க்கை அசாத்தியப்பட்டுவிடும்.  எனவே இவ்வாறு நிகழாது அல்லாஹ் சீரான முறையில் இறவையும் பகலையும் உண்டாக்குகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் நுழைக்கிறான் பகலை இரவில் நுழைக்கிறான். (இவை அவனது வல்லமையினாலாகும்)” (22:61)


 8.  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூர அளவும் புவியின் உயிர் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றது. சூரியனிலிருந்து 93,000,000 மைல் தூரத்தில் சந்திரன் அமைந்துள்ளது. இதுவே தற்போதிருப்பதவிட இரு மடங்காக அதாவது 180,000,000 மைலாக அதிகரித்தால் பூமி குளிரில் உறைந்துவிடும். இத்தூரம் தற்போதிருப்பதில் பாதியா அதாவது 50,000,000 மைலாகக் குறைந்தால் அதிகூடிய வெப்பத்தினால் பூமியில் உள்ளவையாவும் கருகிப்போய்விடும்.

சூரியன் அதற்கு சந்திரனை அணுகிப் பிடிக்க முடியாது” (36:40)


 9.  சந்திரனின் சீரான ஒழுங்கமைப்பு.

சந்திரனின் சீரான ஒழுங்கமைப்பும் மற்றும் இருப்பும்கூட பூமியில் உயிர்வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். சந்திரனின் இயக்கம் காரணமாகவே கடலில் கொந்தளிப்புக்களும் அலைகளின் வீச்சும் நிகழ்கின்றன. இதனை வற்றுப் பெருக்கு என்று குறிப்பிடுவர். சில இடங்களில் கடற் கொந்தளிப்பு காரணமாக 60 அடிகள் வரை அலை உயர்வதுமுண்டு. சந்திரனின் இச்செயற்பாட்டால் பூமியின் மேலோடுகூட சில சமயம் மேலெழுந்து உயர்கின்றது. தற்போது கவனியுங்கள் சந்திரன் பூமியைவிட்டும் 4,20,000 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. புதனின் உபகோள் போன்று சந்திரனும் பூமியில் இருந்து 6000 மைல்கள் மாத்திரம் தூரமாக இருந்தால் சந்திரனின் ஈர்ப்பின் காரணமாக கடல் எழுச்சியடைந்து தரைப்பகுதி முழுதும் கடலால் மூழ்கியிருக்கும். அத்தோடு மலைகள் அகன்று புவியோடு உயர்ந்து களன்று எறியப்பட்டிருக்கும்.

சந்திரனை பழைய பேரீச்சங் குலையின் குச்சிபோல் மீண்டுவிடும் வரையில் அதற்குப் பல தங்குமிடங்களை ஏற்படுத்தியுள்ளோம்.” (36:39)

10. ஏனைய கோள்கள்.

பூமியின் இருப்புக்கு ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள மற்ற கோள்களும் முக்கியமானவையாகும் என்பதை நவீன விண்ணியற் கண்டுபிடிப்புக்கள் தெரிவிக்கின்றன. வியாழன் கோள் அமைந்துள்ள இடமும் அதன் பருமனும் பூமிக்கும் மற்றைய கோள்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது. விண்ணில் காணப்படும் எரிநட்சத்திரங்கள் விண்கற்கள், வால்வெள்ளிகள் என்பன பூமியுடன் மோதுவதை விட்டும் தடுக்கும் விதத்தில் வியாழன் கோள் அரணாகச் செயற்படுகின்றது.

11.  உயிர் வாழ்வதற்கு ஒட்சிசன்.

உயிர் வாழ்வதற்கு சுவாசம் மிகவும் முக்கயிமானது. முனிதன் உற்பட பிற விலங்கினங்கள் யாவும் ஒட்சிசனைச் சுவாசிக்கின்றன. காபனீரொட்சைட்டை வெளியிடுகின்றன. இதற்கு மாற்றமாக தாவரங்கள் காபனீரொட்சைட்டை உட்சுவாசித்து ஒட்சிசனை வெளியிடுகின்றன. புவியின் வளி மண்டலத்துக்கு அப்பால் வேறு எங்கும் மனிதனால் வாழ முடியாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதுவும் உயிர்வாழ்க்கைக்காக அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட  பாரியதொரு அருளும் ஏற்பாடுமாகும்.

அவன் நாடினால் காற்றை நிறுத்திவிடுவான். அப்போது அதன் மேற்பரப்பின் மீது (யாவும் அப்படியே அசைவற்று) நின்றுவிடும். ஆதிகம் பொறுமைகொள்வோர் நன்றி செலுத்துவோருக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.” (42:33)

12. புவியைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் உயரமும் அடர்த்தியும்.

பூமியைச் சூழவும் தரைமட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படும் வளி மண்டலத்தின் உயரமும் அதன் அடர்த்தியும் பூமியின் உயிர் வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றன. இப்போதைவிட காற்றின் அடர்த்தி குறைந்து அதன் உயரம் குறைந்திருந்தால் விண்ணிலிருந்து புவியை நோக்கி வரும் விண்கற்கள், எரிகற்கள் வளிமண்டலத்துடன் மோதி எரிந்து அழிந்துவிடாது பூமியில் வீழ்ந்து புவியோட்டைத் தாக்கியிருக்கும். மனித உடலில் பட்டால் உடல் சிதறிவிடும். இவ்வாறு நடைபெறா வண்ணம் பூமியை வளிமண்டலம் பாதுகாக்கின்றது.

13. புவியைச் சூழவுள்ள ஓசோன் படலம்.

புவியைச் சூழவும் 12-20 மைல்களுக்கு ஓசோன் படலம் சூழ்ந்துள்ளது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 1200 பரன்ஹைட்டாகும். சூரியனிலிலிருந்து வரும் வெப்பத்தையும் ஒளியையும் அதனுடன் சேர்ந்து வரும் நச்சுக் கதிரான புற ஊதாக் கதிர்களையும் புவியினுட்பிரவேசிக்கும் முன் அவற்றை வடிகட்டி சூரிய ஒளியை மாத்திரம் அனுப்பி நச்சுக்கதிர்களை வரவிடாது திருப்பி அனுப்பி விடுகின்றது இவ் ஓசோன் படலம். இந்நச்சுக் கதிர்கள் உயிராபத்து மிக்கவை. எனவே உயிர்களின் வாழ்க்கை இதன்மூலம் பாதுகாக்கப்படுகின்றது.

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாகவும் நாம் ஆக்கினோம்” (21:32)

14. புவியீர்ப்பு விசையும் மலைகளும்.

பூமி தனது அச்சில் 23 ½ பாகைக்கோனத்தில் சாய்ந்து மணிக்கு 1038 மைல் வேகத்தில் சுழல்வதோடு சூரியனையும் சுற்றி வருகின்றது. புவி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி முடிக்க 24 மணிநேரங்களாகின்றன. அதாவது ஒரு நாள் செல்கின்றது. இதனாலே இரவு, பகல் உண்டாகின்றது. புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி முடிக்க 365 நாட்கள் (ஒரு வருடம்) செல்கின்றன. அதனால் தான் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. இவ்வாறு புவிச் சுழற்சி மற்றும் சுற்றுகையின்போது புவியில் உள்ள உயிரினங்களும் பொருட்களும் தெரிப்படையாமல் இருக்கவும் புவி ஓடு சிதைவடையாமல் இருக்கவும் அல்லாஹ் இரண்டு விடயங்கைள அமைத்துள்ளான். ஒன்று பூமியின் ஈர்ப்புச் சக்தி. பூமியில் ஈர்ப்புச் சக்தி உள்ளதனை முதன் முதலில் கண்டறிந்தவர் சேர் ஐசாக் நியுட்டன். இரண்டாவது புவியில் உள்ள மலைகள். இவை புவியோடுகளை இணைத்து ஆப்புகளாக பூமியில் அறையப்பட்டுள்ளன. அதனால் புவியின் சுழற்சி, சுற்றுகை வேகங்களினால் புவியோடு சிதைவடையாது பாதுகாக்கப்படுகின்றது.

பூமி அவர்களைக் கொண்டு அசைந்துவிடாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை நாம் அமைத்துள்ளோம்” (21:31) “மலைகளை ஆப்புகளாக (நாம்) அமைக்கவில்லையா?” (78:7)

15. பால்வீதியின் விளிம்பில் பூமி.

அல்லாஹ் பூமியை இப்பிரபஞ்சத்தில் பொருத்தமான இடத்தில் வைத்திருப்பதும் பால் வீதியின் நடுவில் அல்லாமல் நுணியில் விளிம்பில் வைத்திருப்பதும் ஒரு பெரும் அருளாகும். ‘இயற்கையின் விதி – Nature’s destiny’ என்ற ஆய்வுக் கட்டுரையில் Michael Denton என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்.
பால்மண்டலத்தின் விளிம்பில் எமது சூரிய மண்டலம் அமைந்திருப்பதனால்தான் இரவில் அதிதூரத்திலுள்ள பிற பால்வீதிபோன்ற விண்பொருட்களை உற்றுப் பார்ப்பதோடு பிரபஞ்சத்தின் கட்டமைப்பு பற்றிய அனைத்து அறிவுகளையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. தற்சமயம் நாம் பால்மண்டலத்தின் எங்காவது ஒரு நடுப்பகுதியில் அமையப் பெற்றிருந்தால் சுருள் சுருளாக சுற்றும் பால் மண்டலங்களின் அழகை எம்மால் பார்க்க இயலாமல் போயிருக்கும். அத்தோடு பிரபஞ்சம் பற்றிய எந்தவிதமான அறிவும் எம்மிடம் இல்லாமல் போயிருக்கும்என்கிறார்.

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தில் எவ்வளவு பால்வீதிகளும் எவ்வளவு கோள்களும் இருந்தாலும் அங்கெல்லாம் உயிர்வாழ்க்கை எந்தளவு சாத்தியப்படுகின்றது என்பது இன்று விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் கேள்வியாக உள்ளது. அதுபற்றி பல்வேறு ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் திருமறைக் குர்ஆன் உயிர்வாழ்க்கை சாத்தியப்படுவது பூமியில் மாத்திரம் தான் எனத் திட்டவட்டமாக விளக்குகின்றது.

பூமியில் உங்களுக்குத் தங்குமிடமுண்டு. (அதில்) ஒரு காலம்வரை சுகம் அனுபவிப்பீர்கள். அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள். அதிலேயே நீங்கள் மரணிப்பீர்கள். (பின்னர் மீண்டும்) அதிலிருந்தே நீங்கள் (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்.” (7:24,25)

நாம் இதுவரை மேலே பார்த்த இவ் ஏற்பாடுகள் மாத்திரமன்றி இன்னும் பல்வேறு நுணுக்கமான, அற்புதமான ஒழுங்கமைப்புகளை, திட்டமிடல்களை உயிர்வாழ்க்கைக்காக அல்லாஹ் இப்பூமிப் பந்தில் ஏற்படுத்தியிருக்கின்றான். அதுமட்டுமன்றி இப்பிரபஞ்சத்தையே அல்லாஹ் பூமியில் வாழும் எமக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்

“(மனிதர்களே!) வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான் என்பதையும் அவன் தன் அருட்கொடைகளில் வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் உங்கள் மீது நிறப்பமாக்கியுள்ளான் என்பதனையும் நீங்கள் பார்க்கவில்லையா?” (31:20)

ஆனால் மனிதனோ அல்லாஹ்வுக்கு மாறு செய்யவே முனைகின்றான்.

“(ஆனால்) மனிதர்களில் சிலர் கல்வியறிவோ, நேர்வழியோ, ஒளிமிக்க வேத(ஆதார)மோ இன்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாக)த் தர்க்கிக்கின்றார்கள்.” (31:20)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஆலிப் அலி (இஸ்லாஹி)

ஞாயிற்றுத் தொகுதியில் காணப்படுகின்ற கோள்களிலேயே மிகவும் அழகான இப்பூமி பார்ப்பதற்கு நீல நிறத்தில் கோள வடிவத்தில் காட்சியளிக்கின்றது. அல்லஹ் இப்பூமியை உயிர்வாழ்க்கைக்குச் சாத்தியமான விதத்தில் பல்வேறு ஏற்பாடுகளுடன் மிகவும் அழகாகப் படைத்துள்ளான். இவ்வேற்பாடுகளில் காணப்படுகின்ற நுணுக்கமும் துல்லியமான திட்டமிடலும் இறை இருப்பைப் பறைசாட்டி நிற்கின்றன.

பூமியை நாம் உங்களுக்குத் தொட்டிலாக ஆக்கவில்லையா?” (78:6) என்ற அல்குர்ஆனிய வசனம் புவியில் உயிர்வாழ்க்கைக்காகக் காணப்படுகின்ற பல்வேறு சாத்தியப்பாடுகளையும் பட்டியலிட்டுக் கூறுகின்றது. தொட்டிலென்றால் அது எவ்வளவு சுகமானதும் பாதுகாப்பானதும் என்று நாம் அறிவோம். அதேபோன்றதுதான் இப்பூமியும் என்பதனையே அல்லாஹ் சூசகமாகக் கூறுகின்றான். ஏவ்வாறெல்லாம் அல்லாஹ் இப்புவியை ஒரு பாதுகாப்பான வாழிடமாக அமைத்துள்ளான் என்பதை சில உதாணரங்களுடாக அவதானிப்போம்.


1.சூரியனிலிருந்து பொருத்தமானளவு தூரத்தில் பூமியைப் படைத்துள்ளமை.

சூரியனிலிருந்து பொருத்தமானளவு தூரத்தில் மூன்றாவது நீள்வட்டப் பாதையில் அல்லாஹ் பூமியை அமைத்துள்ளான். இது பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சிறந்ததொரு ஏற்பாடாகும். இப்பூமி தற்போதிருப்பதை விட சற்றேனும் சூரியனை நெருங்கியிருந்தால் பூமி சூரியனின் வெப்பத்தால் பொசுங்கிப் போயிருக்கும். அல்லது இருக்கும் இடத்திலிருந்து சற்றேனும் தூரமாகியிருந்தால் பூமி குளிர்ந்து பணியால் மூடப்பட்டிருக்கும். இவ்விரண்டு நிலைகளிலும் உயிர்வாழ்க்கை சாத்தியமில்லை. எனவேதான் ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள பிற கோள்களில் உயிர்வாழ்க்கை சாத்தியமின்றி உள்ளது. ஆனால் அல்லாஹ் பூமியை துல்லியமான முறையில் சரியான இடத்தில் வைத்து சீரான வேகத்தில் இயக்குகின்றான்.


 2. சூரியனிலிருந்து பூமியின் தூரமும் பூமி சூரியனைச் சுற்றும் வேகமும்.

சூரியனிலிருந்து பூமி 14,96,80,000km தூரத்தில் அமைந்துள்ளது. அத்தோடு பூமி செக்கனுக்கு 18 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றது. சூரியனிலிருந்துள்ள தூரமும் பூமி சுற்றும் வேகமும் சேர்ந்துதான் பூமி அந்தரத்தில் சீராக நிற்கின்றது. இத்தூரத்தில் சிறிதளவு கூடுதல், குறைதல் ஏற்பட்டாலும் அல்லது பூமி சுற்றும் வேகத்தில் கூடுதல், குறைதல் ஏற்பட்டாலும் புவியின் இருப்பே கேள்விக்குறியாகி விடும். சுற்றும் வேகம் கூடி சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து சற்றே பூமி விலகினல் இப் பேரண்டத்தில் பூமி தொலைந்து காணமல் போய்விடும். சுற்றும் வேகம் குறைந்தால் பூமி சூரியனின் ஈர்ப்பு விசையினால் உள்ளீர்க்கப்பட்டு சூரியனினுள் புதைந்துவிடும். இவை ஏதும் நடக்காத விதத்தில் அல்லாஹ் பூமியை சரியான பொருத்தமான இடத்தில் சீரான வேகத்தில் இயங்கவைத்துள்ளான்.


3. புவியின் பருமன்.

பூமியின் அளவுப் பருமணை நோக்குவோம். இப்போதைய அளவைவிட பூமி இருமடங்கு பெரிதாக இருக்குமானால் பூமியின் ஈர்ப்பு விசை  அதிகரித்து உயிரினங்களின் வளர்ச்சி குன்றி குள்ளர்களாகி விட்டிருக்கும். அதேபோன்று பூமி தற்போதய அளவில் பாதியாக இருக்குமானால் ஈர்ப்பு விசை குறைந்து உயிரினங்கள் கட்டுப்பாடின்றி பல நூறு அடிகள்வரை உயர்ந்து வளர்ந்திருக்கும்.

4. புவியின் மேலோடு.

இது தற்போதிருப்பதைவிட சில அடிகள் கனதியாக இருக்குமானால் அது காபனீரொட்சைட்டையும் ஒட்சிசனையும் உறிஞ்சி எடுத்திருக்கும். இதனால் உரிர்வாழ்க்கை சாத்தியமற்றதாயிருக்கும். “பூமியின் மேலோடு தற்போதிருப்பதை விட சில அடிகளே கனதியாக இருக்குமானால் அது காபனீரொட்சைட்டையும் ஒட்சிசனையும் உறிஞ்சியிருக்கும். இதனால் உயிர் வாழ்க்கை அசாத்தியப்பட்டிருக்கும்என அமெரிக்க நியுயோர்க் விஞ்ஞான கலைக்கூடத்தின் தலைவர்  Morison தனது “Man does not stand alone” என்ற நூலில் கூறுகின்றார்.

அத்தோடு மேலோட்டின் கனதியால் பூமியின் மேற்பரப்பில் உள்ள நீர் யாவும் பூமியின் கீழே சென்று விடும். அதனால் நீரைப் பெறமுடியாது போய்விடும்.

உங்களுடைய தண்ணீரை (நீங்கள் பெறமுடியாதவாறு) பூமியினுள் (இழுக்கப்பட்டு வெகு ஆழத்திற்கு) சென்றுவிட்டால் பொங்கி ஓடும் நீரை உங்;களுக்குக் கொண்டுவருபவன் யார்?...” (67:30)


5. வளிமண்டலத்தில் ஒட்சிசன்.

வளிமண்டலத்தில் காணப்படுகின்ற ஒட்சிசன் வாயுவின் அளவும் பூமியில் உயிர்வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது. தற்போது வளிமண்டலத்தில் 21% ஒட்சிசன் காணப்படுகின்றது. இந்த அளவு  50%  ஆக அதிகரிக்குமாயின் இலகுவில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் யாவும் தீப்பற்றி எரிந்து அழிந்துபோய்விடும். அதுவே 10% இற்கு குறைந்தால் எம்மால் நெருப்பையே பயன்படுத்த முடியாது போயிருக்கும்.

நீங்கள் மூட்டுகின்ற நெருப்பைப் பார்த்தீர்களா? அதனுடைய மரத்தை  நீங்கள்  உற்பத்திசெய்கிறீர்களா? அல்லது நாம்  உற்பத்தி செய்கிறோமா?” (56:71,72)


6. புவியில் உயிர்வாழ்க்கைக்கு உதவும் நீர்.

உயிர் வாழ்க்கைக்குத தேவையான மற்றுமொரு பிரதான அம்சம்தான் நீர். வேறு கிரகங்களில் இல்லாத நீர் எமது பூமிப் பந்தில்தான் தாராளமாகக் காணப்படுகின்றது. பூமியில் 71 % நீராகவும் 29 % நிலமாகவும் காணப்படுகின்றது. கடலில் உப்பு நீர் இறுப்பதுபோன்றே மனிதன் பருக முடியுமான விதத்தில் மதுரமான நீரையும் அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்றான். நீர் மட்டும் வற்றி இல்லாது போனால் பூமியில் எந்த உயிரும் எஞ்சாது.

(“நீங்கள் பருகுகின்றீர்களே அந்த நீரைப் பார்த்தீர்களா? அதனை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம்  இறக்குகின்றோமா? நாம் நாடினால் அதனை (நீங்கள் பருக முடியாத) உப்பு நீராக மாற்றியிருப்போம்.” (56:68-70)


  7.புவிச் சுழற்சிக்கான காலம்.

பூமி ஒரு முறை தன்னைத்தானே சுற்றி முடிக்க 24 மணிநேரங்கள் செல்கின்றன. அதாவது மணிக்கு 1038 மைல் வேகத்தில் சுற்றுகின்றது. இதுவே மணிக்கு 100 மைல் வேகத்தில் தன்னைத் தானே சுற்றினால் எமது இரவும் பகலும் தற்போதைவிட பத்து மடங்கு நீண்டுவிடும். எனவே பகற்பொழுதின் சூரிய வெப்பம் தாவரங்களை எரித்துவிடும். அவ்வாறே இரவில் தாவரங்கள் குளிர்ந்து இறுகிவிடுவதோடு உணவுற்பத்தியும் தடைப்படும். இனால் உயிர்வாழ்க்கை அசாத்தியப்பட்டுவிடும்.  எனவே இவ்வாறு நிகழாது அல்லாஹ் சீரான முறையில் இறவையும் பகலையும் உண்டாக்குகின்றான்.

நிச்சயமாக அல்லாஹ் இரவைப் பகலில் நுழைக்கிறான் பகலை இரவில் நுழைக்கிறான். (இவை அவனது வல்லமையினாலாகும்)” (22:61)


 8.  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூர அளவும் புவியின் உயிர் வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றது. சூரியனிலிருந்து 93,000,000 மைல் தூரத்தில் சந்திரன் அமைந்துள்ளது. இதுவே தற்போதிருப்பதவிட இரு மடங்காக அதாவது 180,000,000 மைலாக அதிகரித்தால் பூமி குளிரில் உறைந்துவிடும். இத்தூரம் தற்போதிருப்பதில் பாதியா அதாவது 50,000,000 மைலாகக் குறைந்தால் அதிகூடிய வெப்பத்தினால் பூமியில் உள்ளவையாவும் கருகிப்போய்விடும்.

சூரியன் அதற்கு சந்திரனை அணுகிப் பிடிக்க முடியாது” (36:40)


 9.  சந்திரனின் சீரான ஒழுங்கமைப்பு.

சந்திரனின் சீரான ஒழுங்கமைப்பும் மற்றும் இருப்பும்கூட பூமியில் உயிர்வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். சந்திரனின் இயக்கம் காரணமாகவே கடலில் கொந்தளிப்புக்களும் அலைகளின் வீச்சும் நிகழ்கின்றன. இதனை வற்றுப் பெருக்கு என்று குறிப்பிடுவர். சில இடங்களில் கடற் கொந்தளிப்பு காரணமாக 60 அடிகள் வரை அலை உயர்வதுமுண்டு. சந்திரனின் இச்செயற்பாட்டால் பூமியின் மேலோடுகூட சில சமயம் மேலெழுந்து உயர்கின்றது. தற்போது கவனியுங்கள் சந்திரன் பூமியைவிட்டும் 4,20,000 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. புதனின் உபகோள் போன்று சந்திரனும் பூமியில் இருந்து 6000 மைல்கள் மாத்திரம் தூரமாக இருந்தால் சந்திரனின் ஈர்ப்பின் காரணமாக கடல் எழுச்சியடைந்து தரைப்பகுதி முழுதும் கடலால் மூழ்கியிருக்கும். அத்தோடு மலைகள் அகன்று புவியோடு உயர்ந்து களன்று எறியப்பட்டிருக்கும்.

சந்திரனை பழைய பேரீச்சங் குலையின் குச்சிபோல் மீண்டுவிடும் வரையில் அதற்குப் பல தங்குமிடங்களை ஏற்படுத்தியுள்ளோம்.” (36:39)

10. ஏனைய கோள்கள்.

பூமியின் இருப்புக்கு ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள மற்ற கோள்களும் முக்கியமானவையாகும் என்பதை நவீன விண்ணியற் கண்டுபிடிப்புக்கள் தெரிவிக்கின்றன. வியாழன் கோள் அமைந்துள்ள இடமும் அதன் பருமனும் பூமிக்கும் மற்றைய கோள்களுக்குப் பாதுகாப்பை வழங்குகின்றது. விண்ணில் காணப்படும் எரிநட்சத்திரங்கள் விண்கற்கள், வால்வெள்ளிகள் என்பன பூமியுடன் மோதுவதை விட்டும் தடுக்கும் விதத்தில் வியாழன் கோள் அரணாகச் செயற்படுகின்றது.

11.  உயிர் வாழ்வதற்கு ஒட்சிசன்.

உயிர் வாழ்வதற்கு சுவாசம் மிகவும் முக்கயிமானது. முனிதன் உற்பட பிற விலங்கினங்கள் யாவும் ஒட்சிசனைச் சுவாசிக்கின்றன. காபனீரொட்சைட்டை வெளியிடுகின்றன. இதற்கு மாற்றமாக தாவரங்கள் காபனீரொட்சைட்டை உட்சுவாசித்து ஒட்சிசனை வெளியிடுகின்றன. புவியின் வளி மண்டலத்துக்கு அப்பால் வேறு எங்கும் மனிதனால் வாழ முடியாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். இதுவும் உயிர்வாழ்க்கைக்காக அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட  பாரியதொரு அருளும் ஏற்பாடுமாகும்.

அவன் நாடினால் காற்றை நிறுத்திவிடுவான். அப்போது அதன் மேற்பரப்பின் மீது (யாவும் அப்படியே அசைவற்று) நின்றுவிடும். ஆதிகம் பொறுமைகொள்வோர் நன்றி செலுத்துவோருக்கு இதில் பல அத்தாட்சிகள் உள்ளன.” (42:33)

12. புவியைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் உயரமும் அடர்த்தியும்.

பூமியைச் சூழவும் தரைமட்டத்திலிருந்து உயர்ந்து காணப்படும் வளி மண்டலத்தின் உயரமும் அதன் அடர்த்தியும் பூமியின் உயிர் வாழ்வில் தாக்கம் செலுத்துகின்றன. இப்போதைவிட காற்றின் அடர்த்தி குறைந்து அதன் உயரம் குறைந்திருந்தால் விண்ணிலிருந்து புவியை நோக்கி வரும் விண்கற்கள், எரிகற்கள் வளிமண்டலத்துடன் மோதி எரிந்து அழிந்துவிடாது பூமியில் வீழ்ந்து புவியோட்டைத் தாக்கியிருக்கும். மனித உடலில் பட்டால் உடல் சிதறிவிடும். இவ்வாறு நடைபெறா வண்ணம் பூமியை வளிமண்டலம் பாதுகாக்கின்றது.

13. புவியைச் சூழவுள்ள ஓசோன் படலம்.

புவியைச் சூழவும் 12-20 மைல்களுக்கு ஓசோன் படலம் சூழ்ந்துள்ளது. சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை 1200 பரன்ஹைட்டாகும். சூரியனிலிலிருந்து வரும் வெப்பத்தையும் ஒளியையும் அதனுடன் சேர்ந்து வரும் நச்சுக் கதிரான புற ஊதாக் கதிர்களையும் புவியினுட்பிரவேசிக்கும் முன் அவற்றை வடிகட்டி சூரிய ஒளியை மாத்திரம் அனுப்பி நச்சுக்கதிர்களை வரவிடாது திருப்பி அனுப்பி விடுகின்றது இவ் ஓசோன் படலம். இந்நச்சுக் கதிர்கள் உயிராபத்து மிக்கவை. எனவே உயிர்களின் வாழ்க்கை இதன்மூலம் பாதுகாக்கப்படுகின்றது.

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாகவும் நாம் ஆக்கினோம்” (21:32)

14. புவியீர்ப்பு விசையும் மலைகளும்.

பூமி தனது அச்சில் 23 ½ பாகைக்கோனத்தில் சாய்ந்து மணிக்கு 1038 மைல் வேகத்தில் சுழல்வதோடு சூரியனையும் சுற்றி வருகின்றது. புவி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி முடிக்க 24 மணிநேரங்களாகின்றன. அதாவது ஒரு நாள் செல்கின்றது. இதனாலே இரவு, பகல் உண்டாகின்றது. புவி ஒரு முறை சூரியனைச் சுற்றி முடிக்க 365 நாட்கள் (ஒரு வருடம்) செல்கின்றன. அதனால் தான் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. இவ்வாறு புவிச் சுழற்சி மற்றும் சுற்றுகையின்போது புவியில் உள்ள உயிரினங்களும் பொருட்களும் தெரிப்படையாமல் இருக்கவும் புவி ஓடு சிதைவடையாமல் இருக்கவும் அல்லாஹ் இரண்டு விடயங்கைள அமைத்துள்ளான். ஒன்று பூமியின் ஈர்ப்புச் சக்தி. பூமியில் ஈர்ப்புச் சக்தி உள்ளதனை முதன் முதலில் கண்டறிந்தவர் சேர் ஐசாக் நியுட்டன். இரண்டாவது புவியில் உள்ள மலைகள். இவை புவியோடுகளை இணைத்து ஆப்புகளாக பூமியில் அறையப்பட்டுள்ளன. அதனால் புவியின் சுழற்சி, சுற்றுகை வேகங்களினால் புவியோடு சிதைவடையாது பாதுகாக்கப்படுகின்றது.

பூமி அவர்களைக் கொண்டு அசைந்துவிடாதிருப்பதற்காக அதில் உறுதியான மலைகளை நாம் அமைத்துள்ளோம்” (21:31) “மலைகளை ஆப்புகளாக (நாம்) அமைக்கவில்லையா?” (78:7)

15. பால்வீதியின் விளிம்பில் பூமி.

அல்லாஹ் பூமியை இப்பிரபஞ்சத்தில் பொருத்தமான இடத்தில் வைத்திருப்பதும் பால் வீதியின் நடுவில் அல்லாமல் நுணியில் விளிம்பில் வைத்திருப்பதும் ஒரு பெரும் அருளாகும். ‘இயற்கையின் விதி – Nature’s destiny’ என்ற ஆய்வுக் கட்டுரையில் Michael Denton என்பவர் பின்வருமாறு கூறுகின்றார்.
பால்மண்டலத்தின் விளிம்பில் எமது சூரிய மண்டலம் அமைந்திருப்பதனால்தான் இரவில் அதிதூரத்திலுள்ள பிற பால்வீதிபோன்ற விண்பொருட்களை உற்றுப் பார்ப்பதோடு பிரபஞ்சத்தின் கட்டமைப்பு பற்றிய அனைத்து அறிவுகளையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. தற்சமயம் நாம் பால்மண்டலத்தின் எங்காவது ஒரு நடுப்பகுதியில் அமையப் பெற்றிருந்தால் சுருள் சுருளாக சுற்றும் பால் மண்டலங்களின் அழகை எம்மால் பார்க்க இயலாமல் போயிருக்கும். அத்தோடு பிரபஞ்சம் பற்றிய எந்தவிதமான அறிவும் எம்மிடம் இல்லாமல் போயிருக்கும்என்கிறார்.

பிரம்மாண்டமான இப்பிரபஞ்சத்தில் எவ்வளவு பால்வீதிகளும் எவ்வளவு கோள்களும் இருந்தாலும் அங்கெல்லாம் உயிர்வாழ்க்கை எந்தளவு சாத்தியப்படுகின்றது என்பது இன்று விஞ்ஞானிகள் மத்தியில் பெரும் கேள்வியாக உள்ளது. அதுபற்றி பல்வேறு ஆய்வுகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள். ஆனால் திருமறைக் குர்ஆன் உயிர்வாழ்க்கை சாத்தியப்படுவது பூமியில் மாத்திரம் தான் எனத் திட்டவட்டமாக விளக்குகின்றது.

பூமியில் உங்களுக்குத் தங்குமிடமுண்டு. (அதில்) ஒரு காலம்வரை சுகம் அனுபவிப்பீர்கள். அதிலேயே நீங்கள் வாழ்வீர்கள். அதிலேயே நீங்கள் மரணிப்பீர்கள். (பின்னர் மீண்டும்) அதிலிருந்தே நீங்கள் (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்.” (7:24,25)

நாம் இதுவரை மேலே பார்த்த இவ் ஏற்பாடுகள் மாத்திரமன்றி இன்னும் பல்வேறு நுணுக்கமான, அற்புதமான ஒழுங்கமைப்புகளை, திட்டமிடல்களை உயிர்வாழ்க்கைக்காக அல்லாஹ் இப்பூமிப் பந்தில் ஏற்படுத்தியிருக்கின்றான். அதுமட்டுமன்றி இப்பிரபஞ்சத்தையே அல்லாஹ் பூமியில் வாழும் எமக்கு வசப்படுத்தித் தந்துள்ளான்

“(மனிதர்களே!) வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் உங்களுக்காக வசப்படுத்தித் தந்துள்ளான் என்பதையும் அவன் தன் அருட்கொடைகளில் வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் உங்கள் மீது நிறப்பமாக்கியுள்ளான் என்பதனையும் நீங்கள் பார்க்கவில்லையா?” (31:20)

ஆனால் மனிதனோ அல்லாஹ்வுக்கு மாறு செய்யவே முனைகின்றான்.

“(ஆனால்) மனிதர்களில் சிலர் கல்வியறிவோ, நேர்வழியோ, ஒளிமிக்க வேத(ஆதார)மோ இன்றி அல்லாஹ்வைப் பற்றி (வீணாக)த் தர்க்கிக்கின்றார்கள்.” (31:20)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...