"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

13 February 2012

சூரியன் மேற்கில் உதிக்கும் நாள் உலகம் அழியும்


நாம் வாழும் இப்பூமி உற்பட முழுப் பிரபஞ்சமுமே அழிந்து மீண்டும் ஒரு மிக மிக மிகப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை (மஹ்ஷர்) அல்லாஹ் உருவாக்கி மனிதனை வாழவைப்பான் என்பது இஸ்லாத்தின் கொள்கை.எமது நம்பிக்கையும் கூட.

இப்பிரபஞ்ம் அழிவது எப்போது என்பது திட்டவட்டமாகத் தெரியாவிடினும் அது நடைபெறுவதற்கு முன்பு சில அடையாளங்கள் நிகழும் என்பதனையும் அவை எவை என்பதனையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவொன்றுதான் கிழக்கிலிருந்து உதித்துவரும் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – “சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமைநாள் ஏற்படாது.அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏழவே இறைவனை நம்பாதிருந்தவரது நம்பிகை்கை எப்பயனுமளிக்காது” அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி) நூல் – புகாரி 6506

இது எவ்வாறு நடைபெறும்?
பூமி செக்கனுக்கு 18 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றது. அத்தோடு அது தன்னைத்தானேயும் கிழக்கு மேற்காகச் சுற்றிவருகின்றது. இதன்போதே சூரியன் கிழக்கில் உதிப்பதாக நாம் காண்கின்றோம்.

மணிக்கு 90Km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் பிரயாணிகளின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குழுங்கி, மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.

வியாழன் கிரகம் பூமியை அண்மித்து வருவதாகவும் அவ்வாறு அது அருகில் வந்தால் வியாழன் கிரகத்தின் ஈர்ப்புவிசைக்குட்படும் பூமி மறுதிசையில் சுற்றுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் சமீப ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்துக் கிரகங்களிலும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியன் வெள்ளிக் கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றி கிழக்கில் மறைவதாக நாஸா விஞ்ஞனிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

நாம் வாழும் இப்பூமி உற்பட முழுப் பிரபஞ்சமுமே அழிந்து மீண்டும் ஒரு மிக மிக மிகப் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தை (மஹ்ஷர்) அல்லாஹ் உருவாக்கி மனிதனை வாழவைப்பான் என்பது இஸ்லாத்தின் கொள்கை.எமது நம்பிக்கையும் கூட.

இப்பிரபஞ்ம் அழிவது எப்போது என்பது திட்டவட்டமாகத் தெரியாவிடினும் அது நடைபெறுவதற்கு முன்பு சில அடையாளங்கள் நிகழும் என்பதனையும் அவை எவை என்பதனையும் இஸ்லாம் குறிப்பிட்டுள்ளது. அதில் மிக முக்கியமானவொன்றுதான் கிழக்கிலிருந்து உதித்துவரும் சூரியன் மேற்கிலிருந்து உதிப்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் – “சூரியன் மேற்கிலிருந்து உதிக்காமல் மறுமைநாள் ஏற்படாது.அதைக் கண்டதும் மக்கள் இறைவனை நம்புவார்கள். ஆனால் ஏழவே இறைவனை நம்பாதிருந்தவரது நம்பிகை்கை எப்பயனுமளிக்காது” அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி) நூல் – புகாரி 6506

இது எவ்வாறு நடைபெறும்?
பூமி செக்கனுக்கு 18 மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றிவருகின்றது. அத்தோடு அது தன்னைத்தானேயும் கிழக்கு மேற்காகச் சுற்றிவருகின்றது. இதன்போதே சூரியன் கிழக்கில் உதிப்பதாக நாம் காண்கின்றோம்.

மணிக்கு 90Km வேகத்தில் பிரயாணித்துக்கொண்டிருக்கும் ஒரு பேருந்து ஒரேயடியாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதேவேகத்தில் பின்னோக்கிச் சென்றால் அதனுள் இருக்கும் பிரயாணிகளின் நிலை என்னவாக இருக்கும். இதேபோன்றுதான் இப்பூமியும் தற்போது சுழலும் அதுவேகத்தில் மேற்கு கிழக்காகச் சுழன்றாலும். இதனால் பூமியின் தட்டுகள் குழுங்கி, மலைகள் இடம்பெயர்ந்து, பூகம்பங்கள் தோன்றி பலத்த சேதங்கள்தான் விளையும்.

வியாழன் கிரகம் பூமியை அண்மித்து வருவதாகவும் அவ்வாறு அது அருகில் வந்தால் வியாழன் கிரகத்தின் ஈர்ப்புவிசைக்குட்படும் பூமி மறுதிசையில் சுற்றுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் சமீப ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்துக் கிரகங்களிலும் கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியன் வெள்ளிக் கிரகத்தில் மட்டும் மேற்கில் தோன்றி கிழக்கில் மறைவதாக நாஸா விஞ்ஞனிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

7 comments:

Anonymous said...

ithu unmayil islamil kurupiddapattulatha

Anonymous said...


hh

Anonymous said...

maasha allah...

Unknown said...

கேள்வி

கியாமத் நாளில் சூரியன் மேற்கில் உதித்த சில மணித் துளிகளில் சூர் ஊதப்பட்டு உலகம் அழிக்கப்படும் என்று ஒரு நூலில் படித்தேன். பூமியின் ஒரு பாதி பகலாகவும், மறு பாதி இரவாகவும் இருக்கின்றது. எனவே ஒரு பாதியில் சூரியன் மேற்கில் உதித்தால் இன்னொரு பாதி இரவாக இருக்கும். அப்படியானால் அந்நேரத்தில் இரவுப் பகுதியில் உள்ள மக்கள் அழிக்கப்படுவார்களா?


பதில்:

சூர் ஊதப்பட்டவுடன் அனைவரும் அழிக்கப்பட்டு விடுவர் என்று குர்ஆன் கூறுகின்றது.

وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ (68)الزمر : 6839

ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள்.
திருக்குர்ஆன் 39:68
சூரியன் மேற்கிலிருந்து உதித்தவுடன் சூர் ஊதப்படும் என்று நாம் அறிந்தவரை எந்த ஹதீஸிலும் கூறப்படவில்லை.

சூரியன் மேற்கிலிருந்து உதித்த பிறகு மக்கள் உடனே அழிக்கப்பட்டுவிட மாட்டார்கள். இதன் பிறகு இன்னும் பல அடையாளங்கள் ஏற்பட்டு முடிவடையும் வரை மக்கள் உயிருடனே இருப்பார்கள். இவ்வாறு பின்வரும் செய்திகள் கூறுகின்றன.

5234 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ عَنْ أَبِي حَيَّانَ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدِيثًا لَمْ أَنْسَهُ بَعْدُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَوَّلَ الْآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى وَأَيُّهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا فَالْأُخْرَى عَلَى إِثْرِهَا قَرِيبًا رواه مسلم

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன். இதுவரை அதை நான் மறக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறியதை நான் கேட்டேன்: (மறுமை நாளின் அடையாளங்களில்) முதலாவதாக வெளிப்படும் அடையாளம், சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும், (பூமியிலிருந்து) ஒரு (அதிசயப்) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும். இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும்.
நூல் : முஸ்லிம் 5637
صحيح مسلم
2901 ( 39 ) حدثنا أبو خيثمة زهير بن حرب ، وإسحاق بن إبراهيم ، وابن أبي عمر المكي – واللفظ لزهير – قال إسحاق : أخبرنا، وقال الآخران : حدثنا سفيان بن عيينة ، عن فرات القزاز ، عن أبي الطفيل ، عن حذيفة بن أسيد الغفاري ، قال : اطلع النبي صلى الله عليه وسلم علينا ونحن نتذاكر، فقال : " ما تذاكرون ؟ " قالوا : نذكر الساعة. قال : " إنها لن تقوم حتى ترون قبلها عشر آيات ". فذكر الدخان، والدجال، والدابة، وطلوع الشمس من مغربها، ونزول عيسى ابن مريم صلى الله عليه وسلم، ويأجوج ومأجوج، وثلاثة خسوف : خسف بالمشرق، وخسف بالمغرب، وخسف بجزيرة العرب. وآخر ذلك نار تخرج من اليمن، تطرد الناس إلى محشرهم .

புகை மூட்டம், தஜ்ஜால், (அதிசயப்) பிராணி, சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது, ஈஸா (அலை) இறங்கி வருவது, யஃஜுஜ் மஃஜுஜ், கிழக்கே ஒன்று மேற்கே ஒன்று அரபு தீபகற்பத்தில் ஒன்று என மூன்று நிலச்சரிவுகள் ஏற்படுவது, இவற்றில் இறுதியாக ஏமனிலிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச் சென்று ஒன்று சேர்த்தல். ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)
நூல் : முஸ்லிம்.
சூரியன் உதித்திருக்கும் போது தான் அழிவு ஏற்படும் என்ற கருத்து தவறானது என்பதை இந்தச் செய்திகள் தெளிவுபடுத்துகின்றன.

AKRAM RAFEEK said...

عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسبم قال:<< ثلاث إذا خرجن لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا: طلوع الشمس من مغربها, والدجال, والدابة>>(2)

AKRAM RAFEEK said...

ஆம் திட்டமாக இது குறித்து இஸ்லாம் கூறுகிறது

AKRAM RAFEEK said...

ஆம் திட்டமாக இது குறித்து இஸ்லாம் கூறுகிறது

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...