"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

01 January 2013

நிலவு நாடகத்தின் கதாநாயகன்: நீலாம்ஸ்ரோங்


இன்று நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவப் போட்டித்தன்மை போன்று 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளில் ஒவ்வொரு நாடும் விண்வெளித் துறையில் தாமும் கால்பதிக்க வேண்டும் என்ற போட்டியில் ஈடுபட்டு வந்தன. அதிலும் அன்று உலக வல்லராச இருந்த சோவியத்துக்கும் அடுத்து வல்லரசு இருக்கையைக் கைப்பற்றிக்கொள்ள போட்டிபோட்ட அமெரிக்காவுக்கும் இடையே இத்துறையில் பாரிய போட்டித்தன்மைகள் நிலவிவந்தன.

1957ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ம் திகதி சோவியத் யூனியன் உலகின் முதலாவது செய்மதியான ஸ்புட்னிக்- I (Sputnik-I) ஐ விண்ணில் செலுத்தியபோது உலகமே சோவியத்தை வியந்து பார்த்தது. அன்று உலக வல்லரசாக இருந்த சோவியத் விண்வெளியிலும் வல்லரசாக மாறும் என்று அமெரிக்கா கூட எதிர்பார்க்கவில்லை. சோவியத்தின் எந்த விடயமும் வெளிவராத வண்ணம் மிக இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தமை ஏனைய நாடுகள் சோவியத் அடுத்து எதனைச் சாதிக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஸ்புட்னிக்- I இயந்திரக் கோளாரு காரணமாக சிதைவடைந்ததும் அதே ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதியில் லைக்கா என்ற நாயுடன் ஸ்புட்னிக்- II என்ற செய்மதியை சோவியத் விண்ணில் ஏவி சாதனைபடைத்தது. சோவியத்திற்குப் போட்டியாக அனைத்துத் துறைகளிலும் முன்வரவேண்டுமென்று எதிர்பார்ப்புடனிருந்த அமெரிக்காவுக்கு இது பெரும் தர்மசங்கடமாகியது. எனவே அடுத்த வருடமே அமெரிக்கா களத்தில் குதிப்பதற்குத் தயாரானது. 1958ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி அமெரிக்கா தனது மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையமான NASA (National Aeronautics and Space Administration) ஐ நிறுவி தனது விண்வெளி ஆய்வுகளை முடுக்கிவிட்டது. ஆரம்பமாக சிறு சிறு செய்மதிகளையும் அனுப்பியது.

அமெரிக்காவையும் விஞ்சி சோவியத் விண்வெளியில் பல சாதனைகளை நடாத்திக்கொண்டிருந்தது. அமெரிக்காவும் தனது சிறு சிறு சாதனைகளை ஊதிப் பெருப்பித்து உலகுக்குக் காட்டிக்கொண்டிருந்தது. சோவியத்திற்கு ஈடாக அடுத்து அமெரிக்கா என்ன செய்யப்போகின்றது என்று உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கத்துவங்கின. இவ்வாறு இவ் இரு நாடுகளுக்குமிடையில் விண்வெளித் துறையில் பலத்த போட்டி உருவாகியது.

இவ்வாறிருக்க 1962 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜோன் எப்.கென்னடி முதலாவதாக சந்திரனில் மனிதனைக் கால் பதிக்கச் செய்யும் சாதiனையை அமெரிக்கா தனதாக்கிக் கொள்ளும்என்று அறிவித்தார். என்றபோதிலும் அமெரிக்காவை முந்திக்கொண்டு சோவியத் விண்வெளி வீரர்களை சந்திரனில் தரையிறங்கச் செய்யும் என்ற அச்சமும் உள்ளுக்குள் அமெரிக்காவை துலைத்துக்கொண்டிருந்தது.

அதற்கு ஏற்றாற்போல் சோவியத் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சந்திரனிலிருந்து கல்லையும் மண்ணையும் எடுத்துவந்து சாதனைபடைத்தது. அமெரிக்க ஜனாதிபதி கென்னடி அவ்வாறு அறிவித்து ஏழு வருடங்களில் (1969 ஜுலை) நாஸா நீலாம்ஸ்ட்ரோங்கையும் எட்வின் ஓல்ட்ரினையும் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஐயும் அப்பலோ- II என்ற விண்ணோடத்தில் சந்திரனுக்கு அனுப்பியதாகவும் கொலின்ஸ் தவிர மற்ற இருவரும் சந்திரனில் கால் பதித்ததாகவும் கொலின்ஸ் விண்ணோடத்தில் இருந்தவாறு உதவியதாகவும் அறிவித்தது.

அதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தொலைக்காட்சிகளுடாகவும் செய்திகள் வானொலிகளுடாகவும் உலகம் முழுதும் பகிரப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் சாதணையைப் பார்த்து வியந்து நின்றனர். அன்றைய நாட்களில் பிரதான செய்திகளாக இடம்பெற்றவை அமெரிக்கா பற்றியும் அதன் சாதனைகள் பற்றியும்தான். சோவியத்தோ இறுதிவரை சந்திரனுக்கு ஆளனுப்புவதாகக் கூறவும் இல்லை, அனுப்பவும் இல்லை.

சந்திரனில் மனிதன் தரையிறங்கிய விடயம் பற்றி அதிகமானவர்கள் நம்பிக்கை கொண்டாலும் உண்மையிலே அமெரிக்கா விண்வெளிக்கு மனிதனை அனுப்பவில்லை அதுவொரு கட்டுக்கதை, நாடகம் என சில காலங்களிலேயே வாதங்கள் கிளம்பின. இவ்வாதங்கள் உடைந்துசென்ற சோவியத் நாடுகளிலிருந்து வெளிப்பட்டிருந்தாலும் ஆச்சரியமில்லை ஆனால் அமெரிக்காவிலிருந்தே இவ்வாதங்கள் கிளம்பியதுதான் அதிர்ச்சியான தகவல். நாஸா நிறுவனம் சந்திரனில் மனிதனைத் தரையிறங்கச் செய்த விடயங்கள் பொய் என்ற கருத்தை முதலாவதாகக் கூறியவர் பில் கேய்ங் என்ற விஞ்ஞானி. அவர் We Never Went to the Moon: America's Thirty Billion Dollar Swindle (1974) என்ற நூலில் சந்திரனின் மீது விழும் சூரிய வெப்பக் கதிர்களாலும் தொடர்ந்து விழும் வின்கற்களாலும் இன்னும் சில சூழல் காரணிகளாலும் சந்திரனில் தரையிறங்குவதென்பது நூற்றுக்கு 0.001 விகிதமே சாத்தியம் என 1960களில் நாஸா அறிவித்திருந்தது. அவ்வாறிருக்க அடுத்த ஒன்பது வருடங்களுக்குல் மனிதனை சந்திரனில் தரையிறங்கச் செய்ததாகக் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும்?” என கேள்வி எழுப்புகின்றார்.

அதேபோன்று அமெரிகர்களான எட்வட் பார்ஸி, மேரி பெனட் ஆகியோரும் நாஸாவால் வெளியிடப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக் காட்சிகளையும் வைத்து சந்திரனில் தரையிறங்கிய விடயம் பொய் என நிரூபித்தனர். இது தொடர்பாக இவர்கள் இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.

மேலும் Flat Earth Society” என்ற அமைப்பு நாஸா நிலவிற்கு ஆளனுப்பியதாகக் காட்டப்பட்ட புகைப்படங்களும் வீடியோக் காட்சிகளும் அரிஸோனா மாணிலத்தில் ஹொலிவுட் நிறுவனமான டிஸ்னி இன் துணையுடன் நிகழ்த்தப்பட்டவை என்றும் இதற்கு ஆதர் சீ.க்ளார்க் வரிவடிவம் கொடுத்ததாகவும் ஸ்டென்லி கொப்ரிக் இயக்குனராக இருந்ததாகவும் இவ்வமைப்பு கூறியது. இதில் போலக் லோரிஸ்ட், லிண்டா டெக் போன்றோர் முக்கியமானவர்கள்.

மற்றும் ஒரு நகைச்சுவையான வாதமும் உண்டு. கென்யாவில் லாமு மாணிலத்தில் வாழும் ஆதிவாசிகள் நிலாவிற்கு மனிதர்கள் சென்றால் உலகம் அழிந்துவிடும் என்று நம்புகின்றனர். அமெரிக்கா சந்திரனில் தரையிறங்கியதாகக் கூறிய பின்பும் உலகம் அழியவில்லை. அப்படியாயின் அமெரிக்கா பொய் சொல்கிறது, இன்னும் மனிதன் நிலவுக்குப் போகவில்லைஎன்று அவர்கள் வாதாடுகின்றனர். நிலவில் தரையிறங்கியமை பொய் என்பதற்காக பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1969 இல் சந்திரனில் தரையிறங்கியதாகக் கூறிய பின் மீண்டும் ஏன் அமெரிக்கா அச்சாதனையை நிகழ்த்திக் காட்டவில்லை. அல்லது வேறு நாடுகளால்கூட ஏன் முடியாமல் போனது? என்ற கேள்வி சந்திரனில் தரையிறங்கிய விடயம் பற்றி எழுப்பப்படும் முதல் சந்தேகக் கேள்வி. அமெரிக்கா உட்பட எந்த நாடும் சந்திரனில் மனிதனைத் தரையிறக்கவில்லை. விண்வெளிக்கே சென்று வருகின்றனர். என்பதுதான் உண்மை.

நாஸா விஞ்ஞானிகளது அறிவிப்பின்படி சந்திரனின் மேற்தளத்தில் வெப்பமானது 170 பாகை செல்சியஸாகும். இன்றிருப்பது போன்ற கணினி, தொழில்நுட்ப வளர்ச்சிகள் கண்டிராத அந்த நாட்களில் இருந்த எந்த நிறுவனமும் 170 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலையில் இயங்கக்கூடியதான புகைப்படக் கருவிகளை உற்பத்தி செய்யதிருக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க சந்திரனின் வெப்பமான சூழ்நிலையில் எவ்வாறு அழகான வண்ண வண்ணப் புகைப்படங்களை எடுத்துள்ளார்கள்? என்பது புதிரான விடயம்.

1. சந்திரனுக்கு ஒளி கிடைப்பது சூரியனிலிருந்து மட்டும்தான். எனவே நிழல்கள் கூட ஒரே திசையை நோக்கி ஒரே அளவில்தான் விழவேண்டும். ஆனால் நாஸாவால் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில் சந்திரனில் தரையிறங்கியதாகக் கூறப்படும் இருவரினதும் நிழல்கள் வெவ்வேறு திசைகளில் விழுந்துள்ளன. அத்தோடு அவற்றின் நீள அளவுகள் கூட வித்தியாசத்தைக் கொண்டுள்ளன. எனவே இது சந்தேகத்தை உண்டாக்குகின்றது. அத்தோடு புகைப்படம் எடுக்கும்போது தரையிறங்கியவர்கள் அணிந்திருக்கும் முகக் கவசங்களின் கண்ணாடியில் பிரகாசமான ஒளி விளக்குகள் தென்படுகின்றன. நாஸாவோ தாம் அவ்வாறான ஒளிவிளக்குகளை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்று கூறியது. அப்படியாயின் அவ்வளவு சக்திமிக்க ஒளி எங்கிருந்து கிடைத்தது என்பது மற்றொரு கேள்வி. இது இயல்பான சந்திர ஒளியில் எடுக்கப்பட்ட புகைப்படமல்ல. மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட ஒளிவிளக்குகளைப் பயன்படுத்தி Studio இல் எடுக்கப்பபட்ட புகைப்படமாக இருக்கவேண்டுமென சந்தேகிக்கின்றனர்.

2. அடுத்து சந்திரனில் இருக்கும்போது எடுத்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள் ஒன்றிலும் விண்ணில் தெரியும் நட்சத்திரங்களைக் காண முடியவில்லை. பூமியைச் சூழ பல்வேறு படைகள் காணப்படுவதாலும் வளிமண்டலம் இருப்பதாலும் சந்திரனில் அவை இல்லாததாலும் பூமியில் இருந்து பார்ப்பதைவிட சந்திரனிலிருந்து பார்க்கும்போதுதான் நட்சத்திரங்கள் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் இப்புகைப்படங்களில் எவ்வாறு நட்சத்திரங்கள் காணாமல் போயின என்பது சந்திரனில் தரையிறங்கியது பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

3. விண்ணோடம் சந்திரனில் தரையிறங்குவதுபோன்ற காட்சிகளும் மீண்டும் விண்ணுக்கு உயர்வதுபோன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. சந்திரனில் புகைப்படக் கருவியுடன் யாராவது ஏழவே சென்றிருந்தால்தானே விண்ணோடம் தரையிறங்குவதைப் படமெடுக்க முடியும். அத்தோடு சென்ற மூவரும் திரும்பி வரும்போது விண்ணோடம் உயர்வதை சந்திரனிலிருந்து படம்பிடித்தது யார்? என்ற சந்தேககங்களுக்கும் நாஸா பதிலளிக்கவில்லை.

4. சந்திரனின் மேற்பரப்பு அதிகூடிய வெப்ப நிலையாலும் அங்கு நீர் இல்லாததாலும் காய்ந்து கடிணமாகவும் புழுதித் தன்மையுடனுமே இருக்கும். அத்தோடு புழுதி உண்டானாலும் அதனை அடக்க காற்று இல்லாததால் சில காலங்களுக்கு புழுதி அப்படியே பறவிக்காணப்படும். விண்ணோடத்தைத் தரையிறக்கும்போது நிச்சயம் புழுதி கிளம்பவேண்டும். அங்கு காற்று இல்லாததால் அப்புழுதி சில மணி நேரங்களுக்காவது அப்படியே இருந்திருக்கவேண்டும். ஆனால் நாஸாவின் புகைப்படங்கள் புழுதிகள் இன்றி மிகத் தெளிவாகக் காட்சியளிக்கின்றன.

5.  நீல் ஆம்ரோங் நிலவில் காலடி வைத்ததும் “one small step for a man; a giant leap for mankind –  சிறிய காலடி மனித குலத்திற்கான பெரும் பாய்ச்சல்என்று கூறினாராம். புகைப்படத்திலுள்ள அவரது காலடித் தடமானது நன்கு அழுத்தமாகவும் தெளிவாகவும்  (சேற்றில் வைத்த தடம் போன்று) பதிந்துள்ளது. காய்ந்து வரண்ட தரையில் கால்வைத்தால் ஒருபோதும் இதுபோன்று அழுத்தமாகப் பதியாது. அத்தரை சேற்று நிலமாக இருக்கவும் வாய்ப்பில்லை. காரணம் அங்கு நீரில்லை. அப்படியாயின் இப்படமும் பொய்யாக வடிவமைக்கப்பட்டவொன்றே!

6. நீல் ஆம்ஸ்ரோங் இன் நிறையைவிடவும் விண்ணோடத்தின் நிறை எப்படியும் அதிகம்தான். நீல் ஆம்ஸ்ரோங் தரையிறங்கியபோதே அவ்வளவு ஆழமாக அவரது கால்தடம் பதிந்ததென்றால் விண்ணோடத்தின் கால்கள் எவ்வளவு பதிந்திருக்கவேண்டும். ஆனால் குறித்த புகைப்படங்களில் விண்ணோடத்தின் கால்கள் நிலத்தில் பட்டும் படாமலும் காணப்படுகின்றன. அத்தோடு கால்களில் புழுதிகள் கூட படியாது தெளிவாகக் காணப்படுகின்றன. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

7. தரையிறங்கியதும் அவர்கள் நட்டிய அமெரிக்கக் கொடி அசைந்தாடுவதைப் படங்களில் காணலாம். சந்திரனில் காற்றே இல்லாதபோது எவ்வாறு கொடி அசைந்தாடுவது சாத்தியம். மேலும் 170 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலையில் அக்கொடி தாக்குப் பிடிக்குமா என்பதும் அசைந்தாடுமா என்பதும் சிந்திக்கவேண்டியவையே!

 8. இப்புகைப்படத்தில் உள்ளவரது முகக் கவசத்தில், முன்னால் மற்றைய விண்வெளி வீரர் இருப்பது வெள்ளை உடையுடன் தெரிகின்றது. அவரைவிடவும் நெருக்கமாக சாதாரண உடையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவரது தோற்றம் தெளிவாகப் பிரதிபளிப்பதை காணலாம். அவரிற்குப் பின்னால் உள்ள ஒளி விளக்கினால் இவரது தோற்றம் கருமையாகப் பதிந்துள்ளது. சந்திரனில் தரையிறங்கியது இருவர் மற்றையவர் விண்ணோடத்தில் எனின் இந்த மூன்றாம் நபர் யார்? எங்கிருந்து வந்தார்? இந்த ஒரு புகைப்படமே சந்திரனில் தரையிறங்கியமை பொய் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும்.

9. வீரர்கள் சந்திரனில் இருந்து வரும்போது அங்கே மனித குலம் அனைத்திற்குமான அமைதியைத் தேடி வந்தோம் (we came in peace for all mankind)”  எனும் வாசகம் பொறிக்கப்பட்ட சில்வர் அறிவிப்புப் பலகையொன்றை வதை;தார்களாம். அத்தோடு இன்னும் சில கருவிகளையும் வைத்ததாகக் கூறுகிறார்கள். இன்றைய செய்மதித் தொழில்நுட்ப வளர்ச்சியால் சந்திரனில் உள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடிந்தபோதிலும் நீலாம்ஸ்ரோங் விட்டுவந்த கருவிகைளக் காண முடியவில்லை என்கின்றனர் இதனை எதிர்க்கும் விஞ்ஞானிகள்.

நிலவில் இருந்து திரும்பியதும் இம்மூவரும் 116 நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார்கள். அந்நாடுகளால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். நீலாம்ஸ்ட்ரோங் கூட கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி (2012)  அவர் மரனிக்கும்வரை ஊடகங்களுக்கோ பேட்டி நிகழ்ச்சிகளுக்கோ ஏன் முன்வரவில்லை என்பதும் முக்கியமான கேள்வி? “Why did Armstrong spend the rest of his life denying requests for interviews on the subject?”

ஒருமுறை நீலாம்ஸ்ரோங் இடம் சில கடவுள் நம்பிக்கையற்றவர்கள் சந்திரனில் இறங்கியது பொய் எனக் கூறுகிறார்களேஎன்று வினவப்பட்டபோது அவர் மக்கள் எதிர்மறையான கருத்துக்களை ஆசையுடன் விரும்புகின்றார்கள். ஏனெனில் அவை மிகவும் கவர்ச்சிகரமானவை. ஆனால் நான் அதனைப் பற்றிக் கவலைகொள்வதில்லை. ஏனெனில் என்றோ ஒருநாள் எவரோ ஒருவர் சென்று அங்கே நாம் நிறுத்தி வைத்த கமராவை எடுத்துக்கொண்டு மீண்டும் வருவார்கள் என்று நம்புகின்றேன்என்று பதிலளித்துள்ளார். அமெரிக்காவும் இத்தகைய வாதங்கங் யாவும் நிலவில் தரையிறங்குதல் தொடர்பான சதிக்கோட்பாடுகள் (Moon landing conspiracy theories) என புறந்தள்ளியுள்ளது.

வல்லரசாதிக்கத்தை தம் கையில் எடுக்கவும் அமெரிக்காவால் எதனையும் சாதிக்க முடியும் என்ற மனப்பாங்கை உலக மக்களிடம் ஏற்படுத்தவும்தான் இத்தகையதொரு நாடகம் நடாத்தப்பட்டதாக பில் கேய்ங் கூறுகின்றார். விண்வெளிக்குச் சென்று வந்து உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டதும் இத்தகையதொரு உளமாயையை திட்டமிட்டு உலக மக்களிடம் தோற்றுவிக்கவும் சில அரசியல் காரணிகளுக்காகவும்தான் என்கின்றார் அவர்.

ஒபாமா ஜனாதிபதிப் பதவியை ஏற்கும் தருவாயில் Lunar Electric Rover எனும் விண்ணோடத்தின் வெள்ளோட்டம் நடைபெற்றது. வரும் 2020ம் ஆண்டில் அமெரிக்கா சந்திரனில் மனிதர்களை இறக்கி குறைந்தது இரண்டு வராங்களாவது தங்கவைப்பதற்கான ஒரு ஏற்பாட்டை செய்யப்போவதாக அறிவித்தது. அதற்காக ஆராய்ச்சிக் கூடம், சமையலறை, தூங்கும் அறை, குளியலறை மற்றும் கழிப்பறை என்பவற்றோடு இரண்டு பேருக்குத் தங்க முடியுமான ஓர் விண்ணோடத்தைத் தயாரித்துவருவதாகக் கூறியுள்ளது. அதற்கான ஒத்திகையோ மேலே நடைபெற்ற வெள்ளோட்டம். அதற்கு Departure to the Moon Part II - The Return  என்றும் பெயர்வைத்துள்ளது.

அமெரிக்காவால் எதுவும் முடியும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். பச்சை பச்சையாகப் பொய்களை உண்மை என்று நம்ப வைப்பதில் அமெரிக்கா வல்லவன். பெண்டன் தாக்குதல் நடைபெற்று இம்மாதத்துடன் 11 வருடங்கள் கடந்தும் அது அமெரிக்காவாலே நடாத்தப்பட்டதென நிரூபிக்கப்பட்டும் அரசாங்கமோ இன்னும் அதனை ஏற்காது பொய்யுரைத்துக்கொண்டே மக்களை நம்பவைத்து வருகின்றது. ஈராக், அப்கான் யுத்தங்கள், சர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்கள் அனைத்திலும் அண்டப் புழுகல்களை அழகாக முன்வைத்துவருகின்றது அமெரிக்கா. இந்தப் பொய்கள் யாவும் வல்லரசாதிக்கத்தைக் கைநழுவ விடாதிருப்பதற்கே.

குறிப்பு: எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமான எனது ஆக்கம்


ஆலிப் அலி (இஸ்லாஹி)


இன்று நாடுகளுக்கிடையில் காணப்படும் இராணுவப் போட்டித்தன்மை போன்று 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளில் ஒவ்வொரு நாடும் விண்வெளித் துறையில் தாமும் கால்பதிக்க வேண்டும் என்ற போட்டியில் ஈடுபட்டு வந்தன. அதிலும் அன்று உலக வல்லராச இருந்த சோவியத்துக்கும் அடுத்து வல்லரசு இருக்கையைக் கைப்பற்றிக்கொள்ள போட்டிபோட்ட அமெரிக்காவுக்கும் இடையே இத்துறையில் பாரிய போட்டித்தன்மைகள் நிலவிவந்தன.

1957ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ம் திகதி சோவியத் யூனியன் உலகின் முதலாவது செய்மதியான ஸ்புட்னிக்- I (Sputnik-I) ஐ விண்ணில் செலுத்தியபோது உலகமே சோவியத்தை வியந்து பார்த்தது. அன்று உலக வல்லரசாக இருந்த சோவியத் விண்வெளியிலும் வல்லரசாக மாறும் என்று அமெரிக்கா கூட எதிர்பார்க்கவில்லை. சோவியத்தின் எந்த விடயமும் வெளிவராத வண்ணம் மிக இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்தமை ஏனைய நாடுகள் சோவியத் அடுத்து எதனைச் சாதிக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஸ்புட்னிக்- I இயந்திரக் கோளாரு காரணமாக சிதைவடைந்ததும் அதே ஆண்டு நவம்பர் மாதம் 3ம் திகதியில் லைக்கா என்ற நாயுடன் ஸ்புட்னிக்- II என்ற செய்மதியை சோவியத் விண்ணில் ஏவி சாதனைபடைத்தது. சோவியத்திற்குப் போட்டியாக அனைத்துத் துறைகளிலும் முன்வரவேண்டுமென்று எதிர்பார்ப்புடனிருந்த அமெரிக்காவுக்கு இது பெரும் தர்மசங்கடமாகியது. எனவே அடுத்த வருடமே அமெரிக்கா களத்தில் குதிப்பதற்குத் தயாரானது. 1958ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி அமெரிக்கா தனது மிகப்பெரிய விண்வெளி ஆய்வு மையமான NASA (National Aeronautics and Space Administration) ஐ நிறுவி தனது விண்வெளி ஆய்வுகளை முடுக்கிவிட்டது. ஆரம்பமாக சிறு சிறு செய்மதிகளையும் அனுப்பியது.

அமெரிக்காவையும் விஞ்சி சோவியத் விண்வெளியில் பல சாதனைகளை நடாத்திக்கொண்டிருந்தது. அமெரிக்காவும் தனது சிறு சிறு சாதனைகளை ஊதிப் பெருப்பித்து உலகுக்குக் காட்டிக்கொண்டிருந்தது. சோவியத்திற்கு ஈடாக அடுத்து அமெரிக்கா என்ன செய்யப்போகின்றது என்று உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கத்துவங்கின. இவ்வாறு இவ் இரு நாடுகளுக்குமிடையில் விண்வெளித் துறையில் பலத்த போட்டி உருவாகியது.

இவ்வாறிருக்க 1962 ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி ஜோன் எப்.கென்னடி முதலாவதாக சந்திரனில் மனிதனைக் கால் பதிக்கச் செய்யும் சாதiனையை அமெரிக்கா தனதாக்கிக் கொள்ளும்என்று அறிவித்தார். என்றபோதிலும் அமெரிக்காவை முந்திக்கொண்டு சோவியத் விண்வெளி வீரர்களை சந்திரனில் தரையிறங்கச் செய்யும் என்ற அச்சமும் உள்ளுக்குள் அமெரிக்காவை துலைத்துக்கொண்டிருந்தது.

அதற்கு ஏற்றாற்போல் சோவியத் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி சந்திரனிலிருந்து கல்லையும் மண்ணையும் எடுத்துவந்து சாதனைபடைத்தது. அமெரிக்க ஜனாதிபதி கென்னடி அவ்வாறு அறிவித்து ஏழு வருடங்களில் (1969 ஜுலை) நாஸா நீலாம்ஸ்ட்ரோங்கையும் எட்வின் ஓல்ட்ரினையும் மற்றும் மைக்கல் கொலின்ஸ் ஐயும் அப்பலோ- II என்ற விண்ணோடத்தில் சந்திரனுக்கு அனுப்பியதாகவும் கொலின்ஸ் தவிர மற்ற இருவரும் சந்திரனில் கால் பதித்ததாகவும் கொலின்ஸ் விண்ணோடத்தில் இருந்தவாறு உதவியதாகவும் அறிவித்தது.

அதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் தொலைக்காட்சிகளுடாகவும் செய்திகள் வானொலிகளுடாகவும் உலகம் முழுதும் பகிரப்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் சாதணையைப் பார்த்து வியந்து நின்றனர். அன்றைய நாட்களில் பிரதான செய்திகளாக இடம்பெற்றவை அமெரிக்கா பற்றியும் அதன் சாதனைகள் பற்றியும்தான். சோவியத்தோ இறுதிவரை சந்திரனுக்கு ஆளனுப்புவதாகக் கூறவும் இல்லை, அனுப்பவும் இல்லை.

சந்திரனில் மனிதன் தரையிறங்கிய விடயம் பற்றி அதிகமானவர்கள் நம்பிக்கை கொண்டாலும் உண்மையிலே அமெரிக்கா விண்வெளிக்கு மனிதனை அனுப்பவில்லை அதுவொரு கட்டுக்கதை, நாடகம் என சில காலங்களிலேயே வாதங்கள் கிளம்பின. இவ்வாதங்கள் உடைந்துசென்ற சோவியத் நாடுகளிலிருந்து வெளிப்பட்டிருந்தாலும் ஆச்சரியமில்லை ஆனால் அமெரிக்காவிலிருந்தே இவ்வாதங்கள் கிளம்பியதுதான் அதிர்ச்சியான தகவல். நாஸா நிறுவனம் சந்திரனில் மனிதனைத் தரையிறங்கச் செய்த விடயங்கள் பொய் என்ற கருத்தை முதலாவதாகக் கூறியவர் பில் கேய்ங் என்ற விஞ்ஞானி. அவர் We Never Went to the Moon: America's Thirty Billion Dollar Swindle (1974) என்ற நூலில் சந்திரனின் மீது விழும் சூரிய வெப்பக் கதிர்களாலும் தொடர்ந்து விழும் வின்கற்களாலும் இன்னும் சில சூழல் காரணிகளாலும் சந்திரனில் தரையிறங்குவதென்பது நூற்றுக்கு 0.001 விகிதமே சாத்தியம் என 1960களில் நாஸா அறிவித்திருந்தது. அவ்வாறிருக்க அடுத்த ஒன்பது வருடங்களுக்குல் மனிதனை சந்திரனில் தரையிறங்கச் செய்ததாகக் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும்?” என கேள்வி எழுப்புகின்றார்.

அதேபோன்று அமெரிகர்களான எட்வட் பார்ஸி, மேரி பெனட் ஆகியோரும் நாஸாவால் வெளியிடப்பட்ட புகைப்படங்களையும் வீடியோக் காட்சிகளையும் வைத்து சந்திரனில் தரையிறங்கிய விடயம் பொய் என நிரூபித்தனர். இது தொடர்பாக இவர்கள் இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.

மேலும் Flat Earth Society” என்ற அமைப்பு நாஸா நிலவிற்கு ஆளனுப்பியதாகக் காட்டப்பட்ட புகைப்படங்களும் வீடியோக் காட்சிகளும் அரிஸோனா மாணிலத்தில் ஹொலிவுட் நிறுவனமான டிஸ்னி இன் துணையுடன் நிகழ்த்தப்பட்டவை என்றும் இதற்கு ஆதர் சீ.க்ளார்க் வரிவடிவம் கொடுத்ததாகவும் ஸ்டென்லி கொப்ரிக் இயக்குனராக இருந்ததாகவும் இவ்வமைப்பு கூறியது. இதில் போலக் லோரிஸ்ட், லிண்டா டெக் போன்றோர் முக்கியமானவர்கள்.

மற்றும் ஒரு நகைச்சுவையான வாதமும் உண்டு. கென்யாவில் லாமு மாணிலத்தில் வாழும் ஆதிவாசிகள் நிலாவிற்கு மனிதர்கள் சென்றால் உலகம் அழிந்துவிடும் என்று நம்புகின்றனர். அமெரிக்கா சந்திரனில் தரையிறங்கியதாகக் கூறிய பின்பும் உலகம் அழியவில்லை. அப்படியாயின் அமெரிக்கா பொய் சொல்கிறது, இன்னும் மனிதன் நிலவுக்குப் போகவில்லைஎன்று அவர்கள் வாதாடுகின்றனர். நிலவில் தரையிறங்கியமை பொய் என்பதற்காக பின்வரும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

1969 இல் சந்திரனில் தரையிறங்கியதாகக் கூறிய பின் மீண்டும் ஏன் அமெரிக்கா அச்சாதனையை நிகழ்த்திக் காட்டவில்லை. அல்லது வேறு நாடுகளால்கூட ஏன் முடியாமல் போனது? என்ற கேள்வி சந்திரனில் தரையிறங்கிய விடயம் பற்றி எழுப்பப்படும் முதல் சந்தேகக் கேள்வி. அமெரிக்கா உட்பட எந்த நாடும் சந்திரனில் மனிதனைத் தரையிறக்கவில்லை. விண்வெளிக்கே சென்று வருகின்றனர். என்பதுதான் உண்மை.

நாஸா விஞ்ஞானிகளது அறிவிப்பின்படி சந்திரனின் மேற்தளத்தில் வெப்பமானது 170 பாகை செல்சியஸாகும். இன்றிருப்பது போன்ற கணினி, தொழில்நுட்ப வளர்ச்சிகள் கண்டிராத அந்த நாட்களில் இருந்த எந்த நிறுவனமும் 170 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலையில் இயங்கக்கூடியதான புகைப்படக் கருவிகளை உற்பத்தி செய்யதிருக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்படியிருக்க சந்திரனின் வெப்பமான சூழ்நிலையில் எவ்வாறு அழகான வண்ண வண்ணப் புகைப்படங்களை எடுத்துள்ளார்கள்? என்பது புதிரான விடயம்.

1. சந்திரனுக்கு ஒளி கிடைப்பது சூரியனிலிருந்து மட்டும்தான். எனவே நிழல்கள் கூட ஒரே திசையை நோக்கி ஒரே அளவில்தான் விழவேண்டும். ஆனால் நாஸாவால் வெளியிடப்பட்ட ஒரு புகைப்படத்தில் சந்திரனில் தரையிறங்கியதாகக் கூறப்படும் இருவரினதும் நிழல்கள் வெவ்வேறு திசைகளில் விழுந்துள்ளன. அத்தோடு அவற்றின் நீள அளவுகள் கூட வித்தியாசத்தைக் கொண்டுள்ளன. எனவே இது சந்தேகத்தை உண்டாக்குகின்றது. அத்தோடு புகைப்படம் எடுக்கும்போது தரையிறங்கியவர்கள் அணிந்திருக்கும் முகக் கவசங்களின் கண்ணாடியில் பிரகாசமான ஒளி விளக்குகள் தென்படுகின்றன. நாஸாவோ தாம் அவ்வாறான ஒளிவிளக்குகளை சந்திரனுக்கு அனுப்பவில்லை என்று கூறியது. அப்படியாயின் அவ்வளவு சக்திமிக்க ஒளி எங்கிருந்து கிடைத்தது என்பது மற்றொரு கேள்வி. இது இயல்பான சந்திர ஒளியில் எடுக்கப்பட்ட புகைப்படமல்ல. மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட ஒளிவிளக்குகளைப் பயன்படுத்தி Studio இல் எடுக்கப்பபட்ட புகைப்படமாக இருக்கவேண்டுமென சந்தேகிக்கின்றனர்.

2. அடுத்து சந்திரனில் இருக்கும்போது எடுத்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள் ஒன்றிலும் விண்ணில் தெரியும் நட்சத்திரங்களைக் காண முடியவில்லை. பூமியைச் சூழ பல்வேறு படைகள் காணப்படுவதாலும் வளிமண்டலம் இருப்பதாலும் சந்திரனில் அவை இல்லாததாலும் பூமியில் இருந்து பார்ப்பதைவிட சந்திரனிலிருந்து பார்க்கும்போதுதான் நட்சத்திரங்கள் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் இப்புகைப்படங்களில் எவ்வாறு நட்சத்திரங்கள் காணாமல் போயின என்பது சந்திரனில் தரையிறங்கியது பற்றிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன.

3. விண்ணோடம் சந்திரனில் தரையிறங்குவதுபோன்ற காட்சிகளும் மீண்டும் விண்ணுக்கு உயர்வதுபோன்ற காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. சந்திரனில் புகைப்படக் கருவியுடன் யாராவது ஏழவே சென்றிருந்தால்தானே விண்ணோடம் தரையிறங்குவதைப் படமெடுக்க முடியும். அத்தோடு சென்ற மூவரும் திரும்பி வரும்போது விண்ணோடம் உயர்வதை சந்திரனிலிருந்து படம்பிடித்தது யார்? என்ற சந்தேககங்களுக்கும் நாஸா பதிலளிக்கவில்லை.

4. சந்திரனின் மேற்பரப்பு அதிகூடிய வெப்ப நிலையாலும் அங்கு நீர் இல்லாததாலும் காய்ந்து கடிணமாகவும் புழுதித் தன்மையுடனுமே இருக்கும். அத்தோடு புழுதி உண்டானாலும் அதனை அடக்க காற்று இல்லாததால் சில காலங்களுக்கு புழுதி அப்படியே பறவிக்காணப்படும். விண்ணோடத்தைத் தரையிறக்கும்போது நிச்சயம் புழுதி கிளம்பவேண்டும். அங்கு காற்று இல்லாததால் அப்புழுதி சில மணி நேரங்களுக்காவது அப்படியே இருந்திருக்கவேண்டும். ஆனால் நாஸாவின் புகைப்படங்கள் புழுதிகள் இன்றி மிகத் தெளிவாகக் காட்சியளிக்கின்றன.

5.  நீல் ஆம்ரோங் நிலவில் காலடி வைத்ததும் “one small step for a man; a giant leap for mankind –  சிறிய காலடி மனித குலத்திற்கான பெரும் பாய்ச்சல்என்று கூறினாராம். புகைப்படத்திலுள்ள அவரது காலடித் தடமானது நன்கு அழுத்தமாகவும் தெளிவாகவும்  (சேற்றில் வைத்த தடம் போன்று) பதிந்துள்ளது. காய்ந்து வரண்ட தரையில் கால்வைத்தால் ஒருபோதும் இதுபோன்று அழுத்தமாகப் பதியாது. அத்தரை சேற்று நிலமாக இருக்கவும் வாய்ப்பில்லை. காரணம் அங்கு நீரில்லை. அப்படியாயின் இப்படமும் பொய்யாக வடிவமைக்கப்பட்டவொன்றே!

6. நீல் ஆம்ஸ்ரோங் இன் நிறையைவிடவும் விண்ணோடத்தின் நிறை எப்படியும் அதிகம்தான். நீல் ஆம்ஸ்ரோங் தரையிறங்கியபோதே அவ்வளவு ஆழமாக அவரது கால்தடம் பதிந்ததென்றால் விண்ணோடத்தின் கால்கள் எவ்வளவு பதிந்திருக்கவேண்டும். ஆனால் குறித்த புகைப்படங்களில் விண்ணோடத்தின் கால்கள் நிலத்தில் பட்டும் படாமலும் காணப்படுகின்றன. அத்தோடு கால்களில் புழுதிகள் கூட படியாது தெளிவாகக் காணப்படுகின்றன. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.

7. தரையிறங்கியதும் அவர்கள் நட்டிய அமெரிக்கக் கொடி அசைந்தாடுவதைப் படங்களில் காணலாம். சந்திரனில் காற்றே இல்லாதபோது எவ்வாறு கொடி அசைந்தாடுவது சாத்தியம். மேலும் 170 பாகை செல்ஸியஸ் வெப்ப நிலையில் அக்கொடி தாக்குப் பிடிக்குமா என்பதும் அசைந்தாடுமா என்பதும் சிந்திக்கவேண்டியவையே!

 8. இப்புகைப்படத்தில் உள்ளவரது முகக் கவசத்தில், முன்னால் மற்றைய விண்வெளி வீரர் இருப்பது வெள்ளை உடையுடன் தெரிகின்றது. அவரைவிடவும் நெருக்கமாக சாதாரண உடையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவரது தோற்றம் தெளிவாகப் பிரதிபளிப்பதை காணலாம். அவரிற்குப் பின்னால் உள்ள ஒளி விளக்கினால் இவரது தோற்றம் கருமையாகப் பதிந்துள்ளது. சந்திரனில் தரையிறங்கியது இருவர் மற்றையவர் விண்ணோடத்தில் எனின் இந்த மூன்றாம் நபர் யார்? எங்கிருந்து வந்தார்? இந்த ஒரு புகைப்படமே சந்திரனில் தரையிறங்கியமை பொய் என்பதை நிரூபிக்கப் போதுமானதாகும்.

9. வீரர்கள் சந்திரனில் இருந்து வரும்போது அங்கே மனித குலம் அனைத்திற்குமான அமைதியைத் தேடி வந்தோம் (we came in peace for all mankind)”  எனும் வாசகம் பொறிக்கப்பட்ட சில்வர் அறிவிப்புப் பலகையொன்றை வதை;தார்களாம். அத்தோடு இன்னும் சில கருவிகளையும் வைத்ததாகக் கூறுகிறார்கள். இன்றைய செய்மதித் தொழில்நுட்ப வளர்ச்சியால் சந்திரனில் உள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்க முடிந்தபோதிலும் நீலாம்ஸ்ரோங் விட்டுவந்த கருவிகைளக் காண முடியவில்லை என்கின்றனர் இதனை எதிர்க்கும் விஞ்ஞானிகள்.

நிலவில் இருந்து திரும்பியதும் இம்மூவரும் 116 நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார்கள். அந்நாடுகளால் கௌரவிக்கப்பட்டார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். நீலாம்ஸ்ட்ரோங் கூட கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி (2012)  அவர் மரனிக்கும்வரை ஊடகங்களுக்கோ பேட்டி நிகழ்ச்சிகளுக்கோ ஏன் முன்வரவில்லை என்பதும் முக்கியமான கேள்வி? “Why did Armstrong spend the rest of his life denying requests for interviews on the subject?”

ஒருமுறை நீலாம்ஸ்ரோங் இடம் சில கடவுள் நம்பிக்கையற்றவர்கள் சந்திரனில் இறங்கியது பொய் எனக் கூறுகிறார்களேஎன்று வினவப்பட்டபோது அவர் மக்கள் எதிர்மறையான கருத்துக்களை ஆசையுடன் விரும்புகின்றார்கள். ஏனெனில் அவை மிகவும் கவர்ச்சிகரமானவை. ஆனால் நான் அதனைப் பற்றிக் கவலைகொள்வதில்லை. ஏனெனில் என்றோ ஒருநாள் எவரோ ஒருவர் சென்று அங்கே நாம் நிறுத்தி வைத்த கமராவை எடுத்துக்கொண்டு மீண்டும் வருவார்கள் என்று நம்புகின்றேன்என்று பதிலளித்துள்ளார். அமெரிக்காவும் இத்தகைய வாதங்கங் யாவும் நிலவில் தரையிறங்குதல் தொடர்பான சதிக்கோட்பாடுகள் (Moon landing conspiracy theories) என புறந்தள்ளியுள்ளது.

வல்லரசாதிக்கத்தை தம் கையில் எடுக்கவும் அமெரிக்காவால் எதனையும் சாதிக்க முடியும் என்ற மனப்பாங்கை உலக மக்களிடம் ஏற்படுத்தவும்தான் இத்தகையதொரு நாடகம் நடாத்தப்பட்டதாக பில் கேய்ங் கூறுகின்றார். விண்வெளிக்குச் சென்று வந்து உலக நாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டதும் இத்தகையதொரு உளமாயையை திட்டமிட்டு உலக மக்களிடம் தோற்றுவிக்கவும் சில அரசியல் காரணிகளுக்காகவும்தான் என்கின்றார் அவர்.

ஒபாமா ஜனாதிபதிப் பதவியை ஏற்கும் தருவாயில் Lunar Electric Rover எனும் விண்ணோடத்தின் வெள்ளோட்டம் நடைபெற்றது. வரும் 2020ம் ஆண்டில் அமெரிக்கா சந்திரனில் மனிதர்களை இறக்கி குறைந்தது இரண்டு வராங்களாவது தங்கவைப்பதற்கான ஒரு ஏற்பாட்டை செய்யப்போவதாக அறிவித்தது. அதற்காக ஆராய்ச்சிக் கூடம், சமையலறை, தூங்கும் அறை, குளியலறை மற்றும் கழிப்பறை என்பவற்றோடு இரண்டு பேருக்குத் தங்க முடியுமான ஓர் விண்ணோடத்தைத் தயாரித்துவருவதாகக் கூறியுள்ளது. அதற்கான ஒத்திகையோ மேலே நடைபெற்ற வெள்ளோட்டம். அதற்கு Departure to the Moon Part II - The Return  என்றும் பெயர்வைத்துள்ளது.

அமெரிக்காவால் எதுவும் முடியும் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரம். பச்சை பச்சையாகப் பொய்களை உண்மை என்று நம்ப வைப்பதில் அமெரிக்கா வல்லவன். பெண்டன் தாக்குதல் நடைபெற்று இம்மாதத்துடன் 11 வருடங்கள் கடந்தும் அது அமெரிக்காவாலே நடாத்தப்பட்டதென நிரூபிக்கப்பட்டும் அரசாங்கமோ இன்னும் அதனை ஏற்காது பொய்யுரைத்துக்கொண்டே மக்களை நம்பவைத்து வருகின்றது. ஈராக், அப்கான் யுத்தங்கள், சர்வதேச அரசியல், பொருளாதார விவகாரங்கள் அனைத்திலும் அண்டப் புழுகல்களை அழகாக முன்வைத்துவருகின்றது அமெரிக்கா. இந்தப் பொய்கள் யாவும் வல்லரசாதிக்கத்தைக் கைநழுவ விடாதிருப்பதற்கே.

குறிப்பு: எங்கள்தேசம் பத்திரிகையில் பிரசுரமான எனது ஆக்கம்


ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

1 comments:

Anonymous said...

fathima.........

sirappana arachith thahaval......
niroofikkum murai sirappahvullathu...
umathu araaum thiranum vaasikkum thiranum alutum thiranum men mealum valaranum.....
article inai thanthamaiku nantri....
good artile

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...