"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

17 March 2020

ஓங்கி வளரும் மூங்கில் மரம்


பேராதனை தாவரவியற் பூங்காவிற்குச் சென்றால் தவறாமல் ஒரு முறை மூங்கில் மரங்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குச் சென்று வாருங்கள். வகை வகையான மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். பச்சை மூங்கில், மஞ்சள் மூங்கில், கருப்பு மூங்கில், சிவப்பு மூங்கில் என ஏராளமான, அளவிலும் தோற்றத்திலும் வித்தியாசமான பல மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். அந்த இடம் கூட பார்ப்பதற்கு அழகாகவும் ரம்யமாகவும் இருக்கும். பூங்காவுக்கு பூக்களை மட்டுமே பார்க்கச் செல்லும் பலரும் மூங்கில் மரத்தில் என்னதான் இருக்கின்றது பார்ப்பதற்கு? என்று அலட்சியத்துடன் அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிடுகின்றனர். பார்ப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் மூங்கில் மரத்தில் பல விடயங்கள் இருக்கின்றன. படிப்போமா…

அறிமுகம்.

தாவர உலகில் பிரதாண இடத்தைப் பிடிக்கும் முக்கியமானதொரு தாவரம்தான் மூங்கில். மூங்கில் ஒரு விவசாயத் தாவரமாக நோக்கப்படுகின்றது. அதனால்தான் மூங்கில் ஏழைகளின் மரம் என்றும் பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படுகின்றது. மூங்கில் மரம், என்று தமிழிலும் Bamboo tree என்று ஆங்கிலத்திலும் உண கஸ் என்று சிங்களத்திலும் அழைக்கப்படுகின்றது. மூங்கில் என்பது மரமா? புல்வகையைச் சேர்ந்ததா? என்று கேட்டால் பலரும் அதனை மரம் என்றுதான் கூறுவதர்கள். ஆனால் விஞ்ஞானப் பிரிப்பில் மூங்கில் மரவகையை சேர்ந்தது அல்ல. அது புல்வகையை சேர்ந்தது. புல் வகையில் பெரிதாகவும், உறுதியாகவும் அதிக உயரமாகவும் வளரும் ஒரே தாவரம் மூங்கிலாகும். என்றாலும் பின்வரும் பந்திகளில் எமது வழக்கப்படி நாம் மரம் என்றே பயன்படுத்துவோம்.

வளரும் பிரதேசங்கள்.


பொதுவாக எல்லா நாடுகளிலும் எல்லாப் பிரதேசங்களிலும் மூங்கில்களைக் காணலாம். தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் பசிபிக் கடலை சார்ந்த தீவுகளில் மூங்கில் பெருமளவில் வளர்கிறது. சீனா, ஜப்பான், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேசு, கோஸ்டரிக்கா, கென்யாஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன. மூங்கில் உற்பத்தியில் சீனாதான் உலகில் முதலிடத்தில் இருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர்கள் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள். இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இலங்கையிலும் தாராளமாகக் கண்டுகொள்ளலாம்.

மூங்கிலின் வகைகள்.
உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையின மூங்கில்கள் காணப்படுகின்றன. இவை கால, சூழலுக்கு அமைய வெவ்வேறு இடங்களில் வளர்கின்றன. அவற்றில் மிதமான வறண்ட பகுதிகளில் வளரும் கல் மூங்கில், ஈர செழிப்புள்ள பகுதிகளில் வளரும் முள்மூங்கில் அல்லது பொந்து மூங்கில் மற்றும் முள்ளில்லா மூங்கில் ரகங்களாகிய பாம்பூசா வல்காரிஸ் மற்றும் பாம்பூசா பல்கோவா, போன்சாய் குட்டை மூங்கில் என 1000 இற்கும் அதிகமான மூங்கில் மரங்கள் காணப்படுகின்றன. மூங்கிலில் எந்த வகையாக இருந்தாலும், அதன் தண்டுப்பகுதி வழுவழுப்பாகவும் திடமாகவும் இருக்கும். பொந்து மூங்கில் என்பது அவற்றின் தண்டின் நடுப்பகுதியில் கீழிருந்து மரத்தின் உச்சி வரை துவார அமைப்பில் இடைவெளி இருக்கும். இதுவல்லாத முள்ளில்லாத மூங்கில்கள் தண்டின் உற்பகுதியில் இடைவெளி இன்றி சிறிதாகவும் கெட்டியாக இருக்கும்.

ஓங்கி வளரும் மூங்கில்.


தாவரங்களிலேயே மிக வேகமாக வளரக்கூடியது மூங்கில் மரம்தான். சாதாரணமாக மூங்கில் மரம் 60 வருடங்கள் உயிர் வாழும். ஒவ்வொரு வகை இனமும் வித்தியாசமான வேக அளவில் வளர்ச்சி அடையும். சில வகை ஒரு நாளைக்கு 16 அங்குலம் என்ற விகித்ததில் வளரும். இன்னும் சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. மொத்தமாக 90 அடி உயரம் வளரும் ஒரு மூங்கில் அந்த உயரத்தை எட்டிப் பிடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் வெறும் 6 வாரங்கள்தான். ஆறு வாரங்களில் அவ்வளவு வேகமாக வளர்ந்துவிடுகின்றன. எனவேதான் உலகில் மிக வேகமாக ஓங்கி வளரும் தாவரமாக மூங்கில் கருதப்படுகின்றது. மூங்கிலின் அதிக அளவு பருமன் 1 செ.மீ. இலிருந்து 30 செ.மீ. வரை இருக்கும். இவை வறட்சியான பிரதேசங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நன்கு வளர்கின்றன. விதையாக இருக்கும்போது தண்ணீர் தேவைப்பட்டாலும் அது வளர்ந்ததன் பின்னர் குறைவான தண்ணீரிலும் கிடு கிடுவென வளர்ந்துவிடும்.

மூங்கில் கற்றுத் தரும் பாடம்.

மிக வேகமாக வளரும் தாவரம் மூங்கில் என்றாலும் அதில் மற்றொரு சங்கதியும் இருக்கின்றது. அது எமது வாழ்க்கைக்கு அழகான, ஆழமானதொரு படிப்பினையைச் சொல்லித் தருகின்றது. ஒரு விவசாயி மண்ணில் மூங்கில் மரத்தின் விதையை நட்டுகின்றான். அது பெரும் மரமாக வளரும் என்ற நம்பிக்கையில் நட்டுகின்றான். ஒவ்வொரு நாளும் அந்த இடத்திற்குத் தண்ணீர் ஊற்றுகின்றான். பசளை இடுகின்றான். ஆதரவோடு ஒவ்வொருநாளும் அந்த இடத்தைச் சென்று பார்க்கின்றான். அந்த இடத்தைச் சுற்றி முளைக்கும் காட்டுச் செடிகளைப் பிடிங்கி எரிகின்றான். இப்படி பெரும் எதிர்பார்ப்போடு நாட்கள் கழிகின்றது. ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் அல்ல… ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் அல்ல… ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் இல்லவே இல்லை. மாதங்கள் உருண்டோடியும் எந்த அசைவும் இல்லை. விதைகள் போடப்பட்ட இடம் அப்படியேதான் இருக்கும். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்தும் விவசாயி நீர் ஊற்றி, பசளையிட்டு வருகின்றான். இப்படியே ஒரு வருடம் சென்றது… ம்ஹும்… இரண்டு வருடங்கள் கடந்தன… ம்ஹும்… மூன்று வருடங்கள் ஓடிவிட்டன… என்னவொரு ஏமாற்றம்?



இன்னும் நிலம் நிலமாகத்தான் இருக்கின்றது. ஒரு மாற்றம் கூட இல்லை. இதனை நட்ட விவசாயியின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். விதைகள் அழுகிவிட்டனவா? என்ற எண்ணமும் விவசாயிக்கு வந்துவிட்டது. தனது நேரம், காலம், சக்தி, முதலீடு எல்லாம் வீணாகின்றனவோ என்று கவலைவேறு வந்துவிட்டது. சுற்றியிருப்பவர்கள் கிண்டல் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் விவசாயி தன் நம்பிக்கையை கைவிடவில்லை. தொடர்ந்தும் உழைத்தான். பொருமையாக செயற்பட்டான்.. நான்கு வருடங்கள் ஆகின… ஒரு துரும்பு கூட மண்ணைவிட்டு வெளியே வந்திருக்காது. இன்னும் உழைத்தான் மொத்தமாக ஐந்து வருடங்கள். இதோ இப்போது ஒரு மாற்றம் மண்ணில். விவசாயியின் முகத்தில் சந்தோசம். ஐந்து வருட உழைப்பின் பிரதிபளனை விவசாயி காணப்போகின்றான். இதோ நினைத்துப் பார்க்காத வேகத்தில் மூங்களில் மண்ணை முட்டி காற்றில் மோதி விண்ணை நோக்கி வீரிட்டு வளரத் தொடங்கியது. 10 அடி, 20 அடி, 30 அடி, 40, 50, 60, 70, 80 அடிகள் என 90 அடி வரை உயர்ந்து நின்றது. விவசாயி பூரித்துப்போனான். வெறும் ஆறு வாரங்களில் 90 அடிவரை வானளாவ வளர்ந்து உயர்ந்து நின்றது மூங்கில். ஐந்து வருட உழைப்பின் பயனை வெறும் ஆறே வாரங்களில் கண் முன்னால் காண்கின்றான். இது கதையல்ல. மூங்கில் மரத்தின் நிஜமான வாழ்க்கை. எந்தவொரு மகத்தான சாதனையும் நீண்டகால உழைப்பின் மூலமே சாத்தியமாகும் என்ற சிறந்ததொரு பாடத்தை, படிப்பினையை மூங்கில் மரம் எமக்குக் கற்றுத்தருகின்றது. சுபஹானல்லாஹ்!

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் மூங்கில்.

மூங்கில் மரத்தில் தனி அழகு உண்டு. சில மரங்களில் அவற்றின் தண்டுப் பகுதி தனி மஞ்சள் நிறத்திலும் சிலது தனி பச்சை நிறத்திலும் இன்னும் சிலது மஞ்சள் தண்டில் பச்சைக் கோடுகள் அமைந்தும் காணப்படும். நன்கு முற்றிய இலைகள் கடும் பச்சை நிறத்திலும் கொழுந்து இலைகள் இளம் பச்சை நிறத்திலும் காட்சி தரும். இலைகளும் கூட நீண்டு சிறிய சிறிய இலைகளாக இருக்கும். பார்க்கும்போதே கண்ணைப் பறிக்கும் மஞ்சள், பச்சைக் கலவைதான் மூங்கில் மரம். எனவே அதிகமாக சூரிய வெயில் படும் இடங்களில் பாதை ஓரங்களில், பஸ் தரிப்பு, புகையிரத, விமான நிலையங்களில், பொதுச் சந்தைகளில், பாடசாலை வளாகங்களில், மைதான ஓரங்களில், சன நெரிசலான இட ஒதுக்குப் புறங்களில் மூங்கில் மரங்களை நாட்டுவதால் வெயிலின் கொடுமையைத் தனித்து கண்களுக்கு குளிர்ச்சியையும், பசுமையையும் மனதிற்கு ஆருதலையும், நிம்மதியையும் இந்த மூங்களில் மரங்கள் தருகின்றன.

காற்றைச் சுத்தப்படுத்தும் மூங்கில்.

உயிர் வாழ்க்கைக்குத் தேவையான ஒக்ஸிஜன் வாயுவை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள்தான் தாவரங்கள். அதிலும் மற்றத் தாவரங்கள் அனைத்தையும்விட அதிகளவிளான கரியமிள வாயுவை (காபன்டைஒக்ஸைட்) உள்ளிழுத்து அதனை எம்மால் சுவாசிக்க முடியுமான ஒக்ஸிஜன் வாயுவாக மாற்றித் தரும் பெரும் வேலையைச் செய்வது இந்த மூங்கில் மரங்கள்தான். ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டொன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, அதற்கு நிகரான ஒக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் ஒக்ஸிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் மரம் ஓர் ஆண்டில் 309 கிலோ ஒக்ஸிஜனைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஆக எமது சுற்றுச் சூழலில் மூங்கில் மரங்கைள அதிகமாக நடுவதால் எவ்வளவு சுகாதாரமான வாழ்வு கிடைக்கின்றது பார்த்தீர்களா?

ஏழைகளின் மரம் மூங்கில்

மூங்கில் ஏழைகளின் மரம் என அழைக்கப்படுவதுமுண்டு. பல நாடுகளில் மூங்கில் விவசாயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது அந்நாட்டு ஏழைகளின் வருமானத்திற்கான சுய தொழிலாக இருக்கின்றது. குறைந்த செலவில், நீண்ட நாள் உழைப்பில் அதிகமான வருமானத்தை அவர்களுக்கு மூங்கில் மரங்கள் ஈட்டிக்கொடுக்கின்றன. மூங்கில் நட்டு ஐந்தாண்டுகளின் பின்னர் அவை அறுவடைக்குத் தயாராகிவிடும். பல்வேறு வேலைகளுக்காவும் உபகரணங்கள் தயாரிப்பதற்காகவும் வேலைப்பாடுகள் செய்வதற்காகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு வலையமைப்பு என்பது இதுபோன்ற வேலைகளுக்காக மூங்கிலை பிரபலப்படுத்தும் சர்வதேச அமைப்பாகும். எமது நாட்டிலும் நீங்கள் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும்போது இடையில் வரும் “தித்தல்மங்கட” எனும் ஊர் மூங்கில், பிரம்புகளைப் பயன்படுத்தி அலங்காரப் பொருட்கள் செய்வதற்கு பேர்போன இடமாகும்.

பயன் மிகு மூங்கில்.

மூங்கில் மரத்தினால் 1500 இற்கும் மேற்பட்ட பயன்கள் இருப்பதாக விவசாய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை வீடுகள் கட்டுவதற்கும், கூரைகளின் உத்திரமாகவும், வேலிகள் அமைக்கவும், சுவர் தடுப்புகள் செய்யவும் கட்டட நிர்மாணப் பணிகளின்போதும், கைவினைப் பொருட்கள் தயார் செய்வதற்கும் கூடை, ஏணி, கைப் பிடிகள் தயாரிப்பதற்கும் சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாக மூங்கில் பயன்படுகிறது. ஜப்பான் நாட்டில் தோட்டக்கலை நிபுணர்களும் விவசாயிகளும் மூங்கிலை நீர்க் குழாயாக பயன் படுத்துகிறார்கள். மூங்கில் இலைகள் மற்றும் அவற்றின் தூள்களைப் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கப்படுகின்றது. அத்தோடு உயர்தரமான காகிதப் பண நோட்டுகள் கூட மூங்களின் இலைகளால்தான் தயாரிக்கப்படுகின்றன. மூங்கில்களில் இருந்து உதிரும் இலைகள் மண்புழு உரம் தயாரிக்க பயன் படுகின்றது. ஏனைய உரங்களை விடவும் இதில் நல்ல பயனிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தோடு மூங்கிலிலிருந்து பெறப்படும் அரிசி உண்பதற்கு மிகவும் ஆரோக்கியமானது. சீனா, ஜப்பான் நாடுகளில் மூங்கில் அரிசி விற்பனைக்குண்டு. மூங்கில் குருத்திலிருந்து செய்யப்படும் பாணமும் (ஜுஸ்) உணவும் இந்நாடுகளில் மிகவும் பிரபலம். மனிதனுக்கு மட்டுமன்றி இளம் மூங்கில் குருத்துகள், இலைகள் ஆகியன பண்டாக் கரடி, சிவப்பு பண்டாக் கரடி, மூங்கில் லெமூர், கொஹாலா, கினிப் பன்றி போன்ற விலங்குகளின் முதன்மையான உணவாகும் இருக்கின்றது.

உங்கள் வீட்டு முற்றத்திலும் நாட்டலாமே!

இன்று அனேகமான வீடுகளில் முற்றங்களை அழகுபடுத்துவதற்காக முள்ளில்லா மூங்கில்கள் நடப்படுகின்றன. இவை உண்மையிலேயே அழகானவை. அதிக உயரம் வளர்வதுமில்லை. ஒரு நேராக இடம் விட்டு இடம் இந்த மூங்கில்களை நட்டால் அவை பார்வைக்கு அழகாகவும் குளிர்சியாகவும் பசுமையாகவும் இருக்கும். உங்கள் வீட்டு முற்றத்திலும் நாட்டிப் பாருங்கள். அழகு மட்டுமன்றி ஆரோக்கியமும் கிடைக்கும். பூமரங்கள் விற்பனை செய்யும் இடங்களால் நன்கு வளர்ந்த மூங்கில் கன்றுகளை 3000 ரூபாவிலிருந்து விலைக்கு வாங்கி நடலாம்.



நட்டு ஆரம்பத்தில் நன்கு தண்ணீர் விடவேண்டும். அதன்பின்பு அதுவாக வளர்ந்து வரும். இனி பராமறிப்பது மட்டும்தான் வேலை. அந்த மரத்திலிருந்து வரும் சிறிய கன்றுகளை சிதையாமல் பிடிங்கி வேறு இடங்களில் நட்டால் அவையும் காலப்போக்கில் துரிதமாக வளர்ந்து அழகு தரும். இவற்றுக்கு பூச்சித் தொற்றுகள் வருவது மிகக் குறைவு. சில நேரம் கரையான், வெள்ளைப் பூஞ்சான் போன்ற பூச்சிகள் தாக்கும். அப்போது பூச்சிக் கொல்லி திரவங்களைத் தெளித்து கட்டுப்படுத்தலாம். வீட்டைச் சுற்றி மூங்கில் மரங்களை நட்டுப் பாருங்கள் சுத்தமான ஒக்ஸிஜன் காற்றுக் கிடைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சி கிடைக்கும். வீட்டைச் சுற்றியும் குளிர்ச்சி கிடைக்கும். வீட்டுக்கு ஒரு புதர் மூங்கில் நாட்டுவோம் என்ற திட்டத்தை ஆரம்பிப்போம்.

அஷ். எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
Dip. In psychological Counseling, Al-Quran & Science Researcher.

பேராதனை தாவரவியற் பூங்காவிற்குச் சென்றால் தவறாமல் ஒரு முறை மூங்கில் மரங்கள் நிறைந்திருக்கும் பகுதிக்குச் சென்று வாருங்கள். வகை வகையான மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். பச்சை மூங்கில், மஞ்சள் மூங்கில், கருப்பு மூங்கில், சிவப்பு மூங்கில் என ஏராளமான, அளவிலும் தோற்றத்திலும் வித்தியாசமான பல மூங்கில் மரங்களைக் கண்டுகொள்ளலாம். அந்த இடம் கூட பார்ப்பதற்கு அழகாகவும் ரம்யமாகவும் இருக்கும். பூங்காவுக்கு பூக்களை மட்டுமே பார்க்கச் செல்லும் பலரும் மூங்கில் மரத்தில் என்னதான் இருக்கின்றது பார்ப்பதற்கு? என்று அலட்சியத்துடன் அதன் அழகை ரசிக்கும் சந்தர்ப்பத்தைத் தவறவிடுகின்றனர். பார்ப்பதற்கு மட்டுமல்ல, படிப்பதற்கும் மூங்கில் மரத்தில் பல விடயங்கள் இருக்கின்றன. படிப்போமா…

அறிமுகம்.

தாவர உலகில் பிரதாண இடத்தைப் பிடிக்கும் முக்கியமானதொரு தாவரம்தான் மூங்கில். மூங்கில் ஒரு விவசாயத் தாவரமாக நோக்கப்படுகின்றது. அதனால்தான் மூங்கில் ஏழைகளின் மரம் என்றும் பச்சைத் தங்கம் என்று அழைக்கப்படுகின்றது. மூங்கில் மரம், என்று தமிழிலும் Bamboo tree என்று ஆங்கிலத்திலும் உண கஸ் என்று சிங்களத்திலும் அழைக்கப்படுகின்றது. மூங்கில் என்பது மரமா? புல்வகையைச் சேர்ந்ததா? என்று கேட்டால் பலரும் அதனை மரம் என்றுதான் கூறுவதர்கள். ஆனால் விஞ்ஞானப் பிரிப்பில் மூங்கில் மரவகையை சேர்ந்தது அல்ல. அது புல்வகையை சேர்ந்தது. புல் வகையில் பெரிதாகவும், உறுதியாகவும் அதிக உயரமாகவும் வளரும் ஒரே தாவரம் மூங்கிலாகும். என்றாலும் பின்வரும் பந்திகளில் எமது வழக்கப்படி நாம் மரம் என்றே பயன்படுத்துவோம்.

வளரும் பிரதேசங்கள்.


பொதுவாக எல்லா நாடுகளிலும் எல்லாப் பிரதேசங்களிலும் மூங்கில்களைக் காணலாம். தென்கிழக்கு ஆசியா, இந்தியா மற்றும் பசிபிக் கடலை சார்ந்த தீவுகளில் மூங்கில் பெருமளவில் வளர்கிறது. சீனா, ஜப்பான், இந்தியா, இலங்கை, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேசு, கோஸ்டரிக்கா, கென்யாஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன. மூங்கில் உற்பத்தியில் சீனாதான் உலகில் முதலிடத்தில் இருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர்கள் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள். இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இலங்கையிலும் தாராளமாகக் கண்டுகொள்ளலாம்.

மூங்கிலின் வகைகள்.
உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையின மூங்கில்கள் காணப்படுகின்றன. இவை கால, சூழலுக்கு அமைய வெவ்வேறு இடங்களில் வளர்கின்றன. அவற்றில் மிதமான வறண்ட பகுதிகளில் வளரும் கல் மூங்கில், ஈர செழிப்புள்ள பகுதிகளில் வளரும் முள்மூங்கில் அல்லது பொந்து மூங்கில் மற்றும் முள்ளில்லா மூங்கில் ரகங்களாகிய பாம்பூசா வல்காரிஸ் மற்றும் பாம்பூசா பல்கோவா, போன்சாய் குட்டை மூங்கில் என 1000 இற்கும் அதிகமான மூங்கில் மரங்கள் காணப்படுகின்றன. மூங்கிலில் எந்த வகையாக இருந்தாலும், அதன் தண்டுப்பகுதி வழுவழுப்பாகவும் திடமாகவும் இருக்கும். பொந்து மூங்கில் என்பது அவற்றின் தண்டின் நடுப்பகுதியில் கீழிருந்து மரத்தின் உச்சி வரை துவார அமைப்பில் இடைவெளி இருக்கும். இதுவல்லாத முள்ளில்லாத மூங்கில்கள் தண்டின் உற்பகுதியில் இடைவெளி இன்றி சிறிதாகவும் கெட்டியாக இருக்கும்.

ஓங்கி வளரும் மூங்கில்.


தாவரங்களிலேயே மிக வேகமாக வளரக்கூடியது மூங்கில் மரம்தான். சாதாரணமாக மூங்கில் மரம் 60 வருடங்கள் உயிர் வாழும். ஒவ்வொரு வகை இனமும் வித்தியாசமான வேக அளவில் வளர்ச்சி அடையும். சில வகை ஒரு நாளைக்கு 16 அங்குலம் என்ற விகித்ததில் வளரும். இன்னும் சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. மொத்தமாக 90 அடி உயரம் வளரும் ஒரு மூங்கில் அந்த உயரத்தை எட்டிப் பிடிப்பதற்கு எடுத்துக்கொள்ளும் காலம் வெறும் 6 வாரங்கள்தான். ஆறு வாரங்களில் அவ்வளவு வேகமாக வளர்ந்துவிடுகின்றன. எனவேதான் உலகில் மிக வேகமாக ஓங்கி வளரும் தாவரமாக மூங்கில் கருதப்படுகின்றது. மூங்கிலின் அதிக அளவு பருமன் 1 செ.மீ. இலிருந்து 30 செ.மீ. வரை இருக்கும். இவை வறட்சியான பிரதேசங்களிலும் தண்ணீர் பற்றாக்குறையாக இருந்தாலும் நன்கு வளர்கின்றன. விதையாக இருக்கும்போது தண்ணீர் தேவைப்பட்டாலும் அது வளர்ந்ததன் பின்னர் குறைவான தண்ணீரிலும் கிடு கிடுவென வளர்ந்துவிடும்.

மூங்கில் கற்றுத் தரும் பாடம்.

மிக வேகமாக வளரும் தாவரம் மூங்கில் என்றாலும் அதில் மற்றொரு சங்கதியும் இருக்கின்றது. அது எமது வாழ்க்கைக்கு அழகான, ஆழமானதொரு படிப்பினையைச் சொல்லித் தருகின்றது. ஒரு விவசாயி மண்ணில் மூங்கில் மரத்தின் விதையை நட்டுகின்றான். அது பெரும் மரமாக வளரும் என்ற நம்பிக்கையில் நட்டுகின்றான். ஒவ்வொரு நாளும் அந்த இடத்திற்குத் தண்ணீர் ஊற்றுகின்றான். பசளை இடுகின்றான். ஆதரவோடு ஒவ்வொருநாளும் அந்த இடத்தைச் சென்று பார்க்கின்றான். அந்த இடத்தைச் சுற்றி முளைக்கும் காட்டுச் செடிகளைப் பிடிங்கி எரிகின்றான். இப்படி பெரும் எதிர்பார்ப்போடு நாட்கள் கழிகின்றது. ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் அல்ல… ஒரு வாரம், இரண்டு வாரம், மூன்று வாரம் அல்ல… ஒரு மாதம், இரண்டு மாதம், மூன்று மாதம் இல்லவே இல்லை. மாதங்கள் உருண்டோடியும் எந்த அசைவும் இல்லை. விதைகள் போடப்பட்ட இடம் அப்படியேதான் இருக்கும். ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்தும் விவசாயி நீர் ஊற்றி, பசளையிட்டு வருகின்றான். இப்படியே ஒரு வருடம் சென்றது… ம்ஹும்… இரண்டு வருடங்கள் கடந்தன… ம்ஹும்… மூன்று வருடங்கள் ஓடிவிட்டன… என்னவொரு ஏமாற்றம்?



இன்னும் நிலம் நிலமாகத்தான் இருக்கின்றது. ஒரு மாற்றம் கூட இல்லை. இதனை நட்ட விவசாயியின் மனநிலையை எண்ணிப் பாருங்கள். விதைகள் அழுகிவிட்டனவா? என்ற எண்ணமும் விவசாயிக்கு வந்துவிட்டது. தனது நேரம், காலம், சக்தி, முதலீடு எல்லாம் வீணாகின்றனவோ என்று கவலைவேறு வந்துவிட்டது. சுற்றியிருப்பவர்கள் கிண்டல் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் விவசாயி தன் நம்பிக்கையை கைவிடவில்லை. தொடர்ந்தும் உழைத்தான். பொருமையாக செயற்பட்டான்.. நான்கு வருடங்கள் ஆகின… ஒரு துரும்பு கூட மண்ணைவிட்டு வெளியே வந்திருக்காது. இன்னும் உழைத்தான் மொத்தமாக ஐந்து வருடங்கள். இதோ இப்போது ஒரு மாற்றம் மண்ணில். விவசாயியின் முகத்தில் சந்தோசம். ஐந்து வருட உழைப்பின் பிரதிபளனை விவசாயி காணப்போகின்றான். இதோ நினைத்துப் பார்க்காத வேகத்தில் மூங்களில் மண்ணை முட்டி காற்றில் மோதி விண்ணை நோக்கி வீரிட்டு வளரத் தொடங்கியது. 10 அடி, 20 அடி, 30 அடி, 40, 50, 60, 70, 80 அடிகள் என 90 அடி வரை உயர்ந்து நின்றது. விவசாயி பூரித்துப்போனான். வெறும் ஆறு வாரங்களில் 90 அடிவரை வானளாவ வளர்ந்து உயர்ந்து நின்றது மூங்கில். ஐந்து வருட உழைப்பின் பயனை வெறும் ஆறே வாரங்களில் கண் முன்னால் காண்கின்றான். இது கதையல்ல. மூங்கில் மரத்தின் நிஜமான வாழ்க்கை. எந்தவொரு மகத்தான சாதனையும் நீண்டகால உழைப்பின் மூலமே சாத்தியமாகும் என்ற சிறந்ததொரு பாடத்தை, படிப்பினையை மூங்கில் மரம் எமக்குக் கற்றுத்தருகின்றது. சுபஹானல்லாஹ்!

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் மூங்கில்.

மூங்கில் மரத்தில் தனி அழகு உண்டு. சில மரங்களில் அவற்றின் தண்டுப் பகுதி தனி மஞ்சள் நிறத்திலும் சிலது தனி பச்சை நிறத்திலும் இன்னும் சிலது மஞ்சள் தண்டில் பச்சைக் கோடுகள் அமைந்தும் காணப்படும். நன்கு முற்றிய இலைகள் கடும் பச்சை நிறத்திலும் கொழுந்து இலைகள் இளம் பச்சை நிறத்திலும் காட்சி தரும். இலைகளும் கூட நீண்டு சிறிய சிறிய இலைகளாக இருக்கும். பார்க்கும்போதே கண்ணைப் பறிக்கும் மஞ்சள், பச்சைக் கலவைதான் மூங்கில் மரம். எனவே அதிகமாக சூரிய வெயில் படும் இடங்களில் பாதை ஓரங்களில், பஸ் தரிப்பு, புகையிரத, விமான நிலையங்களில், பொதுச் சந்தைகளில், பாடசாலை வளாகங்களில், மைதான ஓரங்களில், சன நெரிசலான இட ஒதுக்குப் புறங்களில் மூங்கில் மரங்களை நாட்டுவதால் வெயிலின் கொடுமையைத் தனித்து கண்களுக்கு குளிர்ச்சியையும், பசுமையையும் மனதிற்கு ஆருதலையும், நிம்மதியையும் இந்த மூங்களில் மரங்கள் தருகின்றன.

காற்றைச் சுத்தப்படுத்தும் மூங்கில்.

உயிர் வாழ்க்கைக்குத் தேவையான ஒக்ஸிஜன் வாயுவை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள்தான் தாவரங்கள். அதிலும் மற்றத் தாவரங்கள் அனைத்தையும்விட அதிகளவிளான கரியமிள வாயுவை (காபன்டைஒக்ஸைட்) உள்ளிழுத்து அதனை எம்மால் சுவாசிக்க முடியுமான ஒக்ஸிஜன் வாயுவாக மாற்றித் தரும் பெரும் வேலையைச் செய்வது இந்த மூங்கில் மரங்கள்தான். ஒரு மூங்கில் தனது வாழ்நாளில் 450 டொன் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, அதற்கு நிகரான ஒக்சிஜனை வெளியிடுகிறது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். எனவே, மூங்கில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சிறந்த மரம் என்று கருதப்படுகிறது. ஒரு மனிதனுக்கு ஓர் ஆண்டில் தேவைப்படும் ஒக்ஸிஜன் 292 கிலோ. ஒரு நாளைக்கு தேவைப்படுவது 800 கிராம் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் (W.H.O.) ஆராய்ச்சி முடிவு. ஒரு மூங்கில் மரம் ஓர் ஆண்டில் 309 கிலோ ஒக்ஸிஜனைத் தருகிறது. அதாவது நாள் ஒன்றுக்கு 850 கிராம். ஆக எமது சுற்றுச் சூழலில் மூங்கில் மரங்கைள அதிகமாக நடுவதால் எவ்வளவு சுகாதாரமான வாழ்வு கிடைக்கின்றது பார்த்தீர்களா?

ஏழைகளின் மரம் மூங்கில்

மூங்கில் ஏழைகளின் மரம் என அழைக்கப்படுவதுமுண்டு. பல நாடுகளில் மூங்கில் விவசாயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது அந்நாட்டு ஏழைகளின் வருமானத்திற்கான சுய தொழிலாக இருக்கின்றது. குறைந்த செலவில், நீண்ட நாள் உழைப்பில் அதிகமான வருமானத்தை அவர்களுக்கு மூங்கில் மரங்கள் ஈட்டிக்கொடுக்கின்றன. மூங்கில் நட்டு ஐந்தாண்டுகளின் பின்னர் அவை அறுவடைக்குத் தயாராகிவிடும். பல்வேறு வேலைகளுக்காவும் உபகரணங்கள் தயாரிப்பதற்காகவும் வேலைப்பாடுகள் செய்வதற்காகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. சர்வதேச மூங்கில் மற்றும் பிரம்பு வலையமைப்பு என்பது இதுபோன்ற வேலைகளுக்காக மூங்கிலை பிரபலப்படுத்தும் சர்வதேச அமைப்பாகும். எமது நாட்டிலும் நீங்கள் கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும்போது இடையில் வரும் “தித்தல்மங்கட” எனும் ஊர் மூங்கில், பிரம்புகளைப் பயன்படுத்தி அலங்காரப் பொருட்கள் செய்வதற்கு பேர்போன இடமாகும்.

பயன் மிகு மூங்கில்.

மூங்கில் மரத்தினால் 1500 இற்கும் மேற்பட்ட பயன்கள் இருப்பதாக விவசாய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். குடிசை வீடுகள் கட்டுவதற்கும், கூரைகளின் உத்திரமாகவும், வேலிகள் அமைக்கவும், சுவர் தடுப்புகள் செய்யவும் கட்டட நிர்மாணப் பணிகளின்போதும், கைவினைப் பொருட்கள் தயார் செய்வதற்கும் கூடை, ஏணி, கைப் பிடிகள் தயாரிப்பதற்கும் சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கிய பொருளாக மூங்கில் பயன்படுகிறது. ஜப்பான் நாட்டில் தோட்டக்கலை நிபுணர்களும் விவசாயிகளும் மூங்கிலை நீர்க் குழாயாக பயன் படுத்துகிறார்கள். மூங்கில் இலைகள் மற்றும் அவற்றின் தூள்களைப் பயன்படுத்தி காகிதம் தயாரிக்கப்படுகின்றது. அத்தோடு உயர்தரமான காகிதப் பண நோட்டுகள் கூட மூங்களின் இலைகளால்தான் தயாரிக்கப்படுகின்றன. மூங்கில்களில் இருந்து உதிரும் இலைகள் மண்புழு உரம் தயாரிக்க பயன் படுகின்றது. ஏனைய உரங்களை விடவும் இதில் நல்ல பயனிருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தோடு மூங்கிலிலிருந்து பெறப்படும் அரிசி உண்பதற்கு மிகவும் ஆரோக்கியமானது. சீனா, ஜப்பான் நாடுகளில் மூங்கில் அரிசி விற்பனைக்குண்டு. மூங்கில் குருத்திலிருந்து செய்யப்படும் பாணமும் (ஜுஸ்) உணவும் இந்நாடுகளில் மிகவும் பிரபலம். மனிதனுக்கு மட்டுமன்றி இளம் மூங்கில் குருத்துகள், இலைகள் ஆகியன பண்டாக் கரடி, சிவப்பு பண்டாக் கரடி, மூங்கில் லெமூர், கொஹாலா, கினிப் பன்றி போன்ற விலங்குகளின் முதன்மையான உணவாகும் இருக்கின்றது.

உங்கள் வீட்டு முற்றத்திலும் நாட்டலாமே!

இன்று அனேகமான வீடுகளில் முற்றங்களை அழகுபடுத்துவதற்காக முள்ளில்லா மூங்கில்கள் நடப்படுகின்றன. இவை உண்மையிலேயே அழகானவை. அதிக உயரம் வளர்வதுமில்லை. ஒரு நேராக இடம் விட்டு இடம் இந்த மூங்கில்களை நட்டால் அவை பார்வைக்கு அழகாகவும் குளிர்சியாகவும் பசுமையாகவும் இருக்கும். உங்கள் வீட்டு முற்றத்திலும் நாட்டிப் பாருங்கள். அழகு மட்டுமன்றி ஆரோக்கியமும் கிடைக்கும். பூமரங்கள் விற்பனை செய்யும் இடங்களால் நன்கு வளர்ந்த மூங்கில் கன்றுகளை 3000 ரூபாவிலிருந்து விலைக்கு வாங்கி நடலாம்.



நட்டு ஆரம்பத்தில் நன்கு தண்ணீர் விடவேண்டும். அதன்பின்பு அதுவாக வளர்ந்து வரும். இனி பராமறிப்பது மட்டும்தான் வேலை. அந்த மரத்திலிருந்து வரும் சிறிய கன்றுகளை சிதையாமல் பிடிங்கி வேறு இடங்களில் நட்டால் அவையும் காலப்போக்கில் துரிதமாக வளர்ந்து அழகு தரும். இவற்றுக்கு பூச்சித் தொற்றுகள் வருவது மிகக் குறைவு. சில நேரம் கரையான், வெள்ளைப் பூஞ்சான் போன்ற பூச்சிகள் தாக்கும். அப்போது பூச்சிக் கொல்லி திரவங்களைத் தெளித்து கட்டுப்படுத்தலாம். வீட்டைச் சுற்றி மூங்கில் மரங்களை நட்டுப் பாருங்கள் சுத்தமான ஒக்ஸிஜன் காற்றுக் கிடைக்கும். கண்ணுக்கு குளிர்ச்சி கிடைக்கும். வீட்டைச் சுற்றியும் குளிர்ச்சி கிடைக்கும். வீட்டுக்கு ஒரு புதர் மூங்கில் நாட்டுவோம் என்ற திட்டத்தை ஆரம்பிப்போம்.

அஷ். எம்.என்.ஆலிப் அலி (இஸ்லாஹி) B.A.
Dip. In psychological Counseling, Al-Quran & Science Researcher.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...