"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

02 June 2010

அலெக்ஸ் வெய்னுக்கு ஆயுள்தண்டனை.


ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
கடந்த வருடம் (2009) ........... ஆம் திகதியின் பின்னர் முழு உலகையுமே சலசலப்புக்குள் ஆழ்த்திய விடயமாக மர்வா அலி அல் ஷெர்பினியின் கொலைச்சம்பவம் திகழ்கிறது. நீதி வேண்டி நீதிமன்றம் சென்ற மர்வா நீதிபதிகள்,  பொலிசார், பொதுமக்கள் என அனைவர் முன்னிலையிலும் ஏன் அவரது கனவர் மற்றும் மூன்றே வயதான அவரது மகன் முன்னாலும் நீதிமன்றிலேயே வைத்து 18 தடவைகள் கத்தியால் குத்திக் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வளவுக்கும் அவர் மூன்று மாதக் கர்ப்பிணியும் கூட. நினைக்கும் போது உடலெல்லாம் புல்லரித்து சிலிர்த்துவிடுகின்றதல்லவா? சில சமயம் இதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் ஊடகங்கள் கூட இவ்விடயத்தில் இருட்டடிப்புச் செய்துவிட்டன.
அக்கொலைக் குற்றத்தைப் புரிந்த ஜேர்மனியனான அலெக்ஸ் வெயினிற்கு ஜேர்மன் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பறித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இவ்;விடயம் தொடராக விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னரே நீதிபதி பேர்ஜிட் வைகாண்ட் இத்தீர்ப்பை வெளியிட்டுள்ளார். மேலும் எக்காரணம்கொண்டும் அலெக்ஸ் சிறைத்தண்டனையிலிருந்து முன்கூட்டியே விடுதலைபெற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் மர்வா தனது மகனுடன் டிரெஸ்டனிலுள்ள ஒரு பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும்போதே அலெக்ஸ் அவரைப் பார்த்து தீவிரவாதி - Terroristஎன்று கடுமையான மோசமான வார்த்தைகளால் தூற்றியிருக்கின்றான். இதனால் ஆத்திரமுற்ற மர்வா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து அலெக்ஸ{ம் மனு இட்டான். எனினும் நீதிமன்றம் இதனை விசாரனைக்காக எடுத்துக்கொண்டமையால் கோபம்கொண்ட அலெக்ஸ் இந்தப் படு பாதகச்செயலைப் புரிந்துள்ளான். மனைவியைக் காப்பற்றச் சென்ற அவரது கணவர் எல்வி அலி ஓகாஸ் ஐயம் பொலிஸார் (அர்த்தமின்றி) காலில் சுட்டு காயப்படுத்திவிட்டனர். இவற்றையெல்லாம் மூன்றே வயது மகன் முஸ்தபா நேரடியாகவே பார்த்துக்கொண்டிருந்துள்ளான்.
 
குற்றவாளி அலெக்ஸ் வெய்னுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையிட்டு ஜெர்மனிய முஸ்லிம்கள் மாத்திரமன்றி உலக முஸ்லிம்கள் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். தீர்ப்பு வழங்கியதும் வெளியே திரண்டிருந்த முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வளர்களும் இஸ்லாம் பற்றிய பாரபட்சங்களை மேற்குலகம் கைவிட வேண்டுமென்றும் ஊடகங்கள் சிரத்தையுடன் நீதமாகச் செயற்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர். 
உண்மையில் இஸ்லாம் பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் முஸ்லிமல்லாதோரிடம் பரப்பப்பட்டுள்ளமையே முஸ்லிம்களை அவர்கள் தீவிரவாதிகளாகவும் குழப்பக்காரர்களாகவும் நோக்குவதற்கு காரணமாயமைந்துள்ளன. இதனை மாற்றியமைக்கவேண்டுமாயின் இரண்டு விடயங்கள் நடைபெறவேண்டும். ஒன்று; இஸ்லாம் பற்றிய உண்மையான விடயங்களைக் கற்று அவற்றைப் புரிந்துகொள்ள அவர்கள் முன்வரவேண்டும். இரண்டு; அப்படி முன்வருவோருக்கும் முன் வராது திறைமறவில் இருப்போருக்கும் இஸ்லாத்தின் உண்மைத் தூதை எடுத்து முன்வைப்பவர்களாக நாம் மாறவேண்டும்.
இப்பாரிய பொறுப்பு எம் தோள்களில் தான் சுமத்ததப்பட்டிருக்கின்றது. எனவே முன்வருவோமா???



 




 

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
கடந்த வருடம் (2009) ........... ஆம் திகதியின் பின்னர் முழு உலகையுமே சலசலப்புக்குள் ஆழ்த்திய விடயமாக மர்வா அலி அல் ஷெர்பினியின் கொலைச்சம்பவம் திகழ்கிறது. நீதி வேண்டி நீதிமன்றம் சென்ற மர்வா நீதிபதிகள்,  பொலிசார், பொதுமக்கள் என அனைவர் முன்னிலையிலும் ஏன் அவரது கனவர் மற்றும் மூன்றே வயதான அவரது மகன் முன்னாலும் நீதிமன்றிலேயே வைத்து 18 தடவைகள் கத்தியால் குத்திக் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். இவ்வளவுக்கும் அவர் மூன்று மாதக் கர்ப்பிணியும் கூட. நினைக்கும் போது உடலெல்லாம் புல்லரித்து சிலிர்த்துவிடுகின்றதல்லவா? சில சமயம் இதனை நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள். ஏனெனில் ஊடகங்கள் கூட இவ்விடயத்தில் இருட்டடிப்புச் செய்துவிட்டன.
அக்கொலைக் குற்றத்தைப் புரிந்த ஜேர்மனியனான அலெக்ஸ் வெயினிற்கு ஜேர்மன் நீதிமன்றம் ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பறித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் இவ்;விடயம் தொடராக விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னரே நீதிபதி பேர்ஜிட் வைகாண்ட் இத்தீர்ப்பை வெளியிட்டுள்ளார். மேலும் எக்காரணம்கொண்டும் அலெக்ஸ் சிறைத்தண்டனையிலிருந்து முன்கூட்டியே விடுதலைபெற முடியாது எனவும் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் மர்வா தனது மகனுடன் டிரெஸ்டனிலுள்ள ஒரு பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும்போதே அலெக்ஸ் அவரைப் பார்த்து தீவிரவாதி - Terroristஎன்று கடுமையான மோசமான வார்த்தைகளால் தூற்றியிருக்கின்றான். இதனால் ஆத்திரமுற்ற மர்வா நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து அலெக்ஸ{ம் மனு இட்டான். எனினும் நீதிமன்றம் இதனை விசாரனைக்காக எடுத்துக்கொண்டமையால் கோபம்கொண்ட அலெக்ஸ் இந்தப் படு பாதகச்செயலைப் புரிந்துள்ளான். மனைவியைக் காப்பற்றச் சென்ற அவரது கணவர் எல்வி அலி ஓகாஸ் ஐயம் பொலிஸார் (அர்த்தமின்றி) காலில் சுட்டு காயப்படுத்திவிட்டனர். இவற்றையெல்லாம் மூன்றே வயது மகன் முஸ்தபா நேரடியாகவே பார்த்துக்கொண்டிருந்துள்ளான்.
 
குற்றவாளி அலெக்ஸ் வெய்னுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையிட்டு ஜெர்மனிய முஸ்லிம்கள் மாத்திரமன்றி உலக முஸ்லிம்கள் அனைவருமே மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள். தீர்ப்பு வழங்கியதும் வெளியே திரண்டிருந்த முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வளர்களும் இஸ்லாம் பற்றிய பாரபட்சங்களை மேற்குலகம் கைவிட வேண்டுமென்றும் ஊடகங்கள் சிரத்தையுடன் நீதமாகச் செயற்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர். 
உண்மையில் இஸ்லாம் பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் முஸ்லிமல்லாதோரிடம் பரப்பப்பட்டுள்ளமையே முஸ்லிம்களை அவர்கள் தீவிரவாதிகளாகவும் குழப்பக்காரர்களாகவும் நோக்குவதற்கு காரணமாயமைந்துள்ளன. இதனை மாற்றியமைக்கவேண்டுமாயின் இரண்டு விடயங்கள் நடைபெறவேண்டும். ஒன்று; இஸ்லாம் பற்றிய உண்மையான விடயங்களைக் கற்று அவற்றைப் புரிந்துகொள்ள அவர்கள் முன்வரவேண்டும். இரண்டு; அப்படி முன்வருவோருக்கும் முன் வராது திறைமறவில் இருப்போருக்கும் இஸ்லாத்தின் உண்மைத் தூதை எடுத்து முன்வைப்பவர்களாக நாம் மாறவேண்டும்.
இப்பாரிய பொறுப்பு எம் தோள்களில் தான் சுமத்ததப்பட்டிருக்கின்றது. எனவே முன்வருவோமா???



 




 

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...