"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

23 January 2012

161 தப்லீக் ஜமாஅத்தினர் நாட்டைவிட்டும் திடீர் வெளியேற்றம்.


இஸ்லாமிய அழைப்புப் பணிக்கா இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள 161 தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை ஒரு வாரத்திற்குள் நாட்டைவிட்டும் வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. டுவரிஸ்ட் வீசா மூலம் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் மதத் தீவிரவாதத்தை மக்கள் மத்தியில் போதிப்பதாக பொய்யானதொரு குற்றச்சாட்டை அரசாங்கம் சுமத்தியுள்ளது. மேற்படி அறிவிப்பின் பின் 60 பேர்களே நாட்டைவிட்டும் வெளியேறியிருப்பதாக உள்நாட்டு குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரி சூலாநந்த பெரேரா திவய்ன பத்திரிகைக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையிலும் படிப்படியாக சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அண்மைக்கால பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வருகை தந்த தௌஹீத் ஜமாஅத்தின் சில பிரமுகர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றியதோடு தற்போது தப்லீக் ஜமாஅத்தின் வருகையிலும் சில தடங்களைப் பிரயோகித்துள்ளது அரசாங்கம். இவ்விடயத்தில் காத்திரமானதொரு முடிவை எடுக்கவேண்டிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலரும் இதற்கு ஒத்தூதுவதுதான் பெரும் கவலையளிக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

இஸ்லாமிய அழைப்புப் பணிக்கா இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள 161 தப்லீக் ஜமாஅத் சகோதரர்களை ஒரு வாரத்திற்குள் நாட்டைவிட்டும் வெளியேறுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது. டுவரிஸ்ட் வீசா மூலம் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் மதத் தீவிரவாதத்தை மக்கள் மத்தியில் போதிப்பதாக பொய்யானதொரு குற்றச்சாட்டை அரசாங்கம் சுமத்தியுள்ளது. மேற்படி அறிவிப்பின் பின் 60 பேர்களே நாட்டைவிட்டும் வெளியேறியிருப்பதாக உள்நாட்டு குடிவரவு, குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரி சூலாநந்த பெரேரா திவய்ன பத்திரிகைக்கு அறிவித்துள்ளார்.

இலங்கையிலும் படிப்படியாக சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அண்மைக்கால பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து வருகை தந்த தௌஹீத் ஜமாஅத்தின் சில பிரமுகர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றியதோடு தற்போது தப்லீக் ஜமாஅத்தின் வருகையிலும் சில தடங்களைப் பிரயோகித்துள்ளது அரசாங்கம். இவ்விடயத்தில் காத்திரமானதொரு முடிவை எடுக்கவேண்டிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலரும் இதற்கு ஒத்தூதுவதுதான் பெரும் கவலையளிக்கின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...