"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

27 June 2010

தற்கொலை தீர்வாகுமா??

 ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
இன்றைய சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு துறைசார் சமூக ஆர்வளர்களும் அவர்களது துறைக்கேற்ப ஒவ்வொரு பிரச்சினையையும் நோக்குகின்றனர். எனினும் இந்தத் தற்கொலை எனும் சமகால சமூகப் பிரச்சினையில் (Contemporary Social Issue)  அனைத்து சமூகவியல் அறிஞர்களும் பொதுநோக்குடனேயே கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் அது ஒரு பாரிய சமூக நோய். தொற்று நோய் என்று கூடக் கூறலாம். தற்கொலை என்பது சமூகப் பஜரச்சினைகளின் வேறு ஒரு பரிமாணம். அது தனிப்பட்ட ஒரு நபரின் செயலாயினும் சமூக நிகழ்வாகவே சமூகவியலாளர்களால் நோக்கப்படுகின்றது.
மனிதர்களை அவர்கள் பிரச்சினைகளை அணுகும் முறைகளின் அடிப்படையில் இருவகையினராக வேறுபடுத்த முடியும். ஒரு சாரார் தாம் தம் வாழ்க்கையை சிறப்புறக் கழிக்கவேண்டும், சமூகத்தில் மதிப்புடன் மிளிர வேண்டும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும், வாழ்வினில் குறுக்கிடும் தடைக் கற்களைத் தம் முன்னேற்றத்தின் படிக்கற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். துன்பங்களையும் முரண்பாடுகளையும் துச்சமெனக்கருதி வாழ்க்கையின் நீரோட்டத்தில் எதிர் நீச்சல் போட்டுக் கரைசேர வேண்டுமென வாழ்கின்றனர்.
மற்றுமொரு சாரார் வாழ்க்கை பற்றி பெரிய கற்பனைகளையும் நீண்ட இலக்குகளையும் வைத்திருப்பர். என்றாலும் முரண்பாடுகளின் முன்னாலும், விமர்சனங்களின் முன்னாலும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாதுபோய்விடும். சிறு சிறு பிரச்சினைகளையும் பெரிதாகக் கருவதுவர். தனக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக ஒரு விம்பத்தினை மனதில் இறுத்திக்கொள்வர். இனி அதனையே நினைத்து நினைத்து மன அழுத்தத்திற்குள்ளாகி (Stress)  இறுதியில் வாழ்க்கையிலே விரக்தியின் உச்சகட்டத்தையடைந்து சமூகத்தைவிட்டும் ஒதுங்கி தற்கொலை செய்துகொள்வதுதான் தீர்வெனக் காண்பர். தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தன்பால் பிறரது அனுதாபத்தைப் பெறவும் அதனையே பிறருக்குப் பாடம் புகட்ட ஓர் வாய்ப்பாகவும் கருதுவர்.
இன்று சமூகத்தில் பல்வேறு காரணங்களுக்காத் தற்கொலைகள் நிகழ்கின்றன. உரிமை மீறல், இல்லத்து வன்முறைகள், அடக்குமுறைகள், யுத்தம், துஷ்பிரயோகம், தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம், பிரிவு, முரண்பாடு, துக்கம், வறுமை, பயங்கர நோய்கள், தவறான பாலியல் தொடர்பினால் ஏற்படும் கர்ப்பம், கடன் சுமை, சீதனக் கொடுமை, காதல் தோல்வி, திருமண பந்தத்தில் ஏற்படும் கருத்து முரண்பாடு, இயற்கை அணர்த்தங்களினால் ஏற்படும் அதிர்ச்சி என தற்கொலைக்கான காரணிகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதுமட்டுமன்றி தாம் நேசிக்கும் தமது பிரபலங்கள் அல்லது நட்சத்திரங்கள் யாராவது மறைந்தால் அதற்காகத் தற்;கொலைசெய்துகொள்பவர்களும் உள்ளனர். அண்மையில் மைக்கல் ஜெக்ஸன் மரணித்தபோது அதற்காக சிலர் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர்.
கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடுகளின்றி ஒவ்வொரு இடத்திலிலும் அவர்களது நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்குமேற்ப மக்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர். கிராமங்களில் அலரிவிதை உண்பதில் ஆரம்பித்து கிருமிநாசினிகளை அருந்துதல் தனக்குத் தானே தீ வைத்துக்கொள்ளுதல், நீர் நிலைகளில், மலைகளிலிருந்து குதித்தல், கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்ளுதல் வாகனங்களுக்கு முன்னால் பாய்தல் என்றும் தற்போது வளர்ச்சியடைந்த முறையில் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளுதல், ஊசி மூலம் நச்சு மருந்துகளை உடலில் ஏற்றிக்கொள்ளுதல், துப்பக்கியால் தன்னையே தலையில் சுட்டுக்கொள்ளுதல் என பல்வேறு பரிமாணங்களில் மனிதன் தன்னை மாய்த்துக்கொள்கின்றான்.
உளவியல் வல்லுனர் சேர் சிகமன் புரொய்ட் மனிதன் தற்கொலையின் பால் உந்தப்படுவதற்கான நியாயத்தை உளவியல் அடிப்படையில் பின்பருமாறு விளக்குகிறார். பொதுப்படையாக மனித உள்ளத்தில் வாழவேண்டும் என்ற ஆசையும் சாகவேண்டும் என்ற விருப்பமும் அடிப்படை உணர்ச்சிகளாகத் தொழிட்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை மனிதனை எதிரெதிர்த் திசைகளில் இழுத்துக்கொண்டும், ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம்செலுத்திக்கொண்டுமுள்ளன. ஏதேனுமொரு சில காரணங்களால் சாகவேண்டும் என்ற எண்ணம் உயிர்வாழ்தல் என்ற விருப்பை மிகைத்து வெற்றிகொள்ளுமாயின் வாழவேண்டுமென்ற அதீத விருப்பு குறைந்து பின்தள்ளப்பட்டு பயனற்றுப்போகும். எனவே சாவதுதான் சிறந்த தீர்வு என்ற முடிவுக்கு மனிதன் வருகிறான்.
 தற்கொலை என்பது ஒரு தனிநபர் செயலாயினும் அது சமூகநிகழ்வாக, சமூகச் சிக்கலாகவே நோக்கப்படுகின்றது. சுமூகவியல் ஆய்வாளர் எமில் துர்ஹைம்(Emile Durham) இன் ஆய்வுகளின்படி மனிதனின் தற்கொலைக்கு சமூகச்சூழ்நிலைகளும் உணர்வுகளும் கூட காரணமாகின்றன என்கிறார். சமூகத்தில் நிகழும் தற்கொலைகளை இவர் மூன்று வகைக்குட்படுத்துகிறார்.
1)     தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத் தற்கொலை (Egoistic Suicide)
2)     நியம மறு தற்கொலை (Anomic Suicide)
3)     உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை (Altruistic Suicide)

தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத் தற்கொலை (Egoistic Suicide)
ஒருவர் சமூகத்தை விட்டொதுங்கி தனித்து நின்று தனக்காக,  தனது நலனுக்காக எனக்கருதி ஏற்படுத்திக்கொள்ளும் தற்கொலையே இதுவாகும். பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, திருமண பந்தத்;தில் பிரச்சினை, நிம்மதியின்மை என தமது வாழ்வில் எதிர்ப்படும் சவால்களை உடைத்தெரிறய முடியாதவர்களால் செய்துகொள்ளப்படும்  தற்கொலையை இது குறிக்கின்றது.

நியம மறு தற்கொலை (Anomic Suicide)
இது சமூத்தில் ஏற்படும் எதிர்பாராத, தாங்கொனா மாற்றங்களினால் செய்துகொள்ளப்படும் தற்கொலை. இயற்கை அனர்த்தங்கள்> யுத்தம், புலம்பெயர்வு, அகதிவாழ்வு என்பவற்றால் தமது எதிர்பார்க்கைகள், கற்பனைக் கோட்டைகள், அபிலாஷைகள் யாவும் தம் கண்முன்னாலேயே துவம்சமாவதைத் தாங்க இயலாது செய்துகொள்ளும் தற்கொலைகளை இது குறிக்கின்றது.

உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை (Altruistic Suicide)
இது தனது இனத்துக்காக அல்லது தனது தேசத்திற்காக> கலாசாரத்திற்காக வேண்;டி செய்யப்படுகின்றது. இவை அரிதாகவே நிகழ்கின்றன. இச்செயல் தன் சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக எதிர்த்தாக்குதல் நடாத்தி எதிரியைக் கதி கலங்கச் செய்கிறது. இது புனிதம் வாய்ந்தது> நன்மை தரக்கூடியது என்ற உணர்வில் செய்யப்படுவதாகும். இதற்குத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை உதாரணமாகக் கூறலாம். இவ்வாறு எமில் துர்ஹைம் சமூகக் காரணிகளோடு ஒரு தனிநபரின் தற்கொலை நிகழ்வை மிக யதார்த்தபூர்வமாக இணைத்துக்கூறுகிறார்.

தற்கொலையில் ஈடுபடும் ஒருவர் முழுமையான சுய உணர்வுடனும் புத்திசுவாதீனத்துடனுமே தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார். இன்றளவில் மேற்குலகில் தற்கெலை என்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. உலகளவில் வருடாவருடம் பத்து இலட்சம் தற்கொலைகள் இடம்பெறுவதாக (WHO) உலக சுகாதார அமைப்பின் அறிக்கை சுட்டிநிற்கின்றது. அதாவது ஒரு இலட்சம் சன மக்களுக்கு 16 பேர் தற்கொலை புரிகின்றனர். உலகளவில் 40 செக்கன்களுக்கு ஒரு தற்கெலைச் சம்பவம் பதிவாகிறது. மேலும் உலக சுகாதாரம் தொடர்பான தேசிய சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி உலகளவில் அதிகமாகத் தற்கொலை இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தில் நிற்கின்றது. இலங்கை சனத்தொகையில் ஒரு இலட்சம்பேருக்கு 47 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதன்படி இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஹங்கேரி சனத்தொகையில் ஒரு இலட்சம்பேருக்கு 38.6 என்ற அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தேசிய குற்றப் பதிவகம் மேற்கொண்ட ஆய்வின்படி அவ்வாண்டில் மாத்திரம் ஒரு இலட்சத்தி 25 ஆயிரத்தி 17 பேர் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர். இவ்வாறு நாடுகளின் தரவரிசை தற்கொலை நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேட்ப அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இத்தற்கொலைகளில் சுதந்திர சிந்தனையுடையவர்களும் படிப்பறிவுடையோருமே அதிகம் ஈடுபடுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வரலாற்றில் அனைத்தான்மை (சர்வாதிகாரம்) புரிந்த முஸோலினி> ஹிட்லர் போன்றவர்களது முடிவுகூட தற்கொலையிலேயே முற்றுப்பெற்றது. அது மட்டுமல்ல தற்கொலை பற்றி ஆய்வுகள்> நூல்கள் எழுதியவர்களில் சிலர்கூட தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்குக் காரணம் ஒரு சில நிமிடங்களுக்கு உந்தப்படும் உணர்ச்சி வயப்படுதலை பொறுமையுடன் அடக்கி ஆழத்தெரியாமையேயாகும். 

ஒரு தனியனின் தற்கொலை நிகழ்வு சமூகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. உண்மையில் இச்செயலில் ஈடுபடுபவன் ஒரு கோழை ஒரு சுயநலமி என்றுதான் கூற வேண்டும். தான் அல்லது தனது குடும்பம் எதிர்கொண்ட ஒரு பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாமல் மற்ற அனைவரது தலைகளிலும் அச்சுமையைப் போட்டுவிட்டு தப்பினேன் பிழைத்தேன் என்று அவன் மட்டும் போய்ச் சேர்வது எந்தவிதத்தில் நியாயம். இதனால் அக்குடும்பமே சமூக ஒதுக்கல்> புறந்தள்ளல்> இழிநிலை என்பவற்றுக்கு தலைப்படுகின்றது. சிலவேளை ஏனையவர்கள் இதனை முன்னுதாரணமாகக் கொள்ளும் நிலையும் உருவாகின்றது. எனவேதான் தற்கொலை ஒரு சமூகம்சார் சிக்கலாக நோக்கப்படுகின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை
இஸ்லாம் தற்கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றது. அடிப்படையிலேயே தற்கொலைக்கான வாயிலை இருக மூடிவைக்கும் இஸ்லாம் அதன் விபரீதங்களை> விளைவுகளைப் பெரிதாகவே நோக்குகின்றது. அல்லாஹ் அல்குர்ஆனிலே இவ்வாறு கூறுகின்றான். இன்னும் உங்கள் கரங்களாலேயே உங்களை நீங்கள் அழிவின்பால் இட்டுச்செல்லாதீர்கள் (அல்பகரா : 195)

மனித வாழ்வென்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஓர் அமானிதம். அந்த வாழ்வை அல்லது கொடுக்கப்பட்ட அவ்வுயிரை அவன் இவ்வுலகில் பிறப்பதற்குமுன் அவனாகத் தெரிவுசெய்து நான் பிறக்க வேண்டும் அல்லது ஒரு செல்வந்தனாக> ஒரு வரியவனாக பிறக்கவேண்டும் என்றெல்லாம் திட்டம்போட்டுக்கொண்டு ஏழவே தீர்மானித்துக்கொண்டு இவ்வுலகில் யாரும் பிறக்கவில்லை. பிறப்பதுமில்லை. x என்றோ Y என்றோ ஒருவன் பிறக்கவேண்டுமென்பதனை இறைவனே தீர்மானிக்கின்றான். எனவே அவன் தந்த வாழ்வை அவனே திருப்பி மீட்டிக்கொள்ளும் வரை பொறுப்புணர்வுடன் அழகாகப் பயன்மிக்கதாக ஆக்கிக்கொள்ளவேண்டும். ஒருவனது உயிரை எடுப்பதற்கு> கொலைசெய்வதற்கு எவ்வாறு மற்றொருவனுக்கு உரிமை இல்லையோ அவ்வாறே தனதுயிரை தானே மாய்த்துக்கொள்வதற்கும் அவனுக்கு உரிமை கிடையாது.

வாழ்;க்கை என்பது இன்பம்> துன்பம்> சோதனை> வேதனை> துக்கம்> சந்தோசம் என்ற சுழற்சிக்குட்பட்டே உள்ளது. மனிதனை இவ்வுலகில் படைத்த இறைவன் இவற்றைக்கொண்டு அவனைச் சோதித்துப் பரீட்சிக்க நாடுகின்றான். இவ்வுலகில் எவ்வளவுதான் கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவற்றைப் பொருத்துக்கொண்டு யார் அல்லாஹ்வின் உதவிக்கரம்தேடி அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு வாழ்கின்றாரோ அத்தகைய மனிதனுக்கு அல்லாஹ் இவ்வுலகில் கஷ்ங்களிலிருந்து மீட்சியைக் கொடுக்கின்றான். இல்லாதுபோயின் மறுமையிலேயே எண்ணற்ற பல கூலிகளை அவனுக்கு வழங்க அல்லாஹ் காத்திருக்கின்றான். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். உங்களில் மிகச் சிறந்த செயல் புரிபவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்முல்க் : 02).

இச்சோதனைகள் இறைவனை நிராகரித்து வாழ்பவனுக்கோ அல்லது அவனுக்கு இணைவைத்து வாழ்பவனுக்கோ மட்டும்தான் வருகின்றது என்பது கருத்;தல்ல மாற்றமாக இறைவனை நம்பி அவனது ஏவல் விலக்கள்களின்படி வாழக்கூடியவர்களையும் அவனது சோதனைகளும் வேதனைகளும் பீடிக்கும் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இதனை அல்லாஹ்வே இவ்வாறு nதிளிவுபடுத்துகிறான். மக்கள் தாம் விசுவாசித்து விட்டுடோம் என்பதற்காக சோதிக்கப்படாது விட்டுவிடப்படுவார்கள் என்று நினைத்துவிட்டார்களா? (…………….). அவ்வாறல்ல அதற்கு மாற்றமாக அவன் விசுவாசிப்போரையும் சோதிப்பதாகக் கூறுகின்றான். (நம்பிக்கையாளர்களே!) பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவதொன்றைக்கொண்டும் செல்வங்கள்> உயிர்கள்> கனிக(ளின் விளைச்சல்)கள்> ஆகியவற்றில் குறைவடையவைப்பதைக்கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும் (இவற்றைப்) பொறுத்து சகித்துக்கொள்பவர்களுக்கு நீர் நன்மாராயங்கூறுவீராக! (அல்பகறா : 155) என்று கூறுகிறான்.

உண்மையில் மனிதன் தற்கொலையின்பால் நாட்டம் கொள்வது இவ்வாறான சோதனைகளினாலேயாகும். ஆரம்பத்தில் குறிப்பிட்ட தற்கொலைக்கான காரணிகள் யாவும் இறைவனால் மனிதர்களின் மீது பிரயோகிக்கப்படும் சோதனைகளே. இந்த சோதனைகள் இறைவனின் கோபப்பார்வை என்று கருதவும் கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்ள் கூறினார்கள். எவனொருவன் மீது அல்லாஹ் மிக்க அன்புகொள்ள நாடுகின்றானோ அவனை அவன் சோதித்துப்பார்ப்பான் இந்த சோதனைகள் அவனது அன்பின் வெளிப்பாடே. இவ்வாறான  சோதனைகள்> கஷ்டங்கள்> துன்பங்களின்போது பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து இறைவனிடமே கையேந்துபவர்களுக்கு அவன்; சகல சௌபாக்கியங்களும் நிறைந்த சுவனத்தை அருட்பாக்கியமாக வழங்குவதாகக் கூறுகின்றான். பாருங்கள்

(என்மீது) நம்பிக்கை கொண்டோரே பொறுமையை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவிதேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் (அல்பகறா : 153). அவர்கள் எத்தகையோரென்றால் தமக்கு ஏதும் துன்பம் பீடித்தால் நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம்> அவன்பாலே திரும்பிச்செல்லவேண்டும்         إنا لله وإنا إليه راجعون  என்று கூறுவார்கள். அவர்கள் மீதுதான் அவர்களது இறைவனிடமிருந்து நல்லாசிகளும், கிருபைகளும் உண்டாகின்றன. அவர்கள்தாம் நேரான வழியில் இருக்கின்றார்கள். (அல்பகறா: 156>157).

அதற்காக எந்த முயற்சியுமேயின்றி இறைவனை இறைஞ்சிக்கொண்டிருப்பது என கருத்துக்கொள்வது பொருத்தமானதல்ல. ஒட்டகையைக் கட்டிவிட்டு அதன் பாதுகாப்பிற்காக இறைஞ்சச்சொல்லும் மார்க்கம் தான் இஸ்லாம். எனவே இஸ்லாம் தற்கொலை நிகழ்வதற்கான காரணிகளைத் தடுத்து இல்லாமலாக்கும் வேலையை முதலில் செய்யத் தூண்டுகிறது. நாம் முன்பு பார்த்த தற்கொலைக்கான காரணிகள் அனைத்திற்கும் இஸ்லாத்தில் தீர்விருப்பதை இஸ்லாத்தைக் கற்கும் எவராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று சமூகத்தின் பொறுப்பு> அந்தத் தீர்வுத்திட்டங்களை அமுலாக்கம் செய்ய வழிவிட்டு வழிகாட்டி இடமளித்தல் அல்லது அவர்களே அமுல்படுத்தி ஆரோக்கியமானதொரு சூழலுக்கு வழியமைத்தல் என்பதே.

ஒரு மனிதனது அஜல் எனும் வாழ்க்கைக்காலம் அவன் தாயின் கருவறையில் நான்கு மாதச் சிசுவாக இருக்கும்போதே தீர்மானிக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நாலு மாதங்களை அடையும்போது அதனிடம் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகிறார். அவர் அந்தச் சிசுவில் ஆன்மாவை ஊதி இணைத்து விட்டு அத்தோடு மூன்று விடயங்களை எழுதிவிடுகிறார். அதில் ஒன்றுதான் அஜல் (ஆயுட்காலம்) எனவே அதற்கு முன் அவசரப்பட்டு தனது உயிரை மாய்த்துக்கொள்பவனது நிலை மிகக் கொடுமையானதாகவே அமையும். இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறுனார்கள். யார் ஒரு மலையிலிருந்து பாய்ந்து தற்கொலைசெய்துகொள்கிறானோ அவன் நரகிலும் அவ்வாறே தொடர்ந்து வீழ்ந்துகொண்டே இருப்பான். யார் விசமருந்தித் தன்னை மாய்த்துக்கொள்கிறானோ நரகிலும் அவன் விசமருந்திக்கொண்டே இருப்பான். (அதன் வேதனையை அனுபவிப்பான்) எவன் தன் உயிரை ஓர் இரும்புக்கருவியால் அழித்துக்கொள்கிறானோ அவனும் மறுமையில் நெருப்பிக் கிடங்கில் ஊழி ஊழி காலம் இரும்புக் கம்பியினால் தன்னைக் குத்திக்கொண்டே இருப்பான். (புகாரி) .

இந்த ஹதீஸை வழியுறுத்தும் மற்றுமொரு சம்பவம் ஸஹீஹ{ல் புகாரியில் இவ்வாறு பதிவாகியுள்ளது. ஒரு மனிதர் புனித யுத்தத்தில் பெரும் பங்காற்றினார். எதிர்த்தரப்பினரை அச்சம்கொள்ளச்செய்யுமளவுக்கு அவர்களுக்குள் புகுந்து புகுந்து யுத்தம் செய்தார். இவரது படையைச் சார்ந்தவர்களே வியப்பிலாழ்ந்தனர் எனினும் எதிர்பாராத விதமாக எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளானார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர் வழி பொறுக்க முடியாமல் உடனே தனது வாளைப் பூமியில் குத்தி அதன்மேல் தனது உடலைச் சாய்த்து தற்கொலை செய்துகொண்டார். இவரைப் பற்றி நபியவர்களிடம் வினவப்பட்டபோது அவர் அவசரப்பட்டுவிட்டார்> நெருப்புக்கு ஆளாகிவிட்டார் என்றார்கள்.

எனவே இஸ்லாத்தில் தற்கொலைக்கு எந்த நியாயமும் கூறமுடியாது. தற்கொலை செய்துகொள்வதால் இம்மை> மறுமை இரு உலகிலும் கொடூரமான விளைவுகளை அனுபவிக்கவேண்டி நேர்கின்றது. ஒருவனிடம் தற்கொலை செய்துகொள்ள இருக்கும் தற்துணிவை தன் வாழ்க்கையில் எதிர் நீச்சல்போடப் பிரயோகித்தால் உண்மையில் வாழ்க்கையில் நிறையச் சாதிக்கலாம். எனவே வாழ்வில் ஏற்படும் அற்பமான கஷ்மமொன்றிற்காக யாரும் மரணத்தை யாசிக்கக்கூடாது. அதற்கான காரணத்தை பின்வரும் நபி மொழி இவ்வாறு தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் மரணத்தை ஆசைப்படவேண்டாம். ஏனெனில் ஒரு வேளை அவர் நல்லவராக இருந்தால் அவர் நன்மையை மேலும் அதிகரித்துக்கொள்ளக்கூடும். ஒரு வேளை அவர் தீயவராக இருந்தால் (தீமையை விட்டகன்று) தௌபா பாவமன்னிப்பு இறைஞ்சக்கூடும். (புகாரி> முஸ்லிம்)

அவ்வாறே யாரும் தவிர்;க்கமுடியாத காரணமொன்றிற்காக மரணிப்பது சிறந்ததெனக் கருதினால் பின்வருமாறு பிரார்த்தனை புரியுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

 உங்களில் ஒருவர் தன்னைக் கஷ்டம் பீடித்தமைக்காக மரணத்தை ஆசைப்படவேண்டாம். அவர் அவ்வாறு அதனை ஆசைப்பட்டே தீருபவரானால் (நிர்ப்பந்தத்திற்குள்ளானால்) இவ்வாறு கூறட்டும். 

اللهم احييني  ماكانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي

யாஅல்லாஹ் என் வாழ்வு எனக்குச் சிறந்ததாக இருக்கும் காலமெல்லாம் என்னை வாழச்செய்வாயாக. (மாறாக) மரணம் எனக்குச் சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச்செய்வாயாக (புகாரி> முஸ்லிம்).

எனவே இறைவன் அமானிதமாக வளங்கிய மகத்தான இந்த உயிர் வாழ்க்கையை சில அனாவசிய உணர்ச்சி வயப்படுதல்களால் வீணாக்கிக்கொள்ளாது பொறுமையாக இருந்து நல்லமுறையில் சிந்தித்து மூத்தவர்களிடமும் அனுபவசாலிகளுடனும் தம் பிரச்சினைதொடர்பாக கலந்தாலோசித்து நல்லதீர்வினைப் பெறவேண்டும். வாழ்க்கையை ஒழுங்கமைத்து அதில் வெற்றிபெறுவோம்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
 ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)
இன்றைய சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு துறைசார் சமூக ஆர்வளர்களும் அவர்களது துறைக்கேற்ப ஒவ்வொரு பிரச்சினையையும் நோக்குகின்றனர். எனினும் இந்தத் தற்கொலை எனும் சமகால சமூகப் பிரச்சினையில் (Contemporary Social Issue)  அனைத்து சமூகவியல் அறிஞர்களும் பொதுநோக்குடனேயே கவனம் செலுத்துகின்றனர். ஏனெனில் அது ஒரு பாரிய சமூக நோய். தொற்று நோய் என்று கூடக் கூறலாம். தற்கொலை என்பது சமூகப் பஜரச்சினைகளின் வேறு ஒரு பரிமாணம். அது தனிப்பட்ட ஒரு நபரின் செயலாயினும் சமூக நிகழ்வாகவே சமூகவியலாளர்களால் நோக்கப்படுகின்றது.
மனிதர்களை அவர்கள் பிரச்சினைகளை அணுகும் முறைகளின் அடிப்படையில் இருவகையினராக வேறுபடுத்த முடியும். ஒரு சாரார் தாம் தம் வாழ்க்கையை சிறப்புறக் கழிக்கவேண்டும், சமூகத்தில் மதிப்புடன் மிளிர வேண்டும், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழவேண்டும், வாழ்வினில் குறுக்கிடும் தடைக் கற்களைத் தம் முன்னேற்றத்தின் படிக்கற்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். துன்பங்களையும் முரண்பாடுகளையும் துச்சமெனக்கருதி வாழ்க்கையின் நீரோட்டத்தில் எதிர் நீச்சல் போட்டுக் கரைசேர வேண்டுமென வாழ்கின்றனர்.
மற்றுமொரு சாரார் வாழ்க்கை பற்றி பெரிய கற்பனைகளையும் நீண்ட இலக்குகளையும் வைத்திருப்பர். என்றாலும் முரண்பாடுகளின் முன்னாலும், விமர்சனங்களின் முன்னாலும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாதுபோய்விடும். சிறு சிறு பிரச்சினைகளையும் பெரிதாகக் கருவதுவர். தனக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக ஒரு விம்பத்தினை மனதில் இறுத்திக்கொள்வர். இனி அதனையே நினைத்து நினைத்து மன அழுத்தத்திற்குள்ளாகி (Stress)  இறுதியில் வாழ்க்கையிலே விரக்தியின் உச்சகட்டத்தையடைந்து சமூகத்தைவிட்டும் ஒதுங்கி தற்கொலை செய்துகொள்வதுதான் தீர்வெனக் காண்பர். தற்கொலை செய்துகொள்வதன் மூலம் தன்பால் பிறரது அனுதாபத்தைப் பெறவும் அதனையே பிறருக்குப் பாடம் புகட்ட ஓர் வாய்ப்பாகவும் கருதுவர்.
இன்று சமூகத்தில் பல்வேறு காரணங்களுக்காத் தற்கொலைகள் நிகழ்கின்றன. உரிமை மீறல், இல்லத்து வன்முறைகள், அடக்குமுறைகள், யுத்தம், துஷ்பிரயோகம், தோல்வி மனப்பான்மை, ஏமாற்றம், பிரிவு, முரண்பாடு, துக்கம், வறுமை, பயங்கர நோய்கள், தவறான பாலியல் தொடர்பினால் ஏற்படும் கர்ப்பம், கடன் சுமை, சீதனக் கொடுமை, காதல் தோல்வி, திருமண பந்தத்தில் ஏற்படும் கருத்து முரண்பாடு, இயற்கை அணர்த்தங்களினால் ஏற்படும் அதிர்ச்சி என தற்கொலைக்கான காரணிகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். அதுமட்டுமன்றி தாம் நேசிக்கும் தமது பிரபலங்கள் அல்லது நட்சத்திரங்கள் யாராவது மறைந்தால் அதற்காகத் தற்;கொலைசெய்துகொள்பவர்களும் உள்ளனர். அண்மையில் மைக்கல் ஜெக்ஸன் மரணித்தபோது அதற்காக சிலர் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர்.
கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடுகளின்றி ஒவ்வொரு இடத்திலிலும் அவர்களது நாகரிகத்திற்கும் முன்னேற்றத்திற்குமேற்ப மக்கள் இச்செயலில் ஈடுபடுகின்றனர். கிராமங்களில் அலரிவிதை உண்பதில் ஆரம்பித்து கிருமிநாசினிகளை அருந்துதல் தனக்குத் தானே தீ வைத்துக்கொள்ளுதல், நீர் நிலைகளில், மலைகளிலிருந்து குதித்தல், கழுத்தில் சுருக்கிட்டுக்கொள்ளுதல் வாகனங்களுக்கு முன்னால் பாய்தல் என்றும் தற்போது வளர்ச்சியடைந்த முறையில் மாத்திரைகளை அதிகமாக உட்கொள்ளுதல், ஊசி மூலம் நச்சு மருந்துகளை உடலில் ஏற்றிக்கொள்ளுதல், துப்பக்கியால் தன்னையே தலையில் சுட்டுக்கொள்ளுதல் என பல்வேறு பரிமாணங்களில் மனிதன் தன்னை மாய்த்துக்கொள்கின்றான்.
உளவியல் வல்லுனர் சேர் சிகமன் புரொய்ட் மனிதன் தற்கொலையின் பால் உந்தப்படுவதற்கான நியாயத்தை உளவியல் அடிப்படையில் பின்பருமாறு விளக்குகிறார். பொதுப்படையாக மனித உள்ளத்தில் வாழவேண்டும் என்ற ஆசையும் சாகவேண்டும் என்ற விருப்பமும் அடிப்படை உணர்ச்சிகளாகத் தொழிட்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவை மனிதனை எதிரெதிர்த் திசைகளில் இழுத்துக்கொண்டும், ஒன்றின் மீது ஒன்று ஆதிக்கம்செலுத்திக்கொண்டுமுள்ளன. ஏதேனுமொரு சில காரணங்களால் சாகவேண்டும் என்ற எண்ணம் உயிர்வாழ்தல் என்ற விருப்பை மிகைத்து வெற்றிகொள்ளுமாயின் வாழவேண்டுமென்ற அதீத விருப்பு குறைந்து பின்தள்ளப்பட்டு பயனற்றுப்போகும். எனவே சாவதுதான் சிறந்த தீர்வு என்ற முடிவுக்கு மனிதன் வருகிறான்.
 தற்கொலை என்பது ஒரு தனிநபர் செயலாயினும் அது சமூகநிகழ்வாக, சமூகச் சிக்கலாகவே நோக்கப்படுகின்றது. சுமூகவியல் ஆய்வாளர் எமில் துர்ஹைம்(Emile Durham) இன் ஆய்வுகளின்படி மனிதனின் தற்கொலைக்கு சமூகச்சூழ்நிலைகளும் உணர்வுகளும் கூட காரணமாகின்றன என்கிறார். சமூகத்தில் நிகழும் தற்கொலைகளை இவர் மூன்று வகைக்குட்படுத்துகிறார்.
1)     தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத் தற்கொலை (Egoistic Suicide)
2)     நியம மறு தற்கொலை (Anomic Suicide)
3)     உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை (Altruistic Suicide)

தன்னலம் கருதிய அல்லது தன்முனைப்புத் தற்கொலை (Egoistic Suicide)
ஒருவர் சமூகத்தை விட்டொதுங்கி தனித்து நின்று தனக்காக,  தனது நலனுக்காக எனக்கருதி ஏற்படுத்திக்கொள்ளும் தற்கொலையே இதுவாகும். பரீட்சையில் தோல்வி, காதலில் தோல்வி, திருமண பந்தத்;தில் பிரச்சினை, நிம்மதியின்மை என தமது வாழ்வில் எதிர்ப்படும் சவால்களை உடைத்தெரிறய முடியாதவர்களால் செய்துகொள்ளப்படும்  தற்கொலையை இது குறிக்கின்றது.

நியம மறு தற்கொலை (Anomic Suicide)
இது சமூத்தில் ஏற்படும் எதிர்பாராத, தாங்கொனா மாற்றங்களினால் செய்துகொள்ளப்படும் தற்கொலை. இயற்கை அனர்த்தங்கள்> யுத்தம், புலம்பெயர்வு, அகதிவாழ்வு என்பவற்றால் தமது எதிர்பார்க்கைகள், கற்பனைக் கோட்டைகள், அபிலாஷைகள் யாவும் தம் கண்முன்னாலேயே துவம்சமாவதைத் தாங்க இயலாது செய்துகொள்ளும் தற்கொலைகளை இது குறிக்கின்றது.

உன்னத அல்லது பொதுநலத் தற்கொலை (Altruistic Suicide)
இது தனது இனத்துக்காக அல்லது தனது தேசத்திற்காக> கலாசாரத்திற்காக வேண்;டி செய்யப்படுகின்றது. இவை அரிதாகவே நிகழ்கின்றன. இச்செயல் தன் சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக எதிர்த்தாக்குதல் நடாத்தி எதிரியைக் கதி கலங்கச் செய்கிறது. இது புனிதம் வாய்ந்தது> நன்மை தரக்கூடியது என்ற உணர்வில் செய்யப்படுவதாகும். இதற்குத் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை உதாரணமாகக் கூறலாம். இவ்வாறு எமில் துர்ஹைம் சமூகக் காரணிகளோடு ஒரு தனிநபரின் தற்கொலை நிகழ்வை மிக யதார்த்தபூர்வமாக இணைத்துக்கூறுகிறார்.

தற்கொலையில் ஈடுபடும் ஒருவர் முழுமையான சுய உணர்வுடனும் புத்திசுவாதீனத்துடனுமே தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார். இன்றளவில் மேற்குலகில் தற்கெலை என்பது தவிர்க்க முடியாத ஒரு பிரச்சினையாக தலைதூக்கியுள்ளது. உலகளவில் வருடாவருடம் பத்து இலட்சம் தற்கொலைகள் இடம்பெறுவதாக (WHO) உலக சுகாதார அமைப்பின் அறிக்கை சுட்டிநிற்கின்றது. அதாவது ஒரு இலட்சம் சன மக்களுக்கு 16 பேர் தற்கொலை புரிகின்றனர். உலகளவில் 40 செக்கன்களுக்கு ஒரு தற்கெலைச் சம்பவம் பதிவாகிறது. மேலும் உலக சுகாதாரம் தொடர்பான தேசிய சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி உலகளவில் அதிகமாகத் தற்கொலை இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை முதலிடத்தில் நிற்கின்றது. இலங்கை சனத்தொகையில் ஒரு இலட்சம்பேருக்கு 47 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதன்படி இலங்கை முதலிடத்தில் உள்ளது. ஹங்கேரி சனத்தொகையில் ஒரு இலட்சம்பேருக்கு 38.6 என்ற அடிப்படையில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2008ஆம் ஆண்டு தேசிய குற்றப் பதிவகம் மேற்கொண்ட ஆய்வின்படி அவ்வாண்டில் மாத்திரம் ஒரு இலட்சத்தி 25 ஆயிரத்தி 17 பேர் தற்கொலைசெய்துகொண்டுள்ளனர். இவ்வாறு நாடுகளின் தரவரிசை தற்கொலை நிகழ்வுகளின் எண்ணிக்கைக்கேட்ப அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

இத்தற்கொலைகளில் சுதந்திர சிந்தனையுடையவர்களும் படிப்பறிவுடையோருமே அதிகம் ஈடுபடுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. வரலாற்றில் அனைத்தான்மை (சர்வாதிகாரம்) புரிந்த முஸோலினி> ஹிட்லர் போன்றவர்களது முடிவுகூட தற்கொலையிலேயே முற்றுப்பெற்றது. அது மட்டுமல்ல தற்கொலை பற்றி ஆய்வுகள்> நூல்கள் எழுதியவர்களில் சிலர்கூட தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதற்குக் காரணம் ஒரு சில நிமிடங்களுக்கு உந்தப்படும் உணர்ச்சி வயப்படுதலை பொறுமையுடன் அடக்கி ஆழத்தெரியாமையேயாகும். 

ஒரு தனியனின் தற்கொலை நிகழ்வு சமூகத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது. உண்மையில் இச்செயலில் ஈடுபடுபவன் ஒரு கோழை ஒரு சுயநலமி என்றுதான் கூற வேண்டும். தான் அல்லது தனது குடும்பம் எதிர்கொண்ட ஒரு பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாமல் மற்ற அனைவரது தலைகளிலும் அச்சுமையைப் போட்டுவிட்டு தப்பினேன் பிழைத்தேன் என்று அவன் மட்டும் போய்ச் சேர்வது எந்தவிதத்தில் நியாயம். இதனால் அக்குடும்பமே சமூக ஒதுக்கல்> புறந்தள்ளல்> இழிநிலை என்பவற்றுக்கு தலைப்படுகின்றது. சிலவேளை ஏனையவர்கள் இதனை முன்னுதாரணமாகக் கொள்ளும் நிலையும் உருவாகின்றது. எனவேதான் தற்கொலை ஒரு சமூகம்சார் சிக்கலாக நோக்கப்படுகின்றது.

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை
இஸ்லாம் தற்கொலையை வன்மையாகக் கண்டிக்கின்றது. அடிப்படையிலேயே தற்கொலைக்கான வாயிலை இருக மூடிவைக்கும் இஸ்லாம் அதன் விபரீதங்களை> விளைவுகளைப் பெரிதாகவே நோக்குகின்றது. அல்லாஹ் அல்குர்ஆனிலே இவ்வாறு கூறுகின்றான். இன்னும் உங்கள் கரங்களாலேயே உங்களை நீங்கள் அழிவின்பால் இட்டுச்செல்லாதீர்கள் (அல்பகரா : 195)

மனித வாழ்வென்பது இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட ஓர் அமானிதம். அந்த வாழ்வை அல்லது கொடுக்கப்பட்ட அவ்வுயிரை அவன் இவ்வுலகில் பிறப்பதற்குமுன் அவனாகத் தெரிவுசெய்து நான் பிறக்க வேண்டும் அல்லது ஒரு செல்வந்தனாக> ஒரு வரியவனாக பிறக்கவேண்டும் என்றெல்லாம் திட்டம்போட்டுக்கொண்டு ஏழவே தீர்மானித்துக்கொண்டு இவ்வுலகில் யாரும் பிறக்கவில்லை. பிறப்பதுமில்லை. x என்றோ Y என்றோ ஒருவன் பிறக்கவேண்டுமென்பதனை இறைவனே தீர்மானிக்கின்றான். எனவே அவன் தந்த வாழ்வை அவனே திருப்பி மீட்டிக்கொள்ளும் வரை பொறுப்புணர்வுடன் அழகாகப் பயன்மிக்கதாக ஆக்கிக்கொள்ளவேண்டும். ஒருவனது உயிரை எடுப்பதற்கு> கொலைசெய்வதற்கு எவ்வாறு மற்றொருவனுக்கு உரிமை இல்லையோ அவ்வாறே தனதுயிரை தானே மாய்த்துக்கொள்வதற்கும் அவனுக்கு உரிமை கிடையாது.

வாழ்;க்கை என்பது இன்பம்> துன்பம்> சோதனை> வேதனை> துக்கம்> சந்தோசம் என்ற சுழற்சிக்குட்பட்டே உள்ளது. மனிதனை இவ்வுலகில் படைத்த இறைவன் இவற்றைக்கொண்டு அவனைச் சோதித்துப் பரீட்சிக்க நாடுகின்றான். இவ்வுலகில் எவ்வளவுதான் கஷ்டங்கள் நஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவற்றைப் பொருத்துக்கொண்டு யார் அல்லாஹ்வின் உதவிக்கரம்தேடி அவனுக்கே முற்றிலும் வழிப்பட்டு வாழ்கின்றாரோ அத்தகைய மனிதனுக்கு அல்லாஹ் இவ்வுலகில் கஷ்ங்களிலிருந்து மீட்சியைக் கொடுக்கின்றான். இல்லாதுபோயின் மறுமையிலேயே எண்ணற்ற பல கூலிகளை அவனுக்கு வழங்க அல்லாஹ் காத்திருக்கின்றான். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான். உங்களில் மிகச் சிறந்த செயல் புரிபவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகவே அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான் (அல்முல்க் : 02).

இச்சோதனைகள் இறைவனை நிராகரித்து வாழ்பவனுக்கோ அல்லது அவனுக்கு இணைவைத்து வாழ்பவனுக்கோ மட்டும்தான் வருகின்றது என்பது கருத்;தல்ல மாற்றமாக இறைவனை நம்பி அவனது ஏவல் விலக்கள்களின்படி வாழக்கூடியவர்களையும் அவனது சோதனைகளும் வேதனைகளும் பீடிக்கும் என்பதனை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இதனை அல்லாஹ்வே இவ்வாறு nதிளிவுபடுத்துகிறான். மக்கள் தாம் விசுவாசித்து விட்டுடோம் என்பதற்காக சோதிக்கப்படாது விட்டுவிடப்படுவார்கள் என்று நினைத்துவிட்டார்களா? (…………….). அவ்வாறல்ல அதற்கு மாற்றமாக அவன் விசுவாசிப்போரையும் சோதிப்பதாகக் கூறுகின்றான். (நம்பிக்கையாளர்களே!) பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவதொன்றைக்கொண்டும் செல்வங்கள்> உயிர்கள்> கனிக(ளின் விளைச்சல்)கள்> ஆகியவற்றில் குறைவடையவைப்பதைக்கொண்டும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும் (இவற்றைப்) பொறுத்து சகித்துக்கொள்பவர்களுக்கு நீர் நன்மாராயங்கூறுவீராக! (அல்பகறா : 155) என்று கூறுகிறான்.

உண்மையில் மனிதன் தற்கொலையின்பால் நாட்டம் கொள்வது இவ்வாறான சோதனைகளினாலேயாகும். ஆரம்பத்தில் குறிப்பிட்ட தற்கொலைக்கான காரணிகள் யாவும் இறைவனால் மனிதர்களின் மீது பிரயோகிக்கப்படும் சோதனைகளே. இந்த சோதனைகள் இறைவனின் கோபப்பார்வை என்று கருதவும் கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்ள் கூறினார்கள். எவனொருவன் மீது அல்லாஹ் மிக்க அன்புகொள்ள நாடுகின்றானோ அவனை அவன் சோதித்துப்பார்ப்பான் இந்த சோதனைகள் அவனது அன்பின் வெளிப்பாடே. இவ்வாறான  சோதனைகள்> கஷ்டங்கள்> துன்பங்களின்போது பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து இறைவனிடமே கையேந்துபவர்களுக்கு அவன்; சகல சௌபாக்கியங்களும் நிறைந்த சுவனத்தை அருட்பாக்கியமாக வழங்குவதாகக் கூறுகின்றான். பாருங்கள்

(என்மீது) நம்பிக்கை கொண்டோரே பொறுமையை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவிதேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் (அல்பகறா : 153). அவர்கள் எத்தகையோரென்றால் தமக்கு ஏதும் துன்பம் பீடித்தால் நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம்> அவன்பாலே திரும்பிச்செல்லவேண்டும்         إنا لله وإنا إليه راجعون  என்று கூறுவார்கள். அவர்கள் மீதுதான் அவர்களது இறைவனிடமிருந்து நல்லாசிகளும், கிருபைகளும் உண்டாகின்றன. அவர்கள்தாம் நேரான வழியில் இருக்கின்றார்கள். (அல்பகறா: 156>157).

அதற்காக எந்த முயற்சியுமேயின்றி இறைவனை இறைஞ்சிக்கொண்டிருப்பது என கருத்துக்கொள்வது பொருத்தமானதல்ல. ஒட்டகையைக் கட்டிவிட்டு அதன் பாதுகாப்பிற்காக இறைஞ்சச்சொல்லும் மார்க்கம் தான் இஸ்லாம். எனவே இஸ்லாம் தற்கொலை நிகழ்வதற்கான காரணிகளைத் தடுத்து இல்லாமலாக்கும் வேலையை முதலில் செய்யத் தூண்டுகிறது. நாம் முன்பு பார்த்த தற்கொலைக்கான காரணிகள் அனைத்திற்கும் இஸ்லாத்தில் தீர்விருப்பதை இஸ்லாத்தைக் கற்கும் எவராலும் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இன்று சமூகத்தின் பொறுப்பு> அந்தத் தீர்வுத்திட்டங்களை அமுலாக்கம் செய்ய வழிவிட்டு வழிகாட்டி இடமளித்தல் அல்லது அவர்களே அமுல்படுத்தி ஆரோக்கியமானதொரு சூழலுக்கு வழியமைத்தல் என்பதே.

ஒரு மனிதனது அஜல் எனும் வாழ்க்கைக்காலம் அவன் தாயின் கருவறையில் நான்கு மாதச் சிசுவாக இருக்கும்போதே தீர்மானிக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் கருத்தரித்து நாலு மாதங்களை அடையும்போது அதனிடம் ஒரு வானவர் அனுப்பிவைக்கப்படுகிறார். அவர் அந்தச் சிசுவில் ஆன்மாவை ஊதி இணைத்து விட்டு அத்தோடு மூன்று விடயங்களை எழுதிவிடுகிறார். அதில் ஒன்றுதான் அஜல் (ஆயுட்காலம்) எனவே அதற்கு முன் அவசரப்பட்டு தனது உயிரை மாய்த்துக்கொள்பவனது நிலை மிகக் கொடுமையானதாகவே அமையும். இதனை நபியவர்கள் பின்வருமாறு கூறுனார்கள். யார் ஒரு மலையிலிருந்து பாய்ந்து தற்கொலைசெய்துகொள்கிறானோ அவன் நரகிலும் அவ்வாறே தொடர்ந்து வீழ்ந்துகொண்டே இருப்பான். யார் விசமருந்தித் தன்னை மாய்த்துக்கொள்கிறானோ நரகிலும் அவன் விசமருந்திக்கொண்டே இருப்பான். (அதன் வேதனையை அனுபவிப்பான்) எவன் தன் உயிரை ஓர் இரும்புக்கருவியால் அழித்துக்கொள்கிறானோ அவனும் மறுமையில் நெருப்பிக் கிடங்கில் ஊழி ஊழி காலம் இரும்புக் கம்பியினால் தன்னைக் குத்திக்கொண்டே இருப்பான். (புகாரி) .

இந்த ஹதீஸை வழியுறுத்தும் மற்றுமொரு சம்பவம் ஸஹீஹ{ல் புகாரியில் இவ்வாறு பதிவாகியுள்ளது. ஒரு மனிதர் புனித யுத்தத்தில் பெரும் பங்காற்றினார். எதிர்த்தரப்பினரை அச்சம்கொள்ளச்செய்யுமளவுக்கு அவர்களுக்குள் புகுந்து புகுந்து யுத்தம் செய்தார். இவரது படையைச் சார்ந்தவர்களே வியப்பிலாழ்ந்தனர் எனினும் எதிர்பாராத விதமாக எதிரிகளின் தாக்குதலுக்கு ஆளானார். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அவர் வழி பொறுக்க முடியாமல் உடனே தனது வாளைப் பூமியில் குத்தி அதன்மேல் தனது உடலைச் சாய்த்து தற்கொலை செய்துகொண்டார். இவரைப் பற்றி நபியவர்களிடம் வினவப்பட்டபோது அவர் அவசரப்பட்டுவிட்டார்> நெருப்புக்கு ஆளாகிவிட்டார் என்றார்கள்.

எனவே இஸ்லாத்தில் தற்கொலைக்கு எந்த நியாயமும் கூறமுடியாது. தற்கொலை செய்துகொள்வதால் இம்மை> மறுமை இரு உலகிலும் கொடூரமான விளைவுகளை அனுபவிக்கவேண்டி நேர்கின்றது. ஒருவனிடம் தற்கொலை செய்துகொள்ள இருக்கும் தற்துணிவை தன் வாழ்க்கையில் எதிர் நீச்சல்போடப் பிரயோகித்தால் உண்மையில் வாழ்க்கையில் நிறையச் சாதிக்கலாம். எனவே வாழ்வில் ஏற்படும் அற்பமான கஷ்மமொன்றிற்காக யாரும் மரணத்தை யாசிக்கக்கூடாது. அதற்கான காரணத்தை பின்வரும் நபி மொழி இவ்வாறு தெளிவுபடுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் மரணத்தை ஆசைப்படவேண்டாம். ஏனெனில் ஒரு வேளை அவர் நல்லவராக இருந்தால் அவர் நன்மையை மேலும் அதிகரித்துக்கொள்ளக்கூடும். ஒரு வேளை அவர் தீயவராக இருந்தால் (தீமையை விட்டகன்று) தௌபா பாவமன்னிப்பு இறைஞ்சக்கூடும். (புகாரி> முஸ்லிம்)

அவ்வாறே யாரும் தவிர்;க்கமுடியாத காரணமொன்றிற்காக மரணிப்பது சிறந்ததெனக் கருதினால் பின்வருமாறு பிரார்த்தனை புரியுமாறு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

 உங்களில் ஒருவர் தன்னைக் கஷ்டம் பீடித்தமைக்காக மரணத்தை ஆசைப்படவேண்டாம். அவர் அவ்வாறு அதனை ஆசைப்பட்டே தீருபவரானால் (நிர்ப்பந்தத்திற்குள்ளானால்) இவ்வாறு கூறட்டும். 

اللهم احييني  ماكانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي

யாஅல்லாஹ் என் வாழ்வு எனக்குச் சிறந்ததாக இருக்கும் காலமெல்லாம் என்னை வாழச்செய்வாயாக. (மாறாக) மரணம் எனக்குச் சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச்செய்வாயாக (புகாரி> முஸ்லிம்).

எனவே இறைவன் அமானிதமாக வளங்கிய மகத்தான இந்த உயிர் வாழ்க்கையை சில அனாவசிய உணர்ச்சி வயப்படுதல்களால் வீணாக்கிக்கொள்ளாது பொறுமையாக இருந்து நல்லமுறையில் சிந்தித்து மூத்தவர்களிடமும் அனுபவசாலிகளுடனும் தம் பிரச்சினைதொடர்பாக கலந்தாலோசித்து நல்லதீர்வினைப் பெறவேண்டும். வாழ்க்கையை ஒழுங்கமைத்து அதில் வெற்றிபெறுவோம்.

ஆலிப் அலி (இஸ்லாஹியா வளாகம்)

உங்கள் கருத்து:

3 comments:

Anonymous said...

fathima.......
sirappana artice........ thatkaalathitku poruthamanathu....

Fathima... said...

பொது நலத்திற்காக தற்கொலை செய்வது பற்றி இஸ்லாத்தின் பார்வையில் எப்படி? அதாவது தற்கொலைத் தாக்குதல்கள்
தயவுசெய்து பதிலளிக்கவும்.

Aalif Ali said...

இதனை இஸ்லாம் தற்கொலைத் தாக்குதல் என்றல்லாது உயிர்த்தியாகத் தாக்குதல் என்ற பெயரில் அழைக்கின்றது. அனுமதி உண்டு. என்றாலும் பொது மக்கள் பாதிக்கப்படும் விதமாக அமையக் கூடாது. போரில் ஈடுபடும் எதிர்த்தரப்பினரைப் பலவீனப்படுத்தவும், அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கவும் மாத்திரமே இதனை மேற்கொள்ள முடியும். பொதுமக்கள் கூடும் இடங்களில் நிச்சயமாக உயிர்த்தியாகத் தாக்குதல் மேற்கொள்வது கூடாத செயல்.

யுத்தத்திற்கான அனைத்து வழிமுறைகளும் போக ஒன்றுமே செய்ய முடியாத கட்டத்தில் இதனைப் பயன்படுத்தலாம்.

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...