"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

16 July 2010

பிரான்ஸில் நிகாப் தடைச்சட்டம்

ஆலிப் அலி
(இஸ்லாஹியா வளாகம்)
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலஸ் ஸர்கோஸி நீண்டகாலமாக எடுத்துவந்த முயற்சி கைகூடிவிட்டதில் மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார். என்ன தெரியுமா? பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு நிகாப் (முஸ்லிம் பெண்கள் தமது கண்ணியத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி தாமே விரும்பி அணியும் ஓர் ஆடை) எனும் ஆடைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுக்கொடுத்தமைதான் அவரது சந்தோசத்திற்குக் காரணம்.

ஆம் பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கான தடைச் சட்டத்தை உத்தியோகபூர்வமாகவே அமுலுக்குக்கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த வாக்கெடுப்பின்போது சார்பாக 335 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் இடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தடைச் சட்டத்தை யாராவது மீறி பொது இடங்களில் நிகாப் ஆணிந்தவாறு நடமாடினால் தண்டப்பணமாக 1256 பவுன்ஸ்கள் அறவிடப்படும் என்றும் ஆண்கள் தமது பெண்களை நிகாப் அணியுமாறு நிர்ப்பந்தித்தால் அதற்கு 25இ000 பவுன்ஸ்கள் தண்டப்பணமாக அறவிடப்படுவதோடு ஒரு வருட சிறைத் தண்டனையும் அனுபவிக்கவேண்டி வருமென எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஹிஜாப் அல்லது நிகாப் இஸ்லாம் மார்கம் பெண்களது கண்ணியத்திற்காகவும் அவர்களது பாதுகாப்பிற்காகவும் ஏற்படுத்தியவொன்று. பிரான்ஸ், ஜேர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடா வருடம் இஸ்லாத்தைத் தழுவி வரும் ஆயிரக்கணக்கான பெண்கள் மனமுவந்து இந்த ஹிஜாப் ஆடைக்குள் தம்மைப் பக்குவப்படுத்திக்கொள்கின்றனர். இதில் அவர்கள் அலாதியானதோர் இன்பத்தை உணர்கின்றார்கள். இதில் எந்த ஆணினதும் நிர்ப்பந்தமோ வற்புருத்தலோ இல்லை என்பதுதான் நிதர்சனம். பிரான்ஸ் பாராளுமன்றத்தின் இத்தடைச் சட்டத்திற்கெதிராக முஸ்லிம்; பெண்களே குரல் எழுப்புவது இதற்கு தக்க சான்றாக உள்ளது.

சுதந்திரம், முற்போக்குவாதம் என்று கூறிக்கொண்டு இன்று மேற்கு நாடுகளில் பெண்கள் தமது உடல் அங்கங்களை பச்சை பச்சையாக வெளிக்காட்டியவாறு மக்கள் முன் சுற்றித்திரிவதால் அநாச்சாரங்களும் சமூக சீர்கேடுகளும் அதிகரிக்கின்றதே அல்லாமல் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.

ஆலிப் அலி
(இஸ்லாஹியா வளாகம்)
பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி நிகலஸ் ஸர்கோஸி நீண்டகாலமாக எடுத்துவந்த முயற்சி கைகூடிவிட்டதில் மிகுந்த சந்தோசத்தில் இருக்கின்றார். என்ன தெரியுமா? பிரான்ஸ் நாட்டு முஸ்லிம் பெண்களுக்கு நிகாப் (முஸ்லிம் பெண்கள் தமது கண்ணியத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றி தாமே விரும்பி அணியும் ஓர் ஆடை) எனும் ஆடைச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுக்கொடுத்தமைதான் அவரது சந்தோசத்திற்குக் காரணம்.

ஆம் பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றம் முஸ்லிம் பெண்கள் நிகாப் அணிவதற்கான தடைச் சட்டத்தை உத்தியோகபூர்வமாகவே அமுலுக்குக்கொண்டு வந்துள்ளது. இதுகுறித்த வாக்கெடுப்பின்போது சார்பாக 335 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் இடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இத்தடைச் சட்டத்தை யாராவது மீறி பொது இடங்களில் நிகாப் ஆணிந்தவாறு நடமாடினால் தண்டப்பணமாக 1256 பவுன்ஸ்கள் அறவிடப்படும் என்றும் ஆண்கள் தமது பெண்களை நிகாப் அணியுமாறு நிர்ப்பந்தித்தால் அதற்கு 25இ000 பவுன்ஸ்கள் தண்டப்பணமாக அறவிடப்படுவதோடு ஒரு வருட சிறைத் தண்டனையும் அனுபவிக்கவேண்டி வருமென எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

ஹிஜாப் அல்லது நிகாப் இஸ்லாம் மார்கம் பெண்களது கண்ணியத்திற்காகவும் அவர்களது பாதுகாப்பிற்காகவும் ஏற்படுத்தியவொன்று. பிரான்ஸ், ஜேர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வருடா வருடம் இஸ்லாத்தைத் தழுவி வரும் ஆயிரக்கணக்கான பெண்கள் மனமுவந்து இந்த ஹிஜாப் ஆடைக்குள் தம்மைப் பக்குவப்படுத்திக்கொள்கின்றனர். இதில் அவர்கள் அலாதியானதோர் இன்பத்தை உணர்கின்றார்கள். இதில் எந்த ஆணினதும் நிர்ப்பந்தமோ வற்புருத்தலோ இல்லை என்பதுதான் நிதர்சனம். பிரான்ஸ் பாராளுமன்றத்தின் இத்தடைச் சட்டத்திற்கெதிராக முஸ்லிம்; பெண்களே குரல் எழுப்புவது இதற்கு தக்க சான்றாக உள்ளது.

சுதந்திரம், முற்போக்குவாதம் என்று கூறிக்கொண்டு இன்று மேற்கு நாடுகளில் பெண்கள் தமது உடல் அங்கங்களை பச்சை பச்சையாக வெளிக்காட்டியவாறு மக்கள் முன் சுற்றித்திரிவதால் அநாச்சாரங்களும் சமூக சீர்கேடுகளும் அதிகரிக்கின்றதே அல்லாமல் ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை.

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...