"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்."

04 August 2011

ஈத்தம் பழம்கொண்டு நோன்பு திறப்பதன் பயன்.

ஆலிப் அலி (இஸ்லாஹி)

பொதுவாக முஸ்லிம்கள் நோன்பு திறக்கும்போது ஈத்தம் பழம் கொண்டு நோன்பு திறப்பது வழக்கம். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் வழிமுறையும் கூட.

“ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.

உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது. ஒரு நோன்பாளி சுமார் 13½ மணிநேரங்கள் தொடர்ந்தும் பசித்திரு;பதனால் அவனது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு வெகுவாகக் குறைகின்றது. எனவே பேரீத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அது விரைவாகச் சக்கரையின் அளவை ஈடுசெய்து விடுகின்றது. காரணம் ஈத்தம் பழத்தில் 75 – 87 இற்கு இடைப்பட்ட வீத அளவு சக்கரை காணப்படுகின்றது. அத்தோடு 55 வீதமான குலுகோஸும் அடங்கியுள்ளது. எனவே ஈத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அதிலுள்ள சக்கரையும் குலுகோஸும் விரைவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கின்றன. பின்பு உடல் பூராகவும் விணியோகமாகி எமக்குப் புத்துணர்வு ஏற்படுகின்றது.

நோன்பாளி விட்டமின்களடங்கிய வேறு பண்டங்களை உண்ணும்போது அவை சமிபாட்டுத்தொகுதியை அடைந்ததன் பின்பே இரத்தத்துடன் கலக்கின்றன. அதனால் உடல் எதிர்பார்க்கின்ற அளவு துரிதமாக சக்கரை, குலுகோஸு போன்றவற்றை உடலால் பெற முடிவதில்லை. இதன் காரணமாகவே ஈத்தம் பழம் கொண்டு நாம் நோன்பு திறக்கின்றோம்.

இவைமட்டுமன்றி ஈத்தம் பழத்தில் காபோவைத்ரேட், கொழுப்பு, கனியுப்பு, உயிர்ச்சத்துக்கள் என்பனவும் உண்டு. அத்தோடு இது ஈரலுக்குப் பலத்தையும் அளிக்கின்றது. மேலும் எமது உமிழ் நீரிலுள்ள நோய்க்கிருமிகளையும் அழித்துவிடுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)
ஆலிப் அலி (இஸ்லாஹி)

பொதுவாக முஸ்லிம்கள் நோன்பு திறக்கும்போது ஈத்தம் பழம் கொண்டு நோன்பு திறப்பது வழக்கம். இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் வழிமுறையும் கூட.

“ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழம் கொண்டு நோன்பு திறக்கட்டும். ஏனெனில் அது பாக்கியமுடையது. அல்லது தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும். அது அனைத்தையும் சுத்தப்படுத்தக்கூடியது.” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் கூறியுள்ளார்கள்.

உண்மையில் நோன்பு திறக்கும்போது பேரீத்தம் பழத்தையும் சேர்த்துக்கொள்வதால் அது மனித உடலுக்குப் பல்வேறு அனுகூலங்களை அளிக்கின்றது. ஒரு நோன்பாளி சுமார் 13½ மணிநேரங்கள் தொடர்ந்தும் பசித்திரு;பதனால் அவனது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு வெகுவாகக் குறைகின்றது. எனவே பேரீத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அது விரைவாகச் சக்கரையின் அளவை ஈடுசெய்து விடுகின்றது. காரணம் ஈத்தம் பழத்தில் 75 – 87 இற்கு இடைப்பட்ட வீத அளவு சக்கரை காணப்படுகின்றது. அத்தோடு 55 வீதமான குலுகோஸும் அடங்கியுள்ளது. எனவே ஈத்தம் பழத்தை உட்கொள்ளும்போது அதிலுள்ள சக்கரையும் குலுகோஸும் விரைவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துடன் கலக்கின்றன. பின்பு உடல் பூராகவும் விணியோகமாகி எமக்குப் புத்துணர்வு ஏற்படுகின்றது.

நோன்பாளி விட்டமின்களடங்கிய வேறு பண்டங்களை உண்ணும்போது அவை சமிபாட்டுத்தொகுதியை அடைந்ததன் பின்பே இரத்தத்துடன் கலக்கின்றன. அதனால் உடல் எதிர்பார்க்கின்ற அளவு துரிதமாக சக்கரை, குலுகோஸு போன்றவற்றை உடலால் பெற முடிவதில்லை. இதன் காரணமாகவே ஈத்தம் பழம் கொண்டு நாம் நோன்பு திறக்கின்றோம்.

இவைமட்டுமன்றி ஈத்தம் பழத்தில் காபோவைத்ரேட், கொழுப்பு, கனியுப்பு, உயிர்ச்சத்துக்கள் என்பனவும் உண்டு. அத்தோடு இது ஈரலுக்குப் பலத்தையும் அளிக்கின்றது. மேலும் எமது உமிழ் நீரிலுள்ள நோய்க்கிருமிகளையும் அழித்துவிடுகின்றது.
ஆலிப் அலி (இஸ்லாஹி)

உங்கள் கருத்து:

0 comments:

Post a Comment

என்னை ஊக்குவியுங்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...